முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்-மருத்துவர்கள் தரும் தகவல்கள் :



மருத்துவம், செப்டம்பர் 15:  உடலுறவில் ஈடுபடத் தொடங்கிய பிறகு  அதாவது பெண் உறுப்பில் நுழைந்தவுடன் விந்து வெளியேற சராசரியாக 3 முதல் 5 நிமிடங்களாவது ஆக வேண்டும் 



ஆனால், அதற்கு முன்னதாகவே பெண்ணின் பிறப்புறுப்பிக்குள் நுழையும் முன்பே விந்து வெளியேறினால் அது செக்ஸ் குறைபாடுதான். 


இந்தவகையான பாதிப்பு சுமார் 70 சதவீத ஆண்களுக்கு இருக்கிறது.

விந்து விரைவில் வெளிப்படுதலை தம்பதியர் நினைத்தாலே ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். இதற்கு இருவரிடமும் நல்ல புரிதல் 
அவசியமாகும். 

1. முதலில் தம்பதியர் இருவரும் இந்தக் குறைபாடுகளை தீர்த்துவிட முடியும் என்று நம்பிக்கை வைக்க வேண்டும். இதற்காக மது போன்ற போதைப் 

பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆணுறுப்பில் தடவும் ஒரு சில மருந்துகள் உறுப்பில் இருக்கும் உணர்வுகளை மழுங்கடிக்கச் 

செய்துவிடும். ஆரம்ப நாள்களில் இதனால் பயன் இருக்குமே தவிர தொடர்ந்து பயன்படுத்தும்போது பல்வேறு சிக்கல்கள் தோன்றலாம். அதனால் இது போன்ற 

குறுக்குவழிகளைக் கைவிட வேண்டும். 

2. செக்ஸ் என்பது நான்கு நிலை என்பதைப் பார்த்தோம். உணர்வடைதல், செயல்படுதல், விந்து வெளியேற்றம், ரிலாக்ஸ் எனப்படும் நான்கு நிலைகளில், விந்து  வெள்யேற்றம் எனப்படும் மூன்றாம் நிலை செயல்படும் முன் ஏற்படுவதுதான் விந்து முந்துதல் எனப்படுகிறது.  இன்னொரு வகையில் சொல்வதென்றால் ஆண்&பெண் இருவரது ஆசைகளும் தீரும் முன்செக்ஸ் செயல்பாடுகள் நின்றுவிடுவதாகும். அதனால் இறுதிச் செயல்பாடான ரிலாக்ஸ் எனப்படுவதை இரண்டாவதான செக்ஸ் செயல்பாடுகளிலும் புகுத்தும்போது உறுப்பு எழுச்சி நீடிக்க வாய்ப்பு இருக்கிறது. 

 மனத்தை மிகவும் ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப்போனால் மனத்தை செக்ஸில் இல்லாமல் வேறு ஏதாவது ஒரு 

செயலில் ஈடுபடுதினால் கூட நல்லது. அதாவது தியானம் செய்வதுபோல் அல்லது மலை ஏறுவது, கிரிக்கெட் மேட்ச் ரசிப்பதுபோல் ஏதாவது ஒரு நிகழ்வை 

மனத்தில் நினைத்துக்கொண்டு செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபடுவது மிகுந்த பயன் அளிக்கும்.

3. அடுத்தாக செக்ஸ் செயல்பாடுகளை ஆவேசமாக, ஆக்ரோஷமாக செயல்படுத்தாமல் மிக இயல்பாகவும் அவசரமில்லாமலும் மெதுவாக இயங்க வேண்டும். 

ஏனெனில் உடலைவிட மனசே செக்ஸ் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆவேச உணர்வைக் குறைக்கும்போதே மனம் லேசாகிவிடுகிறது. இருவரும் 

நிதானமாக செக்ஸ் செயல்பாடுகளைத் தொடரும்போது நேரத்தை வேண்டும் அளவுக்கு நீட்டிக்க முடியும்

4. ஆண்கள் விந்து முந்துதலைத்தடுக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்க முடியும். அதாவது சுய இன்பம் காணும் செயல் இதற்கு நல்ல 

முறையில் பலன் அளிக்கிறது. சுயஇன்பத்தை முழுமையாக ஒரே நேரத்தில் வேகமாக செய்து முடிக்காமல் நிறுத்தி இடைவெளிவிட்டு நேரத்தை நீட்டிக்க 

வேண்டும். 

 சாதாரணமாகவே ஆண்கள் சுயஇன்பம் காணும் போது அவசர அவசரமாகவே செயல்படுவார்கள்.யாராவது பார்த்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அல்லது 

மனதில் உள்ள ஆசை தீர்ந்துபோவதற்குள் ஆசையைத் தீர்த்துவிடும்படி ஆவேசமாக அவசர அவசரமாக கையை வைத்துச் செயல்படுத்தி விந்துவை 

வெளிப்படுத்தி திருப்தி அடைவார்கள். இதுவே கலவியின்போதும் தொடர்ந்து சிக்கலை உண்டாக்குகிறது. அதானால் முதலில் ஆண் அவனது உறுப்பை ரசிக்கப் 

பழக வேண்டும். உறுப்பு எழுந்து நிற்பதில் தொடங்கி அது விந்து கக்கி வீழ்வதுவரை ரசித்து நிதானமாக கை செயல்பாடுகளை ரசித்துச் செயல்பட வேண்டும்.

விந்து வெளியாகும் நேரத்தில் செயலை நிறுத்தி வைத்து மீண்டும் தொடர வேண்டும். அடிக்கடி இப்படிச் செய்துபார்ப்பது அவசியம். என்றாவது ஒருநாள் 

கையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவிக்க முயற்சிப்பது பயன்தராது. தினமும் அல்லது தினமும் இருமுறையாவது இந்த முறையில் உச்சகட்ட நேரத்தைக் 

கூடுதலாக்கும் முயற்சியை மேற்கொள்ளும்போது தான் நல்ல பலன் தரும். 

 முதலில் வெறும் கையுடன் சிறிது நேரம் சுய இன்பம் அனுபவிக்க வேண்டும். பிறகு எண்ணெய் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டு 

செயல்படும் நேரத்தை நீடிக்க வேண்டும். இப்படி சில நாள்கள் உறுப்புடன் நெருங்கி விளையாடி நேரத்தை நிறுத்திச் செயல்படும் டெக்னிக்கை வெற்றிகரமாகக் 

கண்டுகொண்ட பிறகு பெண்களுடன் உறவு கொள்ளும் போது இதைப் பயன்படுத்தலாம். இடைவெளிவிட்டு செயல்படுதல் விந்து வெளிப்படுதலைத் தடுப்பதில் 

முக்கிய பங்கு வகிப்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

5. உடல் முழுவதும் இனபம் இருக்கிறது என்பதை ஆணும் பெண்ணும் அறிந்துகொள்ள வேண்டும். அதாவது ஆண் உறுப்பில் மட்டும்தான் இன்பம் இருக்கிறது 

என்று அதை மட்டுமே உபயோகிப்பதைப் பெண் குறைத்துக்கொண்டு உடலின் மற்ற பாகங்கள் மீது கவனம் செலுத்துவதும் மிகுந்த பலன் அளிப்பதாக 

இருக்கக்கூடும். 

6. மூச்சை நன்றாக உள் இழுத்தல் மிக முக்கியமான எளிதான வழியாகக் கருதப்படுகிறது. மிகவும் ஆழமாக மூச்சை இழுத்துவிடுவது ஒரு நல்ல முயற்சியாகும். 

ஏனெனில் இறுதி நிலையான ரிலாக்ஸீக்கு சமமாக மூச்சுப் பயிற்சியைப் பயன்படுத்த முடியும். 

7. வெறுமனே செயல்பாடுளில் ஈடுபடுவதைவிட பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுவதும் செக்ஸ் நேரத்தைக் கூடுதலாக்குகிறது. ஏதாவது விஷயங்களைப் பேசுவது 

கத்துவதன் மூலம் உடல் டென்ஷனைக் குறைத்துக் கொள்வது என்று உடலை எவ்வளவு தூரம் எளிமையாக வைத்துக் கொள்கிறமோ அவ்வளவு தூரம் 
8. ஆண் மேலே பெண் கீழே என்ற நிலையில் உறவுகொள்வது எளிதாகவும் இனபமாகவும் இருக்கலாம். ஆனால் இது ஆண்களுக்கு ஏற்ற நிலை என்று சொல்ல 

முடியாது. இந்த நிலையில் எளிதாக விந்து வெளியேற வாய்ப்பு உண்டு. அதனால் பெண்ணை இயங்கச்செய்வது அதிகப்பலன் அளிக்கக்கூடியதாக இருக்கும். 

எவ்வகையான செயலையும் ஆண்கள் மேற்கொள்ளாமல் பெண்களை மட்டுமே இயங்குபொருளாக வைத்துக்கொண்டால் கூடுதல் நேரம் விரைப்புத்தன்மையுடன் 

ஆண்கள் இருக்க முடியும்.

9. ஆண்கள் தங்கள் உறுப்புகளை மட்டுமே செக்ஸ் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை விடுத்து கை, நாக்கு, கால் போன்ற உறுப்புகளையயும் பயன்படுத்த 

வேண்டும். இதனால் ஆண் உறுப்புக்குக் கலவி நேரத்தில் ஓய்வு கிடைக்கும். இந்த ஓய்வின் காரணமாக நேரதை நீட்டிக்க முடியும். 

10. ஆணுக்கு விந்து வரப்போவதை அறியும் பெண் முதுகு அல்லது பின்புறத்தில் பலமாகத் தடடுவது வேறு செயலுக்கு மாற்றுவது வலிக்கும்படி கடிப்பது 

போன்ற செயல்களில் ஈடுபடும்போது விந்து வெளியேற்றம் தாமதமாகிறது.    

இது போன்று மேலே குறிப்பிட்டுள்ள சில வழிகளை  முயற்சித்து விந்து விரைவாக வெளிப்படுதலை தடுத்து உடலுறவில் முழு திருப்தி அடையுங்கள்.
நேரத்தைத் தள்ளிப் போட முடியும். 

மோடியின் தமிழக வருகையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி முற்றுகை போராட்டம்...



திருச்சி செப்டம்பர் 14: இன்று திருச்சியில் நடைபெற்று வரும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழுவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தலைவர் தெஹ்லான் பாகவி வருகிற 26-09-2013 அன்று திருச்சியில் நடைபெறும் பாஜக மாநாட்டிற்கு வருகைதருகின்ற, குஜராத் முஸ்லிம்கள் மீது நடைபெற்ற இனக்கலவரத்திற்கு காரணமான நரேந்திர மோடியை கண்டித்து கறுப்பு கொடி மற்றும் முற்றுகை போராட்டம் நடத்த எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

அனைவரும் அணிதிரள்வோம் செப்டம்பர் 26-ல் திருச்சியை நோக்கி என அழைப்பு விடுத்துள்ளது எஸ்,டி.பி.ஐ கட்சி

மதுக்கூரில் தொடர்ந்து பதற்றம்...



மதுக்கூர், செப்டம்பர் 14: மதுக்கூரில் விரும்பதகாத சம்பவங்கள் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகின்றது. இன்று 14/09/2013 சனிக்கிழமை காலை வழக்கப்போல் பெரியப் பள்ளிவாசலின் முஅத்தீன் சம்சுதீன் அவர்கள் பஜர் பாங்கு சொல்ல பள்ளிவாசல் வந்துள்ளார். பெரியப் பள்ளிவாசலில் ராத்தீபு இடம் என கூறப்படும் பள்ளிவாசலின் மையப்பகுதியில் யாரே விஷமிகள் மாட்டு சணத்தை ஒரு வாளியிலும்,பிளாஸ்டிக் பையிலும் கொண்டுவந்து கொட்டிவிட்டு சென்றுள்ளார்கள்.உடனே நிர்வாகத்தினருக்கு தகவலும் கொடுத்துள்ளார்.ஜமாத் மற்றும் சங்கங்களில் நிர்வாகிகள் பள்ளிவாசலுக்கு வந்து பார்த்துவிட்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். பிறகு புகார் செய்யலாம் என ஜமாத்தார்கள் கலைந்து சென்றுவிட்டார்கள்.ஆனால் புகார் செய்யவில்லை.சம்பவம் அறிந்த சமுதாய இயக்க சகோதரர்களும் சமுதாய நலன் விரும்பிகளும் பள்ளிவாசலில் குவிந்தனர்.


மீண்டும் பள்ளிவாசலில் கூடிய ஜமாத் மற்றும் சங்கங்களின் நிர்வாகிகள் அனைவரின் விருப்பத்தின்பெயரில் காவல் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்று காவல்துறை ஆய்வாளர் மனோகரன் அவர்களிடம் புகார் செய்தனர்.

மதுக்கூரில் உள்ள பள்ளிவாசலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மதுக்கூரில் ஒருவித பதற்றமான சூழ்நிலையும் நிலவுகின்றது

முத்துப்பேட்டையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை -ரிக்டரில் 43.6 செ.மி .ஆக பதிவு

தஞ்சாவூர், செப்.11–
தஞ்சை டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்து வருகிறது. நேற்று இரவும் தஞ்சையில் மழை பெய்தது. நேற்று முதல் இன்று காலை 8.30 மணிவரை (24மணிநேரம்) பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு


கல்லணை–12.8, திருக்காட்டுப்பள்ளி–3.2, தஞ்சாவூர்–4.2,அய்யம் பேட்டை–6.0, நெய்வாசல் தென்பாதி–4.8, பூதலூர்–0.4, வெட்டிக் காடு–5.4, பேராவூரணி–2.8, ஒரத்தநாடு–9.6, மதுக்கூர்–4.2, பட்டுக்கோட்டை–3.0, நீடாமங்கலம்–1.4, திருத்துறைப்பூண்டி –11.2, முத்துப்பேட்டை–43.6, கோரையாறு–2.4, தலை ஞாயிறு–18.4, திருப்பூண்டி– 13.0, வேதாரண்யம்–3.2.


அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 43.6 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்சமாக தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் 42.2 மி.மீட்டர் மழையும் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் 51.0 மி.மீட்டர் மழையும் பெய்தது. இன்று ஒரத்தநாட்டில் 9.6 மி.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. ஆனால் மயிலாடுதுறையில் மழை பெய்யவில்லை.


கல்லணையில் இருந்து இன்று காலையில் காவிரி ஆற்றுக்கு 800 கனஅடி தண்ணீரும், வெண்ணாற்றுக்கு ஆயிரத்து 301 கனஅடி தண்ணீரும், கல்லணை புதுஆற்றுக்கு 2ஆயிரத்து517 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 4 ஆயிரத்து 614 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றுக்கு நேற்று கல்லணையில் இருந்து 518 கனஅடி தண்ணீரும் கோவிலடி சேனலுக்கு 5 கனஅடி தண்ணீரும், பிள்ளைவாய்க்காலுக்கு 5 கன அடி தண்ணீரும் பாசனத்திற்கு திறந்து விடப்பட்டிருந்தது.டெல்டா மாவட்டத்தில் தொடரும் மழை: முத்துப்பேட்டையில் 43.6 மி.மீ.பதிவு


டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயிரிடப்பட்டுள்ள சம்பா சாகுபடி நெற்பயிர்கள் மழையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கொள்ளிடம், கோவிலடி சேனல், பிள்ளை வாய்கால் ஆகிய ஆறுகளுக்கு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று நிறுத்தப்பட்டது.

நாகர்கோவிலில்ஆபாச படத்தில் மனைவியை கண்டு அதிர்ந்த கணவர்!பதைக்கவைக்கும் கள்ளத் தொடர்புகள் !!!

yarlminnal.com (4)










நாகர்கோவில்,செப்டம்பர் 12: நாகர்கோவிலில் மனைவி, வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச சி.டி.யை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் அந்த சி.டி. ஆதாரத்துடன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். முதலில் மறுத்த மனைவி பின்பு ஒப்புக் கொண்டார். ஆனால் அருகில் இருப்பது கணவன் என கூறியதால் குழப்பம் ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆபாச சி.டி.க்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

அந்த பகுதியில் நண்பர்கள் சிலர் வாங்கிய ஆபாச சி.டி.யை போட்டு ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு அந்த படத்தில் உல்லாசமாக இருந்த பெண்ணின் படத்தை பார்த்ததும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த பெண், அவருடைய நெருங்கிய நண்பரின் மனைவி ஆவார். இந்த தகவலை அறிந்த மற்ற நண்பர்களும் அதிர்ச்சி அடைந்து, அது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரிடம் தெரிவிக்க முடிவு செய்தனர். அதன்படி, நாகர்கோவில் அருகே வசிக்கும் கணவனிடம் அந்த சி.டி.யை கொடுத்தனர்.

கணவன் அந்த சி.டி.யை போட்டு பார்த்தபோது, அவருடைய மனைவி மற்றொரு வாலிபருடன் உல்லாசமாக இருந்த காட்சியை பார்த்து அதிர்ந்துவிட்டார். 15 நிமிட நேரம் ஓடிய அந்த காட்சியை பார்த்தபின், மனைவியிடம் அதுபற்றி குறிப்பிட்டு தகராறு செய்தார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் மனைவியின் ஆபாச படத்தை பார்த்த கணவன் மனைவியுடன் தொடர்ந்து குடும்பம் நடத்த மறுத்துவிட்டார். 

அவர், மனைவியின் குடும்பத்தினரை அழைத்து, தங்களுடன் அழைத்துச்சென்றுவிடும்படி வற்புறுத்தினார். இரு தரப்பு குடும்பத்தினராலும் இந்த பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண முடியவில்லை. இதனால் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சி.டி. யுடன் சென்ற கணவர் மனைவி பற்றி புகார் கூறினார். 

கள்ளக்காதல் விவகாரம் குறித்து பல்வேறு வகையான புகார்களை பார்த்துள்ள போலீசாருக்கு, ஆனால் மனைவி மற்றொருவருடன் உல்லாசமாக இருந்த சி.டி. ஆதாரத்துடன் வந்துள்ள புகார் அதிர்ச்சியை அளித்தது. இந்த புகார் குறித்து இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். சி.டி.யில் உள்ள காட்சி குறித்து மனைவியிடம் விசாரித்த போது படத்தில் இருப்பது நான் இல்லை என்று கண்ணீர்மல்க மறுத்தார். 

தீவிர விசாரணைக்கு பிறகு “அந்த காட்சியில் இருப்பது நான் தான். படம் பிடித்து இருக்கும் இடமும் எங்கள் வீடு தான். ஆனால், என் அருகில் இருப்பது கணவர்தான்” என்றார். ‘பளிச்’சென்று அடையாளம் தெரியும் அளவுக்கு அந்த ஆணின் முகம் தெளிவாக தெரியாததால், குழப்பம் ஏற்பட்டாலும், சி.டி. காட்சியில் இருப்பது நான் இல்லை என்று, கணவர் திட்டவட்டமாக மறுத்தார். மேலும், இந்த ஆபாச காட்சி, ஊரில் பலருடைய செல்போனில் பதிவாகி இருக்கும் தகவலையும் கூறினார். 

போலீசார் கணவரை சமாதானம் செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால், மனைவியை பிரிவதில் கணவர் உறுதியாக இருந்தார். இறுதியில் மனைவி கணவரை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டையை சேர்ந்த மாணவன் ஆற்றில் மூழ்கி பலி.


முத்துப்பேட்டை, செப்டம்பர் 12: முத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காடு கிராமத்தை சேர்ந்த அய்யா கணபதி. இவரது மகன் முருகேஷ் குமார் (14). இவர் முத்துப்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9 ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் முகேஷ்குமார் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். மாலை நேரத்தில் செம்படவான்காடு பாமணியாற்றில் நண்பர்களுடன் குளித்த போது ஆற்றின் நீரால் முகேஷ்குமார் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது முகேஷ்குமார் நீரில் மூழ்கி பலியானார். 

பின்னர் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் பலமணிநேரம் போராடி முகேஷ்குமாரின் உடலை மீட்டனர். பின்னர் முகேச்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மாணவன் முகேஷ்குமார் பலியான சம்பவத்தால் நேற்று அவர் படித்த தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி ஒரு நாள் விடுமுறையளித்துள்ளது. 

தொகுப்பு:  A.K.L.T. அப்துல் ரஹ்மான். BBA.  

முத்துப்பேட்டையில் உள்ள லகூனை 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழக முதல்வர் உத்தரவு...




முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: முத்துப்பேட்டையில் உள்ள மாங்குரோவ் சதுப்புநிலக்காடு உலக வரலாற்றில் எல்லோராலும் பேசப்பட்டு வருகிறது. இதன் அளவு 11,885 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள், சிற்றோடைகள், கடற்கரைக் காயல், மணல் மேடுகள் அமைந்துள்ளன. குளிர்காலத்தில் இப்பகுதியில் வாழ்வதற்கென நூற்றுக் கணக்கான விதவிதமான வெளிநாட்டு நீர்ப்பறவைகள் வருகின்றன. அவற்றில் கிரே பெலிக்கன் பழுப்பு கூழைக்கடா), கிரேட்டர் பிளம்மிங்கோ (பூநாரை), டார்டர் (பாம்புத் தாரா), பிண்டெயில் டக் (ஊசி வால் வாத்து), பெயின்டட் ஸ்டாக் (செங்கால் நாரை) ஆகியவைகள் முத்துப்பேட்டையில் காணப்படும்  பறவை இனங்களாகும். குள்ளநரி, பழந்தின்னி வெளவால் ஆகிய பாலூட்டி பறவைகளும்  வாழ்கின்றன.  

மேலும் முத்துப்பேட்டை கழிமுகத்தில் உள்ள முள்ளிப்பாலம் காயல் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய கடற்கரை காயல் ஆகும். இது 11 சதுர கிலோ மீட்டர் பரப்புடையது. காவேரி ஆற்றின் கிளை நதிகளான நசுவினியாறு, பட்டுவாஞ்சியாறு, பாமினியாறு, கோரையாறு, கிளைத்தாங்கியாறு, மரக்காக்கோரையாறு ஆகிய ஆறுகள் இங்குள்ள மாங்குரோவ் காடுகளுக்கு நீர்வளம் தருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் வந்து கண்டு களிக்கும் வகையில் மேம்படுத்தி அழகிய சுற்றுச்சூழல் சுற்றுலா மையமாக உருவாக்குவதற்காக 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 

இந்த ஒதுக்கீட்டின் மூலம் கண்ணாடி இலைப் படகுகள் வாங்குதல், மர வீடுகள் அமைத்தல்,  வரவேற்பு மையம் கட்டுதல், காட்சி கோபுரம் அமைத்தல், அனுகுசாலை அமைத்தல்,  குடிநீர் வசதிகள் ஏற்படுத்துதல் ஆகிய மேற் கொள்ளப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் முத்துப்பேட்டையில் சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

தொகுப்பு: ஜே: சேக் பரீத் 




பிள்ளையார் ஊர்வலம் எதற்காக?



தமிழகம், செப்டம்பர் 10: பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது). 
 இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.

அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத் திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பை யைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவை கள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி, பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!

வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்

வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!

உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!

மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!

முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.

                                              



நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!

எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.

மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!

எடையூரில் விநாயகர் சிலைகள் பறிமுதல் 24 பா.ஜ.,வினர் அதிரடி கைது...



முத்துப்பேட்டை, செப்டம்பர் 10:  பிரதிஷ்டை செய்ய எடுத்துச் சென்ற, 23 விநாயகர் சிலைகளை பறிமுதல் செய்த போலீஸார், பாரதிய ஜனதா மாநில செயலாளர் உள்பட, 24 பேரை கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகா முத்துப்பேட்டையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலை ஊர்வலம், 17ம் தேதி நடக்கிறது. அதற்கு பிரதிஷ்டை செய்வதற்காக நேற்று மாலை, 23 விநாயகர் சிலைகளை பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்து வந்தனர்.

அப்போது, எடையூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே, டி.எஸ்.பி., பாஸ்கர், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீஸார் அவர்களை வழி மறித்து, "கடந்த ஆண்டு, 16 சிலைகள் மட்டுமே வைக்க அனுமதிக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதல் சிலைகள் வைக்க அனுமதிக்க முடியாது' எனக்கூறி, சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இதை கண்டித்து, பாரதிய ஜனதா மாநில செயலாளர் முருகானந்தம், பொறுப்பாளர்கள் ராமலிங்கம் உள்பட பாரதிய ஜனதா கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி., மகேஷ்குமார் காளிராஜ் உத்தரவின்படி, முருகானந்தம் உள்பட, 24 பேரை போலீஸார் கைது செய்தனர். பறிமுதல் செய்த சிலைகள், எடையூர் ராம மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கண்ணை மறைக்கும் காவிப்புழுதி - ஆர்எஸ்எஸ் -இன் பொய்யும் புரட்டும் !!












முத்துப்பேட்டை, செப்டம்பர் 10: மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.

”நாடு முழுவதிலும் எங்கெல்லாம் ஒரு மசூதி அல்லது ஒரு முசுலீம் பேட்டை இருக்கின்றதோ, அந்தப் பகுதியை உண்மையில் தமக்கே சொந்தமான சுதந்திரமான பிரதேசமாக முசுலீம்கள் கருதுகின்றனர். ஹிந்துக்களின் ஊர்வலம் இசைக் கருவிகளுடனும் பாட்டுக்களுடனும் அவ்வழியே சென்றால், அவர்கள் தமது மத உணர்ச்சிகள் புண்படுத்தப்பட்டதாகச் கடுங்கோபம் கொள்கின்றனர். இனிய இசையைக் கேட்டுப் புண்படும் அளவிற்கு, அவர்களுடைய சமய உணர்ச்சி தொட்டால் சிணுங்கியாக இருக்குமானால் தமது மசூதிகளைக் காடுகளுக்கு மாற்றி அமைத்துக் கொண்டு அங்கு மௌனமாகத் தொழுகை நடத்தக் கூடாதா? சாலை ஓரத்தில் ஒரு கல்லை நட்டு அதற்கு வெள்ளையடித்து, அதனைத் தொழுகைத் தலம் என்று அறிவித்துவிட்டு, அங்கு இசை பாடப்படுவது தமது தொழுகையைக் கலைப்பதாகும் எனக் கூப்பாடு போடுவானேன்?”
ஆர்.எஸ்.எஸ்.-இன் இரண்டாவது தலைவர் கோல்வால்கர், ‘ஞானகங்கை‘ இரண்டாம் பாகம் –பக்.170.
மசூதிக்கு முன்னால் நடக்கவோ, பாடவோ மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மத வெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம். மசூதிகளின் தொழுகைக் காலத்தோடு பிரச்சினை இல்லாமல் நல்லிணக்கத்தோடு இயங்கி வந்த மக்களிடையே – இல்லாத ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி, முசுலீம் எதிர்ப்புக் கலவரம் நடத்துவதே அவர்கள் நோக்கம். அதைப் பல இடங்களில் ஆண்டுதோறும் செய்தும் வருகிறார்கள்.
முதலில் மசூதிகள் பிரபலமான, பரபரப்பான தெருக்களிலும், சந்தைகளிலும், வணிக முக்கியத்துவம் மிகுந்த இடங்களில் இருப்பது உண்மைதான். காரணம், அவ்வட்டாரத்தில் கணிசமான முசுலீம்கள் வாழ்வதும், அதிலும் வணிகர்களாக இருப்பதும், தமது வேலை நேரத்தில் குறிப்பாக வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வந்து போக வசதியாக இருக்கவும்தான் அப்படி கட்டப்படுகின்றன. வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.
அதேசமயம் மசூதிகள் முன்பு மாணவர்கள், தொழிலாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் ஊர்வலமாய்ப் போகிறார்கள். ஏன், கோவில் திருவிழாக்கள் கூட இடையூறின்றிச் செல்லுகின்றன. மசூதி அருகே பொதுக் கூட்டங்கள் நடப்பதும், பாங்கு ஓதும் நேரம் ஓரிரு நிமிடம் அமைதி காப்பதும் தமிழகத்தில் இயல்பான காட்சிகள்தான். இதனாலெல்லாம் எங்கும் கலவரம் ஏற்பட்டதில்லை. 1980-களில் தோன்றிய இந்து முன்னணி, மசூதி முன்பு விநாயகர் ஊர்வலத்தை வம்படியாக நடத்திய போதுதான் இக்கலவரங்கள் ஆரம்பித்தன. சரியாகத் தொழுகை நேரத்தில் ஊர்வலம் நடத்துவது, ”துலுக்கனை வெட்டு, துலுக்கச்சியைக் கட்டு, அல்லாவுக்குக் குல்லா போட்டு அரேபியாவுக்கு அடிச்சுத் துரத்து, இந்த நாடு இந்து நாடு இல்லேங்கிற துலுக்கன் யாரு” போன்ற ‘இனிய இசை மொழிகளை’க் கூவுவது இவற்றினால்தான் தகராறுகள் ஆரம்பித்துக் கலவரங்களாய் முடிகின்றன.
பம்பாய், ஹைதராபாத், சென்னை மூன்று நகரங்களிலும் ஆர்.எஸ்.எஸ். வானரங்கள் நடத்தும் விநாயகர் ஊர்வலங்கள் மசூதி வழியாகச் சென்று முசுலீம் மக்களைத் தாக்குவதற்கான அவலங்களாய் மாறிவிட்டன. தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் இந்த நோய் திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. எனவே மசூதி முன்பு ஊர்வலம் நடத்தும் இந்து மதவெறி அமைப்புக்களை முழுமையாகத் தடை செய்யும் போதுதான் இந்த அராஜகங்களுக்கு முடிவு கட்ட முடியும். பெரும்பான்மை இந்துக்களின் ஏகபோகப் பிரதிநிதிகள் என உரிமை கொண்டாடும் சிறு கும்பலான பார்ப்பன – இந்து மதவெறி அமைப்புக்களைத் தனிமைப்படுத்தி முறியடிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மசூதியை வைத்து உரிமைக்குரல் எழுப்பும் இவர்கள்தான் அக்கிரகாரம், ஊர், தேரோட்டம் போன்றவற்றில் இன்றுவரை தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கேற்க அனுமதி மறுக்கிறார்கள். கேவலம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் இணைந்து தேரை இழுக்க முடியாது என் கண்டதேவியில் சில ஆண்டுகளாய் நிறுத்தப்பட்டிருக்கும் மரத்தேர் இந்த மரமண்டைகளின் யோக்கியதைக்குச் சமீபத்திய சான்று.


கோலாகலமாக நடைபெற்ற கொய்யா இல்லத் திருமணம் - களைகட்டியது கொய்யா மஹால் !!























முத்துப்பேட்டை,செப்டம்பர் 09: செல்வந்தர் கொய்யா   NA ரெஜாக் ஹாஜியார் அவர்களின் பேரனும், நேனா மோட்டார்ஸ் உரிமையாளர் புது தெரு  ASN முஹம்மது இப்ராஹீம் A. ஹஜ் அவர்களின் செல்வப் புதல்வனுமாகிய,   மௌலவி M  முஹம்மது முஜாஹிதீன் அவர்களுக்கும், செல்வந்தர் கொய்யா ஹாஜி SMKN முஹம்மது தாவுது மரைக்காயர் அவர்களின் பேத்தியும், பூக்கொய்யா ஹாஜி செய்யது அப்துல் ரஹ்மான் அவர்களின், செல்வப் புதல்வியுமாகிய S.ரஹ்மத் நிஷா அவர்களுக்கும், கடந்த 01-09-2013 அன்று கொய்யா மஹாலில் நிக்காஹ் நடைபெற்றது. சரியாக காலை 11 மணிக்கு நிக்காஹ் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை ஜமால் பாய் அவர்களின் மகனார் மௌலவி இத்ரீஸ் ஆலிம்   சுமார் 40 நிமிடங்கள் சிறப்பு பயான் நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாய அமைப்புகளை சார்ந்தவர்கள் ,வர்த்தகர்கள் ,உலமா பெருமக்கள் ,பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் . குறிப்பாக இந்தியன்  யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் mp , நாகை நாடாளுமன்ற  உறுப்பினர் AKS விஜயன் ,MP, தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோ. பழனிசாமி, பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் NR ரங்கராஜன், பட்டுக்கோட்டை நகரமன்ற உறுப்பினர் SR ஜவஹர்பாபு, திருத்துறைபூண்டி  சட்டமன்ற உறுப்பினர் கே. உலகநாதன், மற்றும் பலர் கலந்துகொண்டனர் .



வந்திருந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பல்வேறு பணிகளின் காரணமாக திருமணம் முடிந்த பின்னரே வந்து கலந்துகொண்டனர் . 



ஆயிரக்கணக்கானோர் வருகை தந்ததால்  கொய்யா மஹால் நிரம்பி வழிந்தது. ஆண்களுக்காக மதிய விருந்து கொய்யா மஹாலிலும், பெண்களுக்காக மதிய விருந்து கொத்பா பள்ளிவாசலிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதனால் கூட்ட நெரிசலை தவிர்த்து தொய்வின்றி உணவு பரிமாற்றம் நடப்பதற்கு ஏதுவாய் அமைந்தது .மேலும் அனைவரது தாகம் தீர்க்க குளிர்பானமும் விநியோகிக்கப்பட்டது . இதற்காக பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பான கம்பெனி ,கொய்யா மஹால் நுழைவு வாயிலில் பிரத்தியேகமாக ஸ்டால் அமைத்திருந்தது முத்துப்பேட்டை திருமண வரலாற்றில்  புதுமை என  வந்திருந்தவர்கள் கூறினார்கள் . 



திருமண மாப்பிள்ளை அரபுகள் அணியக்கூடிய தோப்பு  மற்றும் தலையில் கருப்பு நிற தலைப்பா அணிந்து மிகவும் எளிய  தோற்றத்தில் காட்சியளித்தார். மணமக்கள் நீடூழி வாழ வல்ல இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.



மெளத்து அறிவிப்பு: "அபூ ஆஃப்ரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா"



முத்துப்பேட்டை, செப்டம்பர் 09: குண்டாங் குலத்தெரு மர்ஹும் M. முஹம்மது காசிம் அவர்களின் மகனும், பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி, M. சுல்தான், M. சவுக்கத் அலி ஆகியோரின் அண்ணன் மகனும், ரம்ஜான் அலி, நக்கம்பாடி அஸ்ரப் அலி, N. சாதிக் இவர்களின் மைத்துனரும், RMK. N. சேக் மன்சூர் சகோதரர்களின் அக்கா மருமகனும், M. முஹம்மது இபுராஹிம் இவர்களின் சகலையும், R. முஹம்மது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய "முத்துப்பேட்டை ORG இணையத்தள ஆசிரியருமான அபு ஆப்ஃரின் என்கின்ற ரபீக் ஜெக்கரிய்யா" அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் முஹைதீன் பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்னாரின் கபரு, மற்றும் மறுமை வாழ்க்கைகாக துவா செய்யுமாறு முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அறிவிப்பவர்:

பாபு மெஹராஜ் என்கின்ற M. முஹம்மது அலி சகோதரர்கள்.

தொகுப்பு:

K.M. காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டையில் நடந்து கொண்டிருப்பது என்ன.? ஒருவர் மீது ஒருவர் புகார்.! எக்ஸ்பிரஸ் தரும் ரிப்போர்ட்..



முத்துப்பேட்டை, செப்டம்பர் 08: முத்துப்பேட்டையில் மனித நேய மக்கள் கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்களைப்பற்றி அவதூறான செய்திகளை SDPI கட்சியினர் பரப்பியதாக கூறப்படுகிறது. இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பதிலளித்த MMK கட்சியன் மாவட்ட செயலாளர் S. முஹம்மது மாலிக் அவர்கள், முத்துப்பேட்டையில் நடந்தேறிய விரும்பத்தாகத சம்பவங்கள் நடந்து முடிந்து சில நாட்கள் ஆகின்றன என்றும், அந்த சம்பவத்தை இணைத்து பொய் பிரச்சாரங்கள் மட்டும் நீடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். இதில் நடந்து முடிந்திட்ட கலவர சம்பவங்களுக்கு இன்னார் காரணம் என காவல்துறையால் அறியப்பட்டு இருதரப்பிலும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பட்டது யாவரும் அறிந்ததே. 

அப்படி சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர்கள் SDPI கட்சியை சார்ந்தவர்கள் என்பதால் அவர்களை நான் ஏதோ போலீசாரிடம் அடையாளம் காட்டி கொடுத்துவிட்டதாக ஒரு பொய்யான தகவலை முன் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், முத்துப்பேட்டையில் நடந்து வந்துள்ள கலவர சம்பவங்களுக்கு சம்பந்தமே இல்லாத அப்பாவிகள் தான் இதுவரை கைது செய்யப்பட்டு வந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்க்கு உதாரணமாக 2005 ஆம் ஆண்டு அப்பாவியான தண்டாயுதபாணியை வெட்டிவிட்டு ஓடியவர்களை யாரும் கைது செய்யப்படாமல், அப்பாவியான 32 பேர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் என்மீது குற்ற எண் 329/2005ல் 147, 148, 341, 324, 397 ஆயுத சட்டம் ஆகிய பிவிவுகளின் கீழ் நானும் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் சிறையில் இருந்தேன் என்றும், இப்போதாவது முஹம்மது மாலிக் M M K மாவட்ட செயலாளர் என்று மாவட்டத்துக்கே தெரியும் என்றும், அப்போது என்னை பற்றி அதிகம் தெரியாது அப்படி இருக்கும் போது என்னை காட்டிகொடுத்தது யார்? என்றும் கேள்வி எழுப்பினார். இப்போது என்னை கைது பண்ணினால் நான் இந்த கேள்வியை கேட்க்க மாட்டேன் ஏனெனில் இப்போது என்னைப்பற்றி எல்லோருக்கும் தெரியும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீங்கள் ஆங்கங்கே தங்களை பற்றி விளம்பரம் படுத்தி கொள்ள புகைப்படம் தாங்கிய பிளெக்ஸ் பேனர்கள் விளம்பர சுவரொட்டிகள் பெயர்தாங்கிய துண்டு பிரசூரங்கள் இவைகள் மூலம் தங்களை விளம்பரப்படுதிக் கொண்டு பெயர்களை அவன் சொல்லி விட்டான் இவன் சொல்லி விட்டான் என்று சொல்லி கொண்டு அலைவது ஒரு விளம்பரமே தவிர என்றும், விபரம் புரிந்த எவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் உண்மையை உடைத்து சொல்ல வேண்டு மென்றால் இந்த முறை நடந்தேறிய கைது சம்பவங்கள் யாவும் காவல்துறை முன் ஏற்பாடாக பதிவு செய்து வைத்திருந்த வீடியோ பதிவில் இடம் பெற்றவர்களை இனம் கண்டு கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதுதான் அப்பட்டமான உண்மை என்றும், எந்த தவறும் செய்யாமல் நான் கைது செய்யபட்ட காலத்தை ஒப்பிடும் போது இந்த முறை பெரிய அளவில் அப்பாவிகள் யாரும் கைது செய்யப்படவில்லை, யாருடைய வீட்டு கதவும் உடைக்கப்படவில்லை, யாருடைய தகப்பனாரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல வில்லை, வெளியில் நடமாட்டம் இல்லாமல் நம்மை வீட்டுக்குள் முடக்கி விடவில்லை, தப்பித்தோம் பிழைத்தோம் என்று அப்பாவிகள் யாரும் வெளி ஊர்களுக்கு ஓடிவிடவில்லை, எந்த கடையும் ஒருநாள் கூட அடைக்கப் படவில்லை, பேருந்துகள் இயக்கப்படமால் இல்லை, அவர் அவர் வேலைகளை அவரவர்கள் பார்த்தோம் என்பது தானே உண்மை என்றும் அவர் தெரிவித்தார்.

 மேலும் நான் ஒன்று கேட்கிறேன் கலவர சம்பவம் நடந்து விட்டது அதற்க்கு சம்பந்த பட்ட வர்கள் மீது கைது நடவடிக்கை வரத்தானே செய்யும் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் கைது நடவடிக்கைக்கு உட்பட்டுதானே ஆகா வேண்டும் என்றும், எனது சமுதாய சொந்தங்களே நான் இந்த ஊரையும், இந்த ஊர் ஜமாஅத் உறவுகளையும், இந்த ஊரில் உள்ள அனைத்து தரப்பு மனிதநேயம் கொண்ட மக்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன் நான் யாரையும் வசைபாடி வம்புக்கு இழுத்து கொண்டும் கடின தொந்தரவு கொடுத்து கொண்டும் ஜமாத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுங்கடங்காமல் ஊரின் அமைத்திக்கு குந்தகம் விளைவித்துக் கொண்டும் சிலரை போல் செல் போன் வைத்து அதன் மூலம் உளவு வேலை பார்த்துக் கொண்டும் தெரு தெருவாக திரிபவன் நான் அல்ல என்றும், அவர் தெரிவித்தார். 

இதிலும் நீங்கள் குறை கண்டு இல்லை இல்லை நீதான் காரணம் என்று சொல்பவர்கள் யாராவது இருந்தால் என் மீதுள்ள குற்றம் சாட்டுகளை முன் வைத்து என்னிடம் நேரடியாகவோ அல்லது பொது இடத்திலோ இது சம்பந்தமாக விவாத்திக்க எந்த குற்றமும் செய்யாத நான் தாயாராக இருக்கிறேன் என்றும் இதற்க்கு நீங்கள் தயாரா.? என்றும் அப்போது அவர் கேள்வி எழுப்பினார். இந்த செய்திகள் அனைத்தையும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்துத்துடன் பகிருந்து கொள்ள காரணம் நமது சமுதாய இளைஞர்களிடம் என்னை பற்றி தவறான பொய் பிரச்சாரம் செய்து அதனை நம் சகோதர்கள் புறம்தள்ளி அவரவர்கள்தான் உண்மையை விளக்க சொல்லி சொன்னதால்தான் நான்  இவற்றை உங்கள் முன்பு எடுத்துரைக்கிறேன் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். 

நானும் என்னை சார்ந்தவர்களும் முன் வைத்த கருத்துகளை உங்கள் முன்பு தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றும், அவையாவது ம.ம.க. மாவட்ட செயலாளர் முஹம்மது மாலிக் ஆகிய நான் என் மீது தொடர்ந்து அவதூறுகளை பரப்பும் SDPI கட்சியினருக்கு பகிரங்க சவால் விடுகிறேன் என்றும், நீங்கள் கூறும் குற்றச்சாட்டுகளை பொது இடத்தில் வைத்து ஆதாரத்தோடு நிரூபிக்க தயாரா? என்றும் அப்படி நிரூபித்துவிட்டால் நான் பொதுவாழ்க்கையில் இருந்து விலகிக்கொள்ள தயார் என்றும், இதனை ஏற்றுக்கொண்டு முன்வர SDPI கட்சியின் நிர்வாகிகள் தயாரா என்றும் அவர் சவாலை முன்வைத்துள்ளார். 


இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட்  ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர்  A. அபூபக்கர் சித்திக் அவர்களிடம் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தள நிருபர் துபாயிலிருந்து தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்ட கேள்விக்கு பின்னர் பதிலளித்த அவர், மனித நேய மக்கள் கட்சியினர், SDPI கட்சியின் மீது கூறப்பட்டுள்ள அவதூறு சம்பந்தமாக SDPI கட்சியின் பொறுப்பாளர்கள், உறுபினர்கள் யாரைப்பற்றியும் எந்தவிதமான அவதூறு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை என்றும், தன்னை பற்றிய ஓர் மளிவான விளம்பரத்திற்காகவே அவர் இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் என்றும், அவர் தெரிவித்தார்.

மேலும் இது போன்ற செயல்பாடுகளில் ஒருக்காளும் SDPI கட்சியினர் ஈடுபடவில்லை என்றும், யாரேனும் MMK கட்சியின் மீது அவதூறான செய்திகளை பரப்பிருந்தாள் மாவட்ட நிர்வாகிகள் இதே ஊரான முத்துப்பேட்டையில் தான் இருந்து வருகிறார்கள் என்றும், அந்த மாவட்ட நிர்வாகிகளை நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு தங்களுடைய விளக்கங்களை அறிவித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடுவது சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்ல அவரை சார்ந்திருக்கக்கூடிய கட்சிகளும் இழுக்கானது என்றும் மேலும் அவர் தெரிவித்தார். 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேண்டுகோள்: 

அன்பிற்கினிய சகோதரர்களே நமதுதூரில் உள்ள மதவாத சக்திகளுக்கு மத்தியில் நமதூர்  ஓர் மாபெரும் வளர்ச்சியை மேற்கொண்டு வரும் இந்த தருணத்தில் நமக்குள் ஏன் இந்த சண்டை சச்சரவுகள்? மேலும் மதவாதிகளுக்கு தக்க செருப்படி கொடுக்கும் நிகழ்வு நமதூரில் மாற்று மத சகோதரர்கள் மூலம் நடத்திய மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சியே ஓர் எடுத்துக்காட்டு ஆகும்.அவர்களுக்கு நாம் ஓர் எடுத்துக்காட்டாக நடந்து கொள்ள வேண்டும்.  அதை விட்டுவிட்டு இப்படிபட்ட சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொள்வது நமது மார்கத்தில் இடமில்லை. ஆகவே யாரையும் யாரும் பகைவராக கருதாமல், தனது கூட பிறந்த சகோதரர்கள் போல வாழ வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. மேலும்  ஏக நாயனானாக அந்த அல்லாஹ்வின் கைற்றை வலுவாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் இறைவனின் உதவி என்றும் நமக்குத்தான். 

தொகுப்பு:

A. முஹம்மது இலியாஸ். MBA., MA. (Journalism & Mass Communication) 



முத்துப்பேட்டை: PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை கைது செய்ய முயற்சி, இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு:








முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் PFI வின் மாநில செயற்குழு உறுப்பினரை  போலீசார் கைது செய்ய முயன்றதால் 100 க்கும் மேற்பட்ட மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முத்துப்பேட்டையில் ரம்ஜான் பண்டிகை அன்று பாரதிய ஜனதா கட்சி, SDPI கட்சி சார்பில் தனித்தனியாக நடைபெற்ற பேரணியால் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக பாஜக மாநில செயலாளர் முருகானந்தம் உட்பட 50  மீதும், PFI வின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் தலைமையில் 150 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 இருதரப்பிலும் 20 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். மீதமுள்ளவர்கள் தலைமறைவாகி முன்ஜாமினுக்கு சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்திருந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அபூபக்கர் சித்திக், சேக் முஹைதீன், மாலிக், சர்தார்,  முன்ஜாமீன் கிடைத்தது. இவர்கள் திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜராக தயார் நிலையில் இருந்தனர். இதனால் அபூபக்கர் சித்திக்கை கைது செய்ய முத்துப்பேட்டை ஒ,பி,எம், தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன், முத்துப்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் பால்ராஜ், இளங்கோ மற்றும் போலீசார் சென்று அபூபக்கர் சித்திக்கை காவல்நிலையம்  அழைத்தனர். இதனால் போலீசாருக்கும் அபூபக்கர் சித்திக்குக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இது  பற்றி தகவல் அறிந்ததும் SDPI கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கூடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமானதால் அங்கிருந்து போலீசார் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து  A. அபூபக்கர் சித்திக் கூறுகையில் திட்டமிட்டு பிரச்சனையை தூண்டி எங்களை பலிகடவாக்க நினைக்கிறது என்றும், இந்த வழக்கில் பாஜக பிரமுகரும் தான் உள்ளார் என்றும்  தெரிவித்தார்.

நமது நிருபர்:  

O.M. சுபைத் கான். BE

எனது திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் கலந்து கொள்ளுங்கள் H. ஹமீது சுல்தான் அழைப்பு..


முத்துப்பேட்டை, செப்டம்பர் 07: முத்துப்பேட்டையில் உள்ள  அனைத்து சகோதரர்களுக்கும் எனது முதற்கன் சலாத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளேன். அன்பார்ந்த சகோதரர்களே வருகிற ஹிஜ்ரி 1434 துல்கஃதா  பிறை 1, அதாவது ஆங்கில தேதியின் அடிப்படையில் 08-09-2013 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணியளவில் பெரியோர் களால் நிச்சயித்த வண்ணம் நாச்சிக்குளம் லெப்பை தெரு மணமகள் இல்லத்தில் எனக்கு திருமணம் நடைபெற உள்ளது.

எனவே எனது  உற்றார், உறவினர் மற்றும் அனைத்து நண்பர்களும், மற்றும் பெரியோர்களும் திருமணத்தில் தவறாமல் கலந்து கொண்டு எங்களுடைய ஈருலக வாழ்க்கைக்கு ஏக இறைவனிடம் எங்களுக்காக துவா செய்யுமாறு அன்புடன் அழைக்கிறேன். 
  
இப்படிக்கு: 

S/O: ஹுமாயுன் கபீர் 
0091 - 90439 40334...

குறிப்பு:

 காலை 9 மணியளவில் I.O.B. பேங்க் அருகில் வேன் புறப்படும்...

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)