சிங்கபூர், ஜனவரி 27: முத்துப்பேட்டை அசோசியேசன் சிங்கப்பூரின் இவ்வருட செயல் பாட்டுக் கூட்டமும், கலந்துரையாடலும் 20.01.2013 ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5.30 மணியளவில் பென்கூளேன் பள்ளி கீழ் தளத்தில் அமைந்துள்ள ஒரு ஹாலில் சேர்ந்த ஆலோசனைக் கூட்டாமாக நடப்புத் தலைவர் M .A .Y.ஜாஹீர் ஹுசைன் தலைமையில் நடந்தது. அதுசமயம் செயலாளர் D .ஷபீர் அஹ்மத் அவர்கள் சிறப்பான பல தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.
அதன் அடிப்படையில், பொது தூரநோக்குnசிந்தனையின் வெளிப்பாடாக நமது M .A .S .அசோசியேசன், சக அசோசியேசனின் தோழமையுடன் இணைந்து இரத்ததானம் வழங்குதல்,முதியோர்களின் இல்லத்திற்கு சென்று உதவியும், உடல் உழைப்பு சேவையும், சிங்கை குடியரசில் முக்கிய சேவையாக தேவைப்படும் சமயத்தில் நாமும் நமது M .A .S .யைபிரதி நிதித்து கலந்து கொள்ளுதல் என்றும்,ஒவ்வொரு இரு மாதத்திற்கு ஒருமுறை M .A .S .கூடி நடந்த, நடக்க இருக்கின்ற தேவைகளை ஆலோசனை செய்து தேவைப்படும் மாற்றங்களை சரி செய்வது என்றும், இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 17.03.2013 ஞாயிற்றுக் கிழமை நமது M .A .S .ன் குடும்ப தினமாக நாம் அனைவரும் தத்தம் குடுபத்தினர்களோடு ஓன்று கூடி சிறப்பாக கொண்டாடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதனை தாமதிக்காமல் உடனே செயல்படுத்துவது என்றும் தீர்மானமாக குறிக்கப்பட்டது. இந்த வருட முக்கிய நிகழ்வாக நமது M .A .S .க்கு தன்னார்வ நன்கொடையாக மனமுவந்து அதிகமாக தந்துதவும் சகோதரர்களையும்,தரும் தொகையின் அளவிற்கு ஏற்ப வருசைப்படுத்தி தகவல் தருவது, ஒவ்வொரு M .A .S .ன் குடுபத்தினரும் குறைந்த பட்ச நன்கொடையாக $50/= கொடுப்பது என்றும் தீர்மானிக்கப் பட்டது. இந்த நிகழ்சிக்கு M .A .S .ன்முன்னாள் தலைவர் ஜனாப்.M.A.முஹம்மது முஸ்தபா, M.A.முஹம்மது யூசுப், பொருளாளர் முஹம்மது நூருல் அமீன், ஹாஜா அலாவுதீன், அப்துல் லத்திப், ரஷீத் அலி, முஹம்மது அசாருதீன், தமீம் நசீர், தப்ரே ஆலம், எர்ஷாத், அப்துல் பாஸித், ஷேக் அப்துல் காதர், அப்துல் பாஸித் அப்துல் சலாம் மற்றும் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள், இறுதியாக சிற்றுண்டியுடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஜெ. ஷேக் பரீது
0 comments:
Post a Comment