முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் -நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!!






























தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான 

முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் . 

துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை 
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள். இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக கொடுத்தனர். ஹாஜ அலாவுதீன் மாவட்ட மாணவரணி பேச்சாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் , 

மருத்துவர் இளங்கோ MBBS அவர்கள் இரத்ததானம் செய்வதினால் ஏப்படும் 

நனமைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.அன்சாரி மற்றும் முன்னாள் இந்நாள நிர்வாகிகள் 

முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் கோ . 

அருணாச்சலம் , மாவட்ட தி மு க துணை செயலாளர் M.S கார்த்திக் , ரோட்டரி மண்டல 

பொறுப்பாளர் G. கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் மாநில தலைவர் 

G.பஷீர் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக சேதி தொடர்பாளர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றிஉரையோடு நிகச்சி 

இனிதே நிறை வேறியது ...

தகவல் : முத்துப்பேட்டை செய்யது இப்ராஹிம்

மௌத்து அறிவிப்பு "ஆமினா அம்மாள் "

முத்துப்பேட்டை, டிசம்பர் 25: முத்துப்பேட்டை ஓடக்கரை தெரு, மர்ஹும் M.A.ஷாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், S.ஷேய்க் அலாவுதீன், S.நெய்னா முஹம்மது ஆகியோர்களின் சகோதரியும், பசூல் ஹக் (பத்திரிகை) அவர்களின் கொளுந்தியாளும், சல்மான் அவர்களின் மாமியும், சாலிஹ், அலிஃப் ஆகியோர்களின் சிறிய தாயருமாகிய "ஆமீனா அம்மாள்"அவர்கள் இன்று (25.12.2013 புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

அன்னாரின் ஜனாஸா நாளை 26.12.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக

அறிவிப்பவர்.
S.ஷேய்க் அலாவுதீன்
+91 967 771 39 79

யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ?இது பற்றிய ஓர் சிறப்பு பார்வை !!!

திரு நங்கைகள் என்பவர்கள் யார் ?
யார் திரு நங்கைகள்? அறிகுறிகள் என்ன? (ட்ரான்ஸ்கேந்தெரெட்) – ஒரு பார்வை!



சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம்.
23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன.
அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன.
ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும்.
பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும்.
( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். )
குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும்.
உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. )
ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன.
*ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும்.
அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார்.
( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.)
* பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.)
( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.)
—-
நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள்.
( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.)

மௌத் அறிவிப்பு "குட்டியார் பள்ளி இமாம்" ஹாபீஸ் இமாம் மௌலவி சாகுல் ஹமீது "

டிசம்பர் 24: முத்துப்பேட்டை குட்டியார் பள்ளியில் முன்னால் இமாமாக பணி புரிந்து வந்த மேலப்பாளையம், 81 தெற்கு தைக்கால் தெரு வினைச்சேர்ந்த இமாம் மவுலவி, ஹாபிஸ், “K.M ஷாகுல் ஹமீது” நூரிய்யி அவர்கள் இன்று 24.12.13 மேலப்பாளையத்தில் மௌத்தாகி விட்டார்கள்.
 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்….
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில்,நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ்சபூரையும், சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக….
இதர தகவல் பெற….
81 தெற்கு தைக்கால் தெரு,
மேலப்பாளையம்.
+91 9894 609 490
+ 91 7708 181 306

மௌத்து அறிவிப்பு :"ஜெய்னம்புகனி "

டிசம்பர் 22: முத்துப்பேட்டை பக்கிர்வாடி தெரு,  (S. பசீர் அஹமது வீடு) மர்ஹூம் கொடுவா M.M. முகம்மது பாவா அவர்களின் மகளும் மர்ஹூம் S. காசிம் பக்கிர் அவர்களின் மருமகளும் மர்ஹூம் S.K. சேக் அலாவுதீன் அவர்களின் மனைவியும் முகைதீன் அடுமை, சாகுல் ஹமீது, அஹமது ராவுத்தர் அவர்களின் சகோதரியும் S. தாவுது கனி, S. பசீர் அஹமது, மர்ஹூம் S. யாக்கத் அலி, மர்ஹூம் S. முகம்மது அலியார், S. தப்ரூக் அலி, S. மைநூர்தீன், S. ராஜ் முஹம்மது, S. அயூப்கான், S. காதர் பாட்சா அவர்களின் தாயாரும் மர்ஹூம் நெருப்பு பாருக், மர்ஹூம் அமானுல்லா, P. முகம்மது அலி அவர்களின் மாமியாருமாகிய “ஜெய்னம்பு கனி” அவர்கள் இன்று (22-12-2013) மாலை 4.30 மணியளவில் மௌத்தாகிவிட்டார்கள். இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி,  ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின்  கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.
அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள்,மற்றும்  நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும், சகிப்புத்தன்மையையும்  தந்தருள்வானாக ஆமீன்.
அறிவிப்பவர்
S. தாவுது கனி & சகோதரர்கள்

ஆபத்தான சூழ்நிலையில் நிதி உதவியின்றி தவிக்கும் முத்துப்பேட்டை இளைஞர் -நிதி உதவி செய்திட எக்ஸ்பிரஸ் வேண்டுகோள் :

இந்தப் பதிவை அதிகமாகப் பகிருங்கள்! நீங்கள் பகிர்வதன் மூலம் எங்கோ ஒரு இடத்தில் பிறருக்கு உதவக் காத்திருக்கும் மனிநேயமுள்ளவர்களுக்கு சென்றடைய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது!! தயவு செய்து பகிருங்கள் பரப்புங்கள்!!

அவர்களுக்கு ஆதரவுக்கு ஆட்கள் இன்றி மருத்துவ மனையில் கிடக்கிறார் உணர்வின்றி கடந்த 20 நாட்களுக்கு முன் முத்துப்பேட்டை பைபாஸ் சாலையில் ஆட்டோ ஒட்டி கொண்டு போகும் போது ஆட்டோ நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்து விட்டார் .

முத்துப்பேட்டையை சார்ந்த நபீல் அஹமது என்பவர் கடந்த 20 தினங்களாக யாதொரு சிகிச்சையும் அளிக்காமல் தஞ்சை மருத்துவமனையில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த நிலையில் பார்பதற்கு ஆட்கள் இல்லாத வகையில் அவதியுறம் செய்தி கேட்டு இன்று நேரில் சென்று பார்த்து மருத்துவர்களை அணுகி எனது நண்பர் முன்னாள் டீன் டாக்டர் குணசேகரன் மற்றும் டக்டர் கணேசன் ஆகியவர்களிடம் விபரம் சொல்லி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

ஆனாலும் கையில் காசு இல்லாமல் மிகவும் சிரமாமான நிலையில் இருப்பதை அறிந்து நண்பர்கள் வட்டாரத்தில் செல் மூலம் தொடர்பு கொண்டு 20000 ஆயரம் நிதி திரட்ட பட்டுள்ளது உதவிக்கு ஆட்கள் இன்றி தவித்துடும் இந்த 25 வயது வாலிபனை காப்பாற்ற துவா செய்வதுடன் முடிந்தால் உதவி செயலாம்( என்னால் முடிந்த அதிக பச்ச உதவினை செய்து இருக்கிறேன்) அல்லது இதனை சேர் செய்யலாம்

விபரங்களுக்கு செயலார் ஆட்டோ ஸ்டான்ட் முத்து பேட்டை 04369 262789 உணர்வுகள் இல்லா நிலையில் பரிதாபத்திற்குரிய வகையில் டிரைவர் நபீல்


முத்துப்பேட்டையில் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா அழைப்பு

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகர்யில் அல் மஹா வணிக வளாகம் திறப்பு விழா இன்ஷா அல்லாஹ் 01.01.2014 புதன்க்கிழமை அன்று சரியாக காலை 9 மணியளவில் அல் மஹா நிறுவனர் ஹைதர் அலி அவர்களின் தாயாரின் கைகளால் திறக்கப்பட உள்ளது.

அதை போல அன்று மாலை 4 மணியளவில் உங்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கோவை அனாடமிக் தெரபி ஹீலர்.பாஸ்கர் அவர்கள் உரையாற்ற உள்ளார்

இடம்: சிதம்பர ராமஜெயம் மஹால் , முத்துப்பேட்டை

தங்கள் உடல் நலம் பேணிகாக்க அனைவரும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அன்புடன் அழைப்பது

S.M.ஹைதர் அலி
அல் மஹா நிறுவனர்
முத்துப்பேட்டை

முத்துப்பேட்டையில் பிரச்சினைக்குரிய இடத்தில் TNTJ மீண்டும் மார்கஸ் கட்ட அரசு அனுமதி..



முத்துப்பேட்டை, டிசம்பர் 21: தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் மர்கஷ் கட்டிட வேலைகள் அல்லாஹ்வின் உதவியால் இன்று மீண்டும் ஆரம்பமாகியது. கூடியவிரைவில் முழுமைபெற அல்லாஹ்விடம் துவா செய்யவும்.

இப்படிக்கு 

தவ்ஹித்ஜமாத் நிர்வாகம் 


திருப்திகரமான செக்ஸ் ஆண்களின் ஆயுளை அதிகரிக்கும் ஆராய்ச்சியில் தகவல்

வாஷிங்டன், டிசம்பர் 18: அமெரிக்காவின் மெக்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் வீட்டில் காணப்படும் ஈக்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். விஞ்ஞானிகள் பெண் ஈக்களின் ஹார்மோன்களை செயற்கையாக தூண்டி அதனை ஆண் ஈக்கள் மத்தியில் உலவச்செய்தனர். அந்த ஹார்மோன்கள் தூண்டப்பட்ட ஆண் ஈக்கள் செக்ஸ் உறவுக்காக முயன்றபோது அவற்றின் அருகே பெண் ஈக்கள் இல்லாததால் அவற்றால் உறவில் ஈடுபட முடியவில்லை. இதனால் அந்த ஆண் ஈக்களிடம் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) அதிகரித்து இதை விஞ்ஞானிகள் ஆய்வு மூலம் கண்டறிந்தனர். 

இவ்வாறு மன அழுத்தம் அதிகரித்த ஆண் ஈக்கள், செக்ஸ் உறவில் ஈடுபட அனுமதிக்கப்பட்ட மற்ற ஆண் ஈக்களைவிட விரைவாக இறந்து விட்டன. என்பதையும் கண்டறிந்தனர். மன அழுத்தம் அதிகரித்த ஈக்களின் ஆயுட்காலம் 40 சதவீதம் குறைந்து இருந்தது. இதனைக் கொண்டு ஈக்களின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் அதன் ஆயுளுக்கும் தொடர்பு இருப்பதாக கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும்.

ஈக்கள் மட்டுமல்ல, புழுக்கள் மத்தியில் செய்யப்பட வேறொரு ஆய்விலும் அவற்றின் ஆயுள்காலத்திற்கும் அவற்றின் திருப்திகரமான செக்ஸ் உறவிற்கும் தொடர்பு இருப்பதை கண்டறிந்து உறுதி செய்து உள்ளனர். 


குஜராத் கலவரத்தின்போது வாஜ்பாய்-மோடி இடையே நடந்த கடித போக்குவரத்தை வெளியிட முடியாது: பிரதமர் அலுவலகம் கைவிரிப்பு



குஜராத், டிசம்பர் 18: குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அப்போது பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடிக்கும் நடைபெற்ற கடித போக்குவரத்தின் நகல்களை தனக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக மனு செய்திருந்தார்.


குறிப்பாக, கலவரம் உச்சகட்டத்தில் இருந்த 27-2-2002 முதல் 30-4-2002 வரை நடைபெற்ற கடித பரிமாற்றத்தின்போது, அந்த கலவரத்தின் பின்னணியில் இருந்த சக்திகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கும் குஜராத் முதல் மந்திரி மோடிக்கும் இடையில் இடம்பெற்ற தகவல் பரிமாற்றம் என்ன? என்று அந்த சமூக ஆர்வலர் பிரதமர் அலுவலகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார்.



ஒரு விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மீது அரசு சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வரும்போது, அவ்விவகாரம் தொடர்பான முக்கிய குறிப்புகளை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் வழங்க வேண்டும் என அரசை யாரும் நிர்பந்தப்படுத்த முடியாது என்ற விதிவிலக்கை காரணம் காட்டி, “விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களை வழங்க முடியாது” என பிரதமர் அலுவலகம் மறுத்து விட்டது.

முஸ்லிம்​ லீக் பெயரைக் களங்கப்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை: எச்சரிக்கை!

சென்னை, டிசம்பர் 15: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை-சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. இந்த தகவல் அவரை பா.ஜ.க அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
"சதாம் என்.கே.எம்.சதக் கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா.ஜ.க.,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.
மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கி ணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது.
ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில் ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 - ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க.,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும்.
இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்."
இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.​

பெண்களே.!!! இந்த நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்....!!


உலகம், டிசம்பர் 15: இந்த புகைப்படத்தில் காணப்படும் சுஷ்மிதா என்ற பெண் தன்னுடைய முகநூலில் தம்முடைய போட்டோவை பதிவேற்றம் செய்திருந்தார். 

காமத்தின் சகதியிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் கயவர்கள் சுஷ்மிதாவின் போட்டோவை வைத்து பல்வேறு போலி முகநூல் கணக்கு திறந்து... இவர் விலை மாது என்று விளம்பரம் செய்து சமுதாயத்தில் இழிவை ஏற்படுத்தியிருந்தார்கள்.

தான் இழிவுப்படுத்தப்பட்டதை அறிந்த பெண் தற்கொலையை தேர்வு செய்து... இந்த மாபாதக முடிவுக்கு வந்து விட்டாள். 

கண்ணியமாக வாழ்ந்து வரும் சமுதாய கண்மணிகளே... !

எத்தனையோ முறை சொல்லிவிட்டோம் உங்களுடைய புகைப்படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்யாதீர்கள் என்று... 

வாழும் உலகில் இந்த பெண்ணை போன்று நீங்களும் உங்களது வாழ்வை தொலைக்க வேண்டுமா ? 
என்பதை நீங்களே சிந்தனை செய்து கொள்ளுங்கள்..!

சொல்ல வேண்டியது நமது கடமை..!

இல்லை பட்டு தான் நான் திருந்துவேன் .. என்று நீங்கள்... அடம்பிடித்தால்... அப்புறம் உன் தலையெழுத்து.

நன்றி:

உம்மு ஷாமீஹா 

மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த BJP உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம்.



சென்னை, டிசம்பர் 14: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு 

சத்தியம் டிவி : இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!!



சையது இக்பால் அவர்கள் : நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ ?பார்த்தது இல்லை .மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை .அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார். 

அவரால் இல்லை நர பலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாதுஅப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான் உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 % இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன அதனால் . நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம் . முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம் அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல் ,இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம் 

மௌத்து அறிவிப்பு. "முஹம்மது தாஹா"


முத்துப்பேட்டை தெற்கு தெரு மர்ஹும் முஹம்மது தம்பி அவர்களின் மகனும்,
நிஜாமுதீன்,அமீர்கான் ஆகியோர்களின் தகப்பனாரும், M.K.S.நாகூர் பிச்சை சகோதரர்களின் மச்சானும், மர்ஹும் முஹைதீன் காதர் சேக்காதி, மர்ஹும் ஜைனுல் ஆப்தீன் ஆகியோர்களின் சகோதரருமாகிய (குட்டியார் பள்ளி அருகில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்த) "முஹம்மது தாஹா" அவர்கள் நேற்றிரவு ( 13/12/13 வெள்ளிக் கிழமை) இரவு 10 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். (இன்னாளில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ், அரபு சாஹிபு பள்ளி மைய வாடியில் இன்று மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும்.

மேலும் தொடர்புக்கு:

M.K.S.நாகூர் பிச்சை 

9976 28 42 16.

நமது நிருபர்:

K.M. காதர் கனி (பாடகர்)


முத்துப்பேட்டை பலத்த காற்றால் இருளில் மூழ்கியது. அதிகாரிகள் விரைந்து வந்து நடவடிக்கை.


முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெறும் பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க போகவில்லை. இந்த நிலையில் நேற்ற முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன மரங்களும் சாய்ந்தன. இதனால் முத்துப்பேட்டை நகரம் மற்றும் சுற்றுப்புர சிராமங்கள் இருளில் மூழ்கியது. இதனால் பொது மக்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டது. 

தகவல் அறிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமாறன், கோட்டாச்சியர் சுப்பு, வட்டாச்சியர் ராஜகோபால், வருவாய் ஆய்வாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சிங்காரவேலு, கிருஷ்ணகுமார், ராஜாராஜசோழன் மற்றும் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை உத்தரவிட்டார்கள். பின்னர் பேட்டை கிராமத்தில் விடிய விடிய அதிகாரிகள் நின்று நேற்று அதிகாலை வரை நின்று பணிகளை மேற்கொண்டனர்.

முத்துப்பேட்டை பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.




முத்துப்பேட்டை, டிசம்பர் 14: முத்துப்பேட்டை சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி சார்பில் பேட்டை சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியும் ஆகிவிட்டது. இதை சரி செய்யாத பேருராட்சியை சரிசெய்ய வலியுறுத்தியும், தெருக்களில் தினம் குப்பைகள் அகற்றுவது கிடையாது. இதனால் சுகாதார கேடாகி கொசுக்கள் அதிகம் உற்பத்தி ஆகின்றன. இதனால் டெங்கு, மலேரியா, போன்ற வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் தினம் சுத்தம் செய்து குப்பைகளை அப்புறப்படுத்தாத பேருராட்சியின் நிர்வாக சீர்கெட்டை கண்டித்தும், மின்சார வாரியம் ஆசாத் நகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள ட்ரான்ஸ்பார்மர் தொடும் தூரத்தில் உள்ளதால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் அதை இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும், முத்துப்பேட்டையில் இருக்கும் டாக்டர்கள் இரவு நேரங்களில் அவசரத்திற்கு மருத்துவம் பார்ப்பது கிடையாது. 

நோயாளிகள் அபாய கட்டத்திற்கு போகும் நிலை ஏற்படுகிறது அதனால் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் டாக்டர்கள் நியமிக்க வலியுறுத்தியும் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை பேருராட்சி அலுவலகம் முன்பு நடைப்பெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் A. அபுபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் பலரும் பேசினார்கள். நகர துணைத் தலைவர் அசரப் அலி, துணைச் செயலாளர் ஜெகபர் அலி, நிர்வாகிகள் எர்சாத், மண்சூர்அலி, சதாம், மைதீன் உட்பட சுமார் 200ம் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். நகர செயலாளர் தீன் முகம்மது நன்றி கூறினார்.

கூத்தாநல்லூரும் -தம்ரூட்டும் !!ஓர் ருசிகர பார்வை !!!

கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம்.!!

கூத்தாநல்லூர், டிசம்பர் 13: தனக்கென தனிப் பாரம்பரியம் கொண்ட ஊர் கூத்தாநல்லூர். நகரம் என்று அழைக்கப்பட்டாலும் சற்றே பெரிய கிராமமாகக் காட்சியளிக்கும் கூத்தாநல்லூர் ஒருவித்தியாசமான ஊரும்கூட. சுற்றுவட்டாரக்காரர்களால் ‘குட்டி வளைகுடா’ என்றுஆழைக்கப்படும் கூத்தாநல்லூரின் பெரும்பாலான ஆண்கள் வளைகுடா நாடுகளில்இருக்கிறார்கள்.
தம்முடைய வாழ்நாளின் பெரும்பாலான நாட்களை வளைகுடா நாடுகளிலேயே கழித்துவிடுவதாலோ என்னவோ அந்நாடுகளின் கலாச்சாரம் கூத்தாநல்லூர்க்காரர்களின் ஒவ்வொரு விஷயத்திலும்ஏதேனும் ஒரு வகையில் பிரதிபலிக்கிறது. கூத்தாநல்லூருக்குச் செல்பவர்களுக்கு மூன்று அனுபவங்கள் முக்கியமானவை.
நீண்ட வீதிகளின் இருமருங்கிலும் மாளிகைகளாய்க் காட்சியளிக்கும்வீடுகள்; மையத்தில் பிரியாணியைக் குவித்து சுற்றிலும் நால்வர் அமர்ந்து சாப்பிடும்நல்விருந்து, ஒருபோதும் திகட்டாத வீட்டுப் பணியாரம் – தம்ரூட்.
கூத்தாநல்லூரில் அந்தக் காலத்திருந்தே வீட்டுப் பணியாரம் மிகவும்பிரசித்திபெற்ற ஒரு பலகாரம். பெயரில் என்னவோ பணியாரம் என்றிருந்தாலும் நாம்வழக்கமாகக் குறிப்பிடும் பணியார வகையைச் சேர்ந்தது அல்ல இது; விசேஷமானது.பண்டிகை நாட்கள், பிறந்த நாள், நிச்சயதார்த்தம், திருமணம், மணமக்கள் அழைப்பு,வெளிநாட்டுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி… இப்படி விசேஷமான தருணங்களில் மட்டுமேவீட்டுப் பணியாரம் செய்வார்கள். கூத்தாநல்லூர்க்காரர்கள் யாரேனும் திருமணஅழைப்பின்போது அழைப்பிதழுடன் வீட்டுப் பணியாரமும் வைத்து உங்களைஅழைத்தால் அவர் உங்களை மிக முக்கியமானவராகக் கருதுகிறார் என்று பொருள்.அதாவது வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பதுபோல் இது ஒருவகை கௌரவம்!
ரவை, முட்டை, பால்திரட்டு, ஜீனி, நெய், முந்திரி சேர்த்துச் செய்யப்படும்இந்த வீட்டுப் பணியாரம் எல்லோருக்கும் கைகூடாது. அதனாலேயே, அந்தக் காலத்தில்வீட்டுப் பணியார ஆத்தாக்கள் நிறைய பேர் இப்பகுதியில் இருந்தார்கள்.
யாருக்குத்தேவையோ அவர்களுடைய வீட்டுக்கே வந்து இவர்கள் வீட்டுப் பணியாரம் செய்து தருவார்கள். விசேஷ நாட்களில் இவர்களுக்கு ஏகக் கிராக்கியாக இருக்கும்.
ஆனால்,கூத்தாநல்லூரிலேயே இப்போது வீட்டுப் பணியாரம் என்ற பெயரையும் அதன்கதையையும் அடுத்து வரும் தலைமுறைக்குத் தெரியாமல் போகும்படி செய்துவிட்டார்ஒருவர். அவர்… எம்.ஐ. முஹம்மது தமீம்!
அவர் தொடங்கிய ‘மௌலானா பேக்கரி’யில் வீட்டுப் பணியாரம் தம்ரூட்டாகப்புதிய அவதாரமெடுத்த இந்த 19 ஆண்டுகளில் வீட்டுப் பணியார ஆத்தாக்கள் காணாமலேபோய்விட்டார்கள். மேலே சாக்லேட் நிறத்திலும் உள்ளே மஞ்சள் நிறத்திலும் கேக்போல இருக்கும் தம்ரூட் திகட்டாத ஒரு பலகாரம்.
நினைத்து நினைத்துச் சாப்பிட அழைக்கும் தம்ரூட்டின் கவர்ச்சிக்குக் காரணம் அதன் சுவை மட்டுமல்ல; அதில் எப்போதும் உறை கொண்டிருக்கும் உருகும் நெய்யின் மணமும்கூட. இந்த மணம்கூத்தாநல்லூர்க்காரர்களை மட்டும் கட்டிப்போடவில்லை. கூத்தாநல்லூர் செல்லும்எவரையும் கட்டிப்போட்டுவிடுகிறது.
‘மௌலானா பேக்கரி’ உரிமையாளர் தமீம் சொன்னார்: “மொஹல் உணவுவகையைச் சேர்ந்த வீட்டுப் பணியாரம், இந்த மக்களின் கொண்டாட்டங்களிலிருந்துபிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. நாங்கள் இந்தக் கடையைத் தொடங்கியதும்வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றியபோது வீட்டுப் பணியாரமேமுதலில் ஞாபகத்துக்கு வந்தது. அதுவரை வீடுகளில் மட்டுமே செய்யப்பட்டுவந்தவீட்டுப் பணியாரத்தைக் கடையில் செய்து விற்கத் தொடங்கினோம். அதன் ருசியைக்கூட்டியதுடன் சீக்கிரம் கெட்டுப்போகாதவாறும் தயாரித்தோம். இப்போது வளைகுடாநாடுகள் வரை எங்கள் கடை தம்ரூட் பிரபலம்” என்றார் தமீம்.
இவர்கள் கடையில் குறிப்பிட வேண்டிய இன்னொரு ஐட்டம் பால் மணம் மாறாதஅமுல் ரஸ்க். தமிழக பேக்கரிகளில் இவர்களுக்கென்று ஒரு முக்கிய இடத்தை இந்தரஸ்க் பெற்றுத் தந்திருக்கிறது. “இந்த இடத்தைவிடவும் தம்ரூட் பெற்றுத்தரும் இடம்இன்னும் பெரிதாக இருக்கும்” என்று சிரிக்கிறார் தமீம்.
கூத்தாநல்லூர் வந்து செல்பவர்கள் பைகளில் அவசியம் தம்ரூட் இருக்குமாம். ஊர் திரும்பியதும் நம் பையைத் திறந்து பார்த்தோம். நெய் வாசம் மட்டும்இருந்தது!

முகநூல் வதந்திக்கு குணங்குடி அனிபா மறுப்பு

சமுதாய மக்களுக்கு குணங்குடி அனிபாவின் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)





பழனி பாபா அவர்களின் மறைவைத் தொடர்ந்து நான் ஜிகாத் கமிட்டி தலைவராகவும், சகோ. தடா ஜே. அப்துல் ரஹீம் பொதுச் செயலாளராகவும் இணைந்து சில மாதங்கள் சமூகப் பணி செய்தோம். அதன்பிறகு பிரதான வழக்கில் நானும் சகோதரரும் பல வருடங்கள் சிறையில் இருந்தோம். அந்த வழக்கில் விடுதலையான பிறகு என்னுடைய பணி தமுமுக மூலம் தொடர்கின்றது. இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்கின்ற பொழுது இந்திய தேசிய லீக் சார்பாக சகோ. ஜே. அப்துல் ரஹீம் அவர்களும் கலந்துகொள்கின்றார்கள்.

அப்படி கலந்துகொள்ளும் போது சகோதரர் அப்துல் ரஹீம் அவர்கள் பலமுறை "தேசிய லீக்கின் தலைவர் பதவியை காலியாக வைத்துள்ளோம்; அந்தப் பொறுப்பை நீங்கள் ஏற்று இணைந்து செயல்படுவோம்'' என்று அழைப்பார். அப்படி அழைக்கின்ற பொழுது, "நான் இனிமேல் எந்த இயக்கங்களிலும் சேரமாட்டேன், உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும் வரை தமுமுக மூலமாக என் சமூகப்பணி தொடரும்'' என்று ஒவ்வொரு முறையும் நான் அவருக்கு பதில் சொல்வேன்.

அந்த அடிப்படையில் கடந்த 10.12.2013 அன்று, வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள் நடத்திய நிகழ்ச்சியில் நானும் கலந்துகொண்டேன், அப்துல் ரஹீமும் கலந்துகொண்டார்கள். அப்போதும் என்னை அழைத்தார்கள். நானும் வழக்கமான எனது பதிலை சொல்லிவிட்டேன்.

இதுதான் உண்மை. இனிவரும் காலங்களில் தமுமுகவைத் தவிர எந்த ஒரு இயக்கங்களிலும் சேர்ந்து சமூகப்பணி செய்வதற்குண்டான எண்ணம் இல்லை என்பதை சமுதாய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண்,

(குணங்குடி ஆர்.எம்.அனிபா)

முத்துப்பேட்டையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் தவறி விழுந்து பலி.

முத்துப்பேட்டை டிச.13
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் நேற்று காலை முதல் இரவு வரை இலேசான காற்றுடன் மழை பெய்து வந்தது. இந்த பகுதியைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிகக் செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று காலை மேகமூட்டம் சாதாரணமாக காணப்பட்டதால் முத்துப்பேட்டை தெற்குத்தெரு கோரையாற்று கரையிலிருந்து படகு மூலம் மீன் பிடிக்க அதே பகுதியைச் சேர்ந்த கமால் முகைதீன், பரிதுஉஸ்மான், அப்துல் சலாம், தாவூது இப்ராஹிம், தாவூது, தருஸ் மரைக்காயர், ராஜ்முகம்மது ஆகிய 7 மீனவர்கள் தனிப் படகு மூலம் கடலுக்கு நேற்றுக் காலை 8-மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சுமார் மதியம் 12 மணியளவில் கடலுக்கு அருகில் கழிமுனை லகூன் அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது ராஜ்முகம்மது(57) அப்பொழுது வீசிய காற்று மற்றும் குளிர் காரணமாக நடுக்கம் ஏற்பட்டு படகில் விழுந்தார். இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் ராஜ்முகம்மது உடலை கூடச்சென்ற 6 மீனவர்களும் முத்துப்பேட்டை தெற்கத்தெரு கோரையாற்று கரைக்கு படகு மூலம் கொண்டு வந்து சேர்த்தனர். பலியான ராஜமுகம்மதுக்கு மனைவி மற்றும் நிஷா தமீம் அன்சாரி ஆகிய குழந்தைகள் உள்ளன. 


இதுகுறித்து முத்துப்பேட்டை போலிசார் மற்றும் கடலோர காவல்படை போலிசார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப்பகுதி மீனவர் சங்க தலைவர் முகம்மது இஸ்மாயில் கூறுகையில் காற்று மழையின் காரணமாக மீன் பிடிக்க யாரும் செல்லவில்லை. இந்த நிலையில் இன்று காலை(நேற்று) இவர்கள் 7 பேரும் மீன் பிடிக்கச் செல்லும்பொழுது மீனவர் ராஜ்முகம்மது பலியானானர். மிகவும் ஏழை மீனவ குடும்பத்தைச் சேர்ந்த அவரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கி உதவி செய்ய வேண்டும் என்றார்.




முத்துப்பேட்டையில் கேள்விக்குறி? தோற்றத்தில் கத்தரிக்காய்...



முத்துப்பேட்டை, டிசம்பர் 11: முத்துப்பேட்டையில் உள்ள பட்டுக்கோட்டை சாலையில் காய்கறிக்கடை வைத்திருப்பவர் பாலசுப்ரமணியன். இவரது கடையில் ஏராளமான காய்கறிகள் உள்ளன. இதில் நேற்று விற்பனைக்காக வந்த கத்தரிக்காய்களில் ஒன்று கேள்விக்குறி தோற்றத்தில் காணப்பட்டன. இதனை மக்கள் பார்வைக்காக பாலசுப்ரமணியன் வைத்துள்ளார். இதனை பலரும் வேடிக்கையுடன் பார்த்துச் செல்கிறார்கள். 


திருமணச் செய்தி: முத்துப்பேட்டை கருப்பட்டி ஹாஜா இல்ல திருமண விழா அழைப்பிதல்...



முத்துப்பேட்டை, டிசம்பர் 10: இன்ஷா அல்லாஹ் வருகிற டிசம்பர் மாதம் 22.12.2013 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் திருச்சி, காஜாமலை நூர் மஹாலில் நிக்காஹ் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து மறுநாள் 23.12.2013 மதியம் 1.00 மணியளவில் முத்துப்பேட்டை, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி மதரஸாவில் வலிமா விருந்து நடைபெறயிருப்பதால் எனது உற்றார், உறவினர்கள் மற்றும் அனைத்து நண்பர்களும் தவறாது கலந்து கொண்டு எங்களின் ஈருலக வாழ்கைக்கு துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன்..

بارك الله لكم‏ وبارك عليكم وجمع بينكما في خير

பாரகல்லாஹுலக வபாரக் அலைக வ ஜமஅ பைனகுமாஃபீ கைர்
{அல்லாஹ் உங்களுக்கு அருள் பாக்கியம் நல்கட்டும் மேலும் உங்கள் மீது அபிவிருத்தியைப் பொழியட்டும். உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்றிணைத்து வைக்கட்டும்}

 என்றும் அன்புடன்..

-          K.A.N.ஹாஜா கமால் MBA
               ( கருப்பட்டி ஹாஜா )


நமது நிருபர்:

AKL அப்துல் ரஹ்மான்...

பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? மருத்துவர்கள் தரும் தகவல்கள் !!!

Emotional issues generally , for example, sexual passion , anger , fear , hatred, if such control , it is both physically and mentally and will effect many viparita . Similar sentiments have to convince or to discharge . If that approach does cantapatuttutal with friendship . But out better than cantapatuttutalai . It is a way out laughing .

உலகம்,டிசம்பர் 10: பொதுவாக உணர்வு பூர்வமான விஷயங்களை, உதாரணமாக பாலியல் உணர்வு, கோபம், பயம், வெறுப்பு போன்றவர்களை அடக்கினால், அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல விபரித விளைவுகளையும் ஏற்படுத்தி விடும். இதை போன்ற உணர்வுகளை சாந்தப்படுத்த வேண்டும் அல்லது வெளியேற்ற வேண்டும். சாந்தபடுத்துதல் என்றால் நட்போடு அணுகுதல் என்று அர்த்தம். ஆனால் சாந்தபடுத்துதலை விட வெளியேற்றுவதே நல்லது. இதில் ஒரு முறைதான் சிரித்து வெளியேற்றுதல் என்பது. 

பொதுவாக பாலியல் உணர்வுகளை சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தாலே அது வேகமாக மேலே கிளம்பி, பிறகு மெல்ல சாந்தமாகி விடும். உதாரமான ஒரு சிறு வயது பையன் மிகவும் துடிப்பாக விளையாட்டுப் பொருட்களை போட்டு உடைத்துக் கொண்டிருக்கிறான் அல்லது கெட்ட வார்த்தைகளை பேசிக்கொண்டு இருக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இவர்களை நீங்கள் மூர்க்கமாக அடக்க நினைத்தால் என்ன ஆகும்? அது மேலும் மேலும் கூடிக்கொண்டே தான் போகும் அல்லது அது அடங்கியது போல நடிக்கும். 

ஆனால் இப்படி விளையாடும் பொழுதும், பேசும்பொழுதும், அவனை சற்று வெறுமனே, எதுவும் கூறாமல் உற்றுப் பார்த்துக் கொண்டே இருங்கள். அவன் சற்று போக்கிரித்தனமாக விளையாடுவான். இல்லை மேலும் அசிங்கமாகப் பேசக்கூடும். அந்த எல்லையை அடைந்தவுடன் அவன் கீழே இறங்கித்தான் வரவேண்டும் இல்லையா? 

ஆகவே நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பாலுணர்வைக் கண்டிக்காமல், அடக்காமல் அதன் போக்கை மனக்கண்ணுள் சற்று வெறுமனே பார்த்துக் கொண்டிருங்கள். இப்படித்தான் அதைச் சாந்தபடுத்த முடியும். இப்படிச் சாந்தபடுத்திய பாலுணர்வுச் சக்தி வேறு வகையில் மெல்ல மாறிவிடும் & விளையாட்டு, டி,வி. பார்த்தல் போன்றவைசகளில். 

அப்படியும் சாந்தபடுத்த முடியவில்லை என்றால் அதன் போக்கிலேயே நீங்களும் சென்று விடுங்கள்! சில காலம் சென்று அது தானே சாந்தநிலைக்கு வந்து விடும். தேவை உங்களுக்கு விழிப்புணர்வு தான். எதிலும் இயந்திரத்தனமாக செயல்படாதீர்கள். குற்ற உணர்வு தேவை இல்லாதது.  

மதுக்கூரில் தமுமுக வினர் சென்ற வாகனம் மீது இந்து முன்னணி தேச விரோத கும்பல் தாக்குதல் -தமுமுக தொண்டர்கள் கொந்தளிப்பு !!!






மதுக்கூர், டிசம்பர் 10: தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்(TMMK) சார்பாக தொடர்ந்து 18 ஆண்டுகாலமாக பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 தேதி அன்று பல்வேறு போராட்டக்களங்களை அமைத்து ஜனநாயக வழியில் போராடி வருகின்றது.இந்த வருடம் மாநிலத்தின் பெரு நகரங்கள் சுமார் 50 இடங்களில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமுமுக மாநில தலைமை அறிவித்து இருந்தது.அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் (தெற்கு) சார்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு கலந்து கொள்ள மதுக்கூர் நகர தமுமுக சார்பாக 5 வேன்களில் தஞ்சாவூர் நோக்கி சென்றனார்.(இதில் ஒரு வேனில் பெண்கள்).தமுமுகவின் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றுகொண்டு இருந்தது.

மதுக்கூரிலிருந்து 3 கீ.மி தொலைவில் உள்ள புலவஞ்சி என்ற கிராமத்தில் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ் என்பவன் எனது அடியாட்களுடன் சாலையின் நடுவே தனது வாகனத்தை குறுக்குநெடுக்காக நிறுத்திக்கொண்டு இந்த வழியாக டிசம்பர் 6 போராட்டத்துக்கு வாகனங்கள் செல்லக்கூடாது என கெக்கரித்து உள்ளான்.வாகன டிரைவர் சகோதரர் ரியாஸ் அகமது மட்டும் இறக்கி சென்று ஏன் ? ரோட்டை மறிக்கின்றீர்கள் நாங்கள் போராட்டத்து செல்லவேண்டும் என கூறியுள்ளார்.அதற்கு போஸ் இது என் ஊர்.எனது ரோடு யாரும் இந்த வழியாக செல்லக்கூடாது என மீண்டும் கூறியுள்ளான்.மதுக்கூர் காவல் நிலையத்துக்கு நிர்வாகிகள் தகவல் கொடுக்க எப்போதும் போல் தாமதமாக வந்த மதுக்கூர் காவல் துறை வழக்கம்போல் முஸ்லிம்களை நீங்கள் கலைந்து செல்லுங்கள் நாங்கள் பார்த்து கொள்கின்றோம் என கூற போராட்டத்திற்கு சென்ற முஸ்லிம்கள் எங்களை சம்மந்தமில்லாமல் வழிமறித்த போஸ் மற்றும் அவனது அடியாட்களை கைது செய்யவேண்டும் என கூற போஸை நோக்கி சென்ற மதுக்கூர் காவல்நிலைய ஆய்வாளர் அவர்களை பார்த்து போஸின்தம்பி வக்கீல் ராஜபிரபு என்பவன் நீ போயா என்னயா பண்ணுவே கேஸ்தானே போடுவே போட்டுக்கோ என கூறிக்கொண்டே அருகில் வீடு கட்டுவதற்காக அடுக்கிவைக்கப்பட்டிருந்த செங்கற்களை எடுத்து முஸ்லிம்கள் மீது வீசினார்கள்.இதில் முஸ்லிம்களின் வாகன வரிசையில் முதலில் நின்று கொண்டிருந்த வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தது.அதுவரை பொறுமையின் புகழிடமாக இருந்த முஸ்லிம்கள் அவனே கைது செய்யவேண்டும் என கூறி புலவஞ்சி கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.புலவஞ்சி கிராமத்திலிருந்து சாலை மறியலை கலைத்துவிட்டுவிட்டு மதுக்கூர் வடக்கு பெரமையா கோவில் நான்கு சாலைகளில் முஸ்லிம்கள் அமர்ந்து போஸ் மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற முழக்கங்களுடன் சாலை மறியல் போராட்டத்தை தொடர்ந்து செய்துகொண்டிருந்தனர்.

மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கு தகவல்கள் கொடுக்கப்பட்டது. அதிராம்பட்டிணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி டிசம்பர் 6 போராட்டத்திற்கு சென்றவர்களுக்கு இந்த சம்பவங்கள் எடுத்துக்கூறப்பட்டது.உடனடியாக களத்தில் இறக்கிய அதிராம்பட்டிண தமுமுகவினர் பட்டுக்கோட்டை மணிக்கூண்டில் புலவஞ்சியில் முஸ்லிம்களின் வாகனம் தாக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியல் செய்தனர்.இதனால் பட்டுக்கோட்டை நகரில் சுமார் 1/2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் மதுக்கூரில் தொடர்ந்து ஒரு மணிநேரம் நடைபெற்ற சாலை மறியலால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.சாலை மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்த மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் அவர்கள் சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் போரில் பெரமையா கோவிலிருந்து கலைந்து சென்று காவல்நிலையத்தில் திரண்டனர்.முஸ்லிம்கள் காவல்நிலையத்தில் திரண்ட சில நிமிடங்களில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன் அவர்கள் மதுக்கூர் காவல்நிலையம் வந்தடைந்தார்.நடந்த விபரங்களை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி செய்து காவல்நிலையத்தின் முன்பு திரண்டவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துங்கள் என முஸ்லிம்களின் பிரதிநிதிகளாக எஸ்பியிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர்களிடன் கூறினார்.அதன்படிஒரு சிலரை தவீர்த்து அனைவரும் கலைந்து சென்றனர்.முறைப்படி தமுமுக சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.தமுமுக வாகனங்களை தாக்கியவர்களில் 4 நபர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்கள்.முக்கிய குற்றவாளிகள் இந்து முண்ணனி ஒன்றிய தலைவர் போஸ்,அவனது தம்பி வக்கீல் ராஜபிரபு ஆகியோர் மட்டும் தலைமறைவாக உள்ளனர்.

சங்பரிவார்களின் இந்த செயலை கண்டித்து தமுமுக மட்டுமில்லாது பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உட்பட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஒற்றுமையுடன் இருந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தை தொடர்ந்து தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் தலைமையேற்று நடத்திய கோவை சுல்தான் மற்றும் மாவட்ட தலைவர் அப்துல் ஜப்பார்,மாவட்ட செயலாளர் அகமது ஹாஜா,மாவட்ட மமக செயலாளர்அகமது கபீர், மாவட்ட பொருளாளர் சேக் அலாவுதீன்,பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் மாவட்ட செயலாளர் ஹாஜி சேக்.மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் உட்பட பலரும் மதுக்கூரில் முகாமிட்டு இருந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்தித்து குற்றாவளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரினார்கள்

நன்றி:மதுக்கூர் தமுமுக

கட்டிமேடு அருகே அதிரை இளைஞர்கள் வந்த வாகனம் விபத்து !!

கட்டிமேடு, டிசம்பர் 10: அதிரை கடற்கரைத்தெருவைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான், இர்ஷாத். இருவரும் நேற்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டிலிருந்து ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.


இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் சுய நினைவு திரும்பாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் பரிபூரண நலம் பெற துவா செய்வோம்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)