முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மனைவிக்கு உணவு ஊட்டுவதர்க்கும் இறைவனிடத்தில் நற்க்கூலி உண்டு...


உலகம்,நவம்பர் 06 : அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர், உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஅது பின் அபிவக்காஸ் (ரலி) நூல், புகாரி 56 . என்ற நபிமொழிக்கேற்ப இப்படத்தில் உள்ள சகோதரர் நிறைவேற்றிவிட்டார். ஆனால் நமது நாட்டில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் தான் மனைவி உணவு உண்ண வேண்டும் என்ற வழக்கம் இருந்து வருகிறது. ஆனால் இஸ்லாம் மார்க்கமோ மனைவியுடன் ஒன்றாக இருந்து உண்ணுதல் என்ற நிலையைத் தாண்டி, மனைவிக்கு ஊட்டிவிடச் சொல்கிறது. இவ்வாறு உணவு ஊட்டுகின்ற இந்த செயலுக்கு இன்றைவனால் நன்மையையும் அளிக்கப்படுகிறது. ஆம் மனைவியின் மீது பொழிகின்ற இந்த அன்பு இறைவனின் அன்பைப் பெற்றுத் தருகின்றது.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்

அஹம்மது சித்திக் (லண்டன்)

முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் நடத்தப் பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை..





முத்துப்பேட்டை, நவம்பர் 06 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஜாக் சார்பில் இன்று ஹஜ்ஜுபெருநாள் தொழுகை,நமதூர் ஜாமியா மஸ்ஜிதில் சரியாக காலை 7 மணிக்கு நடைபெற்றது. இதனைதொடர்ந்து டாக்டர்.முஹம்மது மீரான் அவர்களின் பயனும் நடைபெற்றது இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.com
நமது நிருபர்

முஹம்மது முஃபாரிஸ்

INTJ வின் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை!


சென்னை, நவம்பர் 05 : INTJ வின் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரை வருகிற 19 .11 .2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ளதாக அதன் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேட்டியளித்த ஜனாப்.SM .பாக்கர் அவர்கள், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 19 வது வருட நினைவு தினம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி அனுசரிக்கப்படுவதை ஒட்டியும், அயோத்தி நிலத்தை மீண்டும் மசூதியை எழுப்பிட வலியுறுத்தியும், இந்து, முஸ்லிம்களுக்கிடையே சமூக நல்லிணக்கத்தை பேணவும், வருகிற 19 .11 .2011 அன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரத யாத்திரை துவக்கப்பட உள்ளதாக ஜனாப்.SM .பாக்கர் தெரிவித்தார். நெல்லை மாவட்டம் மேலப்பாலயத்திளிருந்து இந்த ரதயாத்திரை துவக்கப்பட உள்ளதாகவும் மேலும் தமிழகம் முழுவதும் பயணித்து பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் 6 ஆம் தேதியன்று சென்னையில் நிறைவுபெற உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். இந்த ரத யாத்திரையில் யாதவ மகா சபை தலைவர் டாக்டர். தி.தேவநாதன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர். சேதுராமன், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சாதி அமைப்பினர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்றும் SM .பாக்கர் மேலும் தெரிவித்தார்.இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது INTJ வின் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட், பொருளாளர் ஜனாப். அபூ பக்கர் தொண்டியப்பா, துணைப்பொது செயலாளர் ஜனாப். சையது இக்பால், மாநில செயலாளர் ஜனாப். அபூ ஃபைசல் ஆகியோர் உடனிருந்தனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் உமர் முக்தார்.

மமக சார்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்! வியந்தது பல கட்சிகள்!










சென்னை, நவம்பர் 03 : நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் மமக சார்பில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு ஒருநாள் நிர்வாக பயிற்ச்சி முகாமும், சான்றிதல் அளிக்கும் நிகழ்ச்சியும் சென்னை சிராஜ் மஹாலில் நேற்று நடைபெற்றது. மேகத்துடன் கூடிய மழைச்சாரலும் , குளிர்ந்த காற்றும், சென்னை மாநகரை இதமான ஒரு சூழலில் பரவசப்படுத்தி கொண்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்திருந்த பிரதிநிதிகளை தலைமை நிர்வாகிகள் மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்தியது அவர்களோ இனம் புரியாத சந்தோசத்தில் திளைத்தனர். இதனை அடுத்து பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA . அவர்கள் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார், பின்னர் புகழ்பெற்ற ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அபுல்ஹசன் அவர்களும், உள்ளாட்சி நிர்வாகத்தில் அனுபவம் பெற்ற திரு.தாஸ் அவர்களும், பத்தாண்டு கால நேரடி நிர்வாகத்தை பெற்ற சாத்தானி சிராஜ் அவர்களும் வகுப்புகளை எடுத்தார்கள். இந்த வகுப்பில் உள்ளாட்சி நிர்வாகம் என்றால் என்ன? மன்ற கூட்டங்களை நடத்துவது எப்படி? நிதியை எப்படி செலவு செய்வது? அதிகாரிகளை பயன்படுத்துவது எப்படி? மத்திய அரசு மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வது எப்படி? தங்கள் வார்டுகளில் செய்யக்கூடிய பணிகள் என்ன? என்னவெல்லாம் அதிகபட்சமாக செய்ய முடியும்? என பல்வேறு ஆக்கப்பூர்வமான விசயங்களை குறித்து அவர்களை விளக்கியபோது மமக பிரதிநிதிகள் அனைவரும் அங்கு மாணவர்களாக மாரிபோனார்கள். இந்நிகழ்சியை பதிவு செய்ய வந்த பத்திரிக்கையாளர்கள் இதுபோன்ற பயனுள்ள ஒரு நிகழ்ச்சியை இதுவரை எந்த அரசியல் கட்சிகளும் நடத்தியது இல்லை என்றும், மமக உண்மையிலேயே ஒரு வித்தியாசமான மாற்று அரசியல் காட்சியாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் வியந்தார்கள். மேலும் நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் சான்றிதல்கள் வழங்கப்பட்டது. முதலில் 156 பேர் தான் மமக சார்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டிருந்தது. நிகழ்ச்சி நடைபெற்ற அன்றைய தினம் இன்னொரு ஏழு பேர் எங்கள் பெயரை மக்கள் உரிமையில் ஏன் போடவில்லை என முறையிட்டு சான்றிதல்களை கேட்க தலைமை நிர்வாகிகள் கோபத்தின் உச்சிக்கே சென்றார்கள். இதுகுறித்து சில மாவட்டம் நிர்வாகிகளை பகிரங்கமாக கண்டித்து பேசிய பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள், தலைமைக்கு ஒழுங்கான தகவலை அனுப்பாததால் ஒருங்கிணைந்த முழு பட்டியலை ஒரு சேர வெளியிட முடியாமல் போனதை அப்போது சுட்டிக்காட்டினார். இதில் 35 பெண்கள், 2 கிறிஸ்தவர்கள், 9 இந்துக்கள் உட்பட மாமாகவின் 172 வெற்றியாளர்களுக்கும் சான்றிதல் வழங்கப்பட்டது. மதியம் விருந்துடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

முத்துப்பேட்டையில் ஸ்டவ் அடுப்பு வெடித்து ஒருவர் படுகாயம்!




முத்துப்பேட்டை, நவம்பர் 03 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள பேட்டையில் ஜனாப்.ஜபருல்லா, வயது 33, என்வர் டீ கடை நடத்தி வருகிறார். இவர் காலை 5 .30 மணியளவில் தனது டீ கடையையை திறக்க சென்றார். அப்போது கடையில் உள்ள ஸ்டவ் அடுப்பை பற்ற வைத்தார். அது எதிர்பாராமல் திடீர் என்று வெடித்ததில் படுகாயம் அடைந்த அவரை அங்குள்ள பொது மக்கள் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் (மருதுதுரை) மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் சிகிச்சைக்கு மருத்துவர்கள் சுமார் 5 ஆயிரம் செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். எனவே இவரால் இந்த கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வருகிறார். எனவே நல்லுள்ளம் கொண்ட நமதூர் வெளிநாட்டு வாழ் சகோதர, சகோதரிகளே உங்களால் இயன்ற உதவியை செய்யுது அல்லாஹ்வின் அருளை பெற இதோ ஓர் அறிய வாய்ப்பு. இது குறித்து தாங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்:
மஹாராஜா தமீம்: 99656 40543 .
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

முத்துப்பேட்டையில் குர்பானி கொடுப்பதற்காக குவிக்கப்பட்ட ஆடுகளும்,மாடுகளும்!




முத்துப்பேட்டை,நவம்பர் 02 : உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இன்னும் சில நாட்களுக்குள் வர இருக்கின்ற தியாகத் திருநாளாம் (ஹஜ்ஜு பெருநாளை) முன்னிட்டு இஸ்லாமியர்கள் நபி இபுராஹீம் (அலை) அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதத்தில் இறைவன் ஆடு, மாடு அல்லது ஒட்டகம் ஆகியவற்றை அல்லாஹ்வின் பெயரைக்கொண்டு அறுத்து பலி இடுங்கள் என்று அனைத்து இஸ்லாமியர்களுக்கு இறைவன் தன் திருமறையான குர்ஆனில் கட்டளை இட்டுள்ளான். இது குறித்து "அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓராண்டு பூர்த்தியான ஆட்டையே அறுத்துக் குர்பானி கொண்டுங்கள். அது கிடைக்காவிட்டால், செம்மறியாட்டில் (ஆறு மாதத்திற்கு மேல்) ஒரு வயதுக்குட்பட்டதை அறுத்துக் குர்பானி கொடுங்கள்" நூல் முஸ்லிம்: 3971 . மேலும், "(ஹஜ் பெருநாளன்று) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அருத்துவிட்டவர், அதனிடத்தில் (அதற்குப் பதிலாக) வேறொன்றை (தௌளுகைக்குப் பின்) அறுக்கட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் முஸ்லிம்: 3961 இந்த நபி மொழிகளை பின்பற்றும் விதத்தில் அனைத்து உலக இஸ்லாமியர்கள் வருடம், வருடம் ஹஜ் பெருநாள் அன்று ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவன் பெயரைக் கொண்டு அறுத்து அந்த கறிகளை ஏழை, எளிய மக்களுக்கும், சொந்த பந்தங்களுக்கும் கொடுப்பார்கள். ஆகா இவற்றை முத்துப்பேட்டை மக்கள் நிறைவேற்றும் விதமாக இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் மற்றும் மாடுகள் ஆகியவற்றை முத்துப்பேட்டைக்கு வியாபாரிகள் இறக்குமதி செய்துள்ளார்கள். ஒரு ஆட்டின் விலை சுமார் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் சார்பில் 8 மாடுகள் கூட்டு குர்பானி கொடுப்பதற்கு வாங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு பங்கின் விலை ரூ: 1 ,200 ஆகும். மேலும் இந்த கூட்டு குர்பானி திட்டத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் மூலம் தாங்கள் விரும்பும் பங்கினை கேட்டு பெறலாம். இந்த கூட்டு குர்பானியை நிறைவேற்றும் விதமாக வருகிற ஹஜ் பெருநாள் 07 .11 .2011 ஆம் தேதி அன்று சரியாக 10 மணியளவில் நமதூர் மஜிதியா தெருவில் உள்ள ஒரு காலனியில் கொடுக்கப்படும் என்றும் எனவே முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து ஏழை, எளிய மக்களும் கலந்து கொண்டு குர்பானி கறியை பெற்றுச் செல்லுமாறும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
மேலும் தொடர்புக்கு:

செல்லவாப்பா: 87600 07814 , முஹம்மது ரஃபீக்: 89734 36487
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com.

நமது நிருபர்

MRS .அஹமத் ராவுத்தர் (கேம்ப் துபாய்)

வெளிநாட்டிற்கான PCC-Police Clearance Certificate பெறுவது எப்படி?



சென்னை, நவம்பர் 01 : PCC (Police Clearance Certificate) ஏற்கெனவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுவது.
குறிப்பாக ஒரு நாட்டில் இருந்து திரும்பியவர் வேறு ஒரு நாட்டிற்கு செல்ல விரும்புகையில் PCC ன் அவசியம் ஏற்படுகிறது.புதிய பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் PCC எடுக்க வேண்டிய தேவையில்லை.முன்னூறு ரூபாய் மட்டுமே செலுத்தி ஒருவர் பெறக்கூடிய பாஸ்போட்டிற்கான PCC-Police Clearance Certificate ஐ பலர் ஆயிரத்திற்கும் அதிகம் செலுத்தி தரகர்கள் மூலம் பெறுவதும் சில நேரம் (குறிப்பாக சரியான தகவல் அறியாதவர்கள்) ஏமாந்து போவதும் வாடிக்கையாகி வருகிறது.

Police Clearance Certificate க்குரிய படிவத்தை(form) ஐ பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். http://passport.gov.in/cpv/miscell.pdf
3.5 x 3.5 செ.மீ அளவு புகைப்படம் ஒட்டி, நிரப்பப்பட்ட அந்த படிவத்துடன் அசல் பாஸ்போர்ட்டும் அதன் நகலும், இருப்பிட சான்றும்,(உதாரணத்திற்கு Ration Card நகல்), சமர்ப்பிக்க வேண்டும்.

காவல் நிலையங்களிலிருந்து எந்த விதமான சான்றிதழ்களும் வாங்கத் தேவையில்லை(உங்களுக்கு எதிராக எந்த வழக்கும் இல்லையென்றால் மட்டும்)
விண்ணப்பிக்கும் நபர் கடந்த ஒரு வருடமாக தற்போது இருக்கும் முகவரியில் இல்லையெனில் அதற்கு என்று தனியாக படிவம் ஒன்று சமர்ப்பிக்க வேண்டும். அந்த படிவத்தை பின்வரும் சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
http://passport.gov.in/pms/PPForm.pdf

காலை 9.30 முதல் 12 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். காலை 8.45 க்கு எல்லாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருக்குமாறு சென்றால் எளிமையாக இருக்கும்.
கட்டணமாக 300 ரூபாய் மட்டும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கட்டினால் போதும். கட்டண விவரம் கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது.
http://passport.gov.in/cpv/FeeStructure.htm

காலையில் விண்ணப்பித்தால் மாலை 5 மணிக்கு எல்லாம் PCC கிடைத்து விடும்.
PCC குறித்த முழு விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் உள்ளது https://passport.gov.in/pms/PoliceClearanceCertificate.htm

விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரர் தான் நேரில் செல்ல வேண்டுமென்பதுமில்லை,விண்ணப்பிப்பவர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வர இயலாத காரணத்தை குறிப்பிட்டு அவர் கையெழுத்துடன் கூடிய ஒரு கடிதத்தை யாரேனும் கொண்டுசென்றாலும் போதுமானது.

மதுரை பாஸ்போர்ட் அலுவலக முகவரி.
Passport Office, Bharathi Ula Veethi, Race Course Road, Madurai-625 002.
website: http://passport.gov.in/madurai.html
மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க முடியும்.
திருச்சி பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Passport Office, Water Tank Building, W.B. Road , Tiruchirappalli. Pin Code 620 008, Fax: 0431-2707515 E-mail: rpo.trichy@mea.gov.in. Website:http://passport.gov.in/trichy.html
திருச்சி, கரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலக முகவரி
Passport Office, First Floor, Corporation Commercial Complex, Opp. Thandumariamman Koil, Avinashi Road, Coimbatore - 641018

Phone: 0422-2304888,2309009, Fax: 0422-2306660, E-mail: rpo.cbe@mea.gov.in, Tele-enquiry: 0422-2309009, 2304888, Web-site: http://passport.gov.in/coimbatore.html
கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
சென்னை பாஸ்போர்ட் அலுவலக முகவரி

Regional Passport Office,IInd Floor, Shastri Bhavan, 26, Haddows Road, Chennai - 600 006
Phones : 91-44-28203591, 28203593, 28203594, 28240696
Fax : 91-44-28252767

E-mail : rpo.chennai@mea.gov.in Website: http://passport.tn.nic.in/about_us.htm
சென்னை, கடலூர், தர்மபுரி, காஞ்சிபுரம், காரைக்கால், கிருஷ்ணகிரி, பாண்டிச்சேரி, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் வேலுர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அபு மர்வா

ஆதார் அடையாள அட்டைக்கான பதிவு இன்று முதல் துவக்கம்!


சென்னை, நவம்பர் 01 : ஆதார் அடையாள அட்டை' பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணி, இன்று முதல் துவக்கப்படுகிறது.இந்திய பிரத்யேக அடையாள அட்டை ஆணையத்துடன் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இந்திய தபால் துறை அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது.இந்த அடையாள அட்டை மூலம் பல்வேறு பணிகள்,பயன்களைப் பெற முடியும். வங்கி கணக்கு துவக்கவும், மருத்துவத்துக்கும், மொபைல் போன் இணைப்பு பெறவும்,இந்த ஆதார் அடையாள அட்டை பயனுள்ளதாக இருக்கும்.அடையாள அட்டை பெற, தபால் நிலையம் மூலம் பதிவு செய்யும் பணியை, தமிழக உள்துறை முதன்மைச் செயலர் திரு.ரமேஷ்ராம் மிஸ்ரா, நவம்பர் 1ம் தேதி இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். தமிழக தபால் வட்டம் துவக்கும் இப்பதிவுப் பணி, சென்னையில் மயிலாப்பூர், தி.நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கும், நவம்பர் 1ம் தேதி முதல் விரிவுப்படுத்தப்படும். மேலும், நவம்பர் 21ம் முதல் தமிழகத்தில் உள்ள 31 மாவட்ட தலைமை தபால் நிலையங்களுக்கும்,அடுத்த 30 நாட்களில் 154 முக்கிய தபால் நிலையங்களிலும் விரிவுப்படுத்தப்படவுள்ளது.
இந்த ஆதார் அடையாள அட்டையை இலவசமாக,பொதுமக்கள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.source from www.muthupettaiexpress.blogspot.com
இதுகுறித்து, மேலும் விவரங்களை அறிய, 044-28582798, 0431-241245,0452-2526398,0422-2558204 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com

நமது நிருபர்
அபு மர்வா

முத்துப்பேட்டை பகுதியில் மது பாட்டில்களை கடத்திய மூவர் கைது!


முத்துப்பேட்டை,அக்டோபர் 31 : திருவாரூர் மாவட்டம் போலிஸ் சூப்பிரண்டு திரு.சேவியர் தன்ராஜ் அவர்களின் உத்திரவின் பேரிலும், மாவட்ட மதுவிலக்கு கூடுதல் கண்காணிப்பாளர் திரு.ராஜேந்திரன் அவர்களின் மேற்பார்வையிலும், முத்துப்பேட்டை போலிஸ் துணை சூப்பிரண்டு திரு.கோபி அவர்கள் தலைமையில் எடையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.ஆறுமுகம் மற்றும் போலீசார் திரு.பாண்டி ஆகியோர் சத்திரம் என்ற இடத்தில் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியிலிருந்து முத்துப்பேட்டையை நோக்கி கார் ஒன்று வந்தது. சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தார்கள், அதில் விலை உயர்ந்த சாராயம் 7 கேன்களில் இருந்தது அப்போது தெரியவந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் அம்பாசிடர் கார் ஒன்று வந்தது அதனை நிறுத்தி சோதனை செய்தார்கள் அதில் 648 பிராந்தி பாட்டில்கள் அட்டை பெட்டியுடன் இருந்தது தெரியவந்தது. கைப்பற்ற பட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 8 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதே இடத்தில் 15 நாட்களுக்கு முன்பு சோதனை செய்தபோது 6 கார்களும் 2 இரு சக்கர வாகனங்கள் மூலம் பிடிப்பட்ட மதுவின் மதிப்புகள் ௪௦ லட்சம் என்றும் ஆகா மொத்தம் இந்த பகுதியில் இதுவரை பிடிப்பட்ட மது பாட்டில்கள் சுமார் 50 லட்சம் மத்திபுகள் இருக்கும் என்று DSP திரு.கோபி தெரிவித்தார். இரண்டு வண்டிகளில் சாராயத்தை ஏற்றி வந்த காரைக்காலை சேர்ந்த ராமகிருஷ்ணன், கீழநம்மங்குரிட்சியை சேர்ந்த தண்டாயுதபாணி மற்றும் சக்திவேல் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .
source from www.muthupettaiexpress.blogsot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா.

முத்துப்பேட்டை ஒன்றியத்தையும் கைபற்றியது அ.தி.மு.க...





முத்துப்பேட்டை,அக்டோபர் 30: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த ஒன்றிய தேர்தலில் அ.தி.மு.க. கட்சி வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் போட்டயிட்டனர் அப்போது அதிக படியான வாக்குகள் பெற்று அ.தி.மு.க. வின் ஒன்றிய செயலாளரும், வேட்பாலருமாகிய திரு.RKP .நடராஜன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார் . மேலும் துணைத் தலைவர் பதவிக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினரும்,வேட்பாலருமாகிய திரு.தெட்சனமூர்த்தி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று கலை 10 மணியளவில் அவர்களுக்கு பதவி ஏற்பு விழாவும் நடைபெற்றது. மேலும் அவர்களின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்து தன்னுடைய சந்தோசத்தை பரிமாறி கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா.

BJP கட்சி .அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? மதுரையில் அத்வானி பேட்டி!


மதுரை,அக்டோபர் 30 : ஊழலுக்கு எதிரான மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை BJP யின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் தேர்தலுக்காகவோ அல்லது தனிப்பட்ட அத்வானிக்காகவோ இந்த யாத்திரையை தான் தொடங்கவில்லை என்றும்,தேசிய அளவில் மக்கள் நலன் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த யாத்திரை நடைபெறுகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த நாட்டை ஆழ வேண்டும் என்று விரும்பும் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும், உண்மை நிலவரத்தை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மத்தியில் இனிமேல் கூட்டணி இல்லாமல் அரசு அமைப்பது நடக்காது. கண்டிப்பாக கூட்டணி கட்சி ஆட்சிதான் இனிவரும் காலங்களில் ஏற்படும் என்றும், தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி அமைப்பது குறித்து அலோசனை செய்யப்படும் என்றும், அதே போன்று தமிழகத்திலும் உரிய நேரம் வரும் போது கூட்டணி அமைப்பது குறித்து குடிவு எடுக்கப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தர்.
www.muthupettaiexpress.com
நமது நிருபர்

பாலா (ஆலங்காடு)

முத்துப்பேட்டை:பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு ஜனாப்.அப்துல் வஹாப் வெற்றி!




முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜனாப்.அப்துல் வஹாப் அவர்கள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனாப்.நாசர் அவர்கள் 5 வாக்குகள் பெற்று தோல்வியுற்றார். இதில் அனைத்து வார்டு வேட்பாளர்களும் கலந்து கொண்டு தங்களுடைய வாக்குகளை செலுத்தினார்கள்.

தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டை கொத்பா பள்ளியின் திறப்பு விழா தேதி மாற்றம்!













முத்துப்பேட்டை, அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் மரைக்காயர் தெருவில் உள்ள கொத்பா பள்ளிவாசல் கடந்த சில வருடங்களாக கட்டப்பட்டு வருகின்றது. இந்த பள்ளி வாயில் வருகின்ற ஹிஜ்ரி - 1432 துல்ஹாஜ் மாதம் 7 ஆம் தேதி அன்று அதாவது ஆங்கில மாதத்தின் கணக்குப் படி 04 .11 .2011 ஆம் தேதியன்று திறப்பதாக பள்ளியின் நிர்வாகத்தினர் தெரிவித்தார்கள்.ஆனால் இந்த பள்ளிவாயில் திறப்பதற்கு 1 அல்லது 2 மாதங்களாகும் என்று பள்ளியின் நிர்வாகத்தினர் சென்ற (குட்டியார் பள்ளியில் நடைபெற்ற) ஜும்மாவில் தெரிவித்தார்கள். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்கள், மேலே குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் அந்த தேதியை தேர்வு செய்து வெளியிட்டோம் என்றும், ஆனால் இன்னும் கொஞ்சம் சிறிய வேலைகள் இருப்பதால் அவற்றை முழுமை படுத்தி திறந்தாள் மிக சிறப்பாக இருக்கும் என்று எண்ணி தேதியை மாற்றியுள்ளோம் என்றும், மேலும் பள்ளி திறப்பு விழாவின் தேதியை விரைவில் இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

குறிப்பு: அன்பார்ந்த சகோதர சகோதரிகளே இன்னும் கொஞ்சம் வேலைகள் இருப்பதால் அவற்றிருக்கு நிதி உதவிகளை வழங்கி அல்லாஹ்வின் பேரருளை பெறுங்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com,www.muthupettaiexpress.com
மேலும் தொடர்புக்கு:

MKN. MOHAMED MOHAIDEEN,
IOB BANK, A/C,NO: 3456,
MUTHUPETTAI BRANCH,
MOBILE NUMBER: +0091 - 94871 03980.

இப்படிக்கு கொத்பா பள்ளி நிர்வாகம்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK . முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டையில் 110 KV மின்சாரம் விரைவில் அமைக்கப்படும் திரு.கோ.அருணாசலம்.





முத்துப்பேட்டை,அக்டோபர் 29 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடந்து முடிந்த பேரூராட்சி மன்ற தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட திரு.கோ.அருணாசலம் அவர்கள் 2328 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மேலும் அவர் தனது பொறுப்பை ஏற்று பதவியில் அமர்ந்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று பெற்றி பெற்றதின் மூலம் முத்துப்பேட்டை மக்களுக்கு என்ன செய்ய உள்ளீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, பின்னர் பதிலளித்த அவர், கட்சிக்கும், கட்சிக்கு அப்பாற்பட்ட பொது மக்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் தான் நான் வெற்றி பெற்றுள்ளேன் என்றும்,அந்த நம்மிக்கைக்கு பாத்திரமாக நான் கொடுத்த தேர்தல் வாக்குரிதியின் விளம்பரம் செய்த நோட்டிசில் கண்டுள்ளபடியும் அதற்கு மேல் அரசால் வழங்கப்பட இருக்கின்ற பல்வேறு நல திட்டங்களும், இன்று முத்துப்பேட்டை பகுதியை ஆளுகின்ற இயக்கத்திருக்கு சொந்தமாக இருக்கின்ற தலைவர் என்ற அடிப்படையில் பல்வேறு நல திட்டங்களை கொண்டு வந்து முத்துப்பேட்டையை தமிழகத்திலேயே பட்டி தொட்டில்கலெலாம் பேசபடுகின்ற அளவிற்கு தான் செயல் படுவேன் என்றும் அவர் தெருவித்தார். மேலும் புரட்சி தலைவி அம்மா அவர்களின் கட்சி அமைந்தவுடன் அரசுக்கும், துறைசார்ந்த அமைச்சர்களுக்கும், மாவட்ட செயலாளர் மூலமாக கொடுக்கப்பட்ட மனுவின் அடிப்படையில் 85 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு நீர் தேக்கத் தொட்டி கட்டுவதெற்கு அவற்றை விரைவில் செயல் படுத்த போவதாகவும் அப்போது அவர் தெருவித்தார். மேலும் மருதன்காவெளி, செம்படவன்காடு ஆகிய பகுதிகளில் தனி தனி ஓவர் டாங் கட்டி தடையற்ற குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், முத்துப்பேட்டையில் நிரந்தரமாக தடையற்ற மின்சாரம் கிடைக்க 110 KV டிரான்ஸ்பார்மர் வைக்க வேலைகள் துவங்கப்பட உள்ளது என்றும், பாதாள சாக்கடை திட்டத்திற்கு மன்னார்குடி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை இன்னும் 1 மாதத்திற்குள் பணிகள் முடிவுற்று 24 மணிநேரமும் பயன்பாட்டில் இருக்கும் விதமாக அனைத்து பணிகளும் நடைபெற்று வருவதாகவும், அவர் தெருவித்தார்.மேலும் இதய தெய்வ புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆசியுடன் முத்துப்பேட்டையை முன்மாதிரி நகரமாக மாற்றி காட்டுவேன் என உறுதிபட கூறினார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிபோர்ட்டர் இல்யாஸ்,EK .முனவ்வர் கான்,ASNS .அப்துல் பாரி.

முத்துப்பேட்டையில் வீடு இடிந்து விழுந்ததில் சிக்கிய கொத்தனார் கவலைக்கிடம்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 28 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குட்டியார் பள்ளி தெருவில் ஷபீகா ஜிவல்லரி உரிமையாளர் ஜனாப்.ஹாஜமைதீன் அவர்கள் தனது குட்டியார் பள்ளி வாசல் எதிர்புறத்தில் உள்ள அவரது வீட்டை இடித்து புது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் அப்போது கொத்தனார் வேலைகள் மும்புரமாக நடைபெற்று வந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள மது சுவர் தீடிரென்று இடிந்து பணியாட்கள் மேலே விழுந்தது. இது குறித்து முத்துப்பேட்டை தீயணைப்பு துறைனருக்கு தகவல் தெருவிக்கப் பட்டன . தகவல் அறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.கு.வாசு, திரு.ராஜேந்திரன் மற்றும் பணியாட்களுடன் உடனே வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த இடத்தில் பணியாற்றிய திருமதி.நாடிமுத்து வயது 35 , தமிழரசு வயது 28 , திரு சுரேஷ் வயது 30 ஆகியோர் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமையில் சேர்க்கப்பட்டனர். அதில் சுரேஷ் என்பவரது கை துண்டாகியதால், அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் அறிந்த உடனே முத்துப்பேட்டையின் பேரூராட்சி தலைவர் திரு.கோ.அருணாச்சலம் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு இதை அரசு கவனத்திற்கு கொண்டு சென்றார்,உடன் அ.தி.மு.க.நகர துணைத் செயலாளர் ஜனாப்.முஹம்மது முஹைதீன் அவர்கள் உடனிருந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)