முத்துப்பேட்டை,பிப்ரவரி 13: முத்துப்பேட்டை செம்படவன்காடு பைபாஸ்சாலை அருகே நேற்று மாலை பட்டுக்கோட்டையை அடுத்த காசியங்காடு பகுதியிலிருந்து கீற்று ஏற்றி கொண்டு ஒரு மினி முத்துப்பேட்டை நோக்கி வந்தது. லாரியை விஜயகுமார் (32) ஒட்டி வந்தார். அப்போது, தம்பிக்கோட்டை கீழ்காட்டை சார்ந்த ராஜேந்திரன் முத்துப்பேட்டை யிலிருந்து பைக்கில் வந்து கொண்டு இருந்தார். சம்பவ இடத்தில், மினி லாரியும் பைக்கும் நேருக்கு நேர் மோதியது. பின்னர், லாரி தலைகுப்புற கவிழந்தது, இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து, முத்துப்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
தொகுப்பு:
ரிப்போர்ட்டர் முகைதீன் பிச்சை
0 comments:
Post a Comment