முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை மக்கள் லண்டனில் பெருநாள் கொண்டாடிய காட்சி ஓர் பார்வை.!!!








லண்டன், அக்டோபர் 17:  தியாக திருநாள் லண்டன் மாநகரில் அணைத்து பள்ளிவாசல்களிலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது , அணைத்து பள்ளிவாசல்களிலும் மூன்று நான்கு ஜமாஅத் தொழுகை நடைபெற்றது , அணைத்து பள்ளிவாசல்களிலும் பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு இருந்தது . லண்டன் மாநகரில் வாழும் பல நாடுகளை சேர்ந்த நம் சமுதயா மக்கள் அவர்கள் நாட்டு பாரம்பரிய புதிய உடைகள் அணிந்து வந்து தொழுகையில் கலந்து கொண்டும் வாழ்த்துகளை பரிமாரிகொன்டர்கள் . அல்லாஹ் இந்த நல்ல நாளில் நம் சமுதயா மக்கள் ஒற்றுமையுடன் இருக்க எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெற ஏக இறைவன் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்
நமது ஊர் ஒற்றுமைக்காகவும் அல்லாஹ்விடம் துவா செய்வோம் ஆமீன்

லண்டன் வாழ் முத்துப்பேட்டை மக்கள் 

லண்டனில்ருந்து
அப்துல் ரஹ்மான்
ஜமால் முஹமது
அலி அஹமது
ஆசிம் முஹமது
அசார் முஹமது

கோவையில் வெடிகுண்டு நாடகம் -பாஜக ரவுடியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி SDPI ஆர்ப்பாட்டம் :

covaiகோவை , அக்டோபர் 17: கோவை வடவள்ளியில் வெடிகுண்டு நாடகமாடிய பிஜேபி செயலாளர் ராமனாதனையும் ஏனைய சங்கபரிவாரர்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி எஸ்.டி.பி,ஐ கட்சியின் சார்பில் சீர்குலைக்கும் விதமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பிஜேபி யும் சங்பரிவார கும்பலும் திட்டமிட்டு சமுகத்திற்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பகண்டன ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1
பொது அமைதிக்கு எதிராக, மத நல்லிணக்கத்தை து வேதனையே. அவர்களாகவே திட்டமிட்டு நிகழ்வுகளை எர்ப்படுத்தவும், அதை வைத்து பந்த் நடத்துவதும், அரசு பேருந்துகளை அடித்து நொறுக்குவதும், வணிக நிறுவனங்களை அடைக்கச் செய்வதும், எதிர்ப்பவர்களின் நிறுவனங்களை தீயிட்டு கொளுத்துவதும் சமீபகாலமாக தொடர் கதையாகிவிட்டது.
அண்மையில் அவர்கள் நடத்திய பந்த் ஒன்றில் கணபதியில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தில் பெட்ரோல் குண்டுகளை பட்டப்பகலில் வீசியது பொது மனித சமுகத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து அனுமன் சேனாவை சேர்ந்த சக்திவேல் தன்னை தீவிரவாதிகள் கடத்தி விட்டார்கள் என்று போலியாக நாடக மாடி பொது சமுகத்தின் அமைதியை சீர்குலைத்து மத மோதல்களை ஏற்ப்படுத்த முயற்சி செய்தது , அதன் தொடர்ச்சியாக செல்வபுரம் பகுதியில் ஒரு வியாபாரியின் வீட்டில் விஷ்வ ஹிந்து பரிசத்தை சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதும், வட வள்ளியைச் சார்ந்த ராமநாதன்(மண்டல பாரதிய ஜனதா செயலாளர்)தன்னுடைய வீட்டில் தானாகவே பெட்ரோல் குண்டை வீசி விட்டு மதகலவரத்தை ஏற்ப்படுத்த முயற்சித்ததும், தொடந்து சங்பரிவார கும்பலின் வாடிக்கையாகிவிட்டது. இவர்களின் ஒவ்வொரு விசயத்திலும் காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகள் பிஜேபி யும் சங்கப்பரிவார கும்பலை சார்ந்தவர்கள் என்றும் பொது சமுகத்திற்கு அடையாளம் காட்டியது .
எனவே தமிழக அரசு இந்த சுயநலவாதிகளையும், மாதவாத கும்பலையும் இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் , கடுமையான(குண்டர்)சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மாலை 5 மணியளவில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் கிணத்துக்கடவு தொகுதி செயலாளர் குமாரசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட துணை தலவைர் சிவகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார். கிணத்துக்கடவு தொகுதி துணைத் தலைவர் தளபதி கிருஷ்ணன் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் முஸ்தபா, மாவட்ட பொது செயலாளர் அப்துல் காதர், எஸ்.டி.டி.யூ மாவட்ட தலைவர் அன்சர் செரிப், மாவட்ட செயலாளர் கிஸ்மி அலி மற்றும் தொகுதி, கிளை நிர்வாகிகளும் ,செயல் வீரர்களும், திரளாக பொதுமக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தகவல் :ஜே :ஷேக்பரீத் 
 IMG_5278 IMG_5287
IMG_5267 

முத்துப்பேட்டையில் பேரூராட்சியின் மெத்தன போக்கால் சீர்கெட்டு கிடக்கும் தெரு.




முத்துப்பேட்டை, அக்டோபர் 17: முத்துப்பேட்டை PKT ரோடு ஓடக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கழிவு நீர் செல்லும் பகுதி அருகில் குழி வெட்டப்பட்டு அதனை முழுமையாக பணியை முடிக்காமல் மெத்தனபோக்கை கையாளும் முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அந்த பகுதி வார்டு மெம்பர் இவற்றை உடனே சரிசெய்தி மக்கள் நடமாடும் இடத்தை சுத்தமாகவும், தூய்மையாகவும் பேன கேட்டுக்கொள்கிறோம். மேலும் இந்த பள்ளத்தை உடனே மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவாறு இருப்பதனால் தான் பல்வேறு விபத்துகள் மற்றும் இரவில் பயணம் செய்பவர்கள் இந்த குழிக்குள் விழ வாயிப்புகள் உள்ளன.

நமது நிருபர் 

AKLT. அப்துல் ரஹ்மான் 

லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகை ஓர் பார்வை...




லண்டன், அக்டோபர் 16: முத்துப்பேட்டை நண்பர்கள் லண்டனில் நடைபெற்ற ஈத் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு பின்னர் ஒன்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட காட்சி 

ஜவாஹிருல்லாஹ் வந்த கார் விபத்துக்குள்ளானது :

தமுமுக மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு கார் மூலமாக வரும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் கார் விபத்துக்குள்ளானது. இறைவனின் கிருபையால் பேராசிரியர் அவர்கள் நலமுடன் உள்ளார்கள். எந்த பாதிப்பும் இல்லை. காரை ஓட்டி வந்த டிரைவர் ஆதில் அவர்களுக்கு காது அருகில் லேசான காயம் ஏற்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது. பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நலமுடன் உள்ளார்கள்.

டி.ஜி.பி. ராமானுஜத்தை பொய்யராக்கிய போலீசார்!

சென்னை, அக்டோபர் 10: பக்ருதீன், மாலிக் போன்றோரின் படங்களைத் தெளிவாக ஒரு பக்கம் வெளியிட்டுக் கொண்டே இன்னொரு பக்கம் அவர்களுக்கு முகமூடிகளை அணிவித்துப் படம் காட்டப்படுகின்றன. முழுக்க முழுக்க அடையாளம் வெளிப்பட்ட பின் இப்படியான அச்சுறுத்தல் எதற்கென யாரும் கேட்பதில்லை, இப்படியான அச்சுறுத்தல்கள் ஏதோ அவர்கள் மீது மட்டும் கோபத்தையும், அச்சத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிற செயல் அல்ல, இன்றைய அரசியல் சூழலில் அது ஒரு சமூகத்தின் மீதே அச்சம், வெறுப்பு, ஆத்திரம் ஆகியவற்றை விதைக்க வல்லது என்பது குறித்து அரசுக்கோ, காவல்துறைக்கோ. ஊடகங்களுக்கோ கவலை இல்லை''

மேற்கண்ட இந்த வரிகளை பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் தமது முகநூல் பதிவில் போட்டிருக்கிறார்.எவ்வளவு எதார்த்தமான வரிகள் இவை.உண்மையில் மீடியாக்கள் இந்த விஷயத்தில் நடந்து கொள்ளும் விதம் மருந்துக்கு கூட அவற்றிடம் ஊடக தர்மம் இல்லை என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.குறைந்த பட்ச குற்ற உணர்வு கூட இல்லாமல் ஒருவித வன்மத்துடன் இந்த செய்திகள் எழுதப்படுகின்றன.

பிடிபட்ட மூவரும் தீவிரவாதிகளோ பயங்கரவாதிகளோ இல்லை.இவர்கள் பயங்கரவாதிகள் என்று போலீஸ் இந்த நிமிடம் வரை நிரூபிக்கவில்லை.போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் வெறும் விசாரணை தான் மேற்கொண்டிருக்கிறோம்.பயங்கரவாதிகள் ,தீவிரவாதிகள் என்று நாங்கள் சொல்லவில்லை.ஊடகங்கள் தான் சொல்லுகின்றன என்கிறார்கள்..பின்னர் எந்த அடிப்படையில் இந்த ஊடகங்கள் சர்வதேச பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்து காலையிலும்,மாலையிலும் புது புது செய்திகளை தரவேண்டும்?இப்படி வெளியிடும் செய்திகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா ஊடகங்களிடம்?ஊடகங்களிடம் கேட்டால் போலீஸ் தரும் செய்திகளை தான் நாங்கள் வெளியிடுகிறோம் என்கின்றன?போலீசும் ஊடகங்களும் சேர்ந்து நடத்தும் நாடகமா இது?

அக் 7, 2013 ‘தி இந்து’ நாளிதழில் வெளியான ஒரு செய்தியை பார்த்தால் டி.ஜி.பி. ராமானுஜம் பொய் சொல்கிறாரா அல்லது இந்த வழக்கை விசாரிக்கும் காவல் படை பிரிவுகள் பொய் சொல்கின்றனவா என்றும் போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள அல்லது போடப்போகும் வழக்குகள் பொய் என்று ஒரு தரப்பினரால் போலீஸ் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் உன்மைதானா என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.

தி இந்து நாளிதழில், வந்துள்ள அந்த செய்தி படி,போலீஸ் பக்ருதீனை வேலூர் ஜேஎம் 3 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை போலீஸ் கஸ்டடியில் எடுப்பதற்காக சமர்ப்பித்த மனுவில்,

''கடந்த 2012 அக்டோபர் மாதம் வேலூரில் பா.ஜ.க. மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, பரமக்குடியில் முருகன் என்ற முருகேசன், மதுரையில் சுரேஷ், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்குடன் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் போலீஸ் பக்ருதீன் ஒப்புக்கொண்டார். அவர் பதுங்கி இருந்த வீட்டிலிருந்து வெடி மருந்துகள், துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கூட்டாளிகள் குறித்து விசாரிக்க வேண்டி இருப்பதால் அவரை 13 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.''

போலீஸ் வாங்கும் வாக்குமூலத்தின் லட்சணம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரிந்தது தான்.ஆனால் இங்கே போலீஸ் சமர்பித்த மனு மிக அவசர கோலத்தில் எதையும் ஆராயாமல் சமர்பித்ருக்கிறது என்பதற்கும் இது நல்லஆதாரம்.வேலூர் டாக்டர் அரவிந்த ரெட்டி,பரமக்குடி முருகேசன் ஆகியோரை கொலை செய்ததாக பக்ருதீன் வாக்குமூலம் தந்தார் என்று போலீசார் சொல்கிறார்கள்.ஆனால் இந்த இருவரையும் யார் கொன்றார்கள் என்பதை டி.ஜி.பி.ராமானுஜம் கடந்த ஜூலை 26 அன்று வெளியிட்ட அறிக்கையல் தெளிவுபடுத்துவதைப் பாருங்கள்....
.
'வேலூரில் கடந்த 23.10.2012 அன்று பா.ஜக. மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி படுகொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல்– வாங்கலில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பாக வசூர் ராஜா, உதயகுமார், தங்கராஜ், சந்திரன், எம்.எல்.ஏ. ராஜா, பிச்சைபெருமாள், தரணிகுமார் ஆகிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ளது'

'பரமக்குடியில் கடந்த 19.3.2013 அன்று நகர பா.ஜ.க. செயலாளர் தேங்காய் கடை முருகன் படுகொலை செய்யப்பட்டார். நிலத்தகராறில் இந்த கொலை நடந்திருந்தது. இது தொடர்பாக ராஜா முகம்மது, மனோகரன், ரபீக் ராஜா, சாகுல் அமீது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'

இப்போது சொல்லுங்கள் டி.ஜி.பி,ராமானுஜம் பொய் சொல்கிறாரா? பக்ருதீனை விசாரிக்கும் போலீசார் பொய் சொல்கிறார்களா? இனி டி.ஜி.பி.எது சொன்னாலும் அதில் பொதுமக்களுக்கு நம்பிக்கை வராது... காவல்துறை மட்டத்திலும்,அமைப்புகள்,கட்சிகள் மட்டத்திலும் பெரிதும் மதிக்கப்படுபவர் டி.ஜி.பி.ராமானுஜம்.சிறந்த அதிகாரியாவார்.இவருக்கு கீழ் நிலை அதிகாரிகளால் போற்றப்படுபவர்.இவர் பல உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரோல் மாடலாகவும் இருக்கிறார்.இப்போது சி.பி.ஐ.யில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரே நம்மிடம் ஒருமுறை ''எனக்கு ராமானுஜம் சார் தான் ரோல் மாடல்'' என்று சொல்லியிருந்தார்.இத்தனை சிறப்புகள் கொண்டதாலும்,சிறந்த
அதிகாரி என்பதாலும் தான் இவரது பதவியை நீட்டித்தார் முதல்வர்.பாவம் இன்னும் கொஞ்ச காலம் அவர் பதவி வகிக்க
இருக்கிறார்.அதற்குள் அவரது பெயரை டேமேஜ் செய்யும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.டி.ஜி.பி.யின் அறிக்கை

கேலிக்கூத்தாக்கி அவரை பொய்யராக்கியுள்ளனர் போலீசார்.இத்தனைக்கும் காரணம் பக்ருதீன் மீது எப்படியாவது ஏதாவது வழக்கை போட்டு விடவேண்டும் என்கிற போலீசின் வன்மம் கொண்ட முனைப்பு என்பதை தவிர வேறென்ன சொல்ல முடியும்?

தவிர,பண்ண இஸ்மாயில்,பிலால் மாளிகை பெங்களூரு மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கில் சம்மந்தப்படுத்தி தேடிவந்த போலீசார், இப்போது அதை பற்றி பேசாமல் இவர்களையும் சேலம்.ஆடிட்டர் ரமேஷ்,இந்து முன்னணி நிர்வாகி வேலூர்

வெள்ளையப்பன் கொலை வழக்கில் சேர்த்து விட துடிக்கிறது.அதன் பின்னால் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பிலும் சேர்ப்பார்கள்.
ஆதாரம் பற்றியோ அப்பாவிகளின் வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாது என்பது பற்றியோ இவர்களுக்கு என்ன கவலை?

நாம் இப்போதும் சொல்கிறோம்,பக்ருதீன் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபித்து அவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கித் தரட்டும்.இஸ்லாமியார்களாக இருந்து கொண்டு இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள் என்ற வகையில் அவர்கள் மீது நமக்கு வெறுப்பு தான் ஏற்படும்.ஆனால் அவர்கள் அப்பாவிகளாக இருந்து விட்டால் ...? இந்த சிந்தனை போலீசாரின் நடவடிக்கைகளால் நமக்கு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லையே!

பதவி உயர்வு,விருதுகளுக்காக மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்படும் பட்டியலில் தமது பெயரும் இடம் பெற்று விடவேண்டும் என்ற சுயநலம் தான் போலீசாரிடம் விஞ்சி நிற்கிறது என்று சொல்வதில் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்.

எனது பார்வையில் போலீஸ் பக்ருதீனோ அவரது குழுவினரோ அல்ல;போலீசார் தான் பயங்கரவாதிகளாக தெரிகிறார்கள்!ஊடகங்களும் தான்!

போலீஸ் பக்ருதீனும்- புத்தூர் கைதுகளும் போலீசின் நடவடிக்கைகளும்!


''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும்
21பேரை சுட்டிருக்கேன். உன்னையும்
சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை
என்றால் ஆம்பளையே இல்லை''

-என்கவுன்ட்டர் வெள்ளத்துரை
======================================
''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.
அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.
நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும்
உன்னை கொல்வேன''
-போலீஸ் பக்ருதீன்
======================================

அதெப்படி என்று தெரியவில்லை....என்கவுண்டர் பண்ணச் செல்லும் போதெல்லாம் போலீசார் வெட்டுக்காயம் படுவது!இந்த கதையை தொடர்ந்து காவல்துறை ஒவ்வொரு சம்பவத்திலும் எழுதிக் கொண்டிருக்கிறது.

போலீசின் டார்ச்சருக்கு பயந்து தலைமறைவாக இருப்பவர்களை போலீசார் நெருங்கும் போது அவர்கள் பீதியுடன் தான் காணப்படுவார்கள்.இதுதான் மனோதத்துவ ரீதியாக யதார்தமானது. துப்பாக்கி உள்ளிட்ட நவீன ஆயுதங்களுடன் பெரும் படையோடு வரும் காவல்துறையை எதிர்க்க முடியாது என்பது இப்படி தலைமறைவாக இருப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

போலீசையோ இராணுவத்தையோ எதிர்த்து நிற்பவர்கள் நவீன ஆயுதங்களுடன் தலைமறைவாக இருக்கும் போராளி குழுக்கள்
தான்.போலீசிடம் சிக்கினால் பின்னி எடுத்துவிடுவார்கள் என்று பயந்து போய் தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களல்ல.இந்த
வகையை சேர்ந்தவர்கள் தான் பண்ணா இஸ்மாயில்,போலிஸ் பக்ருதீன்,பிலால் மாலிக்.

இவர்களால் அரிவாளாலும் (?!) குக்கர் கைப்பிடியாலும் (?!)தாக்கப்பட்டதாக கூறப்படும் போலீசாரின் படங்களை காவல்துறையால் வெளியிட முடியவில்லை என்பதே போலிசின் பொய் வாதத்திற்கு சான்று.

தமிழக ஹிந்துத்துவா தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில்,ஒரு சமுதாயத்தை குறி வைத்து
ஹிந்துத்துவாவும் மீடியாக்களும் பரப்புரை மேற்கொண்ட நேரத்தில் தமிழக டி.ஜி.பி ராமானுஜத்தின் அறிக்கை வெளியாகி இந்த பரப்புரைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.பொய் பரப்புரைகளை மேற்கொண்டவர்கள் அவமானத்திற்குள்ளாகி மௌனம் காத்தனர்,காரணம் அதே சமுதாயத்தை சேர்ந்தவர்களே கொலையாளிகள் என்பதையும் இந்த கொலைகள் மத விவகாரங்களுக்காக நடை பெறவில்லை தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்தது என்பதையும் டி.ஜி.பி தெளிவு படுத்தி இருந்தது தான்.

டி.ஜி.பி யின் அறிக்கையில் வேலூர் வெள்ளையப்பன்,சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை கொன்றவர்கள் யார் என்று
தெரியவில்லை.அவர்களை பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு இருபது லட்சம் பரிசளிக்கப்படும் என்ற தமிழக அரசின் செய்தியும் சொல்லப்பட்டிருந்தது.இந்த சமயத்தில் தான் போலிஸ் ஒரு கேம் ஆடியது.இந்த பரிசு அறிவிப்போடு சேர்த்து பண்ணா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன்.பிலால் மாலிக் படங்களைப் போட்டு மீடியாக்களுக்கு செய்தி தந்தது போலிஸ். அதாவது டி.ஜி.பியின் அறிக்கையில் இல்லாத இவர்களின் பெயர்கள் போலிஸ் ஆடிய கேம்மில் படங்களுடன் வெளியாகி,சேலம் ரமேஷ் கொலைக்கு இவர்கள் தான் காரணம் என்று கட்டமைக்கப்பட்டது

மீடியாக்களில் மூவரது படங்களும் வெளியான நிலையில்,இது குறித்து சேலம் கமிஷனர் மஹாலியிடம்,சேலம் மாலை முரசு
நிருபர் கேட்டபோது இந்த படங்களையும் இந்த செய்தியையும் போலீஸ் வெளியிடவில்லை;அது பற்றி எதுவும் சொல்ல முடியாது என ஜகா என்றார் கமிஷனர்.போலிஸ் வெளியிடவில்லை என்றால் வேறு யார் வெளியிட்டது?

ஆனால் அப்போது மேற்கண்ட மூவரும் மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கிற்காக போலீசாரால் தேடப்பபட்டு
வந்தவர்கள்.இந்துத்துவா தலைவர்களின் படுகொலைகளை கண்டித்து இந்துத்துவா அமைப்புகள் தொடர் போராட்டங்களை நடத்திய காரணத்தால் அவர்களை திருப்திபடுத்தவோ அல்லது உண்மையான கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் தலைமறைவாக இருக்கும் இந்த மூவரில் பக்ருதீன் மீது இந்த பழியை தூக்கி போட்டு ரமேஷ் கொலையின் குற்றவாளியை போலிஸ் கண்டுபிடித்துவிட்டதாக ஒரு பிம்பத்தை ஏற்படுத்தவோ முயற்சி செய்திருக்கிறது போலிஸ் என்று தான் புரிய முடிகிறது.

ரமேஷ் கொலையை நேரில் பார்த்த ஒரே சாட்சியான காவலாளி,வந்தவர்கள் 20-23 வயது கொண்டவர்கள் என்று வாக்கு மூலம் கொடுத்திருப்பது இங்கேகவனிக்கத்தக்கது. மேற்கண்ட மூவரும் குறைந்த பட்சம் 35 ஐ கடந்தவர்கள்.

ஆடிட்டர் ரமேஷ் மற்றும் வேலூர் வெள்ளையப்பன் கொலைக்கு காரணமானவர்கள் இது வரை கண்டு
பிடிக்கப்படவில்லை.இந்நிலையில் தலைமறைவாக இருந்த பக்ருத்தீன் தான் ரமேஷ் மற்றும் வெள்ளையப்பன் கொலை குற்றவாளி என்றால் பக்ருதீன் சேலத்திற்கு வந்து ரமேஷை போட்டு தள்ளி விட்டு போய் இருக்கிறார் அல்லது எங்கோ இருந்து கொண்டு கூலிப்படையை அனுப்பி கொலை செய்திருக்கிறார் என்று பொருள் கொள்ள முடியும்.இதில் இரண்டாவதை இப்போது போலீஸ் சொல்கிறது.முதலாவதை சொன்னால்,தலைமறைவாக இருக்கும் ஒருவர்,அதுவும் காவல்துறையின் பல பிரிவுகளால் தேடப்படும் ஒருவர் சேலம் நகருக்குள் பிரவேசித்து கொலை செய்து விட்டு போய் இருக்கிறார் போலிஸ் என்ன பிடுங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்விகள் போலிசை நாறடித்து விடும்.கமிஷனர் மஹாலி காவல்துறை தலைமையால் கேள்விகளுக்கு உட்படுத்தப்படுவார்.

பக்ருதீன் எங்கிருந்தோ கூலிப்படையை ஏவி கொலை செய்தார் என்று போலிஸ் சொல்வதற்கும் ஆதாரம் இல்லை.இதுவரை எந்த கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு,பக்ருதீன்தான் எங்களை அனுப்பினார் என்றும் வாக்குமூலம் தரவில்லை.குறைந்த பட்சம் இப்படி ஒரு ஜோடிப்பை கூட காவல்துறையால் செய்முடியவில்லை. மறந்திருப்பார்களா என்று தெரியவில்லை.

ஆக, திட்டமிட்டு இந்த படுகொலை வழக்குகளை தலைமறைவாக இருந்த பக்ருதீன் மீது போட்டிருக்கிறது போலீஸ் என்று கருத இடமுண்டு இவர்களை பயங்கரவாதிகளாக போலீசும் மீடியாக்களும் சித்தரிக்கின்றன....மதுரை பைப் வெடி குண்டு வழக்கு பக்ருத்தீன் மீது சுமத்தப்படுவதற்கு முன்பு வரை சில வழக்குகளில் சிறை சென்று விடுதலையாகி மதுரை நெல்பேட்டை பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தவர்தான் பக்ருதீன்.அப்போது வரை இவர் காவல்துறையின் பார்வையில் பயங்கரவாதி இல்லை. இவருக்கும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரைக்கும் ஏற்பட்ட தகராறின் காரணமாக இவர் மதுரையை விட்டு தலைமறைவான பின்னர் தான் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டார்.இதற்கு காரணம் மதுரை காவல்துறையோடு இவருக்கு ஏற்பட்ட மோதல் போக்குதான்.

கடந்த 07/04/2010 அன்று மதுரை கரீம்ஷா பள்ளிவாசலுக்கு அருகில் ஒரு வீட்டில் திருட வந்த திருடனை பிடித்து போலீசில்
ஒப்படைத்திருக்கிறார் பக்ருதீன்.இந்த வழக்கை பக்ருதீன் மீதே திருப்பி இருக்கிறது நெல்பேட்டை போலீஸ்.

மதுரை ஜே.எம்.கோர்ட்டில் இதற்காக கையெழுத்து போட்டு வந்த நிலையில் மதுரையில் இருந்த பக்ருதீன் அக்காலகட்டத்தில், கலவர வழக்கு ஒன்றின்
ட்ரையலுக்காக ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராக தென்காசியிலிருந்து மதுரைக்கு 5 பேர் வந்தனர்.இவர்கள் பக்ருதீனுக்கு ஏற்கெனவே சிறையில் பழக்கமானவர்கள் என்பதால் இவர்களை மதிய உணவிற்காக நெல்பேட்டைக்கு கூட்டி வந்தார் பக்ருதீன்.இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது அங்கே வந்த மதுரை B1காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பால குமார்,''யாருடா நீங்க எல்லாம் வண்டியிலே ஏறுங்கடா''என்று சொல்ல,''அவங்க ட்ரையலுக்கு வந்திருக்காங்க.நான் தான் இங்க கூட்டி வந்தேன் சாப்பிட.வேணும்னா மதுரை தென்காசி உளவு பிரிவு போலீசை கேட்டு பாருங்க''என்று பக்ருதீன் சொல்லி இருக்கிறார்.''அப்ப நீ வண்டியிலே ஏறு'' என்று இன்ஸ்.பாலகுமார் பக்ருதீனிடம் சொல்ல..''ஏற்கெனவே உங்களை நம்பி வந்தேன்.வந்த இடத்துல எம்மேல இரண்டு வழக்கை போட்டீங்க ஒரு குண்டாஸ் போட்டீங்க.அதை உடைச்சிட்டு இப்பதான் வெளியில வந்திருக்கேன்.உங்களை நான் நம்பமாட்டேன்'' என்று பகுருதீன் சொல்லிக்கிட்டிருந்த போதே அங்கே வந்த மதுரை A.C என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை(அப்போது இவர் மதுரை A.C ) ''என்னடா வண்டியில ஏறுன்ன்னா ஏறமாட்டேன்குற'' என்று சொல்லிக்கொண்டே பக்ருதீனின் பனியனை கொத்தாக பிடித்து துப்பாக்கியை அவர் நெற்றிப்பொட்டில் வைத்து ''நீ வண்டியில ஏறலைன்னா சுட்டுருவேன்'' என மிரட்டி இருக்கிறார்.இதற்கும் அசையாத பக்ருதீன்...''நான் செத்தாலும் இந்த ஏரியாவ விட்டு வரமாட்டேன்'' என்று எகிற...இருவருக்கும் வாய்த்தகராறு
ஏற்பட்டிருக்கிறது.அப்போது வெள்ளதுரையுடன் இருந்த 2 எஸ்.ஐ.,ஒரு இன்ஸ்பெக்டர்,20 காவலர்கள் சேர்ந்து பக்ருதீனை
அடித்திருக்கிறார்கள்.

இதனைப் பார்த்த அப்பகுதி கடைக்காரர்கள் இடை மறித்து பக்ருதீனை போலீசிடமிருந்து மீட்டுள்ளனர்.பக்ருதீனை அடித்தபோது பக்ருதீன் தள்ளிவிட்டதில் வெள்ளத்துரை கீழே விழுந்திருக்கிறார்.இது வெள்ளதுரைக்கு அவமான உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அப்பொழுது வெள்ளத்துரை,''உன்னை கொல்லாம விடமாட்டேன்.இது வரைக்கும் 21பேரை சுட்டிருக்கேன்.உன்னையும் சுடாம விடமாட்டேன்.நான் சுடவில்லை என்றால் ஆம்பளையே இல்லை'' என கோபத்தில் கொந்தளிக்க, பக்ருதீனோ,''என்மரணம் அல்லாஹ் கையில் இருக்கிறது.அது எப்படி நடக்குமோ அப்படித்தான் நடக்கும்.நீ என்னை அநியாயமாக கொன்றால் நானும் உன்னை கொல்வேன'' என பதிலுக்கு எகிறி இருக்கிறார்.இந்த செய்தியை ஜூலை 23-29 தேதியிட்ட மக்கள் ரிப்போர்ட்டில், 'பண்றதை சொல்ல மாட்டேன்;சொல்றதை பண்ண மாட்டேன்-வைகை நகரை வெலவெலக்க வைக்கும் என்கவுன்ட்டர் வெள்ளத்துரை' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.இதில்,பக்ருதீன் குடும்பத்தினர்,வெள்ளத்துரை என இரு தரப்பையும் தொடர்பு கொண்டு அவர்களின் விளக்கங்களை அப்படியே பதிவும் செய்திருந்தோம்.

இந்நிலையில்,மறுநாளிலிருந்து பக்ருதீனை தீவிரமாக தேடத் துவங்கியது மதுரை காக்கி டீம்.பக்ருதீனின் சகோதரன் தர்வீசை
.பிடித்து சென்று துன்புறுத்தியது.குடும்பத்தினரையும் மிரட்டியது.இது குறித்து முதல்வரின் தனி பிரிவுக்கு கூட அவர்கள் கடிதம் எழுதினர்.போலீசின் பிடியில் சிக்காமல் அப்போது தலைமறைவான பக்ருதீனை தான் இப்போது சென்னை பெரிய மேட்டில் பிடித்ததாக சொல்கிறது போலீஸ்.

பக்ருதீன் தலைமறைவான நிலையில்,அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில்,அத்வானியின் வருகையையடுத்து பைப் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்தது.இந்த வழக்கை பக்ருதீன் மீது போட்டது மதுரை போலீஸ்.ஆனால்,மதுரையின் முக்கிய பி.ஜே.பி பிரமுகர் ஒருவரே முஸ்லிம்களுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை.இந்த வழக்கு திசை திருப்பப் படுகிறது.மதுரை முஸ்லிம்களில் பலர் எனது நண்பர்கள் என்று நம்மிடம் சொன்ன அவர், அத்வானி பயணத்தில் சென்ற கான்வாய்க்கு ஓட்டுனர்களாக இருந்த அனைவரின் மொபைல் எண்கள்,அவர்களின் விபரங்களை போலீஸ் அதிகாரிகள் என்னிடம் தான் வாங்கினார்கள்.இதற்கு முன் அத்வானி போகும் பாதையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்தனர் போலீசார்.என்றும் சொன்னார்.இதையும் அப்போது மக்கள் ரிப்போர்ட்டில் எழுதி இருந்தோம்.

பக்ருதீன் தலைமறைவானதன் விளைவு,இன்று அவர் மீது ஆடிட்டர் ரமேஷ்,வெள்ளையப்பன் கொலை வழக்கும்
சுமத்தப்பட்டிருக்கிறது.ஆயினும் அவரை போலீசார் மற்றும் மீடியா சொல்வது போல் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொள்ள
முடியாது.அவர் மீது போலீஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு சந்தேகத்திற்கிடமின்றி நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கவில்லை.அதனால்,ஒருவரது குற்றம் நீதிமன்றத்தின் மூலம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளியல்ல.என்ற சட்ட நெறிமுறைபடி பக்ருதீன் பயங்கரவாதியோ,போலீஸ் சுமத்தும் வழக்குகளில் குற்றவாளியோ அல்ல.

இதே போல மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு வழக்கு சுமத்தப்பட்டுள்ள பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோருக்கும் இதே நிலை தான்.மல்லேஸ்வரம் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு போலீஸ் சொல்லும் ஒரே ஆதாரம்,பா.ஜ.க அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி காமிராவில் பதிவான மங்கலான படக்காட்சி தான்.இதில் இருப்பது பண்ணா இஸ்மாயில் என்கிறது போலீஸ்.

ஆனால்,இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் கிசான் புஹாரி உள்ளிட்டவர்கள் அந்த படத்தை பார்த்து இவர்
பண்ணா இஸ்மாயில் இல்லை என தெரிவித்துள்ளனர் என்கின்றனர் இவர்களது வழக்கறிஞர்கள்.இப்போது பண்ணா இஸ்மாயில் கைதாகி இருக்கும் நிலையில் காமிரா பதிவில் இருப்பது இவர் தானா என தடயவியல் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகமற நிரூபிக்க வேண்டியது போலீஸ் தான்.இந்த வழக்கில் நிறைய சந்தேகங்களை போலீஸ்தெளிவுபடுத்தவில்லை.குண்டு வெடிப்பு நடத்த பயன்படுத்தப்பட்ட சிம் கார்டு ஆர்.எஸ்.எஸ்.காரருக்கு சொந்தமானது என்று சொல்லும் போலீஸ் அது குறித்து விசாரிக்கவே இல்லை என்பது உட்பட பல சந்தேகங்கள் கர்நாடக முதல்வரிடம் தமிழக இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் சமர்பிக்கப் பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதனால் இப்போது வரை மதுரை பைப் வெடிகுண்டு,ஆடிட்டர் ரமேஷ் ,வெள்ளையப்பன் கொலை வழக்குகளில் பக்ருதீனும்,
மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பில் பண்ணா இஸ்மாயில்,பிலால் மாலிக் ஆகியோரும் போலீசாரால் சிக்க சிக்கவைக்கப்பட்திருக்கிறார்கள்.

என்ற கூற்றை மறுக்கும் ஆதாரங்கள் போலீசாரிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.உண்மை என்றால் அதனை நீதி மன்றத்தில் நிரூபித்து இவர்களுக்கு கடுமையான தண்டனை வாங்கி தரவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.ஏனெனில் இவர்களால் மதுரை,மேலப்பாளையம்,கோவை முஸ்லிம்கள் பட்ட அவமானங்கள்,போலீஸ் சித்திரவதைகள்

கொஞ்ச நஞ்சமல்ல.இவர்கள் அப்பாவிகளாக இருந்து தண்டனை அடைந்து விடக்கூடாது என்பது தான் நமது கவலையே
தவிர,இவர்கள் குற்றவாளிகள் என்றால் உடனடியாக தண்டனைக்கு உட்படுத்தப் படவேண்டும்.இவர்களுக்காக எந்த முஸ்லிமும் குரல் எழுப்ப மாட்டார்கள்.

பக்ருதீனைப் பொறுத்தவரை மதுரையிலிருந்து தலைமறைவான சில நாட்களிலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்து எதற்காக தலைமறைவாக நேர்ந்தது என்று விளக்கம் அளித்திருந்தால் இன்று அவரது நிலை வேறு கட்டத்தை அடைந்திருக்கும்.அதை அவர்

சியா தவறியதன் விளைவே இன்று பல வழக்குகளை தன மீது சுமந்து நிற்பது என்பதைத் தவிர இதில் வேறென்ன சொல்ல
முடியும்.?

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் :சென்னை மற்றும் மதுரை திணறியது !!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ .எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் முஹம்மது ரசின் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் , இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா இந்திய கம்யயூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் பாருக் , அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்( NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மதுரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார்.

எஸ் .டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது,மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ,நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கனி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்

1.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

2.தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

3.நடைபெற்ற அனைத்து குற்றங்களையும்,முஸ்லீம்கள் தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல்,நடுநிலையான,நேர்மையான மனநிலையோடு காவல்துறையும்,உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.

4.கருப்புச்சட்டமான யு.ஏ .பி.ஏ சட்டத்தை (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

5.ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.

6.வட மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர் ,மற்றும் உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும்,காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும்.என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.

ஆகிய தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

2 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration

3 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல் களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்!
Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration





 









செய்தி :ஜே .ஷேக் பரீத் 

முத்துப்பேட்டை தீ விபத்து -மனிதநேய பணியில் SDPI

முத்துப்பேட்டை நெயயக்காரத் தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4.10.2013 அன்று ஜும்மாவில் SDPI கட்சி சார்பாக நிதி வசூல் செய்யப்பட்டு பாதிக்க  பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.





இதற்கு பொறுப்பு தாரியாக நியமிக்க பட்ட பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியாவின்  மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் அவர்கள் வழங்கினார்கள்.அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும்,SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹமது மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் முஹமது மைதீன்,துணை தலைவர் நிசார் செயலாளர் ஷைக் மைதீன் மற்றும் கிளை பொறுப்பு தாரிகளும், SDPI கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :மைதீன் 

சிறுவனின் கண்ணை குருடாக்கிய சமூகவிரோதிகள்...





சென்னை, புதிய தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள ரிச் தெரு(ரேடியோ மார்க்கெட்)விற்கு பின்புறம் உள்ள ஜாமியா தஜ்வீதுல் குர்ஆன் என்ற பெயரில் மதரசா இயங்கி வருகிறது.அதில் வடநாட்டு சிறுவர்கள் மார்க்க கல்வி பயின்றுவருகின்றனர்.

இன்று(1.10.13)மாலை 4.30 மணிக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லியை தொடர்பு கொண்ட ரிச் தெருவில் உள்ள வியாபாரி அலி பிகாரை சேர்ந்த மார்க்க கல்வி பயிலும் ஒரு சிறுவனின் கண்ணை நேற்று(30.9.13)சமூக விரோதிகள் கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் குருடாக்கிவிட்டதாகவும்,குற்றவாளிகளை இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நிலைமையை அறிந்து கொள்வதற்காக மாநிலசெயலாளர் முஹம்மது ஷிப்லி தலைமையில் விரைந்தோம்.மதரசா நிர்வாகிகள் மற்றும் பாதிக்கபட்ட மாணவனின் தந்தை ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் நம்மை வருத்தமடைய செய்தது.நேற்று மாலை 4.00 மணிக்கு நடந்த சம்பவத்திற்கு சரியாக ஒரு நாள் ஆகியும் இதுவரை எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை என்பதுதான் அந்த வேதனையான விஷயம்.

தொடர்ந்து மாநில நிர்வாகிகள் மாணவனின் தந்தைக்கு தைரியம் கொடுத்து புகார் கொடுக்க சம்மதிக்க வைத்தனர்.தகவல் அறிந்து அங்கு வந்த தமுமுக நிர்வாகிகளுடன் மாணவனின் தந்தையை புகார் கொடுக்க அனுப்பிவிட்டு,மதரசா நிர்வாகிகளுடன் மருத்துவமனை சென்றோம்.

சிகிச்சை பெற்றுவரும் மாணவன் நம்மிடம் கூறியதாவது:"எனது பெயர் முஹம்மது சபீர்(வயது:15)நான் நேற்று வழக்கம் போல் மார்க்க கல்வி படித்து விட்டு மாலையில் மதரசாவிற்கு பின்புறம் உள்ள மே தின பூங்காவில் கிரிக்கெட் விளையாடினோம்.அப்போது பக்கத்து சேரியில் உள்ள சிலர் எங்கள் மீது கிரிக்கெட் ஸ்டெம்ப் மூலம் தாக்கினார்கள்.அதில் ஒருவன் என் கண்ணை குத்தி குருடாக்கிவிட்டான் அவனை நேரில் பார்த்தால் அடையாளம் காட்டுவேன்" என்றான்.

ஒரு சம்பவம் நடைபெற்ற உடன் புகார் அளிப்பது முதன்மையான கடமை என்று உணர்ந்து கொள்ளவேண்டும். காவல்துறை தரப்பில் உடனடியாக குற்றவாளிகளை கைது செய்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)