முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சவுதிக்கு உடனடி ஆட்கள் தேவை.!


சவூதி, ஏப்ரல் 14 : சவூதி இண்டர்வியு வரும் 16.04.12 அன்று திருச்சி யிலும், 17.04.12 அன்று சென்னையிலும் கீழ்க்கண்ட வேலைகளுக்கு நடைபெறுகிறது.

1. கவுண்டர் சேல்ஸ்மேன் (கடைக்குள் பாக்கெட் கோழி விற்பனைக்கு) 30 பேர் தேவை.
சம்பளம் : 800 + 200 + கமிசன்
வேலை நேரம் : 11 மணி நேரம் . வார லீவ் இல்லை. .வயது : 36க்குள்.
ஆங்கிலம் சிறிது புரிந்துகொள்ள பேச முடிய வேண்டும்.

2.கார்பெண்டர்கள் பேள்ளல்ட் செய்வதற்கு (15 பேர்) தேவை
சம்பளம் : 1300 ரியால். 12 மணி நேர வேலை.

3. ஆர்க் CO2 வெல்டர்கள் பேர் தேவை.
சம்பளம் : 1300 ரியால்.+ தங்குமிடம் . 12 மணி நேர வேலை

4. ஹெவி டிரைவர்கள் 5 பேர் தேவை.
சம்பளம் : 1300 ரியால். 12 மணி நேர வேலை,
மேலும் தொடர்புக்கு சென்னை யாசர்: 72005 00225
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்.

SDPI -யின் திருவாரூர் மாவட்ட செயற்குழு கூட்டம்




திருவாரூர், ஏப்ரல் 13 : அன்று மாலை திருவாரூரில் தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடந்தது.
வரவேற்புரை : நைனா முஹமது (மாவட்ட பொருளாளர்) மற்றும் மாவட்ட பொது செயலாளர் அப்துல் அஜீஸ் சிறப்புரை யாற்றினார்,
நன்றியுரை பாவா பஹுர்தீன் (மாவட்ட செயலாளர்) கூறினார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மின் கட்டண உயர்வை கண்டித்து SDPI -யின் மாபெரும் ஆர்பாட்டம்






முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : திருவாரூர் மாவட்ட முத்துபேட்டையில் SDPI நடத்திய தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி 12-04-12 காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தலைமை : அப்துல் அஜீஸ் (மாவட்ட பொது செயலாளர்)
வரவேற்புரை : M. தப்ரே ஆலம் பாதுஷா (மாவட்ட தலைவர்)
முன்னிலை : அப்துல் லத்திப் (மாவட்ட துணை தலைவர்),
நைனா முஹமது (மாவட்ட பொருளாளர்),
பாவா பஹுர்தீன் (மாவட்ட செயலாளர்),
செல்லத்துரை (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க செயலாளர்).
கண்டன கோசம் : ஷேக் முஹிதீன் (நகர செயற்குழு)
கண்டன உரை : A. அபூபக்கர் சித்திக் (மாநில செயற்குழு உறுப்பினர்)
நன்றி உரை : A. முஹமது முஹைதீன் (நகர செயலாளர்). இந்த ஆர்பாட்டத்தில் 50 பேர்க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

நமது நிருபர்

O .M .சுபைத் கான்

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி ஆர்பாட்டம்.!!


முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முத்துப்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு.R .பழனிச்சாமி தலைமை வகித்தார். மேலும் இதற்க்கு நிர்வாகி டி.வி.கந்த சாமி முன்னிலை வகித்தார், மாவட்ட பொதுக்குழு ராஜகோபால், மாவட்ட நிர்வாகி நாகப்பன், சி.செல்லத்துரை, ரெங்க சாமி, புலவர். ஜி.முருகையன், ஒன்றிய துணை பெருந்தலைவர் தெட்சினா மூர்த்தி, வட்டார செயலாளர் கா.ரவிச்சந்திரன் உள்பட இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் T . ராஜேந்திரன் நன்றி கூறினார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை,முஹம்மது யூசுப் (ஆலிம்)

முத்துப்பேட்டையில் N .வரதராஜன் மறைவு முன்னிட்டு ம.கம்யூனிஸ்ட் இரங்கல் ஊர்வலம்.


முத்துப்பேட்டை, ஏப்ரல் 13 : முத்துப்பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி என்.வரதராஜன் மறைவை முன்னிட்டு மாபெரும் இரங்கல் ஊர்வலம் மற்றும் இரங்கல் கூட்டம் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக ஊர்வலம் சித்தேரி குளக்கரையிலிருந்து புறப்பட்டு மண்ணை சாலை, பழைய பேருந்து நிலையம், டி.டி.பி. ரோடு வழியாக புதிய பேருந்து நிலையத்தை சென்று அடைந்தது. பின்னர் நடந்த இறங்கல் கூட்டத்தில் தி.மு.க.மாவட்ட துணைச் செயலாளர் MS . கார்த்திக், பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், அ.தி.மு.க.மாவட்ட துணைச் செயலார் வி.என்.சண்முகம் மாற்று திறநாளிகள் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியன், தே.மு.தி.க. நகர செயலாளர் LMO . ஹபீப்கான், ம.தி.மு.க. நிர்வாகி நடராஜன், மா.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ஏ. காளிமுத்து, இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், தா.மு.ஏ.ச.நிர்வாகி செல்லத்துரை, உள்பட பலரும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சியில் மா.கம்யூனிஸ்ட் பாலகுமார் உள்பட கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் முஹம்மது யூசுப்

முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு அமல்படுத்தகோரி PFI யின் மாபெரும் ஆர்பாட்டம்




சென்னை, ஏப்ரல் 12 : முஸ்லிம்களுக்கு மத்தியில் தனி இட ஒதுக்கீடு ! மாநிலத்தில் 7 சதவீத இட ஒதிக்கீட்டை அமல்படுத்தகோரி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் வருகிற 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் அறிவிப்பு. இது குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேட்டியளித்தது பின் வருமாறு. இந்தியா முஸ்லிம்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைப் பற்றி அறிய மத்திய அரசு 2005 ஆம் ஆண்டு நீதிபதி இராஜேந்திர சச்சார் தலைமையில் கமிசன் ஒன்றை நியமித்தது. இவ்வறிக்கையை கடந்த 2006 ஆம் ஆண்டு இந்த கமிசன் மத்திய அரசிடம் சமர்பித்தது. அந்த அறிக்கையில் முஸ்லிம்கள் கல்வி, அரசு வேலைவாய்ப்பு போன்றவற்றில் இந்தியாவில் அவர்களின் விகிதாசாரத்தை காட்டிலும் மிகவும் கீழான நிலையில் இன்னும் சொல்லப் போனால் இந்தியாவில் முஸ்லிம்கள் தலித்கள், மலைவாழ் மக்களை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர் என்பதை படம்பிடித்துக் காட்டியது.
2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 13 .4 % முஸ்லிம்கள் இருக்கின்றனர். ஆனால்
ஐ.ஏ.எஸ். பணியில் முஸ்லிம்கள் 3 சதவிகிதமும்,
பட்டப்படிப்பு படித்தவர்கள் 3 சதவிகிதமும்,
ரயில்வே துறையில் 4 .5 சதவிகிதமும், (அதில் 98 .7 % பேர் கடைநிலை ஊழியர்கள்) இருந்து வருகின்றனர்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய மேற்கு வங்கத்தில் முஸ்லிம் அரசு ஊழியர்கள் 4 .7 சதவிதம் ஆவார்கள்.
25 .2 சதவிகிதம் முஸ்லிம்கள் வாழக்கூடிய உ.பி.யில் அரசு ஊழியர்கள் 7 .5 சதவிகிதம் ஆவார்கள். என்று முஸ்லிம்களின் அவல நிலையை பட்டியலிட்டது சச்சார் கமிசன். இதனைத்தொடர்ந்து 2007 ல் மற்றொரு கமிசனான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை மிகவும் மோசமாக இன்ருக்கின்றது, இந்நிலை மாற முஸ்லிம்களுக்கு ௧௦ சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
நீதிபதி சச்சார் கமிசன் இந்திய சமூகங்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு எனும் நோயைக் கண்டறிந்தது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசனோ அந்நோய்க்காண நிவாரணம் இட ஒதிக்கீடுதான் என்றது. இந்த வரலாற்று அடிப்படையின் பின்னணியில்தான் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா முஸ்லிம்களுக்கு மத்தியில் 10 சதவிகிதம் தனி இடஒதிக்கீடு வழங்க வேண்டும், தமிழ் நாட்டில் 3 .5 சதவிகித இடஒதிக்கீட்டை 7 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி சென்னை, தஞ்சை, கோவை, மதுரை, நெல்லை ஆகிய மண்டலங்களில் நடத்த உள்ளதாக தீர்மானித்துள்ளது என்று PFI யின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

அப்துல் ரசாக் (சென்னை)

கோவையில் சிறைவாசிகளை விடுதலை கோரி INTJ ஏப்ரல் 29 மாபெரும் ஆர்ப்பாட்டம்...


சென்னை, ஏப்ரல் 12 : சிறைவாசிகள் விடுதலைக்கான கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் கோவையில் வரும் ஏப்ரல் 29ம் தேதி கோவை கோட்டைமேடு இக்பால் திடலில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நடைகிறது. இதில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர், தமுமுக அன்சாரி, திருமாவளவன் ஆகியோர் விடுதலை முழக்கமிட உள்ளனர். இதன் தொடச்சியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் S.M.பாக்கர் அவர்களை சென்னையில் இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தின் சார்பில் நண்பர் உமர் கயன் மற்றும் எஸ் .நாஸர்தீன் சந்தித்தனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் அபு பைசல்

அம்மாபட்டினம் அருகில் அன்னை கதிஜா பெண்கள் கலைக்கல்லூரி விரைவில் துவக்கம்



அம்மாபட்டினம், ஏப்ரல் 09 : சமூகநீதி அறக்கட்டளையின் நிறுவனரும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலைவருமான சகோ. CMN சலீம் அவர்களின் முயற்சியால் காரைக்கால்-இராமநாதபுரம் ECR நெடுஞ்சாலையில், அதிராம்பட்டினத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டினம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில் வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது. 150 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் 6 கோடி ரூபாய் திட்டத்தில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம். ஒரு பங்கு 4 இலட்சம் ரூபாய் என வரையறுக்கப்பட்டுள்ளது. சகோ. CMN சலீம் அவர்கள் குவைத் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இன்ஷா அல்லாஹ் நேற்று 08 .04 .2012 துபைக்கு வந்துள்ளார், அமீரகத்தில் வாழும் சகோதரர்கள் 'அன்னை கதீஜா பெண்கள் இஸ்லாமியக் கல்லூரியைப் பற்றிய முழு விபரங்களையும் பங்கு சேர்க்கை பற்றியும் அவரிடம் நேரடியாகக் கலந்து பேசலாம்.நம்முடைய கல்விமுறை இஸ்லாமிய மயமாக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் இஸ்லாமியப் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும், மார்க்கக் கல்வியை இறைவன் வகுத்துத்தந்த நெறிப்படிப் பேணி வளர்க்க வேண்டும், இறைவன் நாடினால் இந்தியாவில் நாளைய வரலாறு நம்முடையதாக மாறும்; தங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் தருமாறு கேட்டு கொள்கிறோம்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் பிறப்பிடம் நாகைப்பட்டினம் இருப்பிடம் துபாய்

மோடிக்கு எதிராக அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்;கிழியும் மோடியின் கோரமுகம்!



அமெரிக்கா, ஏப்ரல் 09 : குஜராத் முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கும் நரேந்திர மோடிக்கும் தொடர்பு இல்லை எனக் காட்டுவதற்காக சங்க்பரிவார சக்திகள் என்னதான் பகிரங்கமான முயற்சிகளை மேற்கொண்டாலும் உலக நடுநிலையாளர்கள் மத்தியில் மோடியின் ரத்தகரை இன்னும் மறையவில்லை என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில், உலக பயங்கரவாத நாடான அமெரிக்காவில் மோடி எனும் பயங்கரவாதிக்கு எதிராக ஆர்பாட்டம் நடந்துள்ளது. குஜராத் வன்முறைச் சம்பவங்களில் 10 -வது ஆண்டு தினத்தை அடுத்து குஜராத்தில் நிகழ்ந்த மதக் கலவரங்களில் அந்த மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கும் பங்கு உண்டு என்று கூறி அவருக்கு எதிராக நியூயார்க்கில் 40 இந்திய - அமெரிகக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோசம் எழுப்பி ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இனப்படுகொலைக்கு எதிரான கூட்டமைப்பு என்ற பதாகைகளுடன் 100 -க்கும் மேற்பட்டவர்கள் மங்கட்டனில் உள்ள மகாத்மா காண்டி சிலைக்கு அருகே சனிக்கிழமை அன்று கூடி ஆர்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். ஏற்கனவே மோடியின் அமெரிக்க விசயத்திற்கு ஆண்டுதோறும் அமெரிக்க விசா மறுத்து வரும் நிலையில், மோடிக்கு எதிரான இந்த ஆர்பாட்டம் அமெரிக்கா மட்டுமின்றி உலக அளவில் மோடியின் கோர முகத்தை வெளிக்கட்டியிருக்கும் இல்லையா.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை அருகே 1 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.




முத்துப்பேட்டை, ஏப்ரல் 08 : திருவாரூர் மாவட்டங்களில் நேற்று காரில் கடத்தி வரப்பட்ட 1 லட்சம் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து மது பாட்டில் கள் கடத்தி வரப்பட்டு திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவில் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட S .P . சேவிய தன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மதுவிலக்கு போலீசாரும் அந்தந்த காவல் சரக போலீசாரும் மது பாட்டில்களை கடத்தி வரும் காருகளை பறிமுதல் செய்வதுடன், கடத்தியவர்களின் கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து புதுகோட்டைக்கு கடத்தி வருவதாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது, முத்துப்பேட்டை சரக DSP .கோபி அவர்களின் தலைமையில் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், முத்துப்பேட்டை எடையூர் போலீசார் நேற்று உதயமார்த்தாண்டபுரம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வேகமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது காரில் 1 லட்சம் மதிப்புள்ள 750 மில்லி கொண்ட 300 மது பாட்டில்கள், 180 மில்லி அளவு கொண்ட 480 மது பாட்டில்கள், இருந்தது அப்போது தெரியவந்தது. அதில் காரை ஓட்டிவந்த புதுகோட்டையை சேர்ந்த தாஸ் 41 என்பவரை கைது செய்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, முஹம்மது முஹைதீன்

யு.ஏ.இ யில் வேலை:இந்திய அதிகாரிகளின் அனுமதி கட்டாயம்!


புதுடெல்லி,ஏப்ரல் 07 : ஐக்கிய அரபு அமீரகத்தில்(யு.ஏ.இ) வேலை தேடும் இந்திய தொழிலாளர்களுக்கு இந்திய அதிகாரிகளின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டம் நிறைவேற உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியும், யு.ஏ.இ தொழில்துறை அமைச்சர் ஸக்ர் கோபாஷும் கையெழுத்திட்டுள்ளனர்.

வேலை பாதுகாப்பும், சம்பளமும் உறுதிச்செய்வதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். இந்திய தொழிலாளிகளை ரிக்ரூட்மெண்ட் நிறுவனங்களும், வளைகுடாவில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரும் மோசடி செய்வதாக புகார்கள் அதிகரித்துள்ள சூழலில் அரசின் இந்நடவடிக்கை ஆறுதலை தரும் என கருதப்படுகிறது.

17 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இயில் பணிபுரிகின்றனர். புதிய சட்டத்தின் அடிப்படையில் வேலை ஒப்பந்தத்தில் தொழிலாளி, தொழில் உரிமையாளர் தவிர இந்திய அரசு அதிகாரிகளின் சம்மதமும் தேவையாகும்.

புனித காஃபாவை இழிவு படுத்திய ஆர்.எஸ்.எஸ்...!


ஹைதராபாத்,ஏப்ரல் 07 : ஆந்திர மாநிலம் சங்கரரெட்டி என்னும் இடத்தில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையில் 1.32 கோடி மதிப்பிலான பொருட்கள் எரித்து தீக்கிரையாக்கப்பட்டன. சங்கரரெட்டி பகுதி பா.ஜ.க தலைவரான பவான் குமார் தனது ஃபேஸ் புக் தள பக்கத்தில் முஸ்லிம்களின் புனித இல்லமான கஃபாவை இழிவுபடுத்தும் விதத்தில் புகைப்படம் வைத்திருந்ததால் இவ்வன்முறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த வன்முறை சம்பவத்தில் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம்களின் சொத்துக்கள், வாகனங்கள் மற்றும் கடைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தியுள்ளனர். வன்முறை நடைபெற்ற இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டபோது முஸ்லிம்களின் 58 கடைகள், 34 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது தெரியவந்தது. வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.




பழைய பேருந்து நிலையம் அருகே வன்முறையில் ஈடுபட்டுபட்டவர்கள் அங்கிருந்த கடைகள், ஹோட்டல்கள் என முஸ்லிம்களின் வியாபார‌ ஸ்தலங்களை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனை கேள்விப்பட்ட சில முஸ்லிம் இளைஞர்கள் அப்பகுதிக்கு செல்ல முற்பட்டபோது அரசு கல்லூரி அருகே இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு நடைபெற்றள்ளது.
அச்சமயத்தில் அங்கிருந்த காவல்துறையினர் முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்தியதோடு வன்முறையாளர்களை தப்பிக்கவிட்டனர்.
மறுநாள் காலையில் முஸ்லிம் வியாபாரிகள் ஒன்றினைந்து காவல்துறையினரை எதிர்த்து புகார் அளித்தனர். காவல்துறையினர் வன்முறையாளர்களை கண்டுகொள்ளாது தப்பிக்க விட்டதன் விளைவாகத்தான் அதிகள் அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக கூறினர்.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார், எஸ்.பி விக்டர் ஜான், டி.எஸ்.பி. சஞ்சேய் ஆகியோ வன்முறை நிகழ்ந்த இடத்திற்கு வந்த போது அவர்களுக்கு எதிராக பொதுமக்கள் கண்டனக் கோஷங்களை எழுப்பினர். வன்முறையாளர்களை தப்பவைத்துவிட்டு கோடிக்கணக்கான பொருட்கள் சேதப்படுத்தப்பட்ட பின்னர் காவல்துறை அதிகாரிகள் வந்து பார்ப்பது ஏன்? என கேள்வி எழுப்பினர். இந்தவன்முறை ஏற்பட்டதற்கு பா.ஜ.க எம்.எல்.ஏவே முழு காரணம் என மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த பின்னர் சேதப்படுத்தப்பட்ட சொத்து மதிப்பின் விவரங்களை அரசுக்கு சமர்பித்து அதுத் தொடர்பாக அரசாங்கத்தில் சிபாரிசு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். வதந்திகளை நம்பி வன்முறையில் ஈடுபடவேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
முன்னால் எம்.பி லால் ஜான் பாஷா தலைமையில் சிலர் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட பின்னர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து காவல்துறையினர் மீது புகார் அளித்துள்ளனர். புகாரினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்:
ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது பா.ஜ.க தலைவரின் இச்செயலை வன்மையாக கண்டித்துள்ளார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்துவதற்காகவே இவ்வாறான புகைப்படங்களை பா.ஜ.க தலைவர் தனது ஃபேஸ்புக் தளத்தில் உபயோகப்படுத்தியுள்ளார். பா.ஜ.க தலைவரின் இச்செயலை கண்டித்தும் வன்முறையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அமைதியாக ஊர்வலம் நடத்த முயன்ற முஸ்லிம் இளைஞர்களை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகளை வன்மையாக கண்டித்துள்ளார்.
மதச்சார்பற்ற கட்சிகளும் காவல்துறையினரும் இந்த வன்முறை சம்பவத்தில் பாகுபாட்டுடன் நடந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளர். இவ்வன்முறையில் முஸ்லிம்கள் மீதே குறிவைத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. நோமானியா மஸ்ஜித் மீது நடைபெற்ற கல்வீச்சும், முஸ்லிம்களின் கடைகள் சேதப்படுத்தப்பட்டதை பார்க்கும்போது இது நன்றாக புலப்படுகிறது. முஸ்லிம்கள் மீது மட்டும் காட்டும் பாகுபாட்டை நிறுத்திவிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
source from: www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், திருச்சி ஈசா, ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான்

குவைத்தில் உள்ள பிரபல நிருவனத்திற்கு உடனடி ஆட்கள் தேவை..


குவைத்,ஏப்ரல் 06 : குவைத்தில் உள்ள "ELECTRO MECHANICAL MAINTENANCE CONTRACT IN KOC HOSPITAL " என்ற பிரபல நிறுவனத்திற்கு கீழ்க்கண்ட பணிகளுக்கு உடனடியாக ஆட்கள் தேவைப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் வரும் 15 .04 .2012 அன்று நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது எனவே அவற்றில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். இது குறித்து மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 72005 00225 .

1 ) Mechanical Engineer , 4 பேர் தேவை, சம்பளம் KD 250 +50 +25 படிப்பு: Degree in Mechanical அனுபவம்: 5 வருடம்.

2 ) Electrical Engineer , 5 பேர் தேவை, சம்பளம் KD : 250 +50 +25 , படிப்பு: Degree in Electrical அனுபவம்: 5 வருடம்.

3 ) A /C Technician , 8 பேர் தேவை, சம்பளம் KD : 220 , படிப்பு: Diploma 3 Years அனுபவம்: 10 வருடம்.

4) Helper, 15 பேர் தேவை, சம்பளம் KD : 70 , படிப்பு: ITI 2 Years அனுபவம்: 3 வருடம்.

5)Auto Electrician, 10 பேர் தேவை, சம்பளம் KD : 120 , படிப்பு: Diploma/ITI, அனுபவம்: 10 வருடம்.

6) Driver(Kuwait Licence),15 பேர் தேவை, சம்பளம் KD : 90 ,அனுபவம்:Valid Licence.

7) Safety Officer,10 பேர் தேவை, சம்பளம் KD :250 ,படிப்பு: Diploma 3 Years,அனுபவம்:7 years.

8) Electrician, 25 பேர் தேவை, சம்பளம் KD :120 ,படிப்பு: Diploma 3 Years,அனுபவம்:7 years.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

சென்னை யாசர்

இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!


டெல்லி, ஏப்ரல் 5 : மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.
பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.
பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.

ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:

இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.

பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.

இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:

அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EKA .முனவ்வர் கான்

சிறுநீரகக்கல்லுக்கு உடனடி தீர்வு..!!!


உலகம்,ஏப்ரல் 02 :நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனதுஅனுவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன். இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது. அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.
அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம். எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும், வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன், அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும், சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள். அதில் ஒரு இணையதலத்தில், ஒருவர், ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம், சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்து, நாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும், அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்.
வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால், ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, மேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார் (ரொம்ப நல்லவர் போலும்).
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிக்கிரதுதான்).
இனி நான் மேற்கொண்ட சிகிச்சை( அந்த இணையதலத்தில் சொன்னது போல்):
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2 மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் , சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள், மருத்துவச் செலவு ` இருவதாயிரத்திலிருந்து ` முப்பதாயிரம் வரையிலும் சேமிக்கலாம், மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையதலத்தில் அலைந்தபோது படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்

தமிசுதீன் நாகைப்பட்டினம் (துபாய்)

INTJ தலைமை அலுவலகத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் பெண்..!!


சென்னை, மார்ச் 31 : இஸ்லாமிய அழைப்பு பணியினை முதன்மை விசயமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிருஸ்தவ பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப். சையது இக்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு குர் ஆன் ஒன்றை வழங்கினார்.
source from : www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் அபு பைசல்

முத்துப்பேட்டை கூட்டுறவு அங்காடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்...



முத்துப்பேட்டை,மார்ச் 30 ௦: முத்துப்பேட்டை அடுத்து பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்காடியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த மாதத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் இன்று பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்றது. அதில் மண்ணெண்ணை மாதத்திற்கு இரண்டு தடவை முன்னறிவிப்பு இல்லாமல் மண்ணெண்ணை வழங்குகிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்படுகிறது. டோக்கன் கொடுத்து வரிசையை வரிசையை முறைப்படுத்துவதில்லை, மண்ணெண்ணை அந்ததந்த மாதத்திற்கு எல்லோருக்கும் கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் வேலையை போட்டு விட்டு வரிசையில் நின்றும் மண்ணெண்ணை கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவற்றை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எ. காளிமுத்து தலைமை யில் நடைபெற்றது த.மு.எ.க.சங்க செயலாளர் சி.செல்லத்துரை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு பி.என்.தங்கராசு, ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன், த.வி.ச.மாவட்ட துணைசெயலாளர் என்.ஜி.முருகையன், த.மு.எ.க.பொருளாளர் பி.ஆறுமுகம், ம.தி.ப.சங்க மாவட்ட செயலாளர் கே.பாலசுப்ரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!


பெங்களூர்,மார்ச் 30 ௦:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

பழனி பாபாவை பற்றிய ஓர் ஆவணப்படம் விரைவில், ஆளூர் ஷாநவாஸ் பேட்டி!




சென்னை,மார்ச் 24 : இறந்து போன பழனி பாபா அவர்களைப் பற்றிய ஆவணப்படம் எடுப்பதற்கு என்ன காரணம்? என்ற தலைப்பில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சமூக ஆர்வலர் மற்றும் பிரபல எழுத்தாளர் ஜனாப். அளூர் ஷாநவாஸ் அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
காய்தே மில்லத் அவர்களைப்பற்றி ஆவணப்பட உருவாக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவு பழனி பாபா அவர்களைப்பற்றிய அவானப்பட உருவாக்கத்தில் ஏற்பட வாய்ப்பில்லை என்றும், அவர் தெரிவித்தார். ஏனென்றால் பழனி பாபா நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும், அவரது பேச்சுகள் அனைத்தும் காட்சி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பழனி பாபாவோடு பழகியவர்களும், அரசியல் நடத்தியவர்களும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரைப்பற்றிய ஆவணப்படம் என்பது மிக எளிதாகவும், விரைவாகவும் செய்து விடக்கூடிய ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அதற்க்கான முயற்சிகளில் தற்போது ஈடுபட்டுள்ளோம். விரைவில் அந்த தலைவரின் வரலாறும் ஆவணப்படமாய் உங்கள் கைகளில் தவழும் இன்ஷா அல்லாஹ்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS . அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை.

முத்துப்பேட்டை SDPI -யின் கோரிக்கையை ஏற்று உறுதியளித்த வட்ட வழங்கல் அலுவலர்!



முத்துப்பேட்டை, மார்ச் 21 : திருத்துறைப்பூண்டி வட்டம் முத்துப்பேட்டை பகுதியில் நீண்ட காலமாக முறையற்ற முறையில் சமையல் எரிவாயு கேஸ் வினியோகம் செய்யும் மரியா (HP) மற்றும் - இன்டேன் கேஸ் நிறுவனத்தை கண்டித்து திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தின் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி 22 .03 .2012 அன்று அறிவித்தது தொடர்பாக திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜாராம். அவர்கள் முன்பாக சமாதான கூட்டம் நேற்று
20 ௦.03 .2012 மாலை நடைபெற்றது. கூட்டத்தில் SDPI கட்சி சார்பில் கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி கட்டாயமாக செயல்பட வேண்டும். சிலிண்டர் வரும்போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவதற்கு முன்பாக புரோக்கர்களுக்கு முன் தெரிந்து அவர்களே பெற்றுச் சென்று விடுகின்றனர் என்று புகார் தெரிவித்தனர்.
வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் கிடைக்கப் பெறுவதில்லை. முன் பதிவு முறையில் கேஸ் பதிவு செய்தவர்களுக்கு எடுத்து வருவதை இடையில் பதிவு செய்தவர்களுக்கு வழங்குவதால் தான் பதிவு செய்த நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதன் முறையை கைவிட வேண்டும். ஏற்றத்தாழ்வு பாராமல் பதிவு முப்பது அடிப்படையிலே நுகர்வோருக்கு வழங்கப்பட வேண்டும், என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மரியா கேஸ் நிறுவனத்தின் சார்பில் மேலாளர் திரு. ராஜாராமன் என்பவர் போராட்டக் குழுவினர் கூறியவாறு பதிவு மூப்பின் அடிப்படையில் டோர் டெலிவரி மூலம் வரிசையாக வழங்குவதாகவும், இனிவரும் காலங்களில் வாடிக்கையாளர் வீடுகளுக்கு முறையாக சமையில் எரிவாயு உருளை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். பின்னர் 22 .03 .2012 யில் நடக்க விருந்த மாபெரும் கண்டன ஆர்பாட்டம் கைவிடப்பட்டது. மேலும் போராட்டக்குழுவினர் தரப்பில் சூழ்நிலை சமரச நிலைக்கு வந்ததாக உறுதியளித்தனர்.



இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். A . அபூபக்கர் சித்திக் அவர்கள், நாங்கள் கொடுத்துள்ள மனுவிற்கு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் எங்களை அழைத்து பேசினார்கள், மேலும் அவர்கள் எழுத்து பூர்வமாகவும் எழுதியும் கொடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அவர்கள் கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மிகப்பெரிய அளவில் இவற்றை நாங்கள் நடத்த தயாராக உள்ளோம் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதில் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் ஜனாப்.பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் ஜனாப்.நெய்னா முஹம்மது, நகர செயற்குழு உறுப்பினர் ஜனாப். நிசார் அஹமது, மற்றும் SDPI யின் துபாய் பிரதிநிதி ஜனாப். M .காதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com, www.muthupettaixpress.com
நமது நிருபர்

O .M .சுபைத் கான், ANA .நவாப்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)