முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற சகோதரிக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு.!!!


உலகம்,மே 06: இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டதன் பேரில் பாரபட்சமாக நடத்தப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பெண்மணிக்கு 50 லட்சம் டாலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கன்ஸாஸைச் சார்ந்த சூஸன் பஷீர் என்ற 42 வயது பெண்மணி தான் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் தன்னிடம் பாரபட்சமாக நடந்துகொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவராக இருந்த சூஸன் பின்னர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இதனை விரும்பாத சூஸன் வேலைப்பார்த்த நிறுவனத்தின் மேலதிகாரிகள் அவரிடம் பாரபட்சமாக நடந்துகொண்டனர். ஹிஜாப் அணிவதற்கும், மஸ்ஜிதுக்கு தொழுகைக்காக செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரது பெயருடன் தீவிரவாதி என சேர்த்து அழைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சூஸன் நீதிமன்றத்தை அணுகினார். டெலி கம்யூனிகேசன் துறையில் பிரபல நிறுவனமான ஏ.டி அண்ட் டி நிறுவனத்தின் மீதுதான் சூஸன் வழக்கை தொடர்ந்தார். இவ்வழக்கில் நீதிமன்றம் சூஸனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இழப்பீடாக 50 லட்சம் டாலரை வழங்க உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுச் செய்வோம் என்று நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில் பழிவாங்கும் நடவடிக்கையாக நிறுவனத்தில் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக சூஸன் கூறிய குற்றச்சாட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

முத்துப்பேட்டையில் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மாணவர்களுக்கான கருத்தரங்கம்.






முத்துப்பேட்டை, மே 05 : கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய நவீன உலகில் மாணவர்களின் கடமைகளும், எதிர் கொள்ள வேண்டிய சவால்களும் என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக N.உமர் பாரூக் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் A. தமீம் அன்சாரி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
மேலும் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு CFI -யின் தமிழ் மாநில தலைவர். வழக்கறிஞர் Z .முஹம்மது தம்பி அவர்கள் நவீன உலகில் மாணவர்களின் கடமைகள் மற்றும் தேசிய நலனில் மாணவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து PFI திருச்சி மாவட்ட தலைவர் A.அமீர் பாஷா அவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.பின்னர் வழக்கறிஞர் முஹம்மது பைசல் சட்ட கல்வியின் முக்கியத் துவத்தை பற்றி சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் செல்வரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சி யின் இறுதியாக J.அப்துல் ரசாக் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுமார் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

உலக பத்திரிகை சுதந்திரம் ஓர் பார்வை..!!!


ஊடகம், மே 05 : ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். இன்றைய நிலையில் உலகின் பலபாகங்களில் உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு பாத்திரங்களை படைத்துவருகின்றன. மேற்கத்திய நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன, சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகளின் கையாடல்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு சுதந்திரமாக செயற்படும் தன்மையும் காணப்படுகிறது. உண்மையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்தினது பிரகடனத்தின் 19வது பிரிவு இவ்வாறு கூறுகின்றது. 'சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், எல்லோருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது' என்று அவ்வாசகம் கூறுகிறது.

என்னதான் நவீன ஊடகங்கள் வந்தாலும் ஊடகக்துறையிலேயே முதலிடத்தை வகிப்பது பத்திரிகைத்துறையாகும். அக்காலத்தில் மன்னரிடமிருந்து செய்திகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும், போர்பிரகடனம் செய்யவும், செய்திகளை பரப்பவும் வேண்டி பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. தீமூட்டுதல், புகைவைத்தல், புறாவை தூது அனுப்புதல், குதிரைவீரன், சப்தமிடல் போன்ற பல்வேறு வடிவங்களின் இறுதியாக பின்நாளில் சீனர்களின் காகிதக் கண்டுபிடிப்புக்குப்பிறகு புத்துயிர் பெற்று, அச்சு ஊடகத்தில் பத்திரிகைத்துறையானது வரலாறு படைத்தது. அன்று இலங்கையில் அறிஞர் சித்திலெவ்பையின் 'முஸ்லீம் நேசன்' எனும் பத்திரிகை எழுச்சிபெற்று விளங்கியது. கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பத்திரிகைத்துறையானது இன்று நாட்டின் மூலை முடுக்கொல்லாம் செய்திப்பத்திரிகைகள் நாட்டு நடப்புக்களையும், மக்களின் பல்வேறு விசயங்களையும் அன்றாட செய்திகளாக வழங்கிவருகின்ற அளவுக்கு மக்களின் மத்தியில் பத்திரிகைத்துறை தனிமுத்திரை பதித்தே வருகின்றது.

வாசிப்பின்மீதான பற்றினை பற்றிக் கொள்வதவற்கும், மொழிரீதியான மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளவும் பத்திரிகை சிறந்த ஊடகமாக தொழிற்படுகிறது. ஆதலால்தான் மொழியானது ஒருசாதனமாகும் என்பர். அதனை வளப்படுத்தவும், அறிஞர்கள் மட்டுமன்றி, எவரும் தமது எண்ணக்கருவை வெளியிடவும், எழுத்தாக்கம் செய்து மற்றவர்கள் படித்தறிவதற்கும் பத்திரிகை மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது. என்னதான் பல்வேறு நவீன தொழிற்நுட்ப அறிவு வந்திட்டபோதிலும் பத்திரிகைத் துறை சோர்வடைந்து போகாது தலைநிமிர்ந்தே வலம்வந்து கொண்டிருக்கிற நிலையில் உலக மக்கள் பத்திரிகையின் உயரபிமானத்தை நினைவுபடுத்தும் வகையில் உலகின் பல அமைப்புக்களுக்கும், விசயங்களுக்கும் சர்வதேச தினங்கள் அமைந்துள்ளதுபோல் தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் பத்திரிகைகளுக்கும் அதன் சுதந்திரமான தன்மைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்கிற நோக்கில் அமைந்ததுதான் இந்த உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும்.

இன்று மனிதவாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட பத்திரிகைகள் உண்ணுகின்ற உணவைப் போன்று மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது அதிகாலை மலர்ந்துவிட்டால் இணையத்தில் தேடுகிறோம் பத்திரிகையை. இணையம் இல்லாதவர்கள் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் செய்தித் தலைப்புக்களையாவது அலுவலகம் செல்வதற்கு முன்னர் பார்த்து விட்டு செல்வதில் மிகவும் ஆர்வமாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நாட்டினதும், உலகினதும் நடப்புக்களை அறிந்து கொள்வதற்கேயாகும். அதுமட்டுமன்றி உலகின் ஒவ்வொரு காட்சிகளை புதிய புதிய விசயங்களுக்கு, நிகழ்வுகளும், மாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதனை சுடச்சுட அறிவதில் அதிக ஆர்வம் கொள்கின்ற ஒருநிலைமைக்கு இன்றைய மக்கள் சிந்தனை அறிவியியல் ரீதியிலமைந்த போக்குக்கு உட்பட்டுள்ளமையினாலாகும்.

பொதுவாக பத்திரிகையின் பிரதான தொழிற்பாடாக பல்வேறு கோணங்களில் இருந்து செய்திகளை ஒன்றுதிரட்டி தன்னுடைய வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையிட முனைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் தொடக்கம் வயதுமுதிர்ந்த கிழடுகள் வரைக்கும் பத்திரிகையை வாசித்து மகிழ்வர். தினசரி, வாராந்தம், மாதாந்தம், காலாண்டு எனப்பல பிரிவுகளாக பத்திரிகைகள் வெளியாகின்றன. அந்தவகையில் தேசிய பத்திரிகைகளாக அமைந்த, நாளாந்த பத்திரிகைகளுக்குத்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிகம் கிடைக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. தினசரி நடப்புக்கள் பற்றிய விடயங்களும், அன்றாடம் நடைபெறும் உலக நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டிம் தினசரிகள் முன்னிலை பெறுகின்றன. இருப்பினும் பொதுவாக வாசிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகைகள் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன. அப்போதுதான் உரிய பத்திரிகையின் மீதான கண்னோட்டத்தில் மக்களும் ஆர்வமாக இருப்பர்.

எமது நாட்டைப்பொறுத்தளவில் ஒருகாலத்தில் யுத்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த பத்திரிகைகள் இன்று சினிமா, விளையாட்டு, பிரதேசவாரியான அபிவிருத்திச் செய்திகளையும். அரசியல் அலசல்களையும், சுகாதார மற்றும் உடல், உளநல விஞ்ஞான, ஆய்வியல், கல்விப்பகுதி போன்ற இன்னோரன்ன கட்டுரைகளையும் தாங்கிவருகின்ற நிலையில் பத்திரிகைகள் காணப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாப்படும் என்று வாய்கிழிய பேசுகின்ற சிலரது பார்வையில் சில பத்திரிகைகளை மக்கள் கண்டுகொள்ளாததும் கவலைக்குரிய விடயமாகும். நடுநிலைமை வகிக்காது பக்கச்சார்பான பத்திரிகைகள் பலவும் நாட்டுக்குள் உலாவருகிறது. இதனையும் கவனித்து உண்மையான பக்கசார்பற்ற பத்திரிகைளை இனங்காண்பதும் ஒருவகையில் சிறந்தவாசிப்புக்கு தீணியாக அமைகின்றமை நோக்கத்தக்கதாகும்.

எனவேதான் மக்களின் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடிய செய்திகளையும், ஆதாரமற்ற செய்திகளையும், நம்பத்தகுந்த செய்திகளையும் பிரசுரிப்பதனால் மக்களின் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்ற பத்திரிகைகளும் எம்மத்தியில் இருந்த இடம் தெரியாது போன சரித்திரமும் நமக்குத் தெரியாததா என்ன? அதேNவைள சில பத்திரிகைகள் உரிய பிரதேசத்தின் செய்திகளை பிரசுரித்து மக்களின் மனங்களில் விரைவில் இடம் பிடிப்பதற்காகவேண்டி பிரதேசத்து முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளிக்கரைக்கும் விடயங்களை போட்டு வாங்கிக் கட்டிய சம்பவங்களும் உண்டு. அவ்வாறான பத்திரிகைகள் தம்முடைய சிலநோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வேண்டிய வெளியிடப்படுகின்றன. எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இல்லாதது பொல்லாதது என எல்லாவற்றையும் அலசுவதும், அதனை பிரசுரிப்பதும் ஆபத்தான விளைவுகளையே தரும். அதேவேளை நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி செய்திகளை அறியச்செய்வதில் பத்திரிகைகளுக்குள்ள தார்மீகப் பொறுப்புக்களையும் அறிந்து பிரச்சினைகளை உண்டுபண்ணாதவகையில் பிரசுரிப்பதும் அவசியமாகும்.

மறுபக்கம் பார்ப்போமானால் உலகில் உண்மைத்தன்மை மிக்கதான செய்திகளை பிரசுரிக்கின்றபோது செய்தியாளர்களும், பத்திரிகைகளும் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். உலகில் கடந்த பல வருடங்களில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளளனர். கடந்த 2004ஆம் மட்டும் 129பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில்கூட பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு வருகின்ற சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், உண்மையை எழுதுவதற்கு தயங்குகின்றனர். அவர்கள் எழுதியவை, கூறியவை தொடர்பாக ஒருவர் விருப்பம் இல்லாமலிருந்தமையாகும். ஒருவர், ஆராயக்கூடாததை ஆராய்ந்தமையினாலாகும், ஒருவர் ஊடகவியலாளர்களை விரும்பாமையினாலாகும். தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்த காரணத்தினாலாகும். எனவே இந்த பத்திரிகைத்துறையானது மிகவும் ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், ஒருவருக்காக வேண்டி சமுதாயம் பாதிக்கின்ற விடயங்களுக்கு முன்னுரிமைவழங்கி செய்திகள் பிரசுரமாகின்றபோது பிரச்சினைகளும், அடிதடிகளும், உயிராபத்துக்களும், நடைபெறுகின்ற நிலைமைகளை இல்லாதொழிப்பதும், பத்திரிகைச்சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக வேண்டியே, அன்று உலகப் பத்திரிகை தொடர்பான பிரகடனம் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநாளை உலக பத்திரிகைகள் அமைப்பு உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருகின்றன. உண்மையில் பத்திரிகைகள் சுதந்திரமான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி செய்திகளை வெளியிடுகின்ற போதுதான் அவற்றை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை வீணாகபோகாதவாறு பத்திரிகைதுறை சார்ந்தோருக்கு உயர்விருதுகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தின் நண்மை கருதி பிரசுரிக்கப்படுகின்ற செய்திகள் மக்கள் சக்தியாக போற்றப்படும். போர்வீரனின் வாளைவிட எழுத்தாளனின் பேணாமுனை வலிமையானது என்பர். சர்வதேச ரீதியிலும் எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கான கருத்தாடல்கள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வருவதுடன், ஊடகத்தின் மூலமாக சமாதனம், பிரஜைகளின் ஊடகவழிமுறைகள், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புச் செயன்முறைகள் போன்ற சர்வதேச பட்டறைகள் வழங்கப்பட்டு, சரியான நேரத்தில் சரியான விபரங்களை சரியாக தொகுத்து வழங்குகின்ற ஊடகவியலாளராக அமைகின்றபோது அது தீர்க்கமான சகவாழ்வுக்கு உந்து சக்தியாக அமையும். அவ்வாறான உண்மைகளை எழுதுகின்றபோது சில சில அரசியல்வாதிகள் தங்களை இழிவுபடுத்திவிட்டது என்கிற காரணத்தை மையப்படுத்தி நீதிமன்றம் செல்கின்ற போக்குகளும் காணப்படுகின்றது. விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றபோது அதற்குரிய பரிகாரத்தை செய்கின்ற ஒரு நிலை அரசாளும் அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் காணப்படுமானால் நீதிகளும், சமசர்மபோக்கும், மக்களுக்காக சேவை செய்கின்ற தார்;ப்பரியமும் உண்மைத்தன்மையான நிருவாகக் கட்டமைப்புக்;களும் மேலோங்கிக் காணப்படும்.

அந்த வகையில் யுனெஸ்கோவின் அண்மைக்கால பிரகடனங்களுள் மிகவும் குறிப்பிடத்தான விடயமாக கருதப்படுகிற ஒருவிடயமாக ஊடகங்களின் பன்மைத் தன்மையும், சுதந்திரமும்(வின்ட் ஹொக், நமீபியா – 1991) சகிப்புத்தன்மை (பரீஸ் - 1995) முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதாவது இந்தப்பிரகடனமானது 'ஒருநாட்டில் சிறந்த ஜனநாயகத்தை பராமரிக்கவும், பொருளாதார அபிவிருத்தியின் மேம்பாட்டுக்கு உதவுவனவாகவும், சுதந்திரமானதும், பல்லினத்தன்மைவாய்ந்த பத்திரிகைத்துறையை உருவாக்கவும், அதை படிப்பதற்காக வெளியிடுவதனையும் வலியுறுத்தியே' இவை முன்மொழியப்பட்டுள்ளன. அதனை கட்டிக்காத்து வருடாந்தம் சிறந்த பத்திரிகைகளுக்கு 'புரடைடநசஅழ ஊயழெ' பெயரில் உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான பரிசுகள் வழங்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படவும். சுதந்திரமான எண்ணக்கருக்களை வெளியிடவும் உரிமையுள்ளது. இதனால் பத்திரிகைகளுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களை இத்தினத்தில் நினைவுகூறல் அவசியமானது என்பதை யுனெஸ்கோ அமைப்பு சில விடயங்களை முன்னிறுத்தியுள்ளது. அதாவது இன்றைய நாளில் பத்திரிகைச்சுதந்திரத்திரம் பாதுகாக்கப்படும் நோக்கில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை உட்சாகப்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் விருத்தி செய்தல், உலக ரீதியாக பத்திரிகை சுதந்திரனது நிலையை மதிப்பிடவும், பத்திரிகை சுதந்திரம் மீதான நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தல், பொதுமக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பத்திரிகை மீதான பத்திரிகைசுதந்திரம் பற்றி பத்திரிகையாளர்களிடையே விவாதங்களை மேற்கொள்ளல், பத்திரிகையாளர்கள் தம்முடைய தொழிலின் நிமித்தம் கடமையின் போது காணாமல் போனவர்களினது பெயரில் நினைவுபடுத்துவதும், பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றபோது எற்படுகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக ஏற்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது போன்ற விடயங்களில் முன்னுரிமை வழங்கியே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அதேவேளை இலங்கைப் பத்திரிகை புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் ஒழுக்கக்கோவையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கிறபோது ஒவ்வொரு ஊடகவியலாளரும் தொழிலின் கௌரவத்தைப் பேணும் வகையில் நடந்துகொள்வதுடன், நாட்டினதும், பொதுமக்களினதும் நலன்கருதி சனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப்பாதுகாத்தல் அத்துடன் குற்றச் செயல், ஊழல், சீர்கெட்ட பரிபாலனம் அல்லது பாரிய தவறொன்றினைக் கண்டு பிடித்தல் அல்லது அம்பலமாக்குதல் விடயங்களில் மிகக் கவனமாக செயற்பட்டு தமது சமூகப் பொறுப்புடன் செயலாற்றுதல் அவசியமாகும் என்பதை வலியுறுத்தியுள்ளன.

இதன்படி பார்க்கின்றபோது இன்று நமது நாட்டுப்பத்திரிகைகளில்கூட நமது நாட்டில் நடைபெறும் அன்றாட அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, மதவிவகார, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்களை நேரிடையாக எழுதுவற்கு துணிவின்றிக் ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மறைமுகமாக வேறுபெயர்களில் எழுதுகின்ற நிலை காணப்படுகிறது. உண்மையான எழுத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் அமுல்படுத்துவதில் அரசு காட்டும் அக்கரையின்மையே துணிவின்றி காணப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது. முழுமையாக அரசுக்கு சார்பாக எழுதுகின்ற ஒருநிலைப்பாடு காணப்படுவதன் காரணமாக செய்திகளில் அல்லது அந்தப் பத்திரிகைகளைப் பார்ப்பதற்குக்கூட மக்கள் வெறுப்புற்ற நிலையும் காணப்படுகிறது. இது உண்மையான பத்திரிகை சுதந்திரமாகக் கொள்ள முடியுமா என்ன? மக்களுக்கு ஊடகங்கள் தொடர்பான உரிமைகளும், பொறுப்புக்களும் உள்ளன என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. உண்மையிலேயே ஊடக சுதந்திரம் என்பது பிரஜைகளின் உரிமையேயொழிய ஊடக நிறுவனங்களின் உரிமையல்ல. ஊடகவியலாளர்களும், நிறுவனங்களும் இந்தமக்கள் சார்பாக இவ்வுரிமையை நிறைவேற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். இதனை தெரிந்து கொள்ள முடியாத நமது மக்களை சில படப்பிடிப்பாளர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகி எழுதவும் தெரியாது, ஊடகம் என்றால் என்னவென்றும் புரியாத சிலர் அடையாள அட்டைகளுடன் பத்திரிகைக்காரர்கள் என்று போலித்தனம் செய்து மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள்தானா? என்பதை சமூகம் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

உண்மையான சமூக சிந்தனையுள்ள, சமூகத்தின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணரவைக்கின்ற ஊடகவியலாளர்கள் இருக்க ஒருசில படங்களை மாத்திரம் பிடித்துக் கொண்டு நாங்களும் ஊடகவியலாளர்கள்தான் என்கிற மமதையில் கிராமப்புறங்களில் சிலர் ஊடறுக்கின்றனர். இவர்களைப் போல அன்று ரிச்சட் டி சொய்சா, ரோகன குமார, ரமேஷ் குமார், பாலநடராஜா, நிமலாராஜன், லசந்த விக்கிரதுங்க, ஆரியரத்ன தொம்பகாவத்தை இன்னும் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், படுகொலையும் செய்யப்பட்டனர். இவர்கள் செய்தது சமூகத்தில் காணப்படுகின்ற அக்கிரமங்கள், ஆட்சியதிகாரங்களின் வீரோதத்தன்மைகளை, குழிபறிப்புக்கள் போன்றவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுதான் இவர்கள் செய்த குற்றங்களாகும். இன்று இதனைத் தவிடுபொடியாக்குகின்ற நிலமையிலிருந்து விடுபட்டு உண்மைத்தன்மையான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு பத்திரிகையாளன் காரியமாற்ற வேண்டும். இன்று பட்டிதொட்டியெல்லாம் பத்திரிகையாளர் மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அந்தளவுக்கு பத்திரிகைகள் சமூகத்தின் காலக்கண்ணாடியாக மாறியுள்ளது. தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற சுதந்திரம் ஒருபக்கமிருக்க சிலர் தங்களை அடையாளப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் மாநாடுகள் என்கிற பேரில் ஒருசில பத்திரிகையாளர்களை அழைத்து நடாத்துவது கேலிக்கூத்துக் ஒப்பான விடயமாகவே பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டு உண்மையான, சமூகத்திற்கு உதவிடும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு விடயத்திற்கு பத்திரிகைகள் உதவிடுகின்ற அதேவேளை பத்திரிகையாளர்களின் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்ற மேம்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற ஊடகமாக தொழிற்படுவதற்கும் இன்றைய நாளை நினைவுகூறல் வேண்டும்.

எனவே, பத்திரிகைகள் உண்மைத்தன்மை, பக்கச்சார்பற்ற தன்மை, சமூகத்திற்கு தீங்குவிளைவிக்காதவாறு செய்திகளை வெளியிடுவதில் மிகவும் அவதானமாக செயற்படுதல் வேண்டும். சமூதாயத்தை தீய வழியில் செல்லுகின்றவாறு செய்திகளை வெளியிட்டு குழப்பங்களுக்கு தூபமிடக்கூடியவாறு பத்திரிகைகள் நடவாது பார்த்துக்கொள்ள வேண்டிய பாரியபொறுப்பும் உண்டு. இந்த நிலைகைள் இருபக்கமும் சாதக பாதக நிலையில் நின்று சிந்திக்;கின்ற நிலை தோற்றம் பெறல்வேண்டும். செய்திகளின் அடிப்படையில் அரசியல் வாதிகளாலும், அவர்களது அடியாட்களாலும் ஏற்படுத்தப்படுகின்றன பத்திரிகைச்சுதந்திர மீறல்கள் ஒழிக்கப்பட்டு சிறந்த தொடர்பூடகத்தன்மை அச்சூடகங்களுக்கு கௌரவத்;தன்மை வழங்கவும் வேண்டியே உலக பத்திரிகை சுதந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னின்று செயற்படுத்த இன்றைய நாளை நினைவுறுவோம்.

எஸ். எல். மன்சூர் (B.Ed)

முஸ்லிம்கள் வபாத்தாவதற்க்கு கவலை வெளியிட்ட ஒசாமா பின்லேடன்..


வாஷிங்டன், மே, 04 : அமெரிக்கப் படைகளால் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டு ஓராண்டுகள் நிறைவடையும் நிலையில், ஒசாமா அரேபிய மொழியில் கைப்பட எழுதிய கடிதங்கள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அல் கய்தா அமைப்பு ராணுவத்தை குறி வைத்து செய்யும் தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும், தாக்குதல் நடத்தும் போது முஸ்லிம்கள் சாகாமல் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும் என்றும், அல்கய்தா அமைப்பினருக்கு ஒசாமா கடிதம் எழுதியுள்ளார்.

நன்றி - தினமணி

அமெரிக்காவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், அலறும் பிற நாடுகளும்..


அமெரிக்கா, மே 04 : முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக நடக்கும் வேளையிலும் கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்காவில் முஸ்லிம் மக்கள்தொகை மிகவும் அதிகரித்துள்ளதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

2000-ஆம் ஆண்டில் 10 லட்சமாக இருந்த முஸ்லிம் மக்கள் தொகை 2010-ஆம் ஆண்டில் 26 லட்சமாக அதிகரித்துள்ளது.இத்தகவலை Association of Statisticians of American Religious Bodies (ASARB) உறுப்பினர் டெய்ல் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்தவர்கள் தற்பொழுது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், 26 மாநிலங்களில் மர்மோன் என்ற மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 45 சதவீதம் அதிகரித்துள்ள இம்மதத்தினர் 61 லட்சம் பேர் அமெரிக்காவில் உள்ளனர். அதேவேளையில் எந்த மதத்தையும் சாராதவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

அமெரிக்காவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் அதிகம் பேர் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் இவர்களில் 5 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5.89 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாழுகின்றனர். கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரியார்களின் பாலியல் சேட்டைகள் வெளியானதைத் தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் 10 லட்சம் பேர் உள்ளனர். ராக்கி மவுண்டன் மாநிலத்தில் இவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்

முத்துப்பேட்டையில் ரோட்டில் அனாதையாக இருந்த குழந்தையை மீட்டு போலீசிடம் ஒப்படைப்பு..



முத்துப்பேட்டை,மே 04 : முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அழுந்து கொண்டு இருந்தது. அதனைக்கண்ட ஒரு சிலர் குழந்தையிடம் விசாரித்ததில் தந்து பெயர் மோகன வள்ளி என்றும், என்னை பெற்றோர்கள் விட்டு விட்டு பேருந்தில் சென்றதாகவும் அப்போது அது கூறியது. இதனைக் கண்ட பொது மக்கள் கூட்டமாக கூடியது. பிறகு அங்குள்ள சில பொது மக்கள் அருகில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தையின் தொலைபேசி நம்பரை கொடுத்துள்ளது. இதனை பெற்ற போலீசார் செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவலைத்தனர். பின்னர் விசாரித்த பொது பெண்ணின் பெயர் மோகன வள்ளி, வயது ௫, தந்தை பெயர் செந்தில் விஜயபாலன், அம்மா ரதி, திருப்பூர் பாரதி நகரில் வசித்து வருவதாகவும், தெரிய வந்துள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகில் உள்ள விளாத்து வெளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேசத்திற்காக வருகை தந்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு லாஜில் தங்கி உள்ளதாவும், வேலை விசயமாக நானும் எனது தாயார் லோகேஷ் நாயகியும் பேருந்து ஈறி ஊருக்கு சென்றோம் இதனை பார்த்த மோகன வள்ளி பின்னாலை வந்திருப்பதாக தெரிகிறது. சில நிமிடத்திலேயே தந்தையை காணாமல் தவித்ததும் தெரிகிறது. பின்னர் முத்துப்பேட்டை போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு தந்தை செந்தில் விஜய பாலன், பாட்டி லோக நாயகி வசம் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, யூசுப் அலி (ஆலிம்)

காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்த மோடி போலீஸ்!


டெல்லி,மே 03 :குஜராத் மாநிலத்தை ஆளும் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியின் போலீஸ் காங்கிரஸ் பெண் எம்.பியை சித்திரவதைச் செய்துள்ளது. இதுத்தொடர்பான புகாரை மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி பிரபாபென் டேவியாட் கண்ணீர் விட்டு அழுது கூறினார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு இந்திய வரலாற்றிலேயே மிகவும் கோரமான முஸ்லிம் இனப்படுகொலைகள் நிகழ்ந்தன.மோடியின் தலைமையில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கோரத்தாண்டவத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு பிறகு மோடி தனது இமேஜை மேம்படுத்துவதற்காக பல்வேறு நாடகங்களை ஆடி வருகிறார். ஆனாலும், அவ்வப்போது அவரது உண்மை முகம் வெட்ட வெளிச்சமாகி வருகிறது.குஜராத் மாநிலம் உருவான 52-வது நாள் நேற்று பழங்குடிகள் அதிகம் வசிக்கும் டகோட் மாவட்டத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நரேந்திர மோடி தலைமை வகித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி பிரபாபென் டேவியாட், 4 எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். ஆனால் இதைத் தடுத்த போலீசார் பிரபாபென், 4 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.இன்று இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எம்.பி. பிரபாபென் எழுப்பினார். அப்போது தம்மை போலீசார் தான் உள்பட கைது செய்யப்பட்ட அனைவரையும் துன்புறுத்தியதாகவும் தமது இரண்டு கைகளில் இருக்கும் காயத்தையும் கண்ணீரோடு அவர் கூறினார். அவருக்கு ஆதரவாக காங்கிரசின் கிரிஜா வியாஸ் எழுந்து குரல் கொடுத்தார்.
இதையடுத்து எழுந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் மாநில அரசுடன் பேசுவதாக உறுதியளித்தார். அதேசமயம், இந்த விவகாரத்தை நாடாளுமன்ற உரிமைக் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர்.

முத்துப்பேட்டையில் நடைபெற்ற SDPI -யின் நகர கூட்டம்.




முத்துப்பேட்டை,மே 02 : முத்துப்பேட்டை யில் நேற்று SDPI யின் நகர கூட்டம் கட்சியின் மாவட்ட தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முத்துப்பேட்டை நகரங்களில் சிலிண்டர் சரியாக விநியோகம் சரிவர செய்ய வில்லை என்றும், மேலும் உரியவரிடம் சிலிண்டர் விநியோகம் செய்யாமல் இருப்பதாலும் கேஸ் விநியோகம் இவற்றை நல்ல நடைமுறைக்கு கொண்டு வரும் விதமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கட்சியின் தலைவர் ஜனாப். தப்ரே ஆலம் பாதுஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், நகர செயலாளர் மைதீன் , நகர தலைவர் ரஹ்மத்துல்லாஹ், நிசார் மற்றும் ஷேக் மைதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நமது நிருபர்

O.M. சுபைத் கான்

சவூதி, தமாமில் உதயமான முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக சேவை நல இயக்கம்.MISWA.


சவூதி அரேபியா, மே 02 : முத்துப்பேட்டை இஸ்லாமிய சமூக நல இயக்கம் (MISWA) வின் 2012 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு தமாம் க்ளோப் கேம்ப்பில் ஜனாப். M.முஹம்மது முஹைதீன் அவர்களின் தலைமையில், நடைபெற்றது. மேலும் இதற்க்கு ஜனாப். D.ஜைனுல் ஆப்தீன் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்த கூட்டம் ஜனாப். N. ஹசன் குத்தூஸ் அவர்களின் கிராத்துடன் துவங்கியது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அவர்களின் விபரம் பின் வருமாறு:
கெளரவ தலைவர், ஜனாப். M.முஹம்மது முஹைதீன், தலைவர். HMA .மன்சூர், துணைத் தலைவர்.ஜனாப்.SA.ஷாகுல் ஹமீது, பொது செயலாளர். ஜனாப்.SA.ஜாகிர் ஹுசைன், செயலாளர்களான,ஜனாப்.M.அஹமது தம்பி, ஜனாப்.H.செக்கரியா, பொருளாளர் ஜனாப். SA.அப்துல் ரஹ்மான்,
ஆலோசனைக்குழு:
ஜனாப்.D .ஜைனுல் ஆப்தீன்
ஜனாப்.M . நைனா முஹம்மது
ஜனாப்.P . ஹாஜா மைதீன்
ஜனாப்.SA . தாவுத் கான்.
மற்றும் முத்துப்பேட்டை மிஸ்வா பிரதிநிதிகலாவன, ஜனாப்.NSH . ஜாகிர் உசேன் சூப்பர் டிராவல்ஸ், ஜனாப்.SA.சாதிக் பாட்சா, பாட்சா டைல்ஸ். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு கடிதம் வந்துள்ளது. இதில் முத்துப்பேட்டை வாழ் தமாம் அனைத்து சகோதரர்களின் ஏக மனதாக நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள்வர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஜனாப். K.ராஜா முஹம்மது அவர்களின் நன்றி உரையுடன் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை தெற்குத்தெரு இளைஞர்கள் நடத்தும் மாணவர்களுக்கான பயிற்சி முகாம்




முத்துப்பேட்டை,மே 01 : முத்துப்பேட்டை தெற்குத் தெரு இளைஞர்கள் மற்றும் முத்துப்பேட்டை வெளிநாட்டுவாழ் நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் நமது அரபு சாகிப் பள்ளிவாசலில் இன்று 01.05.2012 முதல் துவங்கி அடுத்த மாதம் 01.06.2012 வரை நடைபெறும். இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு நல்ல முறையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர். இந்த பயிற்சி முகாம் முடிவில் 30 நாள் நடைபெற்ற பாடத்தை குறித்து தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வில் வெற்றி பெரும் முதல் 3 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவியர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும். இதன் ஒருங்கிணைப்பாளர் ஜனாப். M. தப்ரே ஆலம் பாதுஷா தெற்குத் தெரு அவர்கள்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), O.M.சுபைத் கான்

திருக்குர்ஆனை எரித்து மகிழ்ந்தான் கிறிஸ்த்தவ பாதிரி - அமெரிக்காவில் அசிங்கம்.


அமெரிக்க, மே 01 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டு மரணத்தண்டனையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிறிஸ்தவ பாதிரியாரை விடுதலைச் செய்யாவிட்டால் திருக்குர்ஆன் பிரதியை எரித்து, இறைத்தூதரின் படத்தை வரைவேன் என்று மிரட்டல் விடுத்த அமெரிக்காவைச் சார்ந்த கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் புனித திருக்குர்ஆனின் பிரதியை எரித்துள்ளான். ஃப்ளோரிடாவைச் சார்ந்த பாதிரியான டெர்ரிஜோன்ஸ் இந்த ஈனத்தனமான செயலலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் 271 டாலர் மட்டும் அபராதம் விதித்துள்ளது. மேலும் அங்கு வந்த தீயணைப்பு படையினர் ஜோன்ஸிற்கு அடிகொடுத்து கவனித்தனர். ஆனால், உலக முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்திய ஜோன்ஸ் கைது செய்யப்படவில்லை. சில தினங்களுக்கு முன்பு ஜோன்ஸ், புனித திருக்குர்ஆனின் பிரதியை எரிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தான். இதற்கு முன்பும் இதேபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளான் ஜோன்ஸ். ஆனால், அமெரிக்க அரசு ஜோன்ஸ் மீது உரிய நடவடிக்கையை இதுவரை எடுக்கவில்லை.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

முத்துப்பேட்டை அருகே டாஸ்மார்க் கடையை மாற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்.!



முத்துப்பேட்டை, மே 01 : முத்துப்பேட்டை அடுத்து சித்தமல்லி கடை தெருவில் ஒரு அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால், இதனால் அங்கு தேவையற்ற பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்த்து வருவதாகவும், இந்த பகுதியில் முழுக்க முழுக்க பெண்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் இந்த டாஸ்மாக்கை மாற்ற வேண்டும் என்று பல முறை மனுவாகவும், போராட்ட மூலமும் பொது மக்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று திடீர் என்று ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி அண்ணாத்துறை தலைமையில் கடைத்தெருவில் திடீர் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலைமறியலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டதால் சித்த மல்லி கடைத்தெருவில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டன. இதனால் மன்னார்குடி முத்துப்பேட்டை போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் தேவதாஸ், தி.மு.க.ஒன்றிய பிரதிநிதி பாலஞான வேல், போராட்ட குழுவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி இளங்கோ, சத்தியப்பிரிய கலாவதி, மற்றும் ரேவதி, ராஜேஸ்வரி, ஜோதி,பெரியநாயகி, மணிமேகலை ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை ஒருவார காலத்திற்குள் சமந்தப்பட்ட தாஸ்மாக் கடை மாற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததின் அடிப்படையில் பெண்கள் சாலைமரியலை விளக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெருக வாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

திருமணச்செய்தி: "G.ராசிக் பரீது, M. ரிசிய்யா சுல்தானா"




முத்துப்பேட்டை, ஏப்ரல் 30 : ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆஃபிர் பிறை 7, 29.04.2012 மதியம் 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் S.M.S. குலாம் ரசூல் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் G. ராசிக் பரீது மணாளருக்கும், நாகப்பட்டினம் ஜனாப்.M.Y. முஹம்மது மர்சூக் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிசிய்யா சுல்தானா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை குட்டியார் சும்மாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம். முஹைதீன் சாஹிப் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்)
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.

அப்துல் நாஸர் மஃதனி: இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!


திருவனந்தபுரம்,ஏப்ரல் 30 :பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக தொடர்ந்து 3 அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 3-வது அறுவை சிகிட்சை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகர் கண் மருத்துவமனையின் டாக்டர்களான கெ.பூஜங் ஷெட்டி, நரேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில் லேஸர் அறுவை சிகிட்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சையின் பலனை அறிய காத்திருக்கவேண்டும். சர்க்கரை நோய் முற்றிப்போய் கண்ணை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி மூலம் கண்களில் இரத்தம் கட்டிப்போய் மஃதனிக்கு பார்க்கும் சக்தி இழக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்கு முன்பு மஃதனியை சிறையில் சந்தித்த அவரது உடன் பிறந்தவர்களான முஹம்மது தாஹா, மலீஹா பீவி ஆகியோரை மஃதனியால் அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமான பிறகும் கர்நாடாகா பாசிச பா.ஜ.க அரசும், சிறை அதிகாரிகளும் சிகிட்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததால் அவருக்கு பார்வை சக்தி இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் படிப்படியாக அதிகரித்து கண்ணின் பார்வையை பாதிக்க துவங்கிய பொழுது மஃதனிக்கு உரிய சிகிட்சை அளிக்காததால் முற்றிய பிறகு அதிகாரிகள் கவனித்ததாக மஃதனியின் வழக்கறிஞர் சிராஜ் கூறுகிறார்.
ஜனவரி 13-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கர்நாடகா அரசு, அப்துல் நாஸர் மஃதனிக்கு எந்த நோய்க்கும், சிகிட்சைகள் அனைத்தும் உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. உடல் நிலை சீர்கெட்ட அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மனுவை நிராகரிக்க இந்த பிரமாணப்பத்திரம் காரணமானது.
தொடர்ந்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மஃதனிக்கு சிகிட்சையை உறுதிச் செய்யக்கோரி கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து அவர் பதில் கடிதத்தில் சிகிட்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், உடல் ஆரோக்கியம் சீர்கெட்ட மஃதனிக்கு கண் பார்வை பறிபோனதை தொடர்ந்து சிறைவாழ்க்கை மிகவும் துயரமாக மாறியுள்ளது. வாசிப்பு, எழுத்து என சிறையில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அப்துல் நாஸர் மஃதனி பேசும் சக்தியையும் இழந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அநீதமாக கர்நாடகா மாநில பாசிச பா.ஜ.க அரசு கேரள கம்யூனிச அரசின் துணையுடன் 2010 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்,

உலகில் முதன் முதலில் "ரோபோ இயந்திரத்தை" அறிமுகம் செய்தவர் முஸ்லிம்களே.!!!


சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

"ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழந்த அபுல்இஸ் பின் இஸ்மாயில் பின் அல்ராஸ்அல்ஜஸாரி எனப்படும் முஸ்லிம் விஞ்ஞானியால் முதலாவது நடமாடும்ரோபோ கண்பிடிக்கப்பட்டதுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது.

துருக்கியின் நாஸிர் அல்தீன் மஹ்மூத் எனும் கலீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'நடைமுறை இயந்திரக்கலை கோட்பாட்டுச் சுருக்கம்' என்ற புத்தகத்தை அல்ஜஸாரி எழுதினார். மத்தியகாலத்தின் சிறந்தவிஞ்ஞானியாகவும் தலைசிறந்த இயந்திரப்பொறியிலாளராகவும் அல்ஜஸாரி விளங்கினார்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ரோபோ இயந்திரமானது கி.பி.1174இல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
தொழுகை நேரம் வரும்போது ரோபோ இயந்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள குருவி கீச்சிடும். பின்னர் ரோபோ இயந்திரம் கலீபாவை நோக்கி வருவதுடன் கலீபாவுக் வுழூ செய்வதற்குத் போதுமான நீரைவழங்கும். கலீபா வுழூ செய்துமுடிந்ததுடன்,ரோபோ இயந்திரத்தில் உள்ள குருவி மீண்டும் கீச்சிடும் பின்னர் ரோபோ இயந்திரம் முன்னர் இருந்த இடத்திற்கு செல்லும்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயற்பாடு இவ்வாறாக காணப்பட்டது." மேலும் முஸ்லிம்களால் விஞ்ஞானத்துக்கு செய்யப்பட்ட பல்வேறு பங்களிப்புக்கள் பற்றி உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் தமது உரையின் போது தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், யூசுப் அலி (ஆலிம்)

கடலுக்கு ஏழையாக சென்று பணக்காரவராக திரும்பி வந்த முஸ்லிம் மீனவர்.!!


குஜராத்,ஏப்ரல் 29 : குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயரிய ரகமாக, இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை மீன்களுக்கு நல்ல கிராக்கியுண்டு. இந்த கோல் மீனின், இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புபோன்ற பகுதியை, மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனவாம். ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுமாம். இந்த வகை மீன்கள் சந்தையில், கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும். ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால், அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால், உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த மீன்களை விற்றதில், அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ளார் என, ஹசன் வாகரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

சிங்கள அரசை கண்டித்து INTJ நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்..











சென்னை, ஏப்ரல் 29 : இலங்கை மகத்தாளை மாவட்டம் தம்புள்ள எனும் ஊரில் முஸ்லிம்கள் 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தினர் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த புத்த மதத்தினவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ராஜபக் ஷே அரசானது, அவர்களுக்கு ஆதரவு காட்டும் வகையில் பேசியது மட்டும் அல்லது அடுத்து ஹிந்து மத கோவிலையும் தாக்குவோம் என்று கொக்கரித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட உலக மக்கள் அனைவரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (28 .04 .2012) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராஜபக் ஷே அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில துணைப் பொது செயலாளர் ஜனாப். செய்து இக்பால், மாநில பொருளாளர் ஜனாப். தொண்டியப்பா என்கிற அபூபக்கர் சித்திக், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மற்றும் சமூக ஆர்வலர் திரு. T.S.S.மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாநில செயலாளர் அபூ ஃபைசல், கலிபுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆர்பாட்ட முடிவில் போலிசார் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்.

சென்னையில் பயங்கர சப்தத்துடன் வெடித்த வெடி குண்டு...


சென்னை,ஏப்ரல் 27 : ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது. முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு திடீரென்று வெ‌டி‌த்து‌ள்ளது. பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் வெடி‌த்துச் ‌சித‌றிய வெடி கு‌ண்டா‌ல் ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌‌ரி‌ன் ‌கைக‌ள், ‌விர‌ல்க‌ள் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ச‌‌த்த‌த்தை கே‌ட்ட அரு‌கிலிரு‌ந்தவ‌ர்க‌ள் அல‌றி அடித்துக் கொண்டு காவ‌ல்துறை‌க்கு தகவ‌ல் த‌ெ‌ரிவித்துள்ளனர். விரை‌ந்து வ‌ந்த காவல்துறையினர் படுகாய‌மடை‌ந்த ச‌த்யாவை செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யிலு‌ம், சுக‌ந்த‌னை‌ ‌ஸ்டா‌‌‌ன்‌லி அரசு மரு‌த்துவமனை‌யிலும் சிகிச்சைக்காக சேர்த்து‌ள்ளன‌ர். கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யில் இருக்கும் இருவ‌ரு‌க்கு‌ம் ‌தீ‌விர ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ வரு‌கிறது. கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ச‌த்யா, சுக‌ந்த‌ன் இருவரு‌ம் ‌தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த பிரபல ரவுடிக‌ள் எ‌ன்றும், பல்வேறு கொலை வழ‌க்குகளி‌ல் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்தவ‌ர்க‌ள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எத‌ற்காக நா‌ட்டு வெடிகு‌ண்டு வை‌த்‌திரு‌‌ந்தா‌ர்க‌ள் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத் தேர்தலில் அனைவரும் போட்டியின்றி தேர்வு.!!


முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத்தின் நிர்வாகிகளின் தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பரபரப்புடன் நடப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருட தேர்தலுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலுக்கு அதிகாரியாக ஜனாப்.எம்.முஹம்மது அலியார் அவர்களை நியமனம் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரா. இராஜாராமன், எம்.எஸ்.ராமலிங்கம், எஸ்.நெய்னா முஹம்மது, மு.முஹைதீன் பிச்சை, கெஜ்.எம்.ஹாஜா, கே.வி. கண்ணன், கே.மாரிமுத்து ஆகியோர் ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பகல் 2 மணி அளவில் தேர்தல் ஆணையர் தலைமையில் முக்கிய நிர்வாகி முன்னணியில் மனுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆணையர் முஹம்மது அலி தெரிவித்தார். இதில் தலைவராக இரா.இராஜாராம், துணைத் தலைவராக முஹைதீன் பிச்சை, கெச்.எம்.ஹாஜா, பொதுச் செயலாளராக எம்.எஸ். ராமலிங்கம், துணைச் செயலாளராக கே.வி.கண்ணன், கே.மாரிமுத்து, பொருளாளராக எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையர் ஜனாப். முஹம்மது அலி சங்க ஆலோசகர்கள் இரா. திருஞானம், மெட்ரோ மாலிக் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். இந்த வர்த்தக கழகத் தேர்தல் முத்துபேட்டை நகர வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தெகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்

மவுத்து அறிவிப்பு: "A.S.N.S. ரபி அஹமது கான்"


முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : P.K.T. ரோடு மர்ஹும் A.S.N. நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் A.S.N. நவாப் சேக் முஹம்மது மரைக்காயர், A.S.N. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் சகோதரரும், கொய்யா S.M.K.N. அப்துல் ரஜாக், S.M.K.N. முஹம்மது தாவூது ஆகியோரின் மருமகனும், K.M.S. காதர் பாட்சா, A.S.N.M. பசீர் அஹமது, ஏலங்குடி A. அப்துல் ரஜாக், ஆகியோரின் மச்சானும், N.R. புர்கானுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.A.S.N.S. ரபி அஹமது கான் அவர்கள் இன்று காலை 5.15 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்

A.S.N. ஹஜ் முஹம்மது இபுராஹீம்.

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)