முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத்து அறிவிப்பு: "அஹமது அம்மாள்"


முத்துப்பேட்டை,ஜனவரி 12 : தெற்குத் தெரு மர்ஹும் நெய்னார் முஹம்மது அவர்களின் மனைவியும், நாட்டாமை உதுமான் அலியார் அவர்களின் மகளும், மர்ஹும் முஹம்மது அலியார், முஹம்மது யூசுப், மவுலா அபூபக்கர் ஆகியோரின் அண்ணன் மனைவியும், முஹம்மது சரீப், தாதா பிச்சை ஆகியோரின் சகோதரியும், ஜெய்னுல் ஆப்தின், தஸ்தகீர், ஆரிப், பகுருதீன் ஆகியோரின் மாமியாருமாகிய "அஹம்மது அம்மாள்" அவர்கள் இரவு 1 மணியளவில் மவுத்தாகிவிட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் ஆசாத் நகர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பவர்

K .தஸ்தகீர், ஜெய்னுல் ஆப்தீன்.

நமது நிருபர்

KM .கார்கனி

பசுபதி பாண்டியன் படுகொலையும், தென் மாவட்டங்களில் பதட்டமும்.


திண்டுக்கல், ஜனவரி 11 : தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் சி.பசுபதி பாண்டியன்(50), திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை இரவு அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
கடந்த 7 ஆண்டுகளாக திண்டுக்கல் புறநகர்ப் பகுதியான நந்தவனப்பட்டி இ.பி. காலனியில் வசித்து வந்தார் பசுபதி பாண்டியன். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்புறம் அமர்ந்திருந்த இவரை அடையாளம் தெரியாத கும்பல் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிபாண்டியன். இவர் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து வந்தார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கோஷ்டிக்கும் இடையே நீண்ட நாள்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், ஒரு கோஷ்டியைச் சேர்ந்தவரை மற்றொரு கோஷ்டியினர் வெட்டிக் கொலை செய்வதும் தொடர்கதையாக இருந்து வந்தது. பின்னர், வெங்கடேஷ் பண்ணையார் போலீஸாரால் சுடப்பட்டு இறந்தார். எனினும், அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.
இந்நிலையில் பசுபதிபாண்டியனும், அவரது மனைவி ஜெசிந்தா பாண்டியனும் கடந்த 2006-ம் ஆண்டு தூத்துக்குடிப் பகுதியில் ஒரு பாலத்தின் அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது, பசுபதி பாண்டியனின் எதிரிகள் வீசிய வெடிகுண்டால் பலத்த காயமடைந்த ஜெசிந்தா பாண்டியன் இறந்தார். பசுபதி பாண்டியன் உயிர் தப்பினார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளராக இருந்தார் பசுபதிபாண்டியன். பின்னர் அக்கட்சியை விட்டு பேராசிரியர் தீரன் வெளியேறி தமிழ் பா.ம.க.வை தொடங்கியபோது அக்கட்சியின் பொதுச்செயலராக
இருந்தார் பசுபதிபாண்டியன். அதன் பின் கடந்த 2005-ல் பா.ம.க.வில் இருந்து விலகிய முருகவேல் ராஜனுடன் சேர்ந்து, ‘தமிழர் அரசு’ என்ற தனிக் கட்சியை தொடங்கினார். அக்கட்சிக்கு பசுபதிபாண்டியன் தலைவராக இருந்து வந்தார்.
எனினும் அக்கட்சி தீவிரமாகச் செயல்படவில்லை.
இந்நிலையில், கடந்த 2011-ல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார் பசுபதிபாண்டியன். அந்த தேர்தலில் குறைவான வாக்குகளே பெற்ற அவர், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
பசுபதிபாண்டியன் கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் பதற்றம் ஏற்பட்டது. சில இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பரமக்குடியில் பஸ் மீது கல் வீசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அசம்பாவிதங்களைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நமது நிருபர்
ரிப்போர்ட்டர் உமர் முக்தார்

லவ் ஜிஹாத்தும்: அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவும்...


கேரளா, ஜனவரி 09 : சத்தியம் ஒரு நாள் வெளிவந்துதான் தீரும். இனி இவ்வாறான அனுபம் யாருக்கும் வரக்கூடாது’ -லவ் ஜிஹாத் என்ற ஊடகங்களின் அவதூறு பிரச்சாரத்தால் பாதிக்கப்பட்ட ஷாஹின்ஷாவின் வார்த்தைகள்தாம் இவை.

லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகத்தின் பிரச்சாரத்தின் பின்னணியில் தீவிர ஹிந்துத்துவா அமைப்பான சனாதன் சன்ஸ்தாவின் இணையதளம் "ஹிந்து ஜாக்ருதி டாட் காம்" செயல்பட்டுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு கேரளா போலீசார்
கண்டுபிடித்தனர். இச்செய்தி வெளியானதை தொடர்ந்து வெளிநாட்டில் பணியாற்றிவரும் ஷாஹின்ஷா தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

“பத்தணம்திட்டாவில் ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரியில் நான் எம்.பி.ஏ படித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் பயிலும் இதர சமூகங்களை சார்ந்த மாணவிகளை திருமணம் புரிந்ததால் என்னையும், எனது நண்பர் சிராஜுத்தீன் என்பவரையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர். 2009 ஆகஸ்ட் மாதம் இச்சம்பவம் நடந்தது.

தொடர்ந்து நடந்த லவ் ஜிஹாத் என்ற வார்த்தை பிரயோகமும், பொய் பிரச்சாரங்களும் எங்கள் இருவரையும் தளரச் செய்தது. நீதிமன்ற தலையீட்டினால் இப்பிரச்சனை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நான் வெளிநாட்டில் வேலை தேடி வந்தேன். இச்சம்பவத்தின் துவக்கத்தின் போதே நான் எல்லா உண்மைகளையும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தேன். அன்று அனைத்து ஊடகங்களும் அவற்றையெல்லாம் வளைத்து திரித்து செய்தி வெளியிட்டன. உண்மை தெளிவான பிறகும் அவற்றை குறித்து விவாதிக்க ஊடகங்கள் தயாராகவில்லை என்பதுதான் கவலையான விஷயமாகும்.

மனோராமா, கேரள கவ்முதி, ஜன்ம பூமி ஆகிய பத்திரிகைகளும், இந்தியா விஷன், கைரளி ஆகிய தொலைக்காட்சி சேனல்களும் எங்களை மோசமாக சித்தரித்தன. எல்லா இடங்களிலும் இரண்டு பெண்கள் என்ற குற்றச்சாட்டே எழுந்தது. ஆனால் இந்தியா விஷன் அதனை நான்கு பெண்கள் என செய்தி வெளியிட்டது. அத்துடன் நான் எம்.பி.ஏ பயின்ற ப்ரக்கானம் செண்ட் ஜாண்ஸ் கல்லூரி நிர்வாகம் என் மீதான வைராக்கியத்தை இச்சம்பவம் மூலம் பழிவாங்க தீர்மானித்தனர்.

கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான உரிமைகளை கோரி நடந்த போராட்டத்திற்கு நான் தலைமை தாங்கியிருந்தேன். கல்லூரி மீது தவறு இருப்பதாக உயர்நீதிமன்றமும், பல்கலைக்கழகமும் கண்டுபிடித்தன. கல்லூரியின் மோசடிகளை வெளியே கொண்டுவந்ததற்காக கல்லூரி நிர்வாகம் என்னை பழிவாங்க லவ் ஜிஹாதை ஆயுதமாக்கியது. லவ் ஜிஹாத் குறித்து புலனாய்வு செய்த போலீஸ் அதிகாரியான திருவனந்தபுரம் கன்டோன்மண்ட் துணை கமிஷனர் கோபகுமார் எனது வீட்டிற்கு வந்து என்னை தீவிரவாதிகளின் பட்டியலில் சேர்த்துவிடுவேன் என மிரட்டினார். ஆனால் இவர் என்னை ஒரு முறை கூட விசாரிக்கவில்லை. நான் கூறாத காரியங்களை எல்லாம் இவர் தனது கேஸ் டயரியில் எழுதினார். இதற்கு எதிராக புகார் அளித்தபோதிலும் முந்தைய இடதுசாரி அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நானும், எனது குடும்பத்தினரும் பல இழப்புகளை சந்திக்க நேர்ந்தது. எனது படிப்பு முடங்கியது. எனது நண்பர் சிராஜுத்தீனுக்கு கேரள போக்குவரத்துக் கழகத்தில் வேலை பறிபோனது. இவ்வழக்கை தொடர்ந்து மனம் உடைந்த அவரது தந்தை இறந்துபோனார். பல தினங்களை நீதிமன்றங்களில் செலவழித்தோம்.

“நீங்கள் தீவிரவாதிகள் என்பதால்தானே தாடி வளர்த்துள்ளீர்கள்” என பல வழக்கறிஞர்களும் எங்களிடம் கேள்வி எழுப்பினர்.

ஒரு சமூகத்தை அவமதிப்பதற்காக என்னைப் போன்ற ஒரு சாதாரண நபரை பலிகடாவாக மாற்றினார்கள் என்பது இப்பொழுது நிரூபணமாகியுள்ளது. இனியாவது பொது சமூகமும், ஊடகங்களும் இத்தகைய பிரச்சாரங்களில் உண்மையை அடையாளம் காண முயலவேண்டும். இவாறு ஷாகின்ஷா கூறினார்

முத்துப்பேட்டை அடுத்த கரையங்காடு பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கிய விருது.


முத்துப்பேட்டை, ஜனவரி 09: முத்துப்பேட்டையை அடுத்து விளாங்காடு ஊராட்சியை சேர்ந்த கரையங்காடு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிக்கு திருவாரூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது கிடைத்துள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு. முநியனாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பள்ளிக்கான விருதை விளாங்காடு ஊராட்சி மன்ற தலைவரும்,பள்ளியின் கல்விக் குழு தலைவருமான கு.ஜெயராமன், பள்ளியின் தலைமையாசிரியர் சோ.பழனி ஆகியோரிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வைத்தியநாதன், உதவி தொடக்க கல்வி அலுவலர் இன்பவேணி, கல்விக்குழு உறுப்பினர் சிவசங்கரன், பள்ளி ஆசிரியர் அறிஒழி, ஆசிரியர் கலாலெட்சுமி, மற்றும் மாவட்ட வருவாய் துறை அலுவலர், கல்வி அலுவலர்கள் கல்விக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா, J .ஷேக் பரீத்

முத்துப்பேட்டையில் விரைவில் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்


முத்துப்பேட்டை,ஜனவரி 09 : தமிழக முதலமைச்சர் அவர்களின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திரு. ஆர்.கே.பி.நடராஜன் அவர்கள் பசுமை வீட்டிற்கான பூமிபூஜை பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் S .சிவக்குமார். வட்டார வளர்ச்சி அலுவலர், (கி.ஊ) ஆலங்காடு ஒன்றியக்குழு உறுப்பினர் டி.ஜெகன், M A .ஊராட்சி தலைவர் குணசேகரன்,மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் (MIWA) சார்பில் இலவச மருத்துவ முகாம்...







முத்துப்பேட்டை, ஜனவரி 08 : இன்று 08.01.2012 காலை 7.30 ௦மணி முதல் மாலை 3 மணிவரை 25 ஆண்டு வெள்ளி விழா கண்டு பொன்விழாவை காண போகும் 29 ஆம் வருட முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் Reg: No.32/2009 மற்றும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முன்னணி இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் இலவச மருத்துவ முகாம் முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முத்துப்பேட்டை தலைமை பிரதிநிதி ஜனாப்.க.மு.. நெயினார் முஹம்மது அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் 250 க்கும் மேற்பட்ட பெரியோர்களும், தாய்மார்களும் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். இந்த மருத்துவ முகாமில் கீழ்கண்ட பரிசோதனைகள் நடைபெற்றது.
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure )கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group )கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral)கண்டறிதல்.
முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட அனைத்து மக்களும் இது போன்ற நல்ல காரியங்களை தொடர்ந்து தொய்வின்றி செயலாற்ற இறைவனிடம் துவா செய்வதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தார்கள்.
மேற்கொண்ட பரிசோதனைகளை நாச்சிக்குளம் SAR . இரத்தப் பரிசோதனை ஆய்வக குழுவினரால் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பொறுப்பாளர்கள்:
P .M . ஜாகிர் உசேன், M . ஷாகுல் ஹமீது, ANA . ஹாஜா நஜுபுதீன். மற்றும் முத்துப்பேட்டை பிரதிநிதிகள்

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA . முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் சாலை பதுகாப்புவாரமும், DSP துவக்கி வைத்த காட்சியும்:




முத்துப்பேட்டை, ஜனவரி 07: முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் மற்றும் முத்துப்பேட்டை காவல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு வாரம் விழாவை கொண்டாடினர்.இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்க தலைவர் கணேஷ் மாணிக்கம் தலைமை வகித்தார். துணை ஆளுநர் தேர்வு மெட்ரோ மாலிக் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக முத்துப்பேட்டை D.S.P. திரு. கோபி அவர்கள் கலந்து கொண்டு முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் சென்ற வாகனங்களின் விளக்குகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டி துவக்கி வைத்தார்.பின்னர் வாகன ஓட்டிகளுக்கு வாகன பாதுகாப்பு குறித்த செயல் விளக்கங்களை எடுத்துக்கூறினார். நிகழ்ச்சி யில் முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், ரோட்டரி செயலர் ரெங்கசாமி, பொருளாளர் நடராஜா சுந்தரம், சாசன தலைவர் C .கிறிஸ்னமூர்த்தி,முன்னால் தலைவர் பாலகிருஸ்ணன்,வி.டி.மகாலிங்கம், துணைத்தலைவர் நெய்னா முஹம்மது, ரோட்டரி சேர்மன் முஹைதீன் பிச்சை, உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS.அப்துல் பாரி, EKA.முனவ்வர் கான், அபு மர்வா

பழைய நிலைமைக்கு திரும்ப தயாராகும் துபாய் நகரம்...


துபாய், ஜனவரி 07 : வேலை தேடுவோர்க்கும், வேறு வேலைக்கு அல்லது நிறுவனத்துக்கு மாறிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பிறந்திருக்கின்ற 2012 நல்ல ஆண்டாக இருக்குமென்று Gulf News ஆய்வு வெளியிட்டு இருக்கிறது. அமீரகத்தின் புகழ்பெற்ற நிறுவனங்கள் அடுத்து வரும் மாதங்களில் புதிய ஆட்களை தேர்ந்தெடுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஆய்வின்படி 93 சதவீத நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் எண்ணிக்கையை கூட்ட முடிவு செய்துள்ளன. இருந்தபோதும் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் மிகவும் எச்சசரிக்கையுடனே இந்த நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும் என்று தெரிகிறது.மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதிக விற்பனையாகும் நுகர்பொருள்கள் ,கட்டுமானம், மருத்துவம், மற்றும் காப்பீட்டு துறைகளில்தான் அதிகமான
வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. முதலீட்டு சம்பந்தமான வங்கித்துறைகள் கடந்த வருடம் இருந்த அதே அளவு வளர்ச்சியைத்தான்
பெறமுடியும் .அதே நேரம் ஒருங்கிணைந்த மற்றும் சில்லறை வங்கிதுறைகள பெரும் வளார்ச்சி பெறலாம் என்றும் அவற்றுள் வேலை வாய்ப்புகள் அதிகம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gulf Recruitment Group என்ற நிறுவனத்தின் மேலாளர் ஆன மார்க் டிம்மிஸ்
என்பவரின் கருத்துப்படி அவர்களுடைய சந்தை ஆய்வுகளும், நடத்திய சர்வேக்களும் வேலைவாய்ப்புகள் மீண்டும் அமீரகத்தில் பிரகாசமாவதற்கான கதவுகளை திறந்திருக்கின்றன.

பன்னாட்டு நிறுவனங்களும், உள்ளூரில் புகழ் பெற்ற நிறுவனங்களும் இந்த வருடத்தில் பெரும் வியாபார வளர்ச்சியை எதிர் நோக்கி இருப்பதால்
அவர்களுடைய வேலைக்கு ஆளெடுக்கும் துறைகளை முடுக்கிவிட்டுள்ளன. கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இவ்வருடத்தின் முதல் இரு கால ஆண்டுகளில் போதுமானதும் வெளிப்படியாக தெரியக்கூடியதுமாக பதினேழு சதவீத அளவுக்கு தங்களது திட்டங்களை இத்துறையில் வகுத்துள்ளன. இவைகளில் அதிக பட்சமாக திட்ட மேலாண்மையும், பொறியியல் திட்டங்களும் அடங்கும்.

காப்பீட்டு துறை தனது வருமானத்தை பெருக்ககூடிய வகையில் விற்பனை பிரதிநிதிகளை அதிகம் அமர்த்தும். அத்துடன் நஷ்ட ஈடுகளை நிர்வகிக்கவும் ,திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் ஆற்றல் பெற்றோருக்கு இந்த துறையில் அதிக வாய்ப்புக்கள் தேடிவர உள்ளன.

அமீரகத்தின் பொருளாதாரம் பலதுறைகளிலும் பீடுநடை போடத்துவங்கி இருப்பதும் எல்லா பிராந்தியம் மற்றும் வட்டாரங்களிலும் போதுமான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதும் அதை முன்னிட்டு அந்த திட்டங்களுக்கு ஏற்ற வல்லமை பெற்றோர் தேர்வு செய்யப்பட இருப்பதும் வெள்ளிடை.ஆய்வின்படி பெரிய நிறுவங்கள் திறமைசாலிகளை தேர்ந்தெடுப்பதில் தங்களுக்குள் போட்டி போடத்தொடங்கிவிட்டன. ஆனாலும் தேவைக்கு ஏற்றபடி திறமைசாலிகள் கிடைப்பதில் பிரச்னை இல்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன.

2011 வருடத்தோடு ஒப்பிடும்போது வங்கிகள் வர்த்தக கடன்களை முன்னை விட அதிகம் வழங்க தொடங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதால் எதிர்கால வர்த்தகம் மிகவும் நம்பிக்கை அளிப்பதாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும், சீன, இந்திய முதலிய நாடுகளில் உலவும் நிச்சயமற்ற பொருளாதார வளர்ச்சி உலகப்பொருளாதாரத்தை பொருத்தவரை நிச்சயமற்ற நிலைமைகளை உருவாக்கினாலும் வளைகுடா நாடுகளை அந்த பாதிப்புகள் தீண்டாத வண்ணம் வழக்கம் போல் ஐரோப்பிய முதலீடுகளையும், இந்திய சீன முதலீடுகளையும் கவரும் வண்ணம் அமீரகம் தொடர்ந்து செழிக்கும் வளம் கொழிக்கும் . வளைகுடாநாடுகளின் வளர்ச்சிக்கு உலகின் மற்ற பகுதிகளின் வீழ்ச்சி பெரும்காரணமாக அமையாது என்றே Gulf Recruitment Group கூறுகிறது.

நமது நிருபர்

இபுராஹீம் அன்சாரி.(துபாய்)

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டி நடத்தும் இலவச மருத்துவ முகாம்..


முத்துப்பேட்டை,ஜனவரி 06 : இன்ஷா அல்லாஹ் வரும் ௦08.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 7 .30 மணிமுதல் பகல் 12 .30 மணி வரை முத்துப்பேட்டை முஹைதீன் பள்ளிவாசல் மதரஸாவில் துபாய் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் இலவசமாக கீழ்க்கண்ட மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றிதல் வழங்கப்படும். அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பரிசோதனை வகைகள்:
1) சர்க்கரை நோய் (Sugar) கண்டறிதல்.
2 ) இரத்த அழுத்தம் (Preasure) கண்டறிதல்.
3 ) இரத்த வகை (Blood Group) கண்டறிதல்.
4 ) கொழுப்பு (Coloushtral) கண்டறிதல்.
நிர்வாகிகள்:
PM . ஜாஹிர் உசேன்.தொடர்புக்கு: 97153 08228
M . ஷாகுல் ஹமீது. A .ஹாஜா நஜிபுதீன் (ஆ.நே)
எனவே அனைத்து முஹல்லாஹ் சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.
சேவையில் நட்புடன்.
நாட்சிகுளம் S .A .R . இரத்தப் பரிசோதனை ஆய்வகம்,
மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.

நமது நிருபர்

K .எர்சாத் அஹமது

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” - RTI...!!!


இந்தியா,ஜனவரி 06 : 1. தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும்கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3.சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7.உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ?

எடுத்துக்காட்டாக,

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவுதிட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் (தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ?

இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர்,
காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி,
( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் :378 ,
அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 )
தேனாம்பேட்டை, சென்னை - 600 018
தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580
Email : sic@tn.nic.in http://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra

Chief Information Commissioner
Room No.306, II Floor
August Kranti Bhavan
Bhikaji Cama Place
New Delhi - 110 066.

Phone:- 011 - 26717355
E-mail :- s.mishra@nic.in http://cic.gov.in/

குறிப்பு :

மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம்.

சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்

சேக்கனா M. நிஜாம்...

சுகாதார சீர்கேட்டால் சிக்கித் தவிக்கும் மதீனா பள்ளிவாசல்!!!











முத்துப்பேட்டை, ஜனவரி 06 : முத்துப்பேட்டை கிட்டங்கித் தெருவில் உள்ள மதினாப்பள்ளி வாசல் எதிரில் குப்பை கூலங்களும், அசுத்தங்களும் நிரம்பிக் கிடக்கின்றது. இதில் மிக முக்கியமாக கோழிக்கடைகளில் உள்ள கோழியின் கழிவுகளை கொட்டுவதிலும், பொதுமக்கள் திறந்த வெளியில் மலஜலம் கழிப்பதும் இங்கு வாடிக்கையாகி உள்ளது. இந்த நிலையில் பன்றிகள் இங்கு அதிக அளவில் அசுத்தம் செய்து வருகிறது. இதில் ஏற்படக்கூடிய துர்நாற்றம் காரணமாக பள்ளிவாசலில் தொழக்கூடியவர்களுக்கு மிகவும் இடையூறாக இருந்து வருகிறது. மேலும் இந்த சுகாதார சீர்கேடுகளால் பக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் அப்பள்ளி முஹல்லா வாசிகளிடம் கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர்கள், இதுகுறித்து எங்க பள்ளிவாசல் முஹல்லா சார்பில் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் இதுவரைக்கும் எந்த ஓர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்கள், இந்த நிலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கா? அல்லது அதிகார வர்கத்தின் சூழ்ச்சியா? என்பது இந்த முஹல்லா வாசிகளின் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. மேலும் கவுன்சிலர்கள் பதவிக்கு வருமுன் நாங்கள் சுகாதாரத்தை பேணிக்காப்போம் என்று தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்துள்ளார்கள். அவ்வாறு வெற்றிபெற்றவர்கள் இப்போது எங்கே சென்றுள்ளார்கள்? இதனால் கிட்டங்கித்தெருவில் உள்ள மதினாப் பள்ளி வாசல் எதிரே உள்ள இடங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை சுத்தம் செய்து பொதுமக்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவார்களா???
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா, யூசுப் அலி

பிற்ப்படுத்தப்பட்ட மாணவர்களும், எதிர்கொள்ளும் சவால்களும் ஓர் பார்வை:


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : ஒரு நாட்டின் மிகப்பெரிய சக்தி என்றால் அது மாணவ சக்தி என்பதை அனைவரும் அறிந்ததே! நாட்டின் அரசியல் சூழ்நிலைகளில் மாற்றங்களை கொண்டு வரும் அளவிற்கு திறமை கொண்ட மாணவர்கள் இந்தியாவில் வாழ்வது மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்:
இந்தியாவில் நடக்கும் தற்போதைய சூழ்நிலைகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நமது நாடு அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்ற பொழுதும் சமூகத்தின் நலிவடைந்த பிரிவினர் கொடுமைப்படுத்துவது நிறுத்தப்படவில்லை. அரசியல் தந்திரங்கள், அடக்கு முறைகள், ஒடுக்கு முறைகள், ஊழல் போன்ற சாதாரணமான அரசியலுக்கு நடுவே நேர்மையையும், நீதியையும், சுதந்திரத்தையும், அடக்கு முறைக்கு எதிராக கிளர்ந்து எழும் சிந்தனை எழுச்சியே மாணவர்களின் இயல்பான குணம் ஆகும். உலகின் எந்த ஒரு நாட்டின் வரலாற்று நெடிகிலும் மாணவர்களின் புரட்சி இன்று வரலாற்றை எழுதி விட முடியாது. இப்படிப்பட்ட இயல்பான குணங்களை கொண்ட மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்துகிற வகையில் சங்பரிவார இயக்கங்கள் உயர் ஜாதி மாணவர்களிடம் மதவாத தீவிர சக்திகள் உணர்வை ஏற்படுத்தி, பிற்படுத்தப்பட்ட தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு எதிராக தூண்டி வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் இந்திய ஆட்சியிலும், அதிகார வர்கத்திலும் முழுவதுமாக மதவாத தீவிர சக்திகள் அமர்ந்து கொண்டு பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீது தாக்குதல்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களின் கல்வியிலும் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர். மதவாத தீவிர சக்திகளின் நோக்கமே பிற்படுத்தப்பட்ட மாணவர்களை வளர்சியடையக்கூடது என்பது தான் இவர்களின் நோக்கம். இவ்வாறே பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நிலை பெரிதும் அவல நிலையாக உள்ளது.
எதிர்கொள்ளும் சவால்கள்:
ஆகா இன்றைய உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல்,தனியார்மயமாக்கள் என்று இந்தியா தனது வணிக தொடர்பை விரிவு படுத்தி உலக அளவில் போட்டி போடும் நிலையில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டிய அரசும், அதிகாரிகளுமே சிறுபான்மை இன மாணவர்களுக்கு துரோகம் செய்யும் போது அதை எதிர்கொள்வதே மாணவர்களுக்கு ஓர் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
நாம் என்ன செய்ய வேண்டும்?:
இந்த நாட்டில் அரசியல் வாதிகளை விடவும், ஆட்சியாலர்களைவிடவும் பொறுப்புள்ள ஓர் சமூகம் என்றால் அது மாணவச் சமூகம்தான். ஆட்சியாளர்களாலும், அதிகார வர்காத்தாலும் வஞ்சிக்கப்படும் மக்கள் நாட்டின் கொள்கைகளும், சட்டங்களும் ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவும் பாமர மக்களுக்கு விரோத கொள்கையாகவும் இருந்து வருகின்றது. மாணவ சமூகமே! அநீதிகளையும், அடக்குமுறைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையை கலைத்து விட்டு இந்த இந்திய சமூகம் அமைதியுடனும், சுதந்திரத்துடனும், நீதிடனும் வாழ வேண்டுமாயின் நாம் களத்தில் இறங்க வேண்டும். மதவாத தீவிர சக்திகள் சூழ்ந்துள்ள இந்திய ஆச்சியிலும், அதிகாரத்திலும் நாம் அமர வேண்டும். இந்திய சுதந்திர போராட்ட காலத்திலேயே ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒத்துமையாமை இயக்கம் நடத்தி போராட்டம் செய்த வரலாற்றிலே அதிக பங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் உண்டு.ஆம் ஆகையால் மாணவர்களே நாம் மீண்டும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்தும் காலம் நெருங்கி விட்டது மதவாத தீவிர சக்திகளின் கோரப்பிடியிலிருந்து இந்தியாவை மீட்க வேண்டும். நாம் அதற்கு உறுதியுடன் களமிறங்க ஒருங்கிணைய வேண்டும்.
முடிவுரை:
பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் மீதான இனவெறி தாக்குதல்களை கட்டுப்படுத்த வேண்டிய அரசியல் வாதிகள் லஞ்சம், ஊழல் என உல்லாச வாழ்க்கையில் எதிர்கால இந்தியாவை சிறிது சிறிதாக தொலைத்து வருகின்றனர். இந்த அவலத்தை மாற்றி எதிர்கால இந்தியாவை அபாயத்திலிருந்து காப்பாற்றும் கடமை இன்றைய மாணவர்களுக்குத்தான் உள்ளது. எனவே நாளைய தலைவர்களாகிய நாம் தேசத்திற்கு வரும் சவால்களை எதிர்கொள்ள தயாராகுவோம். பிற்படுத்தப்பட்ட மாணவ சமூகமே ஒன்றிணைவோம் சக்தி பெறுவோம்...
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

A .முஹம்மது தமீம் அன்சாரி
மாணவன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
முத்துப்பேட்டை.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் மலர் வெளியீடும், பிரபலங்களின் வரவேற்ப்பும்...






முத்துப்பேட்டை,ஜனவரி 05 : நமதூர் குத்பா பள்ளி வாசல் திறப்பு விழாவில் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் திறப்பு விழா மலர் வெளியிடப்பட்டது. அந்த மலரை இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முக்கியஸ்தர்களுக்கும் எக்ஸ்பிரஸ் சார்பில் வழங்கப்பட்டது. இந்த மலரை பெற்ற உடன் நல்ல முறையான வரவேற்ப்பு வந்த வண்ணம் உள்ளது. இது போன்ற சமுதாய சேவையில் முன்னிலை வகிக்கும் உங்கள் இணையதளமான முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ்க்கு அனைத்து உள்ளங்களும் நல் ஆதரை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். தங்களிடம் உள்ள கல்விச் செய்திகள், வேலைவாய்ப்புச் செய்திகள் , அரசியல், உலகம், வளைகுடா, மற்றும் முத்துப்பேட்டை செய்திகளை public.mttexpress@gmail.com எங்களிடம் தாருங்கள் அவற்றை நாங்கள் உலகிற்கு தருகிறோம்.

இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம்.

மவுத்து அறிவிப்பு: "SS. ஜெய்லானி"


முத்துப்பேட்டை, ஜனவரி 05 : தர்ஹா மர்ஹும் SS .சாகுல் ஹமீது அவர்களின் மகனும், தர்ஹா மேனேஜிங் டிரஸ்டி SS .பாக்கர் அலி சாஹிப் அவர்களின் சகோதரருமாகிய "SS. ஜெய்லானி" அவர்கள் இன்று காலை 7 :30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா பள்ளிவாசல் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
அறிவிப்பவர்

SS .பாக்கள் அலி சாஹிப்

நமது நிருபர்

வழக்கறிஞர் L .தீன் முஹம்மது

குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவும் நடந்து முடிந்த நிகழ்சிகளும். ஓர் பார்வை...

















முத்துபேட்டை,டிசம்பர் 31 : முத்துபேட்டையில் பல கோடி ரூபாய் பதிப்பீட்டில் கட்டப்பட்ட நமதூர் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா நேற்று மிக சிறப்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் நிர்மான கமிட்டி தலைவர் தலைமை வகித்தார், நிர்மான கமிட்டி செயலர் ஹாஜி.ஜனாப். MKN .முஹம்மது முஹைதீன் வரவேற்று பேசினார், பிரிலியன்ட் பள்ளி தாளாளர் ஜனாப். முஹம்மது யாகூப் தொகுப்புரையாற்றினார், பிரபல தொழிலதிபர்களான ஜனாப். தஞ்சாவூர் L .கமால் பாட்சா, ஜனாப். MA .யாகூப், ஜனாப். MA . தமீம், ஜனாப். சென்னை MN . ஜெக்கரிய்ய, ஹாஜி. ஜனாப். வக்கீல் சலீம் கான், நிர்வாகிகள், AK . அஹ்மத் ஹுசைன், ANM.நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திறப்பு விழாமலரை MA .முஹம்மது யாகூப் வெளியிட அல்மஹா அறக்கட்டளையின் நிறுவனர் ஜனாப். SM .ஹைதர் அலி பெற்றுக்கொண்டார். பள்ளியின் செயலாளர் ஜனாப். MKN . ஜெகபர் அலி துவக்க உரையாற்றினார், சென்னை மதரசாயே நிஸ்வான் முதல்வர் KM . முஹம்மது யூசுப் ரஸ்ஸாதி,சேலம் நூருல் இஸ்லாம் அரபிக்கல்லூரி பேராசிரியர் M .முஹம்மது அபுதாகிர் பாசில் பாக்கவி, சிறப்புரையாற்றினார்கள். முத்துப்பேட்டையை சேர்ந்த வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M.அப்துல் ரஹ்மான் வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது. முத்துப்பேட்டை நகரம் என்பது ஓர் வரலாறு படைத்த சிறந்த ஊர் என்றும், இங்கு சமுதாய சிந்தனையாளர், நற்குனமுடயவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும்,மேலும் இந்த மண்ணின் சொந்தங்கள் வரலலற்றில் சிறப்படைந்தவர்கலாக உலகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஊரில் ஒருஒருக்கொருவன் அண்ணன் தம்மியாக வாழ்ந்து வருவது மிக மகிழ்ச்சியை தருகிறது. மேலும் பள்ளிவாசல் தூய்மை படுத்தப்பட்ட தொழுகை கூடம் மட்டுமல்ல என்றும், சமுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களாகவும், நல்ல திறன் படைத்தவர்களாகவும், நாளைய சமுதாய இளைஞர்களை உருவாக்காத்தான் பயன்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தொழுகை என்பது இஸ்லாத்தின் அவசியமான ஒன்றாகும். இது குறித்து நான் ஒருமுறை பாராளுமன்றத்தில் பிற நாட்டு விமான நிலையங்களில் பிற நாடுகளை போன்று இஸ்லாமியர்கள் இல்லாத நாடுகளை போன்று தொழுவதற்கு ஒரு இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தேன். அப்போது பதிலளித்த மத்திய அமைச்சர் பிராஸ் பட்டேல் மிகவும் ஓப்பனாக தொழுவத்துக்கு இடம் கொடுத்தால் இந்துக்களும் மற்ற சமுதாயத்தவரும் அவரவருக்கு இடம் வேண்டும் என்று கேட்பார்கள் இதனால் விமான நிலையத்தில் விமானம் இறங்க இடமே இருக்காது என்று அவர் தெரிவித்தார். அப்போது நான் மற்ற சமுதாயத்தில் உள்ள வணக்கம் போல இஸ்லாத்தில் இல்லை என்றும், சரியான நேரத்தில் ஒவ்வொரு தொழுகையை தொழவேண்டும் என்றும், விமானம் விட்டு விமானம் மாறும் போதும் சரியான நேரத்திகுள் விமானம் வந்து செல்லும் போதும் அதனை பயன் படுத்திகொள்ளலாம். என்றும் நேரம் தவறினால் அந்த தொழுகையையும் தவறிவிடும் அதனால் தன நான் இவ்வாறு கேட்கிறேன் என்றும் கூறினேன். தோலும் இடத்தில் சிலை தேவை இல்லை, குர் ஆனை அடுக்கி வைக்க தேவை இல்லை, பிறை கோடி போன்ற எதுவும் தேவை இல்லை, எங்களுக்கு தேவை ஓர் தூய்மையான இடம் தான் இறைவனை நினைத்து மனதில் நாங்கள் வணங்குவோம் என்றேன். எனவே விமான நிலையத்தில் ஓர் சிறிய இடம் கொடுத்தால் போதும் என்றேன். இது குறித்து அந்த அமைச்சர் கூறும் பொது இது வரைக்கும் எந்த ஒரு இஸ்லாமிய சகோதரரும் என்னிடம் தொழுகையைப் பற்றி கூறியது இல்லை தொளுகைபற்றி நீங்கள் எனக்கு புரியவைத்ததற்கு மிக நன்றி என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் டெல்லி விமான நிலையத்தில் இந்தியாவிலே முதன் முதலில் அமைத்து தந்தார் இவ்வாறு இந்த அமைச்சர் தெரிவித்தார். பின்னர் பல்லாயிரக்கனக்கான இஸ்லாமியர்கள் குத்பா பள்ளி ஜும்மாஹ் தொழுகையில் கலந்து கொண்டனர். இதன் பின்பு சாப்பாடு பொட்டணம் வழங்கப்பட்டன. இந்த முன்னாள் நாள் பெண்களுக்கான சிறப்பு பயான் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்ட குத்பா பள்ளி திறப்பு விழா மலர்.


முத்துப்பேட்டை, டிசம்பர் 30 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் குத்பா பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு சிறப்பு மலர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கவிதை, கட்டுரை, விளம்பரம், இஸ்லாமிய செய்திகள் ஆகிய அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்த நூலை மூன்று பேர் கொண்ட ஆசிரியர் குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலை ஒருங்கிணைத்து தந்த HMA. மன்சூர் மரைக்காயர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த நூலை இலவசமாக வெலியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
தொகுப்பு

மலர் வெளியிட்டுக்குழு

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)