முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தடை மீறிய ரதயாத்திரை INTJ தலைவர் ஜனாப் SM .பாக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கைது!!









மேலப்பாளையம், நவம்பர் 23 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவிக்கப் பட்டிருந்த பாபர் மஸ்ஜித் ரத யாத்திரையை கடைசி நேரத்தில் ரத்து செய்த காவல் துறை கடுமையான கெடு பிடி செய்து ரதயாத்திரையை முடக்க நினைத்தது ஒரு பக்கம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எங்களுடையது நாங்கள் எந்த ரதயாத்ரையும் நடத்த வில்லை, எனவே இதை தடுக்க வேண்டும் என அண்ணன் ஜமாஅத் மேலப்பாளையம் மேலாண்மை புகார் அளித்து கொடுத்த மன உளைச்சல் இன்னொரு பக்கம் இத்தனையையும் தாண்டி சென்னையில் இருந்து ரதத்தை நெல்லை கொண்டு வந்து சேர்த்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல் வீரர்கள்.
காலை பத்து மணிக்கெல்லாம் மேலப்பாளையம் பரபரப்பானது! பஜார் திடலில் காவல் துறை அணி வகுப்பு நடத்தி உள்ளூர் மக்களை ரதயத்ரையில் கலந்து கொள்ள விடாமல் அச்சுறுத்திக் கொண்டிருந்தது . அனைத்தயும் மீறி வேறு இடத்தில் வைக்கப் பட்டிருந்த ரதத்தை பஜார் திடலுக்கு கொண்டு வர முயற்சித்த போது அங்கேயே தடுத்து நிறுத்த முயன்ற துணைக் கண்காணிப்பாளரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர் அணியினர் முற்றுகையிட்டு கேரோ செய்தனர் துணை பொது செயலாளர் இக்பால் மற்றும் மாநில செயலாளர் அபு பைசல் ஆகியோர் வந்து கடும் வாக்கு வாதம் செய்து பின்னர் ரதம் விடுவிக்கப் பட்டு தொண்டர் அணி தலைவர் கோவை பாருக் தலைமையில் அணி வகுத்து வந்த சீருடை அணிந்த தொண்டர்கள் புடை ச்சொல அல்லாஹு அக்பர் எனும் தக்பீர் முழக்கங்களுடன் மேலப்பாளையம் வீதிகள் வழியாக பஜார் திடல் வந்தடைந்த போது உணர்ச்சி பெருக்கெடுத்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.துணைப் பொது செயலாளர் தலைமை உரை ஆற்ற அடுத்து சமுக ஆர்வலர்கள் பத்திரிக்கையாளர் மணி, மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சேலையூர் சீனிவாசன் உள்ளிட்ட மாற்று மத சகோதரர்கள் உரை நிகழ்த்தினர். இறுதியாக கண்டன உரை நிகழ்த்திய எஸ்.எம்.பாக்கர் காவல் துறையின் அராஜகத்தை கடுமையாக சாடினார். ரத்த யாத்திரை நடத்திய அத்வானிக்கு மீண்டும் ரதயாத்திரை நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்கும் தமிழக அரசு முஸ்லிம்களின் ரதயத்ரைக்கு அனுமதி மறுப்பதேன்? நாங்கள் என்ன இந்த நாட்டின் இரண்டாந்தர குடி மக்களா? என கேள்வி எழுப்பினார்.மேலும் இன்ஷா அல்லாஹ் வரும் திங்கள் அன்று இதை எதிர்த்து நீதி மன்றம் செல்லவிருப்பதாகவும் நீதி மன்றத்தில் அனுமதி பெற்று ரத யாத்ரையை நடத்தியே தீருவோம் என முழங்கினார்.பின்னர் காவல் துறை தான் கைது நடவடிக்கையை துவங்கியது நூற்றுக்கணக்கனோர் நெஞ்சுறுதியோடு பதினைந்து நாள் ரிமாண்டுக்கு தயாராக தங்கள் உடைகளோடு வந்திருந்தது காவல் துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தில் தொழுகை பயான்என மிகவும் பயனுள்ளதாக நேரம் சென்று கொண்டிருந்தது.ஏறாலமன் பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் இந்நிகழ்ச்சியை படம் பிடித்தனர் . மாலைப் பத்திரிக்கைகள் இந்த நிகழ்வை முதன்மை செய்திகலாக்கியது. நடு நிலை கொண்ட காட்சி ஊடகங்களும் செய்திகளில் ஒளிபரப்பியது.முதலில் ரிமாண்ட் என பூச்சாண்டி காட்டிய காவல் துறை இறுதியில் மாலை ஏழு மணிக்கு விடுதலை செய்தது. அல்ஹம்து லில்லாஹ் எல்ல்லப் புகழும் இறைவனுக்கே!
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா,

முத்துப்பேட்டையில் புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை!!




முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார் மனைவி பரமேஸ்வரியை தந்தை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றார். அதன் பின் பரமேஸ்வரி அருகே உள்ள பாமணி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் ஆற்றில் இவரது உடலை தேடினர். இந்நிலையில், நேற்று பாமணி ஆற்றில் கரை ஒதுங்கிய பரமேஸ்வரியின் உடலை முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, வி ஏ ஓ கமலதியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தார என்பது குறித்து மன்னார்குடி ஆர். டி. ஓ. திரு. செல்வராஜ் விசாரணை செய்து வருகிறார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK.முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான், அபு மர்வா

தேசத்தை நீதியால் கட்டமைப்போம், PFI - யின் மாநில தலைவர் AS. இஸ்மாயில் அவர்கள் பேட்டி...




சென்னை, நவம்பர் 22: பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா சார்பில் வருகிற நவம்பர் 26 , 27 ஆகிய தேதிகளில் "தேசத்தை நீதியால் கட்டமைப்போம்" என்ற முழக்கத்தோடு சமூக நீதி மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளதாக இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஜனாப்.AS .இஸ்மாயில் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிரூபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த PFI யின் மாநிலத் தலைவர் ஜனாப். AS .இஸ்மாயில் அவர்கள், பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா கடந்த 22 ஆண்டுகளாக "சமூகத்தின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திர, கர்நாடக ஆகிய மாநிலங்களின் மூலம் தொடர்ந்து பறந்து, விரிந்து செல்லக்கூடிய சூழ்நிலையை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான் என்று அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசியல்வாதிகளிடமும், ஃபாசிஸ சக்திகளிடமும் விழிப்புணர்வு அடைந்துவிட்டனர் என்றும், ஆனால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் யாவரும் மிகப்பெரிய பலகீனமானவர்கலாகவும், தன்னம்பிக்கையற்றவர்கலாகவும், மற்றும் எல்லா தவறுகளையும் யோசிக்காமல் சருவ சாதாரணமாக செய்யும் ஓர் அவல நிலையில்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள் என்றும், எனவே ஒட்டுமொத்த வடநாட்டு மக்களை ஓரணியில் ஒன்று திரட்டி அவர்களுக்கு அச்சத்தை அகற்றவும், அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த மாநாட்டை பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா டெல்லியில் நடத்த முடிவு செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பத்திரிக்கைத்துறை, காவல்துறை, நீதித்துறை, மற்றும் சினிமாத்துறை ஆகிய அனைத்து துறைகளிலும் இஸ்லாமியர்கள் தாக்கபடுவதும், மேலும் இவற்றைக்கொண்டு இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் தான் சித்தரிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா 2007 ஆம் ஆண்டு பெங்களூரில் நடத்திய "வலிமையான இந்தியாவை உருவாக்க" மாநாடு, மற்றும் 2009 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் நடத்திய "தேசிய அரசியல் மாநாடு" ஆகியவை ஒதுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது என்றும், நமது நாட்டின் தேசிய தலைநகரில் நடத்தப்படவுள்ள இந்த சமூக நீதி மாநாடு அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களை கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார். அப்போது விடியல் வெள்ளி மாத இதழின் துணை ஆசிரியரும், PFI யின் தமிழ் மாநில துணைத் தலைவருமான M .முஹம்மது இஸ்மாயில் அவர்களும் உடனிருந்தார்...

மேலும் நடைபெற உள்ள சமூக எழுச்சி மாநாட்டிற்கு தமிழகம் முழுவதும் அதிகமான வரவேற்புகள் வந்த வண்ணம் உள்ளன, எனினும் முத்துப்பேட்டையில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவின் தொண்டர்கள் அதிகமான சுவர் விளம்பரம் மற்றும் கட்டவுட் ஆகியவைகளை முத்துப்பேட்டையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வைத்து வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து நேர்மையாக நடந்து கொள்ளும் முஸ்லிம் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நடத்தவுள்ள சமூக எழுச்சி மாநாடு குறித்து இயக்கத்தின் தமிழ் மாநில தலைவர் ஜனாப். AS .இஸ்மாயில் சாஹிப் அவர்கள் விளக்கம் அளித்தார்




இந்தியவில் தற்போதைய இஸ்லாமியர்களின் நிலமை உங்களின் பார்வைக்கு:

1 ) கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், பாதுகாப்பு, சொத்து, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் இஸ்லாமியர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர்.
2 ) நீதிபதி இராஜேந்திர சச்சார் கமிட்டி அறிக்கை, நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அறிக்கை ஆகியவை அதிகமாக விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஆனால் இவை அனைத்தும் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை குறித்து பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகின்றன.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.EK .முனவ்வர் கான்

மவுத்து அறிவிப்பு: "பஜரியா அம்மாள்"


நாகப்பட்டினம், நவம்பர் 21 : நாகப்பட்டினம் நிலா கீழ வீதி அப்துல் ஹமீது அவர்களின் மனைவியும் மரைக்காயர் தெரு மர்ஹும் ANA . ரஹ்மத்துல்லா அவர்களின் சம்பந்தியும், முஹம்மது முஸ்தபா அவர்களின் தாயாருமாகிய "பஜாரியா அம்மாள்" அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாசா இன்று காலை 11 மணியளவில் நாகப்பட்டினம் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கிறார்கள்.
source from www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

ANA . அய்யுப்கான்

விளையாட்டிலும் விலை போகாத இவரின் ஈமான்!!!


சவுத்ஆப்ரிக்கா, நவம்பர் 20 : சவுத் ஆப்பரிக்க நாட்டுக்காக கிரிகெட் விளையாட்டில் விளையாட கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறிமுகமான "ஹாசிம் அம்லா" என்பவர் பல்வேறு நாட்டு வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு மத்தியில் இவர் ஓர் சவாலாகவே இன்றுவரையும் இருந்து வருகிறார். மேலும் குறைந்த சில வருடங்களிலேயே கிரிக்கெட் விளையாட்டில் இவர் பல்வேறு சாதனைகளை புரிந்தவர், இதனால் இவருக்கு அந்நாட்டு ரசிகர்கள் இவரை நம்பிக்கை நட்சத்திரம் என்று செல்லமாக அழைத்து வருகிறார்கள். எனினும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நாட்டுடன் இவர் விளையாட தயாரானார். அப்போது ஒரு பிரபலமான (சாராய) பியர் கம்பெனி இவரை தொடர்பு கொண்டு தாங்கள் அணியக்கூடிய விளையாட்டு ஆடையில் எங்களுடைய கம்பெனி விளம்பரத்தை அச்சிடலாம என்று கேட்டனர். இவ்வாறு அணிந்தால் பல கோடி ரூபாய் பணம் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். இதனை கேட்ட விளையாட்டு வீரர் ஹாசிம் அம்லா இதற்க்கு நான் ஒருக்காலும் சம்மதிக்க மாட்டேன் என்றும், ஏனெனில் இவற்றை இஸ்லாம் முழுமையாக தடுத்துள்ளது என்றும்,அதனால் நான் அவற்றை அணிய சம்மதிக்க மாட்டேன் என்று தனது ஈமானில் உறுதிபட நின்றார். எனவே இவரின் ஈமானைப் பார்த்து உலகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் கூறும் போது, இந்த சாராய விளபரத்தை ஏற்க்க மறுத்த இவர் இஸ்லாத்தில் மிக பெரிய பற்றும், அன்பும் உள்ளவராக இருப்பது எங்களுக்கு மிகவும் சந்தோசத்தைதருகிறது.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ். ஜுபைர் அஹமது .ME

தமிழகத்தில் ஆட்சி மாற்றங்களும்!! அரசியல் மாற்றமும்!!!


சென்னை, நவம்வர் 19 : தமிழ்நாடு பல்வேறு குணநலன்களை கொண்ட பல முதல்வர்களை ஆட்சிகட்டிலில் அமர்த்தி அழகு பார்த்துள்ளது... எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த எந்த முதல்வரும் தொடர்ந்து இரண்டுமுறை வெற்றி பெற இயலவில்லை... அது ஏன்...? ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் கடந்த 1991 தமிழகம் ஆட்சி மாற்றத்தை சந்த்திதே வந்துள்ளது... இதோ தற்போது இவ்வாண்டின் மத்தியில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தல் மூலமாக கடந்த ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்த கலைஞர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக வீழ்த்தப்பட்டுமீண்டும் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமர்ந்துள்ளது... திமுக அதிமுக என்று மாறி மாறி ஆட்சியில் அமரும் இவ்விரண்டு பிரதான திராவிட கட்சிகளுமே மக்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற தவறிவிட்டார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை...மக்கள் மாற்றத்தை மட்டுமல்ல நல்லாட்சியையும் விரும்புகிறார்கள் என்பதை இவ்விரண்டு திராவிட கட்சிகளுமே உணரவில்லை அல்லது உணர மறுக்கிறார்கள்... அல்லது உணராததுபோல நடிக்கிறார்கள்...

அமரர் எம்ஜீஆர் மறைவிற்குப் பிறகு அவரது மனைவியார் மறைந்த ஜானகி அம்மையார் முதல்வரானார்... அவருக்கு பக்கபலமாக நாவலர் நெடுஞ்செழியன் ஆர்.எம்.வீரப்பன், கா.காளிமுத்து போன்றோர் இருந்தனர் அப்போதே அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளராக மேலவை உறுப்பினராக இருந்துவந்த செல்வி ஜெயலலிதா அதிமுகவை கைப்பற்ற பல முனைப்புகளைகாட்டினார் அப்போது அதிமுகவின் இளைய தலைவர்களாக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வலையவந்த எஸ்.திருநாவுக்கரசு மற்றும் சாத்தூர் இராமச்சந்திரன் போன்றோர் செல்வி ஜெயலலிதாவை ஆதரித்தனர்...

அதிமுக இரு வேறு பிரிவுகளாக செயல்பட ஆரம்பித்தது. தேர்தல் ஆணையம் அதிமுகவின் வெற்றி சின்னமான "இரட்டை இலை"சின்னத்தை முடக்கிவைத்தது... தொடர்ந்து நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஜா அணி ஜே அணி என இருபிரிவாக போட்டியிட்டது அத்தேர்தலில் ஜானகி அம்மையார் தலைமையிலான அதிமுக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற இயலாமல் படுதோல்வியடைந்தது... செல்வி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிகண்டு செல்வி ஜெயலலிதாவை மறுக்கமுடியாத அரசியல் தலைமையாக அடையாளப்படுத்தியது... கருணாநிதி அவர்களின் தலைமையிலான திமுக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆட்சியில் அமர்ந்தது கலைஞர் கருணாநிதி முதல்வரானார்...

அதன்பிறகு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரதிற்க்காக தமிழகம் வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு.இராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யபட்டார் அதன் தொடர்பில் சட்ட ஒழுங்கை காரணமாக கொண்டு திமுக ஆட்சி மத்தியரசால் கலைக்கப்பட்டது... பிறகு நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகம் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்ககூடிய சூழ்நிலை ஏற்பட்டது... தமிழகம் முழுமையாக வீசப்பட்ட இராஜீவ் காந்தி அவர்களுக்கான அனுதாப அலையால் செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான ஒருங்கிணைந்த அதிமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றியடைந்தது... திமுக வரலாறுகாணாத தோல்வியை தழுவியது...

மக்களின் மாற்றத்தைவிரும்பிய மனநிலையும் அமரர் இராஜீவ் காந்தி அவர்களின் மரணத்தால் ஏற்பட்ட அனுதாப அலையும் பெரும்பான்மை பலத்துடன் செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கியது... ஊழல்... அராஜகம்... பழிவாங்கல்... என்பதற்கான முழு உதாரனங்களும் அம்மையார் ஆட்சியில்தான் மக்களுக்கு முழுமையாக உணர்த்தப்பட்டது... மக்களுக்கான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடாத நிலையில் அம்மையார் அவர்களின் தோழியின் குடும்பத்தார்களின் பிடியில் தமிழகம் முழுமையாக கொண்டு செல்லப்பட்டது... தோழியின் குடும்பதில் இருந்தே திடீரென ஒரு வளர்ப்புமகன் உதித்தார் உடணடியாக வளர்ப்புமகனுக்கு மறைந்த செவாலியே சிவாஜி கணேசன் அவர்களின் குடும்பத்தில் இருந்து பெண் பார்த்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா ஆகியோரின் திருமணதிற்கு இணையாக திருமணமும் நடத்திவைக்கபட்டது. தமிழகத்தில் இருக்கும் பெரும்பான்மையான நகைகடைகளே தமிழகத்தின் வீதிகளுக்கு வீதி உலா வந்ததுபோல இருந்தது அம்மையார் அவர்களும் அவர்தம் தோழியாரும்நடந்துவந்தது...

மக்களின் ஒருமித்த வெறுப்புணர்வும் அம்மையாரின் பக்கம் திரும்பியது அது மட்டுமில்லாது அதிமுகவை சார்ந்த அமைச்சர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை கடைபிடித்த அராஜகம் மக்களை ஆட்சி மாற்றத்திற்கான நிலைக்கு தள்ளியது. 1996 ல் தமிழகம் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது அதற்காகவே காத்திருந்தபோல மக்கள் அதிமுகவை படுதோல்வியடைய செய்து திமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினார்கள்... அத்தேர்தலில் அதிமுகவின் தலைவியாகிய அம்மையார் தான் போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் மக்களால் வீழ்த்தபட்டார்... அரியணை ஏறிய திமுக கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை கண்டறிந்து முன்னாள் முதல்வரான அம்மையார் ஜெயலலிதா உட்பட ஏறக்குறைய அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக பாதையில் இருந்த அனைவருமே கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கபட்டனர்... அம்மையாரின் ஊழல் வழக்கில்
அவர் பயன்படுத்திய நூறு ஜோடி செருப்புகள்கூட சாட்ச்சிக்கு கொண்டுவரப்பட்டது...

பொறுப்பேற்ற திமுக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிக்கைகள் மூலமாக மட்டுமே நடத்திகொண்டிருந்தது. அப்போதைய திமுக ஆட்சியில்தான் பல மேம்பாலங்கள் கட்டப்பட்டது சமத்துவபுர குடியமைப்புகள் கட்டப்பட்டது, உழவர் சந்தை கட்டிடங்கள் கட்டப்பட்டது...இதுதவிர மக்களுக்கான எத்தகைய அடிபடை வசதிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஆக திமுக அரசும் மக்களின் வெறுப்பை சம்பாதிக்க வெகுநாட்கள் ஆகவில்லை... வழக்கம்போல திமுகவை சார்ந்தவர்களின் அடாவடித்தனமும் கட்டவில்க்கப்பட்டது. அத்தகைய சூழலை சாதகமாகி கொண்ட எதிர்கட்சிகள் மீண்டும் உயிர்பெற்றன... திமுக ஆட்சியில் நடந்துள்ள ஊழல்களை மக்கள் ஏய்ப்பு நிகழ்வுகளை மக்களுக்கு தெரியபடுத்தின... திமுக ஆட்சியில் போடப்பட்டு நடைமுறைபடுத்தபட்ட அனைத்து திட்டங்களுமே சிமென்ட்டை அடிபடையாக கொண்டு செயல்படுதபட்டவை என்பதை மக்கள் கவனிக்க துவங்கினார்கள்...அதில் நிகழ்ந்துள்ள ஊழலை மக்கள் உணர்ந்தார்கள் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான மனநிலைக்கு மக்கள் இயல்பாகவே வந்தார்கள்...

2001 ல் சட்டப்பேரவை தேர்தல் மக்கள் மாற்றி வாக்களித்தார்கள் திமுக வீட்டுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் அதிமுக அரியணை ஏறியது... இயல்பாகவே பழிவாங்கல் நடவடிக்கைகளை பெரிதும் விரும்பும் ஜெயலலிதா அம்மையார் தன்னையும் தனது சகாக்களையும் சிறைவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து சிறையிலடைத்தார்... அப்போதைய

அதிமுக ஆட்சியிலும் மக்கள் நல பணிகள் எதுவுமே நிறைவேற்ற படவில்லை என்பதுதான் கவலைக்குறியது... இடையில் கடந்த ஆட்சியாளர்களால் அம்மையார் மீது போடப்பட்ட டான்சி வழக்கிற்காக சிலகாலம் முதல்வர் பதவியை துறந்தார் ஓ.பன்னீர் செல்வம் பொம்மை முதல்வரானார்.. ஆறுமாத காலத்திற்கு பிறகு மீண்டும் அம்மையாரே மீண்டும் முதல்வரானார்... ஆட்சிகள் மாறினாலும் மக்களின் நிலையில் எவ்விதமான மாதரமும் நிகழ்ந்துவிடவில்லை... அதே ஊழல்... அதே அராஜகம்... ஆடு,மாட்டு,கோழி பலியிட தடை சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவதர்க்காக மதமாற்ற தடை சட்டம், அரசு ஊழியர்களின் உரிமைகளை பறித்த எஸ்மா டெஸ்மா போன்ற அடக்குமுறைகள் தமிழுணர்வாலர்களின் மீது போடப்பட்ட பொடா சட்டம் இதுபோன்ற மக்கள் விரோதபோக்கை மட்டுமே அதிமுக ஆட்சி நிகழ்த்தியது... மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள்...

2006 ல் சட்டப்பேரவை தேர்தல் அதிமுக ஆட்சியை அகற்றியது சிறுபான்மையரசாக காங்கிரஸ்,பாமக,விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் கலைஞர் கருணாநிதி மீண்டும் முதல்வராக்கப்பட்டார்... வரலாறு காணாத இலவசங்கள் வாரி இறைக்கப்பட்டது மக்களின் கவனத்தை இலவசங்களின்பால் திருப்பிவிட்டு ஊழல் வரலாற்றை திமுக விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தொடர்ந்தது... காவல்நிலையங்கள் திமுகவினரின் கட்டபஞ்சாயத்து கூடங்கலானது... மக்களின் சராசரியான இயல்பு வாழ்க்கை திமுக ரௌடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டது... சாயாக்குடிக்க சல்லிகாசு இல்லாமல் இருந்த கிளை நிர்வாகிகளமுதல் கவுன்சிலர்கள் வரை ஸ்கார்பியோக்களில் வலம்வந்தார்கள்... ஊழல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல உலக நாடுகளே ஆச்சரியப்படும் வகையில் திமுகவின் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக பதவியில் இருந்த ஆ.ராசா 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைகற்றை ஒதுக்கீடு ஊழலில் கைது செய்யப்பட்டு இன்றுவரை ஜாமீனுக்காக போராடி வருகிறார்... இதுவரை இலைமறைக்காயாக இருந்து வந்த திமுகவின் குடும்ப அரசியல் இந்த ஆட்சிகாலத்தில் வெளிபடையானது... அனைத்துதுறைகளிலும் திமுகவின் கலைஞர் கருணாநிதியின் குடும்பம் கால்பதித்தது... பல தொழில் நிறுவனங்கள் இதனால் மிகப்பெரிய சரிவை சந்தித்தது... அத்துடன் மட்டுமில்லாது ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது மத்திய அரசில் அங்கம் வகித்தும் தமிழர்களின் உயிரை பற்றி கவலைகொள்ளாத திமுக ஆட்சியை மக்கள் ரசிக்கவில்லை... கிராமப்புற காப்பிகடைகளில் இருந்து நகர்புற கணிணித் துறைவரை கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் பெரியளவில் தாக்கத்தை விதைத்தது... அதன் விளைவு...

இதோ தமிழகத்தில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம்...!!!? கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக படுதோல்வியடைந்து முடிவுரை எழுதபட்டுவிட்டதாக தேர்தலுக்கு ஆறுமாத காலம் முன்புவரை பேசப்பட்ட அதிமுக எவரும் எதிர்பார்க்காத வகையில் அசுரபலத்துடன் வெற்றிகண்டது... திமுக மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டது... மக்களின் தேவைகளை உடணடியாக நிறைவேற்றுவேன்...இனி மக்கள் நிம்மதியாக வாழலாம் என அரியணை அமர்ந்ததும் செய்தி வெளியிட்ட அம்மையார் வழக்கமாக தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை துவங்கிவிட்டார்.. தவறு இளைத்தவர்கள் தண்டனை பெறவேண்டும் தண்டிக்கப்படவேண்டும்... இதில் மாற்றுக்கருத்தில்லை... அதே வேளையில் மக்களுக்கான திட்டங்களும் முடக்கபடுவது அதிமுக ஆட்சியின் ஆரம்பமே மக்களை வருத்தத்தில் தள்ளியுள்ளது என்பதை மறுக்க இயலாது... சமசீர் கல்வி திட்டத்தை தடுத்து சுமார் இரண்டுமாதகாலம் மாணவர்களின் கல்வி பாழடைந்தது.... சிறப்பான முறையில் ஏழைகளுக்கு நம்பிக்கையூட்டிய கலைஞர் காப்பீட்டு திட்டம் நிறுத்தபட்டவிட்டது... இப்படியாக சொல்லிகொண்டே போகும் வகையில்தான் மக்கள் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட அதிமுகவின் ஆட்சியையும் நடந்துவருகிறது...
ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு பிறகும் மக்கள் தங்களுக்கான நல்லாட்சியை தருவார்கள் என்கிற நம்பிக்கையில் திமுக மற்றும் அதிமுகவை அவர்களின் கடந்தகால ஊழல்களையும் அராஜகங்களையும் மறந்து மன்னித்து ஆட்சியில் அமரவைக்கிறார்கள்... மக்களின் எதிர்பார்ப்பு நாட்டில் பாலாரும் தேனாறும் ஓடவேண்டும் என்பதல்ல குறைந்தபட்சம் காவிரி ஆறாவது ஓடவேண்டும் என்பதுதான்..

அப்பாவி தமிழ் மக்களின் அறியாமைகளை பயன்படுத்திக்கொண்டு அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தை தங்களின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்... ஒவ்வொரு தேர்தலின்போதும் தங்களை ஒழுக்கசீலர்களாக காட்டிக்கொள்ளும் இவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடன் ஊழல்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகளையும் பழிவாங்கல் நடவடிக்கைகளையும் மட்டுமே முன்னெடுக்கிறார்கள் தவிர எவருக்கும் தங்களுக்கு மீண்டுமொரு வாய்ப்பை தந்துள்ள மக்களுக்கு உழைக்கவேண்டும் என்கிற எண்ணமில்லை...

அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழல் புரிந்தவர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததும் கட்சிதாவி மீண்டும் பதவி சுகம் அனுபவிக்கிறார்கள்... எப்படியாகினும் மக்கள் பழையவற்றை மறந்து மீண்டும் மீண்டும் நம்மைதான் தேர்வு செய்வார்கள் என்கிற மமதை இவர்களிடம் புரையோடி உள்ளது... ஆக ஆட்சி மாற்றங்களால் மக்களுக்கு எந்தவிதமான நன்மைகளும் ஏற்படபோவதில்லை என்கிற உண்மை நிலையை கடந்த இருபதாண்டுகால திமுக அதிமுக இரு கட்சிகளின் ஆட்சிகளின் மூலமாக

மக்கள் இனியாவது உணர வேண்டும்... ஆம் ஆட்சி மாற்றங்கள் ஒருபோதும் மக்களின் நிலையை மாறா செய்யாது மாறாக மக்கள் முன்னெடுக்க வேண்டியது "அரசியல் மாற்றம்" ஆம் அரசியலில் மாற்றம் ஏற்பட்டால்தான் அனைத்திலும் மாற்றம் ஏற்படும்...

இதுவரை மாறி மாறி மக்களை சுரண்டி வரும் அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களால் ஒதுக்கப்பட்ட வேண்டும்... மாற்றாக புதியவர்களின் அரசியல் தலைமை தமிழகத்தில் ஏற்பட்டாக வேண்டும்... நமது தமிழகத்திலேயே எததனையோ நல்ல சிறப்பான அரசியல் தலைமைகள் உண்டு அத்தகைய தலைமைகள் ஆதிக்க சக்திகளாலும் அதிகாரவர்கத்தினாலும் சாதிகளாலும் பொருளாதாரத்தாலும் அடக்குமுறைகளாலும் ஒதுக்கிவைக்கபட்டுல்லார்கள்... அவர்களை அடையாளம் காணவேண்டியது மக்களின் கடமை... சாமானிய மக்கள் நினைத்தால் மட்டுமே இத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்... நீங்கள் கேட்கலாம் சாமானியர்களால் எப்படி அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றமுடியும் என்று... ஏன் முடியாது திருவாரூரில் இருந்து சென்னைக்கு பயணிக்க பயணசீட்டே வாங்க முடியாத நிலையில் இருந்த கலைஞர் கருணாநிதியால் எப்படி இன்று ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராகவும்

உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும் வரமுடிந்தது.... இதே சாமானிய மக்கள் அளித்த வாக்குகளாள்தானே... ஒரு சாதாரண நடிகையாக தனது வாழ்க்கையை துவங்கிய இன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களால் எப்படி இந்த நிலையை அடைய முடிந்தது இதே சாமானிய மக்கள் வாரிவழங்கிய வாக்குகளாள்தானே...

ஆக சாமானியர்கலாள்தான் கடந்தகால மாற்றங்கள் நடந்துள்ளது அந்த மாற்றம் மீண்டும் நடக்க வேண்டும் தமிழக மக்கள் மாற்று அரசியலை கட்டமைக்க நல்லவர்களை நாடாள செய்ய முன்வரவேண்டும்... அரசியல் மாற்றம் ஒன்றே அத்துணை பிரச்சனைகளுக்கும் நிவாரணம் என்பத தமிழ் சமூகம் உணரவேண்டும்.
source from www.muthupettaiexpress.blogspot.com
ஆக்கம்:

சகோ. வேங்கை இபுராகிம்

தமிழக அரசின் விலை ஏற்றத்தால் தவிக்கும் மக்கள்கள்!!!



சென்னை, நவம்பர் 18: தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்து தற்போது ஓர் அளவு குறைந்துள்ளது.தற்பொழுது அனைத்து உபயோகிக்கும் பால் விலை அதிகரித்துள்ளது.இதே போன்று பேரூந்து கட்டனும் அதிகரித்துள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் பயணக் கட்டணம் கிலோமீட்டருக்கு 28 பைசாவிலிருந்து 42 பைசாவாகவும், மாநகர சொகுசு பேருந்துகளில் 38 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்ந்துள்ளது.அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 52 பைசாவிலிருந்து 70 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.சென்னை மாநகரை தவிர பிற நகரங்களில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 7 லிருந்து ரூ.12 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 லிருந்து ரூ.3 ஆக உயருகிறது.சென்னையில் அதிகபட்ச பேருந்து கட்டணம் ரூ 12 லிருந்து ரூ. 14 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.பால் விலையும் உயர்வு பேருந்து கட்டண உயர்வை அடுத்து பால் கொள்முதல் விலைகளை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.இதன் படி ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6.25 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இனி ஒரு லிட்டர் ஆவின் பால் ரூ.24 க்கு விற்க்கப்படும்.இது அட்டைதாரர்களுக்கும் பொருந்தும்.பசும்பால் கொள்முதல் விலை ரூ.18 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.எருமை பால் கொள்முதல் விலை ரூ.26 லிருந்து ரூ.28 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தமிழக முதல்வராக பதியேற்றயுடன் டெல்லி சென்று தமிழக வளர்ச்சிக்காக கணிசமான நிதி பெற்று வந்த ஜெயலலிதா தற்போது மக்களின் அத்தியாவசியமான பால் மற்றும் பேருந்து கட்டணங்களை உயர்தியுள்ளது சாமானிய மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதத்தில் அமைந்துள்ளது. மேலும் மின்சார கட்டணங்களை உயர்த்த, தமிழ்நாடு மின்சாரம் வாரியம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி விரைவில் மின்சார கட்டணத்தையும் உயர்த்த தமிழக அரசு முடிவெடுக்கும் என அஞ்சப்படுகிறது.இதனால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா

தடையை மீறி யாத்திரை துவங்கும் INTJ - வின் தலைவர் ஜனாப்.SM .பாக்கர் அறிவிப்பு!






சென்னை, நவம்பர் 18 : இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். "பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது" என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது. தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர்,பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது. மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களை போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை.
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.
எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்...'' என்றார் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர், பத்திரிகையாளர்களுக்கு யாத்திரைக்கான ரதத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த மீடியாக்களும், புகைப்படக் கலைஞர்களும் தங்கள் கேமிராக்களால் ரதத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் அபு பக்கர், மாநிலச் செயலாளர்களான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல், கலிமுல்லாஹ், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தக்வா மொய்தீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், முஹம்மது இஸ்மாயில் மற்றும் தென் சென்னை மாவட்டநிர்வாகிகளான ஆசாத் நகர் சேட், அமைந்தகரை யூனுஸ், ஹபீப், அலுவலக உதவியாளர் மதுக்கூர் முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அவரது கட்சி பிரச்சார வாகனத்தை ரத யாத்திரையுடன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான்,அபு மர்வா

கரை சேவைக்கு அல்ல, இறை சேவைக்காக ஓர் யாத்திரை! SM .பாக்கர் அவர்கள் பேட்டி...




சென்னை, நவம்பர் 18 : இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வருகிற 19 .11 .2011 ஆம் தேதி மேலப்பாளையத்தில் பாபரி மஸ்ஜித் மீட்பு ரதயாத்திரை நடத்த உள்ளதாக இயக்கத்தின் மாநில தலைவர் ஜனாப் .SM .பாக்கர் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர், ஜனாப் .SM .பாக்கர் அவர்களை நேரில் சந்தித்து சில வினாக்களை தொடுத்தனர். இதன் பின்னர் பதிலளித்த அவர், பாபரி மஸ்ஜித் பிரச்சனை மிக முக்கியமான பிரச்சனை என்றும், ஆனால் இந்த பிரச்சனையை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும், அனைத்து மக்களும் ஓரணியில் ஒன்று சேர்ந்து போராடினால் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை கூட நம்மால் மாற்றி விட முடியும் என்றும், ஏனெனில் இது ஓர் ஜனநாயக நாடு என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு ஓர் உதாரணம் சென்ற சாபான் வழக்கின் தீர்ப்பை கூட நமக்கு சாதகமாக மாற்ற முடிந்தது, ஏனெனில் நாம் அனைவரின் ஒற்றுமை அங்கு நிலைத்திருந்தது தான் காரணம். மேலும் இந்த பிரச்சனை ஓர் அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது என்றும், அதனால் ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை ஓர் நினைவு நாளாக மட்டும் மாற்றப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்து விட்ட இந்த பிரச்சனை ஒரு தலைமுறைக்கு என்னவென்று தெரியாமல் போய்விட்டது. நியாய உள்ளம் படைத்த நமது தொப்புள் கொடி உறவுகளாக இருக்கின்ற இந்துக்கள் மற்றும் கிருஸ்தவ மக்களிடமும் நம்முடைய நீதி மறுக்கப்பட்டதை நாம் அவர்களிடம் கொண்டு சேர்க்கப்படவில்லை என்றே தான் சொல்ல வேண்டும். பாபரி மசூதி கட்டப்பட்டது என்பதும், இடிக்கப்பட்டது என்பதும் இதிகாசமோ, புராணமோ அல்ல இது ஓர் உலக வரலாற்றினுடைய குறிப்பீடு என்றும், இது நிகழ்கால உண்மை இவற்றை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கற்பனையை உண்மையாக்க முயல்வோர் மத்தியில் உண்மை, நேர்மை, சத்தியம் ஆகிய இந்த வரலாற்றுச் சுவடுகளை ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எடுத்துச்சொல்லி நீதியை நிலைநாட்ட, பாபரி பள்ளியை மீட்க இந்த பயணம் புறப்படுகிறதே தவிர, இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதற்கல்ல என்றும் அவர் தெரிவித்தார். மேலும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும், மற்றும் அனைத்து ஜாமாத்தார்களும் தள்ளி நின்று வாய்ப்பொத்தி மவ்ளிகலாக வேடிக்கை பார்கின்ற போது களத்தில் இறங்கி உண்மையை சொல்லவதும், இறைப்பள்ளியை மீட்பதும் ஒவ்வொரு நம்பிக்கையாளரின் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரதயாத்திரை கரசேவைக்காக அல்ல என்றும், இது ஓர்
இறைச் சேவைக்காக அழைக்கிறது இந்திய தவ்ஹீத் ஜாமாத் என்றும் அவர் தெரிவித்தார். இது நடக்குமா? இது நம்மால் முடிமா? இவர்களை அரசாங்கம் அடக்கிவிட மாட்டார்களா? என்று கேள்வி கேட்பவர்களுக்கு மத்தியில் அஞ்சுவதும், அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்குத்தான் என்வது இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் அடிப்படை தத்துவம் என்றும், தடைசெய்தால் உடைத்தெறிவோம், சிறை சென்றேனும் இறைசேவை செய்வோம் என்று உங்களை அழைக்கிறது INTJ என்று அவர் தெரிவித்தார்.



சென்னை சேலையூரிலிருந்து INTJ வின் தலைமை அலுவலகம் வந்து இந்த ரதயாத்திரைக்காக ரூ.5 ,000 காசோலையை கொடுத்துவிட்டு தானும் இந்த ரதயாத்திரையில் கலந்து கொள்வேன் என்று உறுதியாக சொல்லிய 70 வயது முதியவரின் பெயர் சீனி முஹம்மது அல்ல "சீனிவாசன்" என்பதே இதற்க்கு ஓர் அத்தாட்சி.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, அபு மர்வா.

பேஸ்புக்கின் மற்றுமொரு அசிங்கத்தால் அதிர்ந்து போன இந்தியா!!!


இந்தியா,நவம்பர் 18: பெங்களூரில் 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்டில் ஊடுருவி, செக்ஸ் படங்கள், வீடியோவை உலவ விட்டுள்ளனர் விஷமிகள். பெங்களூர்வாசிகள் தங்கள் பேஸ்புக் பக்கத்தை திறந்ததும் அதிர்ந்து போனார்கள். அத்தனை பேரின் பக்கங்களிலும் செக்ஸ் படங்கள் இருந்தன. செக்ஸ் வீடியோக்களும் இருந்தன.இதைப் பார்த்தும் உடனே கம்ப்யூட்டரையே பலர் ஆப் செய்து விட்டனர். பேஸ்புக்கில் நண்பர்களாக இருப்பவர்கள் செக்ஸ் படங்களை பார்த்ததும் ஒருவருக்கொருவர் போன் செய்து விசாரித்தனர். ஏறக்குறைய 2 லட்சம் பேரின் பேஸ்புக் அக்கவுன்ட்களில் இதுபோல் செக்ஸ் படங்கள் ஊடுருவி இருந்தன. கடுப்பாகிப் போன பலர் தங்கள் பேஸ்புக் அக்கவுன்டுகளை குளோஸ் செய்து விட்டனர். பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட விசாரணையில், வைரஸ், ஆபாச படங்கள் அடங்கிய சாப்ட்வேரை டவுண்லோடு செய்யுமாறு வந்த லிங்க்கை கிளிக் செய்ததால், அதன் மூலம் ஆபாச படங்கள் பேஸ்புக் உறுப்பினர்களின் பதிவுகளில் ஊடுருவியதாகத் தெரிய வந்துள்ளது. ஆபாச படத்தை ஊடுருவ விட்டவர்களை நெருங்கி விட்டோம். கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.ASNS .அப்துல் பாரி, அபு மர்வா

நன்றி - www.adiraithunder.blogspot.com

"FACE BOOK" நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு


உலகம், நவம்பர் 17 : அனைத்து "FACEBOOK " பிரியர் மற்றும் நண்பர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு. கடந்த சில நாட்களாக மலையாளத்தில் உள்ள சில விசமிகள் "Face புக்கில்" உள்ள அனைத்து நண்பர்களின் (Wall ) முன் பகுதிக்கு ஆபாச வீடியோ (Vedio ) மற்றும் போட்டோவை (Photo ) காப்பி செய்து வருகிறார்கள். (இதனால் அனைத்து நல்லவர்களின் எண்ணம் பாழாகிவிடும்). மேலும் இந்த "Face புக்கை" அதிகம் பயன்படுத்துவது யார் என்று பார்த்தால் 10 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தான் இவற்றை பயன்படுத்தி வருகிறார்கள், அவர்களின் நல்லொழுக்கத்தை கெடுப்பதற்கு ஓர் புது யுக்தியை இவர்கள் கையாண்டு வருகின்றனர். அவற்றில் முதல் படியாக போட்டோ வைரஸ், வீடியோ வைரஸ் என்று தற்போது துவங்கி உள்ளார்கள். எனவே அனைத்து வாசகர்களும் ஆபாச போட்டோ, ஆபாச வீடியோ ஆகியவைகளை உங்கள் "Face புக்கின்" வால் பகுதியான (WALL ) முன்பகுதியில் இருந்தால் உடனே அவைற்றை அளித்து விடுங்கள். அந்த போட்டோ வை தயவு செய்து பார்க்க வேண்டாம் ஏனெனில் நீங்கள் அவற்றை பார்க்க நேரிடும் போது அது உங்களுடைய "Face புக்கில்" உள்ள அனைத்து நண்பர்களுக்கும் அந்த போட்டோ மற்றும் வீடியோ சென்றுவிடுமாறு அவர்கள் மிகப்பெரிய வைரஸை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். மேலும் அடிக்கடி உங்களுடைய "Face புக்கை" சரிபார்த்துக்கொண்டு வாருங்கள் கண்டிப்பாக அந்த விசமிகளின் சூழ்ச்சியிலிருந்து நாம் விடுதலை பெறலாம் இன்ஷா அல்லாஹ்

3G அலைவரிசை ஓர் எச்சரிக்கை! இது குறித்த ஓர் பார்வை!


அதிராம்பட்டினம் நவம்பர் 16 : அதிராம்பட்டினம் போன்ற ஊர்களுக்கு வெகு விரைவில் 3G என்ற அதி நவீன மொபைல் வசதி வர இருக்கிறது. இதனால் நம் சமுதாயத்திற்கு என்ன நன்மை ஏற்படப் போகிறது? இதனால் என்ன தீமை உருவாகும் என்பதை குறித்து "adirai fact " என்ற இணையத்தளம் ஓர் அறிவு சார்ந்த அலசலில் இறங்கயுள்ளது . 2G என்ற ஊழல் பிரச்சனை நம் இந்திய அரசியலையே புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் தலை கீழ் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதை நாம் மறந்திட முடியாது. ஆனால் 2G வரவால் சமுதாய சீர்கேடு ஏற்பட்டு விடவில்லை. (சில ஆயிரம் கோடிகள் இழப்பீடு ஏற்பட்டதை தவிர ) ஆனால் 3G அறிமுகத்தால் பெரியதொரு சமுதாய சீரழிவு ஏற்பட மிகப்பெரியதொரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 3G மொபைல் நெட்வொர்க் மூலம் அதிவேக இன்டர்நெட் உபயோகப்படுத்தலாம் வீடியோ மற்றும் புகைப்படங்களை நொடியில் உலகில் எந்த மூளைக்கும் அனுப்பிவிடலாம். இவை எல்லாம் பெரிய விசயமல்ல. 3G மூலம் வீடியோ டெலிபோன் தான் மிகப்பெரிய பிரச்சனை உருவெடுக்கக் காத்திருக்கிறது. உங்கள் வீட்டு ஜன்னால் கதவை திறக்காமலேயே அந்நிய நபருடன் வீடியோ போன் மூலம் உரையாடலாம். அந்நியன் எங்கிருந்தாலும் இதற்க்கு வாய்ப்புகள் அதிகம். இதில் மிகக் கேடான விஷயம் என்னவெனில், மறு முனையில் உள்ளவர் இந்த உரையாடல் நிகழ்வுகளைப் பதிவு செய்யலாம். இந்தப் பதிவை வைத்து ப்ளாக் மெயில் செய்ய வாய்ப்புள்ளது. வருபுன் காப்போம் (Prevention is better than cure) என்ற கூற்றின்படி தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு கேமரா போன் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும். மொபைல் போனில் வீடியோ, புகைப்படங்கள் என்னனென்ன இருக்கிறது என்பதை அவ்வப்போது நோட்டமிடுதல் மிகவும் அவசியமானது.தாய் தந்தையர் தன் பிள்ளைகளுடன் மனம் விட்டு இதன் தீமைகளை விளக்கிக் கூறினாலே, பிள்ளைகள் தங்களை தாங்களே இவ்வித சூழ்நிலைகளிலிருந்து பாது காத்துக் கொள்வார்கள். "ஒரு தீமையிலும், ஒரு நன்மை உண்டு, புயல் மையம் கொண்டால் மலை மண்ணில் விழும், என்ற தத்துவப் பாடலின்படி , இதன் மூலம் வெளிநாடுகளில் வசிக்கும் அன்பர்கள் தகங்கள் உறவினர்களுடன் மனமார உரையாடலாம். தங்கள் வீட்டின் விசேச நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பாகக் கண்டுகளிக்கலாம். வீட்டு கட்டுமானப் பணிகளைப் பார்வை யிடலாம் அவசர கால நிகல்ட்சிகலையும் டிவி நிலையங்களுடன் இணைந்து ஒலிபரப்பு செய்யலாம். மாணவர்கள் கல்வி கற்க "vidioconfrence " முறையில் இந்த வசதிகளைப் பயன்படித்தி மேற்படிப்பு படிக்கலாம். குடும்ப நல மருத்துவருடன் தொடர்பு கொண்டு மருத்துவ உதவி பெறலாம். 3G கட்டணம் மாதம் ரூ. 1500 வரை மொபைல் கம்பெனிகள் நிர்ணயித்துள்ளன. நாம் அந்தரங்க விஷயங்கள் வெளி யில் போகாதவரை இவை எல்லாம் நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நம் சமுதாயத்தை அறிவியல் ரீதியாக தகர்க்க வரும் இதுபோன்ற டெக்னாலாஜி ஊடுருவலை உன்னிப்பாகக் கண்காணிக்கத் தயாராகுங்கள். அறிவியலை வரவேற்போம், அறிவியல் என்ற போர்வையில் சமுதாயச் சீர்கேட்டை தடுத்திடுவோம் .
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். அபு மர்வா.

நன்றி - www.adiraifact.blogspot.com

முத்துப்பேட்டை சந்தை அபகரிப்பு MS .கார்த்திக் மீது ASNM . பசீர் அஹ்மத் வழக்கு!






முத்துப்பேட்டை, நவம்பர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 200 ஆண்டுகள் அனுபவித்து வந்த ASN வார சந்தையை முன்னால் தி.மு.க. பேரூராட்சி மன்ற தலைவர் திரு. MS . கார்த்திக் அவர்களின் தூண்டுதலின் பேரில் நிலத்திற்கு சொந்தக்காரவர்களின் எந்த முன்னரிவிப்பும் இல்லமால் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து அவர்களுடைய சொத்தை அபகரித்து உழவர் சந்தை கட்டிடத்தை கட்டிவிட்டார். மேலும் இந்த நிலத்தை திரும்ப பெற்று தரக்கோரி, நிலத்தின் உரிமையாளர் ஜனாப்.ASNM .பசீர் அஹமத் அவர்கள் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்தார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் ஜனாப்.ASNM .பசீர் அஹமத் அவர்களை நேரில் சந்தித்து இது பற்றி விளக்கம் கேட்டார். இதன் பின்னர் பதிலளித்த அவர்,ASN . என்ற வார சந்தையை நாங்கள் வேற நபரிடம் விற்பதற்காக எண்ணி நாங்கள் அவர்களிடம் அட்வான்ஸ் வாங்கி இருந்தோம், ஆனால் அதை விற்க உடாமல் தடுத்து நான் சொல்லும் நபரிடம் தான் நீங்கள் உங்க சந்தையை விர்க்கனும் என்று முன்னால் தி.மு.க. பேரூராட்சி மன்ற தலைவர் திரு. MS . கார்த்திக் கூறினார். அதற்க்கு நாங்கள் மறுப்புத் தெரிவித்தோம், இதற்க்கு நீங்கள் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் எனக்கு 5 லட்சம் பணம் தாருங்கள் என்றும் ஏனெனில் என்னை சார்ந்தவர்களுக்கும் நான் பணத்தை பங்கிட்டு கொடுக்க வேண்டும் என்றும் அப்போது அவர் கேட்டார். ASN வார சந்தையை நாங்கள் 3 தலைமுறையாக பயன்படுத்தி வருகிறோம் என்றும், மேலும் இதற்காக முத்துப்பேட்டை பேரூராட்சியில் உரிமம் பெற்று தான் நடத்தி வருகிறோம் என்றும், நாங்கள் ஏன் உங்களுக்கு பணம் தர வேண்டும், இது எங்களின் பரம்பரை சொத்து என்றும், மேலும் ASN சந்தையில் உள்ள பாதி நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆதாரத்துடன் விற்றுள்ளோம் என்றும், திரு. கார்த்திக் அவர்களிடம் கூறினேன். இதனால் ஆத்திரம் அடைந்த திரு. MS . கார்த்திக் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தின் மூலம் இவற்றை துஸ்பிரயோகம் செய்து கலெக்டர், தாசில்தார், வருவாய் அதிகாரி, ஆகியவர்களின் உதவியோடு இந்த சொத்தை கொள்ளையடித்து விட்டார் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களுக்கும் நான் ஒரு புகார் மனு அனுப்பி உள்ளேன். அந்த புகாரின் விபரம் கீழ் வருமாறு:


எங்கள் பரம்பரை சொத்தை முந்தைய அரசின் (தி.மு.க) வின் துணை முதல் அமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தூண்டுதலின் பேரில் அபகரிப்பு செய்து உழவர் சந்தை மற்றும் வார சந்தை அமைத்து எங்களுக்கு எந்த நஷ்டஈடும் தராமல் மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தி கொள்ளை அடித்த அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் வேண்டுகிறேன். தற்போது தங்களுடைய நல்லாட்சியில் அபகரிக்கப் பட்ட நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருப்பி ஒப்படைக்கப்டுகின்ற நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தங்களுடைய ஆட்சியில் எங்களுடைய ஆட்சியில் மீண்டும் பழைய நிலைக்கு மாற தாங்கள் உடன் நடவடிக்கை எடுத்து எங்களின் நிலத்தை மேட்டுத் தர வேண்டுமாய் அல்லாத பட்சத்தில் எங்களுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போதைய மார்கெட் நிலவரப்படி கிடைக்க ஆவன செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK ,முனவ்வர் கான்,அபு மர்வா.

முத்துப்பேட்டையில் அடையாளம் தெரியாத 70 வயது பெரியவர் ஆற்றில் மூழ்கி சாவு!!




முத்துப்பேட்டை, நவம்பர் 14: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத்நகரில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் கோரையாற்றில் ஒரு பிணம் கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு செய்திகள் வந்ததையடுத்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு வயதான ஆண் பிணம் அங்கு கிடப்பது தெரியவந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் முத்துப்பேட்டை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். பின்னர் அந்த பிணத்தை த.மு.மு.க .வின் நகர தலைவர் ஜனாப். M.சம்சுதீன், த.மு.மு.க .வின் நகர பொருளாளர் ஜனாப். S.ஜெஹபர் சாதிக் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜனாப் .A .அன்சாரி, TNTJ உறுப்பினர்.ஜனாப்.பசூல் ரஹ்மான் ஆகியோர் ஜனாஸாவை கைப்பற்றி தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஆம்புலன்சின் மூலம் பள்ளிவாசலுக்கு கொண்டு வந்தனர். அப்போது பிணத்தின் உறவினர்கள் யார் என்று தெரியாமல் இருந்ததால் மேலும் இவர் முஸ்லிம் மதத்தை சேர்த்தவர் என்று தெரிந்த காரணத்தால் போலீசார் அனுமதியுடன் ஜனாஸாவை ஆசாத் நகர் முகைதீன் பள்ளி மையவாடியில் இன்று மாலை அப்பகுதி மக்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EK .முனவ்வர் கான்.

முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறனாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!



முத்துப்பேட்டை,நவம்பர் 14 : முத்துப்பேட்டையில் உள்ள மாற்று திறநாளிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, தாங்கள் பள்ளி படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்கு செல்ல வாகன வசதி இல்லாதவர்களா, உடனே நீங்கள் நமது திருவாரூர் மாவட்ட ஆட்சியாளரிடம் சென்று தங்களின் மனுவை கொடுங்கள். இந்த மனு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். தாங்கள் எழுதி கொடுக்க வேண்டிய விபரம்:

அனுப்புனர்:
உங்களுடைய பெயர் மற்றும் முகவரி.

பெறுனர்:
திருவாரூர் மாவட்ட ஆட்சியர், அவர்கள்
திருவாரூர்.

பொருள்:
மூன்று சக்கர வாகன பைக் வேண்டி

அய்யா:
நான் தற்போது ----------- படித்து வருகிறேன். அல்லது வேலை பார்த்து வருகிறேன், எனவே இந்த பணிகளுக்கு என்னால் சரிவர செல்ல போது மான வாகன வசதி இல்லை எனவே எனக்கு இந்த மூன்று சக்கர வாகன பைக்கை அளிக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். (இதில் தங்களுடைய குடும்ப சூழ்நிலையையும் குறிப்பிட்டால் மிக நன்றாக இருக்கும்). இத்துடன் தாங்கள் படித்த மேற்படிப்பின் கல்விச் சான்று , பதிப்பெண் சான்று, குடும்ப அட்டை, மேலும் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ. ஆகியவைகளை இணைத்துக் கொடுக்கவும்.

Place :
Date :
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

பாலா (அலங்காடு)

சீன நாட்டு பணத்தி (கரன்சியி) ல் அரபி எழுத்து!!





ஹாங்காங், நவம்பர் 14 : சீன தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக்கொள்ளுங்கள் என்ற நபிமொழிக்கேற்ப அந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரக்கூடிய அரபியர்களை கவுரவப்படுத்தும் விதத்தில் அந்த நாட்டு பணத்தில் (கரன்சியில்) அரபி மொழியிலும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அதில் 1 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையிலான அனைத்து பணத்திலும் இந்த அரபி எழுத்துக்கள் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் சீன நாடு ஓர் கம்யூனிச நாடாக இருந்த போதிலும் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்த நாடு முஸ்லிம்களின் முதன்மை மொழியான அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் தனது நாட்டு பணத்தில் அரபி எழுத்தை பதித்துள்ளது. எனவே இந்த விஷயம் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் ஓர் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி பெருமை சேர்க்கும் வித்தத்தில் அமைந்துள்ளது.
source from www.muthupettaiexpress.com
தொகுப்பு

H.பசீர் அஹமது (ஹாங்காங்)

முத்துப்பேட்டை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!


முத்துப்பேட்டை, நவம்பர் 13 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் வாழக்கூடிய மக்களின் கவனத்திற்கு. நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு மாப்பிளை அல்லது பெண் பார்ப்பவர்களா? உடனே அவர்களின் தகப்பனார் அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய தொலைபேசி எங்களை கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். மேலும் மாப்பிள்ளை அல்லது பெண் இவர்களின் பெயர், வயது, நிறம், படிப்பு, பிறப்பிடம் , வாழுமிடம் , சகோதரர்களின் விபரம்,குடும்ப விபரம், தங்களுடைய கருத்து (எப்படி பட்ட மாப்பிள்ளை அல்லது பெண் தேவை) மாப்பிள்ளை போட்டோ விருப்பம் இருந்தால் பெண்ணின் போட்டோ ஆகியவைகளை எங்களுக்கு கிழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் நாங்கள் இவற்றை www.muthupettaiexpress.com என்ற இணையத்தளம் மூலம் இவைகளை வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ். இதன் மூலம் தாங்கள் விரும்பும் மாப்பிள்ளை அல்லது பெண்ணை நீங்கள் தேர்வு செய்து ஈருலக வாழ்வில் வெற்றி பெற அல்லாஹ்விடம் துவா செய்கிறோம்.மேலும் பிற ஊரான அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, பட்டுக்கோட்டை, நாகைப்பட்டினம், நாகூர், காரைக்கால், தோப்புத்துறை, திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களில் உள்ளவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு முத்துப்பேட்டையில் மாப்பிள்ளை அல்லது பெண் பார்க்க விருப்பமுள்ளவர்களும் எங்களை தொடர்பு கொள்ளலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தாங்கள் அனுப்பவேண்டிய மின் அஞ்சல் முகவரிகள் :
public.mttexpress@gmail.com, info.muthupettaiexpress01@gmail.com

இப்படிக்கு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

இஸ்லாமியர்களுக்கும்,கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழிற் பயிர்ச்சி முகாம்:


முத்துப்பேட்டை, நவம்பர் 12 : தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO) மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (NFDC) இணைந்து இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இலவச தொழில்நுட்ப பயிர்ச்சி முகாமை நடத்தி வருகிறது. இதற்கான ஆவணங்களை கீழே கொடுக்கப் பட்டுல்லுள்ளது அவற்றை சரி பார்த்து அனுப்பவும்.
1 ) 10 ஆம் வகுப்பிற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
2 )18 வயதிலிருந்து 35 வடதிருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3 ) குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திருக்கு குறைவாக இருக்க வேண்டும்.
4 ) கடைசியாக படித்த மதிப்பெண் சான்று (MARK SHEET ), இட மாற்று சான்றிதல் (TC ) ஆண்டு வருமானச் சான்றுதல் (INCOME CERTIFICATE ) போன்றவை சமர்பிக்க வேண்டும்.
5 ) இந்த தொழில்நுட்ப பயிர்சிக்கு வகுப்பு ஒரு மாத காலத்திற்கு மட்டுமே நடைபெறும்
எனவே சிறுபான்மை சமுதாயமான முஸ்லிம், மற்றும் கிறிஸ்தவர், இவற்றை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் தொடர்புக்கு:

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (NFDC) கோ - ஆப் டெக்ஸ் வேர் அவுஸ் பில்டிங்
முதல் மாடி NO: 350 , பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 600 008 .
தொலை பேசி எங்கள்: 044 - 2819 2407 , 2819 2506 , 2819 1203 .
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
நமது நிருபர்

அக்பர் அலி. B.sc ., BL . (ஆசாத் நகர்)

முத்துப்பேட்டை மக்களும், மார்கத்தின் ஈடுபாடுகளும்?



முத்துப்பேட்டை, நவம்பர் 11 : முத்துப்பேட்டையில் ஒரு காலம் இருந்தது இங்கு முழுமையான மதரச இல்லாவிட்டாலும் கூட ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்களும், பெண்களும் இமாம்களுக்கு சமமாக மார்கத்தை விளங்கி குர்ஆனைத் தஜ்வீத் முறையில் ஓதி இமாமத் செய்கின்ற அளவிற்கு முத்துப்பேட்டை மக்கள் இருந்து வந்தார்கள். மேலும் பள்ளி வாசல்களிலேயே அதிக காலங்கள் தங்குபவர்களாகவும், அதிக தொடர்புடையவர்களாகவும் இருந்து வந்தார்கள். ஆனால் இன்றோ அந்த அளவிற்கு மார்கத்தை விளங்கியவர்களையும் அதிகமாக காணுவது என்பது வெறும் கேள்விக்குறியாகத்தான் தற்போது இருந்து வருகிறது. அதே சமயம் மார்க்கம் என்ற பெயரில் பல்வேறுப் பிரச்சனைகளை தினித்து வருகின்றார்கள். குறிப்பாக சொல்லபோனால் ஊரின் ஒற்றுமையை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் பள்ளியின் தொடர்பற்றவர்கலாகவும், மது, சூது, விபச்சாரம் ஆகியவைகளுக்கு அடிமைகளாகவும் இருந்து வருகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் குர்ஆனை அரைகுறையாக ஓதி விளங்கியவர்கள் பள்ளிக்கிக்கூட தொழ வராத அவள நிலையை காண முடிகிறது. நம் ஊரில் உள்ள பள்ளிகள் எல்லாம் அதிக நேரம் பூட்டப் பட்டும் (தொழுகை நேரங்கள் தவிர்த்து), பள்ளியில் உள்ள குர் ஆன்களெல்லாம் புளிதியடைந்தும் காணப்படுகின்றன. கடந்த ரமலான் மாதத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்ட கடமைபட்டுள்ளேன். அவை ஒரு பள்ளியில் ஒரு நாள் கூட ஒருவரும் குர்ஆனை எடுத்து ஓதவில்லை, அதன் காரணமாக குர்ஆன் அனைத்தும் உள்ளே உள்ள அறைகளில் வைக்கபட்டிருக்கிறது. இன்னொரோ பள்ளியில் தொழுவதற்கு இமாமைத் தவிர்த்து ஒரு ஆளை பார்த்தல் கூட அது ஒரு பெரிய விசயமாகத்தான் நமக்குத் தெருகிறது. ஏன் இந்த நிலை? மறுமையின் பயம் எங்கே போனது? அல்லாஹ்வின் அச்சம் எங்கே போனது? அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்கள் எங்கே போனார்கள்? அல்லாஹ் வின் பள்ளிகள் சபிக்க ஆரபித்து விட்டால் நம் மக்களில் நிலைமை என்னவாகும்? மறுமையில் நம்மவர்களின் நிலைமை என்னவாகும்?
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
இந்த நிலை மாற நாம் என்ன செய்ய வேண்டும்:

1) முதலில் ஒவ்வொரு முஹல்லாவிலும் இஸ்லாமிய ஆரம்ப பாடசாலைகள் (மதரசாக்கள்) முழுமையாக ஆரம்பிக்கப் படவேண்டும் அதில் நம் குழந்தைகள் பங்கு பெற்று பயனடைய வேண்டும்.

2) ஒவ்வொரு மதரசாக்களிலும் நமது குழந்தைகளுக்கு குர் ஆனை தஜ்வீத் முறைப்படி முறையாக கற்றுகொடுக்க வேண்டும்.

3) குர் ஆனை முழுமையாக ஓதத்தெரியாத நமதூர் முதியவர்களுக்கும் அந்த அந்த முஹல்லாவில் மதரசாக்களை உருவாக்க வேண்டும்.

4) மேலும் எந்த ஒரு நல்ல விசயத்தையும் நம்மோடு நிறுத்திக்கொள்ளாமல், மற்ற மக்களுக்கும் நபி (ஸல் ) அவர்களின் வலியில் அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும், மேலும் நன்மையின் பக்கம் மக்களுடைய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

சிந்திங்கள் நாம் அனைவரும் சொர்கத்திற்கு சொந்த காரவர்கலாக மாறலாம் நீங்கள் முயற்சித்தால் இன்ஷா அல்லாஹ்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ஆசிரியர்.சாலிஹ் முக்தார். (முத்துப்பேட்டை) ரிப்போர்ட்டர் இல்யாஸ்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு.


உலகம்,நவம்பர் 11 : ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)