முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

போலீஸ் பக்ருதீனும்- புத்தூர் கைதுகளும் போலீசின் நடவடிக்கைகளும்!


''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும்
21பேரை சுட்டிருக்கேன். உன்னையும்
சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை
என்றால் ஆம்பளையே இல்லை''

-என்கவுன்ட்டர் வெள்ளத்துரை
======================================
''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.
அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.
நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும்
உன்னை கொல்வேன''
-போலீஸ் பக்ருதீன்
======================================

அதெப்படி என்று தெரியவில்லை....என்கவுண்டர் பண்ணச் செல்லும் போதெல்லாம் போலீசார் வெட்டுக்காயம் படுவது!இந்த கதையை தொடர்ந்து காவல்துறை ஒவ்வொரு சம்பவத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறது.

போலீசின் டார்ச்சருக்கு பயந்து தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் நெருங்கும் போது அவர்கள் பீதியுடன் தான் காணப்படுவார்கள்.இதுதான் மனோதத்துவ ரீதியாக யதார்தமானது. துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பெரும் படையோடு வரும் காவல்துறையை எதிர்க்க முடியாது என்பது இப்படி தலைமறைவாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

போலீசையோ இராணுவத்தையோ எதிர்த்து நிற்பவர்கள் நவீன ஆயுதங்களுடன் தலைமறைவாக இருக்கும் போராளி குழுக்கள்
தான்.போலீசிடம் சிக்கினால் பின்னி எடுத்துவிடுவார்கள் என்று பயந்து போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களல்ல.இந்த
வகையை சேர்ந்தவர்கள் தான் பண்ணா இஸ்மாயில்,போலிஸ் பக்ருதீன்,பிலால் மாலிக்.

இவர்களால் அரிவாளாலும் (?!) குக்கர் கைப்பிடியாலும் (?!)தாக்கப்பட்டதாக கூறப்படும் போலீசாரின் படங்களை காவல்துறையால் வெளியிட முடியவில்லை என்பதே போலிசின் பொய் வாதத்திற்கு சான்று.

தமிழக ஹிந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில்,ஒரு சமுதாயத்தை குறி வைத்து
ஹிந்துத்துவாவும் மீடியாக்களும் பரப்புரை மேற்கொண்ட நேரத்தில் தமிழக டி.ஜி.பி ராமானுஜத்தின் அறிக்கை வெளியாகி இந்த பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.பொய் பரப்புரைகளை மேற்கொண்டவர்கள் அவமானத்திற்குள்ளாகி மௌனம் காத்தனர்,காரணம் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களே கொலையாளிகள் என்பதையும் இந்த கொலைகள் மத விவகாரங்களுக்காக நடை பெறவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தது என்பதையும் டி.ஜி.பி தெளிவு படுத்தி இருந்தது தான்.

டி.ஜி.பி யின் அறிக்கையில் வேலூர் வெள்ளையப்பன்,சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றவர்கள் யார் என்று
தெரியவில்லை.அவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு இருபது லட்சம் பரிசளிக்கப்படும் என்ற தமிழக அரசின் செய்தியும் சொல்லப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் தான் போலிஸ் ஒரு கேம் ஆடியது.இந்த பரிசு அறிவிப்போடு சேர்த்து பண்ணா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்.பிலால் மாலிக் படங்களைப் போட்டு மீடியாக்களுக்கு செய்தி தந்தது போலிஸ். அதாவது டி.ஜி.பியின் அறிக்கையில் இல்லாத இவர்களின் பெயர்கள் போலிஸ் ஆடிய கேம்மில் படங்களுடன் வெளியாகி,சேலம் ரமேஷ் கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டது

மீடியாக்களில் மூவரது படங்களும் வெளியான நிலையில்,இது குறித்து சேலம் கமிஷனர் மஹாலியிடம்,சேலம் மாலை முரசு
நிருபர் கேட்டபோது இந்த படங்களையும் இந்த செய்தியையும் போலீஸ் வெளியிடவில்லை;அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என ஜகா என்றார் கமிஷனர்.போலிஸ் வெளியிடவில்லை என்றால் வேறு யார் வெளியிட்டது?

ஆனால் அப்போது மேற்கண்ட மூவரும் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கிற்காக போலீசாரால் தேடப்பபட்டு
வந்தவர்கள்.இந்துத்துவா தலைவர்களின் படுகொலைகளை கண்டித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்திய காரணத்தால் அவர்களை திருப்திபடுத்தவோ அல்லது உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் தலைமறைவாக இருக்கும் இந்த மூவரில் பக்ருதீன் மீது இந்த பழியை தூக்கி போட்டு ரமேஷ் கொலையின் குற்றவாளியை போலிஸ் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவோ முயற்சி செய்திருக்கிறது போலிஸ் என்று தான் புரிய முடிகிறது.

ரமேஷ் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான காவலாளி,வந்தவர்கள் 20-23 வயது கொண்டவர்கள் என்று வாக்கு மூலம் கொடுத்திருப்பது இங்கேகவனிக்கத்தக்கது. மேற்கண்ட மூவரும் குறைந்த பட்சம் 35 ஐ கடந்தவர்கள்.

ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வேலூர் வெள்ளையப்பன் கொலைக்கு காரணமானவர்கள் இது வரை கண்டு
பிடிக்கப்படவில்லை.இந்நிலையில் தலைமறைவாக இருந்த பக்ருத்தீன் தான் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை குற்றவாளி என்றால் பக்ருதீன் சேலத்திற்கு வந்து ரமேஷை போட்டு தள்ளி விட்டு போய் இருக்கிறார் அல்லது எங்கோ இருந்து கொண்டு கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கிறார் என்று பொருள் கொள்ள முடியும்.இதில் இரண்டாவதை இப்போது போலீஸ் சொல்கிறது.முதலாவதை சொன்னால்,தலைமறைவாக இருக்கும் ஒருவர்,அதுவும் காவல்துறையின் பல பிரிவுகளால் தேடப்படும் ஒருவர் சேலம் நகருக்குள் பிரவேசித்து கொலை செய்து விட்டு போய் இருக்கிறார் போலிஸ் என்ன பிடுங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்விகள் போலிசை நாறடித்து விடும்.கமிஷனர் மஹாலி காவல்துறை தலைமையால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார்.

பக்ருதீன் எங்கிருந்தோ கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்று போலிஸ் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.இதுவரை எந்த கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு,பக்ருதீன்தான் எங்களை அனுப்பினார் என்றும் வாக்குமூலம் தரவில்லை.குறைந்த பட்சம் இப்படி ஒரு ஜோடிப்பை கூட காவல்துறையால் செய்முடியவில்லை. மறந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஆக, திட்டமிட்டு இந்த படுகொலை வழக்குகளை தலைமறைவாக இருந்த பக்ருதீன் மீது போட்டிருக்கிறது போலீஸ் என்று கருத இடமுண்டு இவர்களை பயங்கரவாதிகளாக போலீசும் மீடியாக்களும் சித்தரிக்கின்றன....மதுரை பைப் வெடி குண்டு வழக்கு பக்ருத்தீன் மீது சுமத்தப்படுவதற்கு முன்பு வரை சில வழக்குகளில் சிறை சென்று விடுதலையாகி மதுரை நெல்பேட்டை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவர்தான் பக்ருதீன்.அப்போது வரை இவர் காவல்துறையின் பார்வையில் பயங்கரவாதி இல்லை. இவருக்கும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரைக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இவர் மதுரையை விட்டு தலைமறைவான பின்னர் தான் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டார்.இதற்கு காரணம் மதுரை காவல்துறையோடு இவருக்கு ஏற்பட்ட மோதல் போக்குதான்.

கடந்த 07/04/2010 அன்று மதுரை கரீம்ஷா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு வீட்டில் திருட வந்த திருடனை பிடித்து போலீசில்
ஒப்படைத்திருக்கிறார் பக்ருதீன்.இந்த வழக்கை பக்ருதீன் மீதே திருப்பி இருக்கிறது நெல்பேட்டை போலீஸ்.

மதுரை ஜே.எம்.கோர்ட்டில் இதற்காக கையெழுத்து போட்டு வந்த நிலையில் மதுரையில் இருந்த பக்ருதீன் அக்காலகட்டத்தில், கலவர வழக்கு ஒன்றின்
ட்ரையலுக்காக ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராக தென்காசியிலிருந்து மதுரைக்கு 5 பேர் வந்தனர்.இவர்கள் பக்ருதீனுக்கு ஏற்கெனவே சிறையில் பழக்கமானவர்கள் என்பதால் இவர்களை மதிய உணவிற்காக நெல்பேட்டைக்கு கூட்டி வந்தார் பக்ருதீன்.இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கே வந்த மதுரை B1காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பால குமார்,''யாருடா நீங்க எல்லாம் வண்டியிலே ஏறுங்கடா''என்று சொல்ல,''அவங்க ட்ரையலுக்கு வந்திருக்காங்க.நான் தான் இங்க கூட்டி வந்தேன் சாப்பிட.வேணும்னா மதுரை தென்காசி உளவு பிரிவு போலீசை கேட்டு பாருங்க''என்று பக்ருதீன் சொல்லி இருக்கிறார்.''அப்ப நீ வண்டியிலே ஏறு'' என்று இன்ஸ்.பாலகுமார் பக்ருதீனிடம் சொல்ல..''ஏற்கெனவே உங்களை நம்பி வந்தேன்.வந்த இடத்துல எம்மேல இரண்டு வழக்கை போட்டீங்க ஒரு குண்டாஸ் போட்டீங்க.அதை உடைச்சிட்டு இப்பதான் வெளியில வந்திருக்கேன்.உங்களை நான் நம்பமாட்டேன்'' என்று பகுருதீன் சொல்லிக்கிட்டிருந்த போதே அங்கே வந்த மதுரை A.C என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை(அப்போது இவர் மதுரை A.C ) ''என்னடா வண்டியில ஏறுன்ன்னா ஏறமாட்டேன்குற'' என்று சொல்லிக்கொண்டே பக்ருதீனின் பனியனை கொத்தாக பிடித்து துப்பாக்கியை அவர் நெற்றிப்பொட்டில் வைத்து ''நீ வண்டியில ஏறலைன்னா சுட்டுருவேன்'' என மிரட்டி இருக்கிறார்.இதற்கும் அசையாத பக்ருதீன்...''நான் செத்தாலும் இந்த ஏரியாவ விட்டு வரமாட்டேன்'' என்று எகிற...இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டிருக்கிறது.அப்போது வெள்ளதுரையுடன் இருந்த 2 எஸ்.ஐ.,ஒரு இன்ஸ்பெக்டர்,20 காவலர்கள் சேர்ந்து பக்ருதீனை
அடித்திருக்கிறார்கள்.

இதனைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் இடை மறித்து பக்ருதீனை போலீசிடமிருந்து மீட்டுள்ளனர்.பக்ருதீனை அடித்தபோது பக்ருதீன் தள்ளிவிட்டதில் வெள்ளத்துரை கீழே விழுந்திருக்கிறார்.இது வெள்ளதுரைக்கு அவமான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அப்பொழுது வெள்ளத்துரை,''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும் 21பேரை சுட்டிருக்கேன்.உன்னையும் சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை என்றால் ஆம்பளையே இல்லை'' என கோபத்தில் கொந்தளிக்க, பக்ருதீனோ,''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும் உன்னை கொல்வேன'' என பதிலுக்கு எகிறி இருக்கிறார்.இந்த செய்தியை ஜூலை 23-29 தேதியிட்ட மக்கள் ரிப்போர்ட்டில், 'பண்றதை சொல்ல மாட்டேன்;சொல்றதை பண்ண மாட்டேன்-வைகை நகரை வெலவெலக்க வைக்கும் என்கவுன்ட்டர் வெள்ளத்துரை' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.இதில்,பக்ருதீன் குடும்பத்தினர்,வெள்ளத்துரை என இரு தரப்பையும் தொடர்பு கொண்டு அவர்களின் விளக்கங்களை அப்படியே பதிவும் செய்திருந்தோம்.

இந்நிலையில்,மறுநாளிலிருந்து பக்ருதீனை தீவிரமாக தேடத் துவங்கியது மதுரை காக்கி டீம்.பக்ருதீனின் சகோதரன் தர்வீசை
.பிடித்து சென்று துன்புறுத்தியது.குடும்பத்தினரையும் மிரட்டியது.இது குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு கூட அவர்கள் கடிதம் எழுதினர்.போலீசின் பிடியில் சிக்காமல் அப்போது தலைமறைவான பக்ருதீனை தான் இப்போது சென்னை பெரிய மேட்டில் பிடித்ததாக சொல்கிறது போலீஸ்.

பக்ருதீன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்,அத்வானியின் வருகையையடுத்து பைப் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.இந்த வழக்கை பக்ருதீன் மீது போட்டது மதுரை போலீஸ்.ஆனால்,மதுரையின் முக்கிய பி.ஜே.பி பிரமுகர் ஒருவரே முஸ்லிம்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.இந்த வழக்கு திசை திருப்பப் படுகிறது.மதுரை முஸ்லிம்களில் பலர் எனது நண்பர்கள் என்று நம்மிடம் சொன்ன அவர், அத்வானி பயணத்தில் சென்ற கான்வாய்க்கு ஓட்டுனர்களாக இருந்த அனைவரின் மொபைல் எண்கள்,அவர்களின் விபரங்களை போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தான் வாங்கினார்கள்.இதற்கு முன் அத்வானி போகும் பாதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர் போலீசார்.என்றும் சொன்னார்.இதையும் அப்போது மக்கள் ரிப்போர்ட்டில் எழுதி இருந்தோம்.

பக்ருதீன் தலைமறைவானதன் விளைவு,இன்று அவர் மீது ஆடிட்டர் ரமேஷ்,வெள்ளையப்பன் கொலை வழக்கும்
சுமத்தப்பட்டிருக்கிறது.ஆயினும் அவரை போலீசார் மற்றும் மீடியா சொல்வது போல் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொள்ள
முடியாது.அவர் மீது போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கவில்லை.அதனால்,ஒருவரது குற்றம் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியல்ல.என்ற சட்ட நெறிமுறைபடி பக்ருதீன் பயங்கரவாதியோ,போலீஸ் சுமத்தும் வழக்குகளில் குற்றவாளியோ அல்ல.

இதே போல மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ள பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோருக்கும் இதே நிலை தான்.மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போலீஸ் சொல்லும் ஒரே ஆதாரம்,பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவான மங்கலான படக்காட்சி தான்.இதில் இருப்பது பண்ணா இஸ்மாயில் என்கிறது போலீஸ்.

ஆனால்,இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிசான் புஹாரி உள்ளிட்டவர்கள் அந்த படத்தை பார்த்து இவர்
பண்ணா இஸ்மாயில் இல்லை என தெரிவித்துள்ளனர் என்கின்றனர் இவர்களது வழக்கறிஞர்கள்.இப்போது பண்ணா இஸ்மாயில் கைதாகி இருக்கும் நிலையில் காமிரா பதிவில் இருப்பது இவர் தானா என தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகமற நிரூபிக்க வேண்டியது போலீஸ் தான்.இந்த வழக்கில் நிறைய சந்தேகங்களை போலீஸ்தெளிவுபடுத்தவில்லை.குண்டு வெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு சொந்தமானது என்று சொல்லும் போலீஸ் அது குறித்து விசாரிக்கவே இல்லை என்பது உட்பட பல சந்தேகங்கள் கர்நாடக முதல்வரிடம் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சமர்பிக்கப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் இப்போது வரை மதுரை பைப் வெடிகுண்டு,ஆடிட்டர் ரமேஷ் ,வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் பக்ருதீனும்,
மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோரும் போலீசாரால் சிக்க சிக்கவைக்கப்பட்திருக்கிறார்கள்.

என்ற கூற்றை மறுக்கும் ஆதாரங்கள் போலீசாரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.உண்மை என்றால் அதனை நீதி மன்றத்தில் நிரூபித்து இவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.ஏனெனில் இவர்களால் மதுரை,மேலப்பாளையம்,கோவை முஸ்லிம்கள் பட்ட அவமானங்கள்,போலீஸ் சித்திரவதைகள்

கொஞ்ச நஞ்சமல்ல.இவர்கள் அப்பாவிகளாக இருந்து தண்டனை அடைந்து விடக்கூடாது என்பது தான் நமது கவலையே
தவிர,இவர்கள் குற்றவாளிகள் என்றால் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.இவர்களுக்காக எந்த முஸ்லிமும் குரல் எழுப்ப மாட்டார்கள்.

பக்ருதீனைப் பொறுத்தவரை மதுரையிலிருந்து தலைமறைவான சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து எதற்காக தலைமறைவாக நேர்ந்தது என்று விளக்கம் அளித்திருந்தால் இன்று அவரது நிலை வேறு கட்டத்தை அடைந்திருக்கும்.அதை அவர்

சியா தவறியதன் விளைவே இன்று பல வழக்குகளை தன மீது சுமந்து நிற்பது என்பதைத் தவிர இதில் வேறென்ன சொல்ல
முடியும்.?

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் :சென்னை மற்றும் மதுரை திணறியது !!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ .எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் முஹம்மது ரசின் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் , இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா இந்திய கம்யயூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் பாருக் , அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்( NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மதுரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார்.

எஸ் .டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது,மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ,நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கனி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்

1.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

2.தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

3.நடைபெற்ற அனைத்து குற்றங்களையும்,முஸ்லீம்கள் தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல்,நடுநிலையான,நேர்மையான மனநிலையோடு காவல்துறையும்,உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.

4.கருப்புச்சட்டமான யு.ஏ .பி.ஏ சட்டத்தை (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

5.ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.

6.வட மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர் ,மற்றும் உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும்,காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும்.என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.

ஆகிய தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

2 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration

3 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல் களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்!
Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration





 









செய்தி :ஜே .ஷேக் பரீத் 

முத்துப்பேட்டை தீ விபத்து -மனிதநேய பணியில் SDPI

முத்துப்பேட்டை நெயயக்காரத் தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4.10.2013 அன்று ஜும்மாவில் SDPI கட்சி சார்பாக நிதி வசூல் செய்யப்பட்டு பாதிக்க  பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.





இதற்கு பொறுப்பு தாரியாக நியமிக்க பட்ட பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியாவின்  மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் அவர்கள் வழங்கினார்கள்.அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும்,SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹமது மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் முஹமது மைதீன்,துணை தலைவர் நிசார் செயலாளர் ஷைக் மைதீன் மற்றும் கிளை பொறுப்பு தாரிகளும், SDPI கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :மைதீன் 

சிறுவனின் கண்ணை குருடாக்கிய சமூகவிரோதிகள்...





சென்னை, புதிய தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள ரிச் தெரு(ரேடியோ மார்க்கெட்)விற்கு பின்புறம் உள்ள ஜாமியா தஜ்வீதுல் குர்ஆன் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது.அதில் வடநாட்டு சிறுவர்கள் மார்க்க கல்வி பயின்றுவருகின்றனர்.

இன்று(1.10.13)மாலை 4.30 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்ட ரிச் தெருவில் உள்ள வியாபாரி அலி பிகாரை சேர்ந்த மார்க்க கல்வி பயிலும் ஒரு சிறுவனின் கண்ணை நேற்று(30.9.13)சமூக விரோதிகள் கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் குருடாக்கிவிட்டதாகவும்,குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நிலைமையை அறிந்து கொள்வதற்காக மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமையில் விரைந்தோம்.மதரசா நிர்வாகிகள் மற்றும் பாதிக்கபட்ட மாணவனின் தந்தை ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் நம்மை வருத்தமடைய செய்தது.நேற்று மாலை 4.00 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு சரியாக ஒரு நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பதுதான் அந்த வேதனையான விஷயம்.

தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மாணவனின் தந்தைக்கு தைரியம் கொடுத்து புகார் கொடுக்க சம்மதிக்க வைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தமுமுக நிர்வாகிகளுடன் மாணவனின் தந்தையை புகார் கொடுக்க அனுப்பிவிட்டு,மதரசா நிர்வாகிகளுடன் மருத்துவமனை சென்றோம்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவன் நம்மிடம் கூறியதாவது:"எனது பெயர் முஹம்மது சபீர்(வயது:15)நான் நேற்று வழக்கம் போல் மார்க்க கல்வி படித்து விட்டு மாலையில் மதரசாவிற்கு பின்புறம் உள்ள மே தின பூங்காவில் கிரிக்கெட் விளையாடினோம்.அப்போது பக்கத்து சேரியில் உள்ள சிலர் எங்கள் மீது கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் தாக்கினார்கள்.அதில் ஒருவன் என் கண்ணை குத்தி குருடாக்கிவிட்டான் அவனை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்" என்றான்.

ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் புகார் அளிப்பது முதன்மையான கடமை என்று உணர்ந்து கொள்ளவேண்டும். காவல்துறை தரப்பில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

காவி கிரிமினல்களின் பின்னணியில் காக்கி கிரிமினல்கள்

அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச  நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர்  தாக்கல் செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். “”சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது”  என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“”பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை” என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது  கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை.  இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.
“”சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் வாங்கிவிட்டதாக” அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக்பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும்  விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.
“”சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரைமறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்” என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர்.  பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
பின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “”இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.
பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு  மாற்றியிருக்கிறார் மோடி.  “”தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக”  கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.
2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.
மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.
குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான  குஜராத்  வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டு விட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் “இரகசிய அறிக்கை’யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)
கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் “நினைவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். “”உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.
சஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !இனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை” என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது “அரசாங்க இரகசியத்தை’ அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.
இனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதாபாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ் ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிறது, மோடி அரசு.
சட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்ஷு பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட  இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா,  “”கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள்  முயற்சிப்பதாக” குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.
மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !
மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை.  அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.
ஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும்  எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!

மண்ணடியில் இஸ்லாமியர் மீது மதவெறி கும்பல் தாக்குதல் -"சமூக பதட்டத்தை தணித்த ஐஎன்டிஜே - தமுமுக"

சென்னை மண்ணடி பகுதியில் உள்ள த.மு.மு.க அலுவலகம் அருகில் ஒரு இஸ்லாமிய இளைஞரை மதவாதிகள் தாக்கினார்கள். இந்த செய்தி வெளியான உடன் முஸ்லிம்கள் குவியத் தொடங்கினர்கள். செய்தி அறிந்த காவல்துறை சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

   இந்நிலை பிரச்சனையை கேள்விபட்ட INTJ மாநிலத் தலைவர் S.M.பாக்கர் தலைமையில் பொதுச் செயலாளர் சையது இக்பால், மாநிலச் செயலாளர் பிர்தவ்ஸ், மாவட்ட, கிளை நிர்வாகிகளும், த.மு.மு.க மாநில தலைவர் J.S. ரிபாயி தலைமையில் மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

   காவல்துறை அதிகாரிகளிடம் சம்மந்தபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முறையிட்டனர். காவல்துறை மாவட்ட கண்கானிப்பாளர் நடவடிக்கை எடுப்பதாக ஒப்புதல் அளித்தார். பிறகு உணர்ச்சி மிகுந்த சமூகச் சொந்தங்கள் இரு இயக்கத்தின் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று கலைந்து சென்று கண்ணியம் காத்தனர்.



    பின்னர் த.மு.மு.க அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளை அழைத்து சமூகத் தலைவர்கள் கோவை, ராமநாதபுரத்தில் இந்துத்துவாவினர் ஏற்படுத்திய பதட்டத்தை சென்னையில் உருவாக்க இது போன்ற செயலில் ஈடுபட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை செய்தனர் தமிழகம் முழுவதும் இது போன்ற பதட்டத்தை மதவெறிய பாஸிச சக்திகள் அரங்கேற்ற காத்து இருக்கிறார்கள். 

   காத்திருக்கும் நிலையில் சமயோசிதமாக இரு அமைப்புகளின் நிர்வாகிகள் இந்தப் பிரச்சினையை சுமூகமாக தீர்த்து வைத்து பதட்டத்தை தணிக்க, கோபத்துடன் இருந்த முஸ்லிம்களை அமைதி காத்து கலைந்து செல்ல வைத்தனர். 

தகவல் -ஜே ஷேக் பரீத் 

அதிரையில் பயங்கர தீ விபத்து -தாமதமாக வந்த தீயணைப்பு துறையினருக்கு மண்டை உடைப்பு !

அதிரை தக்வா பள்ளிக்கு சொந்தமான மீன்மார்கெட்டில்நேற்று இரவு 10:30 மணியளவில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இதில் 6க்கும் மேற்பட்ட கடைகள் முற்றலும் சேதம் அடைந்தது.மேலும் இதனை  தொகுதி MLA திரு. ரெங்கராஜன் அவர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார். 

இதன் காரணமாக ஊர் முழுதும் மின்தடை ஏற்பட்டுள்ளது .
தாமதமாக வந்த தீயணைப்பு வீரருக்கு மண்டை உடைப்பு .மார்கெட்டில் உள்ள காவன்னா கடையின் அடுமனை முற்றிலும் எரிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது

மேலும் INTJ நகரத்தலைவர் கமால்-ன் உணவகம் எரிந்துள்ளது அருகில் உள்ள தொப்பி கடை மற்றும் இருசக்கர வாகன பழுதுநீக்கும் கடை எரிந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தற்பொழுது அதிரையில் வட்டாச்சியர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு கொண்டுள்ளனர்.

தற்பொழுது மின்வினியோகம் கொடுக்கப்பட்டுள்ளது .காயமடைந்த தீயணைப்பு அதிகாரி அதிரை அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சரியாக 11: 35 (எல்லாம் அணைந்த பின் )மணிக்கு பேராவூரணியிலிருந்து மற்றொரு தீயணைப்பு வாகனம் தற்பொழுது வந்துள்ளது.













முத்துபேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்ற முஹம்மது இப்ராஹிம்




திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூரா
ட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்று உள்ள திரு முஹம்மது இப்ராஹிம் முத்துபேட்டை பேரூராச்சியில் நடந்தேறிய ஊழல்களை ஒவௌன்ற்றாக வெளி கொண்டு வருகிறார் 

முதல் கட்டமாக ட்ராக்டர் ஓட்டுனர் பனி நியமனம் அரசு விதிகளுக்கு உட்பட்டு பனி நியமனம் செய்ய படவில்லை ஓட்டுனர் பனி நியமனத்திற்கு 4 வருட முன் அனுபவமும் வேலை வாய்ப்பு அலுவலக த்தின் மூலம் பதிவு பெற்ற சான்றிதழும் தேவை ஆனால் தற்போது பணியில் இருக்கும் ஓட்டுனர் 4 மாதத்திற்கு முன்தான் ஓட்டுனர் உரிமம் பெற்று உள்ளார் மாவட்ட ஆச்சியர் அவரிடம் இருந்து பெற பட்டதாக சொல்ல படும் ஆணை செல்லாது என்று தடா லடியாக 
அறிவித்து விட்டார் இதனால் பேரூராச்சி பரபரப்பாக காணபடுகிறது இவரை மாவட்ட ஆசியர் கோரடாசேரி பேரூராச்சிக்கும் இவரே செயல் அலுவலராக செயல் பட அனுமதி அளித்து உள்ளார் 

Thanks : பஷீர்

திருவாரூர் மாவட்ட SP: நேரில் சந்தித்த தமுமுக வினர்..



  • முத்துப்பேட்டையில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க மற்றும் இந்து முண்ணனியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமுமுகவினர் மாவட்ட கண்காணிப்பாளரை (SP) நேரில் சந்தித்து மனு கொடுக்கப்பட்டது ! !
    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் கடந்த 17 ம் தேதி நடைபெற்றது .இதில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் விதமகாவும் கோஷங்கள் எழுப்பபட்டன. அதோடு காவல்துறை விதித்த நேரமும், நீதிமன்ற ஆணையையும் அவமதித்தும் வழக்கத்திற்கு மாறாக மிகவும் தாமதாமகவே ஊர்வலம் வரபட்டது. அதோடு இத்ரீஸ் என்பவர் வீட்டின் மீதும் கலவர நோக்கில் கற்களை எறிந்து சென்றுள்ளனர். இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமுமுக சார்பில் 25-09-2013 அன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
    இந்சந்திப்பில் நூர்தீன் மாவட்ட தலைவர் தமுமுக , முகம்மது மாலிக் மாவட்ட செயலாளர் மமக , நெய்னா முகம்மது நகர தலைவர் தமுமுக, வக்கீல் தீன் முகம்மது நகர செயலாளர் மமக, முகம்மது பைசல் நகர செயலாளர் தமுமுக, முகம்மது தாவுது முன்னால் நகர தலைவர் தமுமுக மற்றும் சமூக ஆர்வலர் சேட்டு நஜீம், பாட்ஷா உடன் இருந்தார்கள்...

    Thanks For

    Muhaitheen

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)