முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் 19.02.2012 நேற்று நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.





முத்துப்பேட்டை,பிப்ரவரி 20: போலியோ சொட்டு மருந்து (இளம்பிள்ளை வாத தடுப்பு) சிறப்பு முகாம் நேற்று 19.02.2012 நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் பிறந்த குழைந்தை முதல் 5 வயது குழந்தைகள் வரை போலியோ சொட்டு மருந்து ஊற்றுவது வழக்கம். இதன் அடிப்படையில் முத்துப்பேட்டை நகரில் மதியலன்காரம், செம்படவன் காடு, முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதாரம், மற்றும் தர்ஹா ஆகிய இடங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நர்ஸ் அவர்கள், போலியோ சொட்டு மருந்து குறித்து அனைத்து தாய்மார்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்ப்பு வந்துள்ளது என்றும் சென்ற முகாமை விட இந்த முகாமில் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து பெற்றோர்கள் சொட்டு மருந்துந்தை போட்டு சென்றார்கள் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.நேற்று குழந்தைகளை அழைத்து வராத வீட்டிற்கு வீடு வீடாக சென்று சொட்டு மருந்து போடா இருப்பதாகவும் அப்போது அவர் மேலும் தெரிவித்தார்.
source from: www.mttexpres.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

ANA . நவாப்

PFI நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் ஓர் பார்வை.






முத்துப்பேட்டை, பிப்ரவரி 19 : பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் வலிமையான மக்கள், வலிமையான தேசம் என்ற முழக்கத்தோடு பிப்ரவரி 10 முதல் பிப்ரவரி 20 வரை நாடு முழுவதும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் முத்துப்பேட்டையில் முதலாக உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சேவைகலையும் நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் இன்று நாடுமுழுவதும் 19 ஆம் தேதி இந்தியா முழுவதும் சுத்தம் செய்யும் நாளாக அறிவிக்கப்பட்டு பட்டி தொட்டி எல்லாம் சுத்தம் செய்யப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI - யின் முத்துப்பேட்டை நகர தலைவர் ஜனாப். M . முஹம்மது மாலிக் அவர்கள், கடந்த 12 ஆம் தேதி PFI சார்பாக மக்களுக்கு உடல் திறன், உடல் ஆரோகியம், ஆகியவையின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று குட்டியார் ஜும்மாஹ் பள்ளி வாசலை சுத்தம் செய்யும் பணியை நடத்தினோம் என்றும், இது போன்று இந்தியா முழுவதும் அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளிவாயில்கள், மற்றும் பொது இடங்கள் ஆகிய இடங்களில் PFI - யை சேர்ந்த நாங்கள் சுத்தம் செய்து நாங்கள் வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். உடன் PFI - யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, PFI - யின் உறுப்பினர்கள்,கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி

முத்துப்பேட்டை அருகே உப்பூரில் மாட்டுவண்டி மீது மோதிய தனியார் பேருந்து.!!






உப்பூர், பிப்ரவரி 17 : ஆலங்காடு கடைத்தெருவை சேர்ந்த திரு. ஜெயராமன் வயது 45 இவர் ஒரு விவசாய். இவர் இன்று காலை உப்பூருக்கு வைக்கோல் எடுக்க தனது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஓர் தனியார் பேருந்து வரும்போது எதிர்பாராமல் விபத்துக்குள்ளானது. இதில் மாட்டு வண்டி ஓட்டி வந்த ஜெயராமன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு திவீர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு மாடுகள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
source from; www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை

மவுத்து அறிவிப்பு: "மஹபூபா அம்மாள் "


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : குண்டாங்குலத்தெரு, மர்ஹும் மந்திரிஷா மரைக்காயர் அவர்களின் மகளும், A . காதர் உசேன், A . ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயரிய தாயாருமாகிய "மஹபூபா அம்மாள் " அவர்கள் இன்று பகல் 1 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 6.30 மணியளவில் முஹைதீன் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

A . காதர் உசேன்

நமது நிருபர்

KM . கார் கனி (பாடகர்)

மவுத்து அறிவிப்பு: "ரஹ்மா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : தெற்குத்தெரு, பேட்டை ரோடு மர்ஹும் முஹம்மது மீராசா அவர்களின் மகளும், மர்ஹும் கு.கி சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹும் KSM செய்யது அலி அவர்களின் மாமியாரும் , M . ஹாஜா மைதீன் அவர்களின் மாமியும், கோல்டன் S . கிதுருமைதீன், கோல்டன் S . தம்பி மரைக்காயர், கோல்டன் S . ஜெகபர் அலி, ஆகியோரின் தாயாரும், S .தாதா சரீப், S .ஜாகிர் உசேன், S .அப்துல் ஆரீப், S .ஷாகுல் ஹமீது, T .ரிபாய்தீன், T . கபார்கான் ஆகியோரின் பாட்டியாருமாகிய "ரஹ்மா அம்மாள்" அவர்கள் இன்று கலை 11 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 .30 மணியளவில் அரபுசாஹிப் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்.

PAH . துல்கர்னே

நமது நிருபர்

KM . கார் கனி (பாடகர்)

IAS , IPS , IFS வெறும் கனவல்ல நிஜமே


இந்திய, பிப்ரவரி 16 : இந்த ஆண்டிற்கான(2012) சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான தேதி அறிவிக்கபட்டு உள்ளது. வரும் மே மாதம் 20 ஆம் தேதி(20.05.2012)அன்று, முதல் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் IAS, IPS போன்ற இந்திய ஆட்சிப் பணி தேர்வுகள், இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசு பணிதேர்வாக கருதப்படும். இந்திய ஆட்சி பணி தேர்வுகளில் தகுதி பெறுபவர்கள் தான், இந்தியன் அட்மினிஸ்ரேட்டிவ் சர்வீஸ்(IAS), இந்தியன் போலீஸ் சர்வீஸ்(IPS), இந்தியன் பாரின் சர்வீஸ்(IFS), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுன்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ் உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேர்வு கட்டணம்:

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.UPSCயின் http://upsconline.nic.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்துஅனுப்ப வேண்டும்.

பெண்கள், SC, ST, உடல் ஊனமுற்றோர் தவிர்த்து, மற்ற அனைவரும் தேர்வுக்கட்டணமாகரூபாய் 50 செலுத்த வேண்டும்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள குறைந்தபட்ச தகுதிகள்:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகம் அல்லது கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தின் மூலமோ பட்டம் பெற்றிருத்தல் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.. பட்டபடிப்பு இறுதியாண்டு தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் முதல் நிலை தேர்வில் கனல்து கொள்ளலாம்.

ஆனால் அவர்கள் மெயின் தேர்வு எழுத செல்லும் பொது, தேர்ச்சி பெற்ற கல்வி சான்றிதழ்களின்நகல்களை சமர்பிக்க வேண்டும். பட்டபடிப்புகளுக்கு இணையான டிப்ளமோ சான்றிதழ்கள் பெற்றவர்களும் இதில் அனுமதிக்கபடுவர். அத்தோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெரும் மாணவர்கள், இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பை பெறுகிறார்கள்.

தேர்வு நடைமுறை :

இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் முதல்நிலை(Preliminary) தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கபடுகிறார்கள்.

முதல்நிலை தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் “ஜெனரல் ஸ்டடீஸ்(General Studies) எனப்படும் பொது அறிவு தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்று உள்ளன. தேசிய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், சுற்றுசூழல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாட பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல்தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Services Aptitude Test – CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவேஇருந்து வந்த விருப்பப்பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் Comprehension, Communication Skills, Inter Personal Skills , Logical Reasoning, Decision Making & Problem Solving,, General Mental Ability, English Language Comprehension Skills என்று பாடத் திட்டமே லேசாகபதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனிபோடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200.

ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்தஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும்தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்கமுடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில்வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும்ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையைவிட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாகஒரு பிரச்சினைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில்மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிகஉணர்ச்சிவயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா, சட்டத்தைமட்டும் கடுமையாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபிமானத்தையும் ஒரேஅளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள்.

இதன்மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவனங்கள் தரும் குறிப்புகளை மட்டும்ஆண்டுக்கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல்வடிகட்டப்படுவார்கள். மருத்துவம்படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம்எனும் ஒரே அளவுகோலில் தான் பரிசோதிக்கப்படுவார்கள். ஆரம்பக் காலத்தில்கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்விபயின்றவர்களுக்கும் CSAT தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான்.அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்!

அரசுமற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வுமுறைக்குத்தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டுதற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள்.இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களிலிருந்தே இந்தியில் விருப்பப்பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநிலமாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள்ஆங்கிலத்திலும்,இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.

முக்கிய தேதிகள்: 2012ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு 04.02.2012 , பூர்த்திசெய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி தேதி 05.03.2012 , தேர்வு நடைபெறும் நாள் 20.05.2012 .

தொகுப்பு

source from: www.mttexpress.com
ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை VSR நகைக் கடையில் பூட்டை உடைத்து திருட்டு கும்பல் கைவரிசை!!





முத்துப்பேட்டை, பிப்ரவரி 16 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் VSR நகைக்கடை என்ற பெயரில் திரு.யோகேஸ்வரன் என்பவர் சுமார் 15 வருடமாக கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று கடையை வழக்கம்போல அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று 16 .02.2012 காலை 6 மணியளவில் கடைவளியாக டி சாப்பிடுவதற்கு வந்த யோகேஸ்வரன் அவரின் கடையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரின் கடை கதவு உடைக்கப்பட்டு கடையில் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது, உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பார்வையிட்டனர். அப்போது பொலிசார் கூறுகையில் இந்த செயலை தனி நபர்கள் யாரும் செய்ய வில்லை என்றும் கும்பல் கும்பலாக பல்வேறு திருட்டுகளை முத்துப்பேட்டை நகரில் செய்து வருகிறார்கள் என்றும் விரைவில் அவர்களை நாங்கள் பிடித்து விடுவோம் என்றும் அப்போது தெரிவித்தனர். மேலும் கூறுகையில் திருடர்கள் தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி திருடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் இதில் சம்மத்தப்பட்டவர்கள் யார் என்பதை கண்டறிய கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவைகளை வரவழைக்க இருப்பதாக தெரிவித்தனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த இக்கடையின் நிறுவனர் திரு.யோகேஸ்வரன் அவர்கள், முத்துப்பேட்டை நகரில் அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் திருடர்கள் இவற்றை பயன்படுத்தி கொள்ளை அடிக்க துணிகிறார்கள். இதனால் வர்த்தகர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சமாகவே இருந்து வருகிறது. எனவே இவற்றை உடனே தமிழக அரசு தடை இல்லாத மின்சாரம் கிடைக்க ஏற்பாடு செய்தால் வர்த்தகம் செய்ய இலகுவாக இருக்கும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், வழக்கறிஞர் தீன் முஹம்மது, K . எர்சாத் அஹமது

எலுமிச்சை பழத்திலிருந்து மிசாரம்: முஸ்லிம் மாணவன் சாதனை...


குற்றாலம், பிப்ரவரி 16 : குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் மாணவன் முஹம்மது ஹம்தான், இவர் எலுமிச்சம் பழத்திலிருந்து மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளார். அதுபற்றிய விவரம் வருமாறு:
தென்காசியை சார்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர். காதர் முகைதீன், ஷமீமா தம்பதிகளின் மகன் முகம்மது ஹம்தான். இவர் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் மெட்ரிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பலரின் முன்னிலையில் எலுமிச்சம்பழத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்பதை செய்து காண்பித்து அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். நான்கு எலுமிச்சை பழங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பழத்திலும் இரும்பு ஆணி மற்றும் காப்பர் கம்பியை செருகினார். இதன் பின்னர் காப்பர் கம்பியை தனி வயரிலும், இரும்பு ஆணியை தனி வயரிலும் இணைத்து சிறிய 2 வோல்ட் திறன் கொண்ட சிறிய பல்பினை எரிய வைத்து இந்த சாதனையை நிகழ்த்தி காட்டினார். இந்த கண்டு பிடிப்பு குறித்து மாணவன் நிருபர்களிடம் கூறியதாவது:- "எனது தந்தை காதர் முகைதீன் மெக்கானிக்கல் என்ஜினீயர். அவர் கத்தார் நாட்டில் பணிபுரிந்தார். நானும் அங்கு வசித்தேன். நான் அங்குள்ள டெல்லி பப்ளிக் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தேன். இந்நிலையில் எனது தந்தை நெல்லையில் ஏற்றுமதி-இறக்குமதி கம்பெனி தொடங்கியதால் நாங்கள் தென்காசி வந்துவிட்டோம். நான் பழையகுற்றாலத்தில் உள்ள ஹில்டன் பள்ளியில் சேர்ந்து 6-ம் வகுப்பு படித்து வருகிறேன். அறிவியல் பாடத்தில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று படித்தேன். அப்போதுதான் புதுவழியில் சிட்ரிக் அமிலத்தில் இருந்து மின்சாரம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை வந்தது. எலுமிச்சம்பழத்தில் சிட்ரிக் அமிலம் உள்ளதால் அதி லிருந்து மின்சாரம் எடுக்க நினைத்தேன். அதன்படி எலுமிச்சம்பழத்தில் இரும்பு மற்றும் செம்பு கம்பிகளை சொருகி அவற்றை மின்கம்பி களால் இணைத்து பார்த்த போது மின்சாரம் வந்தது. ஒரு எலுமிச்சம்பழத்தில் இருந்த 0.5 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கும். 4 பழங்களில் இருந்து 2வாட்ஸ் பல்பு எரிகிறது. மேலும் "எலுமிச்சை, பல்லாரி, உருளைக்கிழங்கு, தக்காளி, கத்தரிக்காய், ஆரஞ்சு, வாழைப்பழம் உள்ளிட்டவைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என எனக்கு பாடம் நடத்திய ஆசிரியை கூறினார்கள். அதனை நான் செயல்படுத்தி மின்சாரம் கிடைப்பதை உறுதிபடுத்திக் கொண்டேன்." இவ்வாறு மாணவன் முஹம்மது ஹம்தான் கூறினார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அசாருதீன் முஹம்மது ஆரிப்

TNTJ சார்பில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம்..



திருவாரூர், பிப்ரவரி 15 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் 7 சதவீதமும் மாநிலத்தில் 10 சதவீதமும் இட ஒதிக்கீடு கிடைக்க வழியுறுத்தி திருவாரூரில் நேற்று மாபெரும் வாழுரிமை போராட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய உரிமையை கேட்க போராடினார்கள்.
source from: www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com, www.mttexpress.com
நமது நிருபர்

தமீம் அன்சாரி (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டையில் அகல ரயில்பாதை அமைக்க SDPI நடத்தும் ரயில் மறியல் போராட்டம்.



முத்துப்பேட்டை, பிப்ரவரி 15 : முத்துப்பேட்டையில் SDPI கட்சி சார்பில் மாவட்ட பொது குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மிக முக்கிய தீர்மானமாக திருவாரூரிலிருந்து, காரைக்குடி வரை அகல ரயில்பாதை திட்டத்தை உடனே அமைக்க கோரி வருகின்ற 26 .02 .2012 அன்று மதியம் 2 மணியளவில் திருவாரூர் ரயில்வே நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. இதில் அனைத்து பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசு ஊழியர்களும் மற்றும் அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இதில் கலந்து கொள்ள வேண்டுமாய் அனைவருக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் இதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள், தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

K . எர்சாத் அஹமது

காதலர் தின சீர்கேட்டால் சிக்கித்தவித்த இஸ்லாமிய பெண்கள்..!!!




உலகம், பிப்ரவரி 15 : கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளனர்.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பரிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிளக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதாரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பன்னி அப்படி எஸ்.எம் எஎஸ் அனுப்பு இப்படி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிமிடருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது;அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243 .
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்குரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.
ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும்ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது,அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பரிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குழைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கண்ணி பரிசோதனை (virgin test)நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பரிபொகின்றது.
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறை கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்பொய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
விட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைளில் அதிகம் பார்த்திருப்பிர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவள நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.
இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும்கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கிய என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடு சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொன்ன லவ் பன்னிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்சகொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்ளே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு பொய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பென்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேனும் காதலித்தால் முதலில் சன்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பறவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்ரையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகைள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 ம் நம்மை பொறுத்தவரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும்உயிர்க் கொல்லி நோய்காக்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாமல்எல்லா நேரங்களிலும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்டவேண்டும்.
source from www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்
TR .அப்துல் ரஹ்மான், T .அப்பாஸ்

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்


உலகம், பிப்ரவரி 14 : வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.

வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.

3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.

4. வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.

5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.

10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.

13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.

14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.

15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.

16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.

18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.

19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.

20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.

21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.

22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.

23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.

28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.

29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.

30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.

31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.

33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.

34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது
.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.

37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.

38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.

39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.

40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்
.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.

43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்

45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.

46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.

47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.

48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.

49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.

50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

நமது நிருபர்

சுல்தான்

இஸ்லாத்தின் பார்வையில் "காதலர் தினம்" INTJ தலைவர் SM .பாக்கர் அவர்களின் பேட்டி..




சென்னை, பிப்ரவரி 14 : இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம் என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் தலைவர் SM . பாக்கர் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு: இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் வலிகெடுவதற்கு உண்டான வாசல்கள் திறந்து விடப்படுகின்றது. அதில் ஒரு புறம் இந்த காதலர் தினம். காதலை இஸ்லாம் மறுப்பதில்லை. ஆனால் காதல் என்கிற பெயரில் நடக்கின்ற இந்த "காம விளையாட்டுகளைத்தான்" இஸ்லாம் தடுக்கின்றது. நபி(ஸல்) அவர்கள் தவறான பார்வை கண்கள் செய்யும் விபச்சாரம் ஆகும். தவறான பேச்சு நாவு செய்யும் விபச்சாரம் என்றார்கள். இன்றைக்கு இந்த இரண்டும்தான் காதல் என்கிற பெயரில் நடக்கிறது. மேலும் அல்லாஹ் திருமரையிலே விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறுகிறான். இந்த அடிப்படையில் எந்த ஓர் முஸ்லிம் பெண்ணோடு அல்லது ஆணோடு தவறான பார்வை மற்றும் தவறான பேச்சு, தனித்திருத்தல் ஆகியவைதான் இன்றைக்கு காதலாக காதலர் தினத்தன்று நடக்கின்ற நிகழ்வாக கருதப்படுகின்றது. ஆணும், பெண்ணும் தனித்திருந்தால் மூன்றாவதாக அங்கு ஷைத்தான் இருக்கின்றான் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த காதலர் தினத்தை கொண்டாடுபவர்கள் ஷைத்தானுடைய வலையிலே இருந்து தங்களுடைய மார்கத்தை இழப்பதோடு தங்களுடைய குடும்பத்திற்கும் தவறான பெயரை வாங்கித்தருகின்றனர். இதைத்தடுக்கும் முகமாக கடந்த காதலர் தினத்தன்று கலாச்சார சீரழிவின் களமாக சென்னை மெரீனா கடற்கரையில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மகளீர் அணி தாவா பணியிலே இறங்கி இந்த சீர்கேட்டை தடுக்க முனிந்த போது இந்த சமுதாயத்தின் அவளம் வெளிப்பட்டது. கடற்கரையில் காதலர்களோடு இருந்த பர்தா அணிந்த 10 ஜோடிகளிடத்தில் தங்கள் தாவாவை செய்த போது அதிலே 9 பேர் முஸ்லிம் அல்லாத ஆணுடன் இருந்தது தெரியவந்தது. அதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மகளீர் குழுவினர் சம்மந்தப்பட்டவர்களுக்கு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் எடுத்துச் சொல்லி ஒரு சில குடும்பத்தாரிடம் தெரியப்படுத்தி சீர்கேட்டை தடுத்தனர். சென்னை மெரீனா கடற்கரையில் பிடிப்பட்ட 10 பேரில் 9 பேர் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாதவர்களோடு காதல் என்றால் சென்னை, மற்றும் மாநிலம் முழுவதும் எவ்வளவு பேர் என்பதை நினைத்து பார்க்கும் போது சமுதாயத்தின் நிலை கண்டு நெஞ்சம் பதறுகிறது. இந்த ஆண்டும் பிப்ரவரி மாதம் தொடங்கிய முதலே இதற்கான பிரச்சாரங்களை INTJ தொடங்கி விட்டது. இருப்பினும் INTJ வாழ் மட்டுமே இந்த கலாசார சீர்கேட்டை தடுத்து நிறுத்திவிட முடியாது. இதற்கான அனைத்து சமுதாய அமைப்புகளும், அனைத்து முஹல்லா ஜமாஅத்தார்களும் களமிறங்கி போராடினால் தான் இந்த கலாசார சீர்கேட்டுக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அப்போது அவர் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது மாநில செயலாளர் செங்கிஸ்கான் உடனிருதார் .
source from: www.mttexpress.com, www.muthupettaiexpress.com, www.muthupettaixpress.com

தொகுப்ப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்

மவுத்து அறிவிப்பு: "ரஹீமா அம்மாள்"


முத்துப்பேட்டை, பிப்ரவரி 14: PKT ரோடு மர்ஹும் தே.கு.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் மு.சே.மு. தாவூத் அவர்களின் மனைவியும், மர்ஹும் தே.கு.மு.ச.அப்துல் ரஜாக், சே.கு.மு.ச.அப்துல் வஹாப் மர்ஹும் தே.கு.மு.சபூர் முஹைதீன், மர்ஹும் தே.கு.மு. ஜியாவுதீன் ஆகியோரின் சகோதரியும் மு.அபுல் ஹசன், மு.ஷாகுல் ஹமீது இவர்களின் தாயாருமாகிய "ரஹீமா அம்மாள்" அவர்கள் இன்று காலை 5 :30 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4 மணியளவில் திருவாரூர் பள்ளிவாசல் கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.
source from; www.mttexpress.com
அறிவிப்பவர்
சே.கு.மு.ச.அப்துல் வஹாப்

நமது நிருபர்

KM . காதர் கனி (பாடகர்)

அரசு வேலைவாய்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


சென்னை, பிப்ரவரி 12 : தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

நமது நிருபர்

சேக்கனா M.நிஜாம்.

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாரதீய ஜனதா கட்சியின் 3 அமைச்சர்கள் வெளி ஏற்றம்.





ஆந்திரா, பிப்ரவரி 09: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலமான கர்நாடகாவில், நேற்று மதியம் மாநில சட்ட சபையில் பரபரப்பான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அந்த மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் சவதி சட்டசபை விவாதத்தை கவனிக்காமல் தான் வைத்திருந்த மொபைல்போனில் ஆபாச படத்தை பார்த்து ரசித்து கொண்டிருந்தார் என்பது கர்நாடக மக்கள் தலைகுனிய வேண்டிய வெட்கக்கேடான விசயமாகும். அது மட்டுமல்லாமல் அவர் அருகில் அமர்திருந்த பெண்கள் நலத்துறை அமைச்சர் சி.சி. பாட்டிலும் அவர் கூட சேர்ந்து கொண்டு அவற்றை பார்த்தது இதைவிட ஒரு வெட்க கேடான விஷயம் இல்லை என்றே சொல்லலாம். மக்களைப் பற்றிய சிந்தனை இல்லாதவர்களை, ஒழுக்ககேடானவர்களை, சட்ட மன்றத்திற்கு அனுப்பினால் இப்படித்தான் நடக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும். இந்த மிருகங்களின் செயல்களை கண்டிக்காமல், தண்டிக்காமல் தொடர்ந்து சட்டமன்றத்தில் அனுமதித்தால் சட்டசபைலேயே "காபரே நடனம்" கூட கூசாமல் பார்க்கும் துணிச்சல் இவர்களுக்கு வந்துவிடும். இவர்களையெல்லாம் சட்ட சபையிலிருந்து மட்டுமல்ல அரசியலை விட்டே மக்கள் தூக்கி எரிய வேண்டும். ஏனெனில் இவர்கள் சமூகத்தின் விசப்பாபுகள்
source from: www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டே இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் மூத்த குடிமக்கள் நடத்தும் இருதய பரிசோதனை மருத்துவ முகாம்..



முத்துப்பேட்டை, பிப்ரவரி 09 : முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை சார்பில் சிறப்பு இருதய பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்று இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். நியூ மெடிக்கல் S .சகாப்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை மூலம் ஊருக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்ய உள்ளதாகவும், அதில் முதல் காரியமான முத்துப்பேட்டையில் பழைய துறைமுகம் இருந்த அதே இடத்தில் மீண்டும் கொண்டு வர இருக்கிறோம் என்றும், முத்துப்பேட்டையில் அகல ரயில் பாதையாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள போகிறோம் என்றும், மேலும் மூத்த குடிமக்களுக்கு அரசுகள் மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு நல திட்டங்களை இதன் மூலம் பெற்று தர பாடுபடுவோம் என்றும், அவர் தெரிவித்தார். இந்த செயல் திட்டத்திற்கு இளைஞர்கள் நல் ஆதரவு தர வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார். முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவை, முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் கோவை KG . மருத்துவமனை இணைந்து இருதய பரிசோதனை மருத்துவமுகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதில் எக்கோ ஸ்கேன் (ECHO SCAN),E .C.G . இரத்த சர்க்கரை பரிசோதனை, உணவியல் ஆலோசனை மற்றும் இருதய மருத்துவர் ஆலோசனை உட்பட அனைத்தும் வெறும் 500௦௦ ரூபாயில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இடம்: சிதம்பர மஹால் பேங்க் தெரு முத்துப்பேட்டை, நாள்: 11 .02 .2012 சனிக்கிழமை, காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற உள்ளது. எனவே அனைத்து மக்களும் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
முத்துப்பேட்டை மூத்த குடிமக்கள் பேரவையின் பொறுப்பாளர்கள்:
நியூ மெடிக்கல் S .சகாப்தீன், S .பன்னீர் செல்வம் ரோட்டரி கிளப், M.முஹம்மது முஹைதீன் Ex .கவுன்சிலர், கோ. அருணாச்சலம், MA .இபுனு ஹமீது, MKN . முஹம்மது முஹைதீன்,வெங்கட் ராஜ், KM . தலைர் ஹனிபா. இளைஞர்கள் உறுதுணையாளர்கள்: அமீருதீன் நியூ மெடிக்கல், S .சேக் அப்துல்லாஹ் கேம்ப் ஆஸ்திறேலியா.
source from www.mttexpress.com
நமது நிருபர்

J . ஷேக் அப்துல் காதர்

முத்துப்பேட்டை: அறிவியல் தேர்வுக்கு ரூபாய் நோட்டில் பிட் அடித்த மாணவர்..!!!



முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : ருபாய் நோட்டு என்பது நமது நாட்டின் சொத்தாகும், அப்பணத்தை சேதமாக்குவதும், அவமதிப்பதும் சட்ட பூர்வமான குற்றங்களில் ஒன்றாகும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.ஆனால் அதற்க்கு மாறாக பணத்தில் பெயர் எழுதுவது, முகவரி எழுதுவது, செல் நம்பர் எழுதுவது, கவிதை எழுதுவது, கையொப்பம் போடுவது என சில குசும்பு வேலைகளை நீண்ட காலமாக சில சமூக விசமிகள் செய்து வருகிறார்கள். அவற்றை நாமும் கண்டிருப்போம். இதனை பார்த்த நல்லவர்கள் கூட வழிதவறி நடக்க விசமிகள் செய்து வருகிறார்கள். ஆனால் இதை தடுக்க அரசு எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மேலும் இப்படி ரூபாய் நோட்டுகளை வைத்து தவறுக்கு மேல் தவறு செய்து வரும் சமூகவிரோத நபர்கள் தாம் படிக்கும் பள்ளி தேர்வுக்கு ரூபாய் நோட்டை பயன்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அதுக்கு உதாரணம் இந்த பத்து ரூபாய் நோட்டு. முத்துப்பேட்டையில் உள்ள சேகர் என்பவரது கடைக்கு வந்த இந்த ரூபாய் நோட்டுதான். இந்த ரூபாயில் எழுத்தப்பட்டிருந்தது அறிவியல் படத்திற்கான பிட் ஆகும்.இதில் ஓர் பென்சிலால் மிக தெளிவாக எழுதப்பட்டிருந்தது. படித்து நல்ல பனி யில் சேர்ந்து இந்த நாட்டிற்காவது நமது மகன் ஏதாவது செய்வான் என்று தந்தைகள் நினைப்பார்கள். ஆனால் சிறிய தொகை கொண்ட இந்த ரூபாயை கூட மதிக்கத்தெரியாத இந்த விரோதிகள் எப்படி நாட்டை பாதுகாப்பார்கள்.? இதனைத் தடுக்க இந்திய அரசு திறந்தரமான தீர்வை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நற்குணம் உள்ள மாணவர்கள்.
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை பேரூராட்சியில் நினைத்தால் மட்டும் ஊதும் சங்கு, ஓர் பார்வை...



முத்துப்பேட்டை, பிப்ரவரி 08 : முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 35 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும் அளவில் வசிக்கும் இப்பகுதியில் இருக்கும் பேரூராட்சிக்கு நல்ல வருமானமும் ஈட்டு வருகிறது. இதனால் முத்துப்பேட்டை பேரூராட்சியை, நகராட்சியாக மாற்றும் திட்டமும் தமிழக அரசுக்கு உள்ளது. தனி தாலுக்காவாக அறிவிக்கப்பட்டும் அது தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இப்படி தனி பெருமைப் பெற்ற பேரூராட்சி வளாகத்தில் 1989 ஆம் ஆண்டு பல லட்சம் செலவில் தனி கோபுரமாக அமைக்கப்பட்ட சங்கு பயன்பாட்டில் உள்ளது. அந்த சங்கு காலை 5 , 9 மணிக்கும் மதியம் 1 மணிக்கும் இரவு 9 மணிக்கும் ஊதப்பட்டு நடைமுறையில் இருந்தது. இஸ்லாமியர்களின் நோன்பு கால கட்டத்தில் அதிகாலை 4 .30 மணிக்கும் மாலை 6 .30 மணி்கும் சங்கு ஒழித்து வந்தன. ஆனால் தற்போது இந்த சங்கு நினைத்தால் ஊதுவதும், நினைக்காவிட்டால் ஊதாமல் இருப்பதும் நடைமுறையாகிவிட்டது.தினமும் சங்கை ஏன் பயன்படுத்துவது இல்லை.இப்படி நல்ல முறையில் இயங்கும் சங்கை பயன்படுத்த ஏன் பேரூராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது என்று பொது மக்கள் மத்தியில் கேள்வி எழும்பி உள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இந்த வேலை எங்களுக்கு உரியது அல்ல என்றும், இதற்காக ஓர் தனி நபரை பனியில் அமர்த்திதான் அவற்றை இயக்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் தெரிவித்தனர். சங்கு போடுவதற்கு ஒரு மணிநேரம் கூட ஆகாது அதற்க்கு ஏன் தனி நபர் என்றும், அவருக்கு தனி சம்பளம் அரசு பணத்தை ஏன் வீணடிக்கும் செயல் என்றும் மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து பேரூராட்சி கவுன்சிலர் ஜனாப். ஜபருல்லாஹ் கூறுகையில், சங்கு பயன்படுத்துவது ஓர் சாதாரண விஷயம் என்றும், இது குறித்து பேரூராட்சி மன்றத்தில் பல முறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி மன்றம் தொடர்ந்து அலட்சியப்போக்கில் இருந்து வருகிறது என்றும், அவர் தெரிவித்தார். மேலும் பேட்டை பூங்கா பாதுகாப்புக்கு அருளப்பன் என்கிற நபர் அரசு பணியாளராக உள்ளார் என்றும் ஆனால் பேட்டையில் பூங்காவே இல்லை ஆனால் அவர் தற்போது பேரூராட்சியில் எடுபிடியாகத்தான் இருந்து வருகிறார் என்றும், இவரையே இந்த சங்கு வேலைக்கு சேர்த்து பணியில் அமர்த்தினால் மிக நன்றாக இருக்கும் என்றும் நிர்வாகத்திடம் கூறியதும் மேலும் மேலும் அலட்சியப்போக்கையே காட்டுகிறது என்றார். மக்களுக்கு சேவை செய்யவே உள்ள நிர்வாகம் மக்களுக்கு பயன்படக்கூடிய சங்கை இயக்க தயங்குவது ஏன்? அதிகாரிகளின் அலட்சியமா? அல்லது பொறுப்பற்று போன வேலையா? என்று மக்களுக்கு விடைகான முடியாத கேள்வியாக உள்ளது. பொறுத்திருந்து பாப்போம் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்று....
source from: mttexpress.com, www.muthupettaixpress.com, www.muthupettaiepxress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

முத்துப்பேட்டை SDPI - யின் வளர்ச்சிநிதி வசூல் இயக்கம் பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை


முத்துப்பேட்டை, பிப்ரவரி 07 : சோசியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆப் இந்தியா SDPI ஆல விருச்சமாய் வேரூன்றிட நிதி தாரீர் என்று வளர்ச்சி நிதி வசூல் இயக்கம் என்று பிப்ரவரி 20 முதல் மார்ச் 20 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது எனவே இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு திருவாரூர் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், SDPI கட்சி ஆல விருச்சமாய் வேரூன்றிட அதிகமான நிதிகள் தேவைப்படுகிறது என்றும் எனவே இதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் தேச நலன், சமுதாய முன்னேற்றம், நமது சந்ததிகளின் எதிர்காலம், அநீதிக் கெதிரான போராட்டங்கள், உரிமைக்குரல், மக்கள் சேவைப்பணிகள், தேர்தல் கலங்கள் ஆகிய அனைத்தும் கொண்டு ஓர் களமாக விளங்கிட உதவிட வாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தொடர்புக்கு: 98654 27777 , SDPI மாவட்ட பொருளாளர். நெய்னா முஹம்மது: 96583 37915 , SDPI மாவட்ட செயலாளர். அப்துல் அஜீஸ்: 99427 05536

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது, TR . அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)