துபாய், அக்டோபர் 04: ஈத் பெருநாள் உலகெங்கிலும் நேற்று (04-10-14) மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. துபாய், கத்தார், குவைத், சவுதி அரேபியா, போன்ற நாடுகளில் பணிபுரியும் முத்துப்பேட்டை இளைஞர்கள் மிகவும் உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் ஹஜ்ஜு பெருநாளை கொண்டாடினர் பின்னர் ஒருவரையொருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டு அகமகிழ்ந்தனர்.
வாழ்த்துக்களுடன் ...
ஜே : ஷேக் பரீத்
A : முஹம்மது இலியாஸ் MBA ,
(MA .JOURNALISM & MAASS COMMUNICATION)
உங்களின் மேலான கருத்துக்கள் மற்றும் தொடர்புக்கு :
0091-7200-11-6852, 00971-55 786 5516
முத்துப்பேட்டையில் உள்ள ஜாமியா மஸ்ஜிதில் ஈத் பெருநாள் தொழுகை மிக சிறப்பாக நடைபெற்றது .இன்று (04-10-2014) சரியாக காலை 7 மணியளவில் தொழுகை நடைபெற்றது .பின்னர் தொழுகை முடிந்தவுடன் முஹம்மது மீரான் அவர்களின் சிறப்பு பயானும் நடைபெற்றது .
10:20 AM
நம்மை ஆதரிக்கும் பல்வேறு வணிக பெருமக்கள் ,தொழிலதிபர்கள் ,வியாபாரிகள் ஆகியோரின் தொடர் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஏற்று இன்ஷாஅல்லாஹ் விரைவில் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் .காம் இணையதளத்தில் விளம்பர பகுதியை கொண்டு வர உள்ளோம்.இதில் அனைத்து தொழில் சார்ந்த விளம்பரங்கள் ,ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ,அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் விளம்பரங்கள் ,உள்ளிட்ட அனைத்து விளம்பரங்களும் இடம் பெற உள்ளது .விருப்பமுள்ளவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் .செல் ;7200116852,
email:fareedfareed123@gmail.com
7:38 PM
தஞ்சாவூரில் வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணை நான்கு அயோக்கியர்கள் கற்பழித்து கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த முழு விவரங்கள் பின் வருமாறு....
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஜீத், இவருடைய மகள் பானு (32) மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை குடும்பம்)
இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட காமவெறியர்கள் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுதிரனாளி கற்பழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரவியதால் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தஞ்சை கீழவாசல் சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர்.
மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் மனுவும் அளித்துள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.