முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. சேர்க்கை பேரணியில் ஆசிரியர்களான இராமகிருஷ்ணன், ஆசிரியை முத்துலட்சுமி, அமிர்தம், துர்கா தேவி மற்றும் உறுபினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

யூசுப் அலி ஆலிம், AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் உயர் மின் அழுத்த மின் கம்பம் பழுதடைந்து விழும் அபாயம்..



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டையில் பட்டுக்கோட்டை சாலை பழைய வின்னர்ஸ் ஸ்கூல் வாசலில் உயர் மின் அழுத்த மின் கம்பம் உள்ளது. அதே இடத்தில் தற்போது தலைமை தபால் நிலையம் உள்ளது. அங்கு உயர் மின் கம்பம் அது இரும்பு போஸ்டில் உள்ளது. அதிலிருந்துதான் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருக்கின்றது. எந்நேரத்தில் கீழே விழும் என்ற அபாயம் அந்த பகுதி மக்களுக்கு அச்சமாகவே உள்ளது. மேலும் அந்த பகுதி எந்நேரமும் மக்கள் அலைமோதும் பகுதி முக்கியமான இடங்கள், கடைகள், முக்கிய பள்ளிவாசல்கள்,முக்கிய அலுவகம் பள்ளிக்கூடம் ஆகியவைகள் இரவு பகல் மக்களின் நடமாடும் பகுதிகளாகும். அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்கு பேருந்துகள் செல்லும் பகுதியாகும்.அந்த பகுதியில் இந்த மின்கம்பம் அறுந்து கீழே விந்தால் அதிக உயிர்சேதம் ஏற்படும்.இந்த நிலை குறித்து மக்கள் அதிகம் புலம்பி வருகின்றனர். இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிர்வாகி சுல்தான் இபுராஹீம் (சு.இனா) அவர்கள் கூறியதாவது. இந்த மின் கம்பத்தால் பலரது உயிர்கள் பலியாகும் நிலை உள்ளது என்றும் ஆனால் மின்சார வாரியம் இவற்றை சரி செய்யாமல் அலட்சியப்படுத்தி வருகிறது.அரசு இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்த பிறகுதான் சரி செய்வார்கள். ஒரு மின்வாரிய ஊழியர் மரத்தில் ஏறினாலே கம்பம் முறிந்து கீழே விழுந்து விடும் தருவாயில் உள்ளது. இந்த நிலைக்கு மின்சார வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்குமா பொறுத்திருந்து பாப்போம்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், U .பத்ரு ஜமான் (அரூஷி)

முத்துப்பேட்டை மக்களுக்கு பயன் பட தயாராக இருக்கும் ஆசாத்நகர் பாலம்..



முத்துப்பேட்டை, ஜூன் 11 : முத்துப்பேட்டை ஆசாத நகர் ஜாம்வோனோடை புதிய இணைப்பு பாலம் விரைவில் திறப்பு விழா கண்டு மக்களின் பயன் பாட்டிற்கு தயாராக உள்ளது. அதன் காட்சியை இங்கு பாப்போம்..

நமது நிருபர்

ரிப்போர்ட்டர் கோவிலூர் லக்ஷ்மணன்

முத்துப்பேட்டையில் தி.மு.க. ஜாம்பை கல்யாணம் காரை உடைத்த R.S.S. தீவிரவாதிகள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை ஜாம்வோநோடையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதிகள் முழுவதும் மின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர் கட்டப்பட்டு பாட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றில் கருப்புதான் எனக்கு புடித்த கலரு என்று பாடலை கேட்ட RSS தீவிரவாதிகள் அந்த பாட்டை போடா கூடாது என்றும், இந்த பாட்டை போட்டால் எங்களுடைய தலைவன் பெயர் வருகிறது என்றும் கூறி வாய்த்தகராறில் இறங்கினர். இதனால் அங்குள்ள பொது மக்களுக்கும் கலவர காரவர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கேட்ட முத்துப்பேட்டை தி.மு.க. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. ஜாம்பை கல்யாணம் அவர்கள் காதுக்கு எட்டியது. அப்போது அவர் இருவருக்கும் மத்தியில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்தார். இதுபுடிக்காத R.S.S. தீவிரவாதிகள் மத்தியில் மேலும் ஆத்திரம் அடைந்து அங்கு நிறுத்தப்பட்ட ஜாம்பை கல்யாணம் அவர்களின் காரை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பேட்டை பிஜேபி முருகானந்தம், மற்றும் மகேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை வாழக்காய் பச்சில் மிருக உருவங்கள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வடைகடை உள்ளது. இந்த கடையில் எந்நேரமும் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் அந்த கடை மாஸ்டர் முஹம்மது இபுராஹீம் போட்ட வாழைக்காய் பஜ்ஜிகளில் ஒரு பஜ்ஜி முயல் உருவத்தில் இரண்டு முயல் கட்டி பிடித்து பாசத்தை பரிமாற்றம் செய்வது போலவும், இன்னொரு செம்மறி ஆடு அமர்ந்து அசை போடுவது போலவும் இருந்தது.இவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

அகலத்.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டையில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி விடிய விடிய நடைபெற்றது..!




முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக கலை இலக்கிய நிகழ்வு விடிய விடிய நடைபெற்றது. முன்னதாக மண்ணை சாலை ரயில்வே கேட்டிலிருந்து மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இச்சங்கத்தின் நிர்வாகி டாக்டர். கே. இளங்கோ தலைமை வகித்தார். இச்சங்கத்தின் ஒன்றிய செயலாளர் திரு.கே.வி.ராஜேந்திரன், சி.பி.எம்.நகர செயலாளர் ஏ. காளிமுத்து, சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் முருகையன், துணைச் செயாளர் ஆர்.எஸ்.ராமநாதன், காங்.பிரமுகர் நா.ஜீவானந்தம், உள்பட முக்கிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். அப்போது ஊர்வலமாக குமரன் பஜார், பழைய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை வழியாக ஆசாத் நகர் பழைய பேருந்து நிலையம் சென்று விழா மேடையை அடைந்தனர்.மேலும் இதில் பல்வேறு அமைப்பு நிர்வாகிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் தஞ்சை ஜான் பீட்டரின் தப்பாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் ஆகியதும் நடைபெற்றது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நடத்திய வினா,விடையும், வெற்றி பெற்றவர்களின் விபரமும்..


முத்துப்பேட்டை, ஜூன் 02 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய மாபெரும் வினா விடை போட்டி மிக சிறப்பாக நடந்து முடிந்தது. இதில் அதிகமான வாசகர்கள் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக பதிலளித்தனர். மேலும் இந்த போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று பரிசை பெற்ற வாசகர்களுக்கு விரைவில் பரிசுகள் வழங்கப்படும். மேலும் இதில் கலந்து கொண்டு அனைத்து வாசகர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் தங்களுடைய வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

வெற்றி பெற்றவர்களின் விபரம்:

முதல் பரிசு பெற்றவர் J.லாமிய அவர்கள் புதிய காளியம்மன் கோவில் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 26 பதில்.சரியானவை

இரண்டாவது பரிசு பெற்றவர் ம.கபீர் அவர்கள் தெற்கு தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 24 பதில்.சரியானவை

மூன்றாவது பரிசு பெற்றவர் ஆ.நே. ஹாஜா நஜுபுதீன் அவர்கள் புதுத் தெரு முத்துப்பேட்டை, 30 கேள்விக்கு 18 பதில் சரியானவை
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

பெற்றோல் விலையை கண்டித்து திருவாரூரில் SDPI நடத்திய மாபெறம் ஆர்பாட்டம்...





திருவாரூர், ஜூன் 02 : SDPI திருவாரூர் மாவட்டம் சார்பாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பஸ் ஸ்டாண்ட் முன்பு 01 /06 /2012 அன்று மாலை 4 .30 மணிக்கு நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுசா அவர்கள் தலமை தங்கினார் , மாவட்ட தொழிற்சங்க தலைவர் அப்துல் கரீம் , மாவட்ட பொருளாளர் நைனா முஹம்மது, நன்னிலம் தொகுதி கமிட்டி உறுப்பினர் அப்துல் ஹமித், ஆகியோர் கலந்து கொண்டனர் . .மாநில செயற்குழு உறுப்பினர் A .அபூபக்கர் சித்திக் அவர்கள் சிறப்புரை ஆற்றினர் .மாவட்ட செயலாளர் N .m .பாவா பக்ருதீன் கண்டன உரை ஆற்றினார் .ஷேக் முஹைதீன் நகர செயற்குழு கண்டன கோஷம் ஆற்றினார் .இறுதியாக மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் A . முஹம்மது பைசல் அவர்கள் நன்றி உரை ஆற்றினார் இதில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த அணைத்து கிளை நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர் .இதில் நூற்றுகணக்கான பொதுமக்களும் கலந்து கொண்டனர்

தொகுப்பு

AKL .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் நடத்திய கேள்வி பதில் போட்டி ஓர் பார்வை


முத்துப்பேட்டை, மே 31 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் சார்பில் நடைபெற்ற வினா விடை போட்டி குறித்த ஓர் தொகுப்பு இதோ உங்கள் பார்வைக்கு தருகிறோம்..

1) இவ்வுலகில் மனிதனையும், ஜின்களையும் அல்லாஹ் எதற்காக படைத்தான்.?
(A) நன்றாக வாழ்வதற்கு (B) பிறருக்கு உதவி செய்ய (C) தன்னை வணங்குவதற்காக (D) ஏதும் தெரியாது.

விடை: (C) தன்னை வணங்குவதற்காக
2) இந்த உலகில் அல்லாஹ் வால் சபிக்கப்பட்ட சமுதாயம் எது?
(A) இந்து சமுதாயம் (B) கிருஸ்தவ சமுதாம் (C) புத்த சமுதாயம் (D) யூத சமுதாயம்.

விடை:(D) யூத சமுதாயம்
3) உலகில் முதன் முதலில் ராணுவத்தை (எல்லைப் பாதுகாப்புப் படையை) அறிமுகம் செய்தவர் யார்?
(A) அலி (ரலி) (B) உமர் (ரலி) (C) பிலால் (ரலி) (D) எதுவும் தெரியாது.

விடை:(B) உமர் (ரலி)
4) மறுமை நாளில் அல்லாஹ் மூன்று நபருடன் பேசவே மாட்டன், அந்த மூவரில் ஒருவரின் செயலைக் குறிப்பிடுக?
(A) பெருமையடிக்கும் ஏழை (B) பெருமையடிக்கும் பணக்காரன் (C) எதுவும் தெரியாது.

விடை:(A) பெருமையடிக்கும் ஏழை
5) அல்லாஹ் எந்த நபியின் தியாகத்தை நினைவு கூர்வதற்காக ஹஜ்ஜை கடமையாக்கினான்?
(A) முஹம்மது நபி (ஸல்) (B) ஆதம் (அலை) (C) சுலைமான் (அலை) (D) இபுராஹீம் (அலை)

விடை: (D) இபுராஹீம் (அலை)
6) இந்த முஸ்லிம் சமுதாயத்தின் நம்மிக்கையார் என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் யாரை குறிப்பிட்டார்கள்?
(A) பிலால் ரலி, (B) அபு உபைதா ரலி, (C) அபூபக்கர் சித்திக் ரலி, (D) அன்னை ஆயிஷா ரலி

விடை:(B) அபு உபைதா ரலி
7) தனது 17 வயதிலேயே இந்திய நாட்டிற்காக தன் உயிரையே தியாகம் செய்ய வேண்டும் என்று போர்க்களம் புறப்பட்ட தியாகி யார்?
(A) கஜினி முஹம்மது (B) திப்பு சுல்தான் (C) அவரங் சிப் (D) ஹைதர் அலி

விடை:(B) திப்பு சுல்தான்
8) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இபாதத்தின் சிறப்பைவிட........................சிறப்புதான் சிறந்தது என்று எதனைக் குறிப்பிட்டார்கள்?
(A) கல்வி (B) பொருளாதாரம் (C) பொதுலம் (D) வெற்றி

விடை:(A) கல்வி
9) அல்லாஹ் மூன்று நபர்களுக்கு சொர்கத்தை ஹராமாக்கி விட்டான், அதில் ஏதேனும் ஒரு நபரைப் பற்றி குறிப்பிடுக?
(A) ஏழைக்கு உதவி புரியாதவன் (B) பெற்றோருக்கு நோவினை செய்பவன் (C) எனக்கு தெரியாது.

விடை:(B) பெற்றோருக்கு நோவினை செய்பவன்
10) முதன் முதலில் இஸ்லாத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்த பெண் சகாபி யார்?
(A) சுமையா ரலி, (B) ஆய்ஷா ரலி, (C) பாத்திமா ரலி, (D) கதிஜா ரலி

விடை:(A) சுமையா ரலி
11) இந்தியாவில் இஸ்லாமியர்கள் எத்துனை ஆண்டு காலம் ஆட்சி செய்தனர்.?
(A) 600 (B) 1100 (C) 900 (D) 1111

விடை: 1100
12) நபி (ஸல்) அவர்கள் இவர் அல்லாஹ்வின் வாள் (சைபுல்லாஹ்) என்று யாரை குறிப்பிட்டார்கள்?
(A) அலி ரலி (B) உமர் ரலி (C) காலித் பின் வாலித் ரலி (D) ஹம்சா ரலி

விடை: காலித் பின் வாலித் ரலி
13) எந்த கலிபாவால் பைத்துல் முக்கத்தஸ் (முதல் கிப்லாவை) யூதர்களிடம் இருந்து முதன் முதலில் மீட்டெடுத்த அந்த சகாபியின் பெயர் என்ன?
(A) அபூபக்கர் சித்திக் (B) உமர் ரலி (C) உஸ்மான் ரலி (D) அலி ரலி

விடை: உமர் ரலி
14) ஒரு நபித்தோழர் இறந்ததற்கு அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்கியது, அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) உஸ்மான் ரலி (C) அனஸ் பின் நள்ர் ரலி (D) ஸஆது பின் முஆத் ரலி

விடை: ஸஆது பின் முஆத் ரலி
15) நபி (ஸல்) அவர்கள் தமது விண்ணுலகப் பயணத்தின் போது சொர்கத்தில் ஒரு நபித்தோழரின் காலடி ஓசையை கேட்டார்கள் அந்த சஹாபியின் பெயர் என்ன?
(A) பிலால் ரலி (B) அலி ரலி (C) அபூபக்கர் சித்திக் (D) உமர் ரலி

விடை: பிலால் ரலி
16) அபூபக்கர் சித்திக் ரலி மற்றும் உமர் ரலி போன்ற மூத்த சகாபிகளுக்கு தலைமையேற்று படை நடத்திய சிறிய வயது நபித் தோழர் யார்?
(A) உஸ்மான் ரலி (B) உஸாமா பின் ஜைத் ரலி (B) அலி ரலி (D) ஏதும் தெரியாது

விடை: உஸாமா பின் ஜைத் ரலி
17) கி.பி.1857 ல் நடத்திய சிப்பாய்களின் எழுச்சியின் போது முஸ்லிம் மக்கள் எத்துனை பேர் சகீதானார்கள் (கொல்லாப்பட்டனர்)?
(A) 20,000 பகதுர்ஷாவின் மகன் உள்பட (B) 27,500 பகதுர்ஷாவின் மகன் உள்பட (C) 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட

விடை: 27,000பகதுர்ஷாவின் மகன் உள்பட
18) இங்கிலாந்து நாட்டில் வெள்ளையர் ஆட்சி நிலை நாட்ட வேண்டும் என்றால் குர்ஆனை கிழித்தெறிய வேண்டும் என்று சொன்னவன் யார்?
(A) பிரான்ஸ் மன்னன் கி.பி. 1888 (B) ஜோசெஹ்ப் இந்தி (C) அனீஸ் தாஸ் கி.பி. 1889 (D) பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885

விடை: பிரிட்டீஸ் மன்னர் கிலார்டு. கி.பி. 1885
19) இந்திய போராளி திப்புசுல்தான் அவர்கள் எந்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்த்தார்?
(A) ஹிந்தி (B) ஃபிரன்ஜூ (C) உர்து (D) ஆங்கிலம்

விடை: ஃபிரன்ஜூ
20) துருக்கியில் இஸ்லாமிய ஆட்சியை (கிலாஃபத்தை) யூதர்கள் எந்த ஆண்டு முழுமையாக ஆட்சியை கலைத்தனர்?
(A) 1924 பிப் 22 (B) 1928 மார்ச் (C) 1930 மே 30 (D) 1950 ஆகஸ்ட் 15

விடை: 1924 பிப் 22
21) எந்த நபியை அல்லாஹ் தாயும், தந்தையும் இல்லாமல் தன வடிவத்திலேயே படைத்தான், அந்த நபியின் பெயர் என்ன?
(A)நபி ஈசா அலை, (B) நபி இப்ராஹீம் அலை, (C) நபி ஆதம் அலை, (D) முஹம்மது நபி (ஸல்).

விடை: ஆதம் அலை.
22) எந்த நபியை அல்லாஹ் இவ்வுலகில் கடுமையான நோயைக் கொண்டு சோதித்தான்?
(A) நபி ஈசா அலை (B) நபி மூஸா அலை (C) நபி யூனிஸ் அலை (D) நபி ஐய்யூப் அலை

விடை: நபி ஐய்யூப் அலை
23) மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த சஹாபாக்களை (சஹாபிகளை) அரபியில் வரலாறு எவ்வாறு குறிப்பிடுகிறது?
(A) அன்சாரிகள் (B) முஹாஜிர்கள் (C) முஜாகிதீன்கள் (D) எதுவும் தெரியாது.

விடை: முஹாஜிர்கள்
24) உலக மக்களால் பாலைவனச் சிங்கம் எனப் போற்றப்பட்டவர் யார்?
(A) திப்பு சுல்தான் (B) மறுத்த நாயகம் யூசுப் கான் (C) உமர் முக்தார் (D) ஹைதர் அலி

விடை: உமர் முக்தார்
25) நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தின் போது நான்காவது வானத்தில் எந்த நபியை சந்தித்தார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி இத்ரீஸ் அலை (B) நபி மூசா அலை (C) நபி எஹ்யா அலை (D) நபி இல்யாஸ் அலை

விடை: நபி இத்ரீஸ் அலை
26) எந்த நபி இவ்வுலகில் ஆயிரம் வருடம் தூதுச் செய்தியை மக்களிடம் எடுத்துச் சொன்னார்கள், அந்த நபியின் பெயர் என்ன?
(A) நபி மூசா அலை (B) நபி நூஹு அலை (C) நபி சுலைமான் அலை (D) நபி ஆதம் அலை

விடை:நபி நூஹு அலை
27) திருமறைக் குர்ஆன் முழுமையாக (இவ்வுலகிற்கு) இறக்கி அருளப்பட்ட ஆண்டு?
(A) 21 ஆண்டு (B) 22 ஆண்டு (C) 23 ஆண்டு (D) 28 ஆண்டு

விடை: 23 ஆண்டு
28) ஐவேலை தொழுகையில் மொத்தம் எத்துனை ரக்ஆத்துகள் உள்ளன?
(A) 17 ரக்ஆத்துகள் (B) 15 ரக்ஆத்துகள் (C) 16 ரக்ஆத்துகள் (C) 18 ரக்ஆத்துகள்

விடை: 17
29) வட்டி வாங்கி வந்தவர்களை நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் சென்ற போது காட்டப்பட்டது, அவர்களின் நிலை எவ்வாறு இருந்தது?
(A) உடல் முழுவதும் இல்லை (B) வயறு ஊதிப் போய் இருந்தது (C) கால் இரண்டும் இல்லை (D) எனக்கு தெரியாது

விடை: வயறு ஊதிப் போய் இருந்தது
30) நாய் மற்றும் உருவப்படம் உள்ள வீட்டிற்குள் யார் நுழைய மாட்டார்கள்?
(A) மலக்குகள் (B) பணம் செல்வம் (C) செய்தாங்கள் (D) எனக்கு தெரியாது
விடை: மலக்குகள்

source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கமும், நடந்து முடிந்த 4 ஆம் ஆண்டு நிகழ்சிகளும்..







முத்துப்பேட்டை,மே 30 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கம் துபாய் கமிட்டியின் 4 ஆம் ஆண்டு திருக்குர்ஆன் மற்றும் பேச்சுப் போட்டி நேற்று காலை 9 மணியிலிருந்து ஜனாப். அல்ஹாஜி. கா.மு.நெய்னார் முஹம்மது அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பின்னர் இந்நிகழ்ச்சி துவக்கமாக புதுப்பள்ளி இமாம் கிராத் ஓதி துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு ஜனாப் ஹாஜி.P .சின்ன மரைக்காயர் அவர்கள் தலைமை வகித்தார். இதனைத்தொடர்ந்து ஜனாப். M.H. சேக் தாவூது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன் பின்பு மெளலவி ஹாஃபீல் P .அஹமது ஜலாலுத்தின் ரஷாதி குத்பா பள்ளி இமாம் அவர்கள் பெண்களின் ஒழுக்கமும் சமுதாயத்தின் வளர்ச்சியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் ஹாஜி.L .கமால் பாட்சா சேர்மேன் நேசனல்ஃபார்மா மருத்துவமனை மற்றும் ஆராயிச்சி மையம் தஞ்சாவூர். மேலும் , இச்சங்கத்தின் முத்துப்பேட்டை பிரதிநிதிகளும், சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்களும் மற்றும் அனைத்து முஹல்லாஹ் பள்ளி நிர்வாகிகள்,இமாம் பெருமக்கள் ஊர் மக்கள் மற்றும் அனைத்து இயக்க பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் அனைத்து முஹல்லாஹ் பள்ளி மணாவ, மாணவிகளும் மற்றும் பெண்கள் மதரசா மாணவிகளும் போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளியிட்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளின் விபரம்:

திருக்குர்ஆன் ஓதும் போட்டி ஆண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு புதுப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது தாமர் தகப்பனார் பெயர் துறை என்கிற M.பசுல் ரஹ்மான் அவர்களின் மகன் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2500 ரூபாய் மத்திப்புள்ள தங்க காசு மற்றும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது ரசீத் கான் தகப்பனார் பெயர் பகுருதீன் அவர்களின் மகன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு தர்ஹா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் ஜாபார் அஸ்பாக் தகப்பனார் பெயர் மன்சூர் அலி அவர்களின் மகன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் அப்துல் பாசித் தகப்பனார் பெயர் அப்துல் அஜீஸ் அவர்களின் மகன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது ஆசீக் தகப்பனார் பெயர் நூர் முஹம்மது அவர்களின் மகன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு புதுப்பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் பாரீஸ் அஹமது தகப்பனார் பெயர் M.சம்சுதீன் அவர்களின் மகன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

திருக்குர்ஆன் ஓதும் போட்டி பெண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி அஹமது ஆசியா தகப்பனார் பெயர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு முஹைதீன் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ஃபஹீமா பேகம் தகப்பனார் பெயர் முஹம்மது முஹைதீன் அவர்களின் மகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி கதிஜத்துள் குப்ரா தகப்பனார் பெயர் முஹம்மது இக்பால் அவர்களின் மகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு செக்கடித் தெரு பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி நூருல் ஆய்ஷா தகப்பனார் பெயர் ரம்ஜான் அலி அவர்களின் மகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு முஹைதீன் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ஆஃப்ரீன் பானு தகப்பனார் பெயர் சாகுல் ஹமீது அவர்களின் மகள் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு தர்ஹா பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் கபீர் அஹமது அவர்களின் மகள் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

பேச்சுப் போட்டி ஆண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஜாஹீத் தகப்பனார் பெயர் அஹமது அலி அவர்களின் மகன் முதலாவது இடத்தை பிடித்துள்ளார்.இவருக்கு 2500 ரூபாய் மத்திப்புள்ள தங்க காசு மற்றும் முத்துப்பேட்டை இஸ்லாமுய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் நபீல் அஹமது தகப்பனார் பெயர் ஷாஜஹான் அவர்களின் மகன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் சாசிதீன் தகப்பனார் பெயர் பாவா அவர்களின் மகன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் தானிப் முஹம்மது தகப்பனார் பெயர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு முஹைதீன் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஹம்மது அசருதீன் தகப்பனார் பெயர் முஸ்தபா அவர்களின் மகன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு ஆசாத் நகர் பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவன் முஸ்தாக் ஆப்ரீன் தகப்பனார் பெயர் நிஜாமுதீன் அவர்களின் மகன் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார்.முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

*************************************************************************************

பேச்சுப் போட்டி பெண் பிள்ளைகள் பரிசு பெற்ற விபரங்கள்:

1 வது பரிசு அரபு சாஹிப் பள்ளி பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் முஹம்மது இபுறாஹீம் அவர்களின் மகள் முதலாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

2 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி அஹமது ஆசியா தகப்பனார் பெயர் முஹம்மது இஸ்மாயில் அவர்களின் மகள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

3 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி சுமையா தகப்பனார் பெயர் அஹமது மன்சூர் அவர்களின் மகள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

4 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி முஹ்பிதா சஹானா தகப்பனார் முஹம்மது ரபீக் அவர்களின் மகள் நான்காவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

5 வது பரிசு குத்பா பள்ளி முஹல்லாவை சேர்ந்த மாணவி பரக்கத் நிஷா தகப்பனார் பெயர் ஜாகிர் உசேன் அவர்களின் மகள் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

6 வது பரிசு தர்பியத்துள் பனாத் பெண்கள் மதரசாவை சேர்ந்த மாணவி ருக்கையா தகப்பனார் பெயர் நெய்னார் முஹம்மது அவர்களின் மகள் ஆறாவது இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் பாராட்டு சான்றிதழும், மெடலும் வழங்கப்பட்டது.

மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆiறுதல் பரிசுகளும் முத்துப்பேட்டைஇஸ்லாமிய நல சங்கத்தின் சான்றிதல் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும் இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

U .பத்ரு ஜமான் (அரூசி)யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய்.!



முத்துப்பேட்டை,மே 29 : முத்துப்பேட்டையில் ஒன்றிய இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, தரம் உயர்த்த வேண்டும்,உயிர் காக்கும் மருந்துகளை போதுமான அளவிற்கு இருத்தல் வேண்டும். 24 மணிநேரமும் மருத்துவர்கள் பணியில் இருத்தல் வேண்டும். புதிய மருத்துவமனை கட்டிடத்தை உடனே திறக்க வேண்டும். குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவரை உடனே நியமிக்க வேண்டும், பிரேத பரிசோதனை செய்யும் வசதியை மீண்டும் உடனே செயல்படுத்த வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றகோரி முத்துப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் பி.மீனம்மாள்தலைமை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தின் கோரிக்கையை விளக்கி அகில இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநில குழு உறுப்பினர் ஆர்.தமிழ் செல்வி ராஜா பேசியதாவது, இன்று நடைபெற்ற இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றாலும் இந்த பகுதிக்கு முக்கியமானதாகும் என்றும், தமிழகத்தில் உள்ள சுகாதாரங்களில் உள்ள அவலங்கள் உயிர் காக்கும் மருந்துகள் எந்த நேரமும் இருப்பு வைத்திருக்க மாட்டார்கள் என்றும் இதனால் தமிழக மக்கள் அதிகம் நோய்களால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும் ஆப்போது அவர் தெரிவித்தார். இதால் அனைத்து மக்களையும் பாண்டிசேரி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள் அதில் சிகிச்சை பெரும் தமிழக மக்கள் 12 பேரில் ஒருவருக்கு புற்று நோய் இருப்பது தெரியவந்தது என்றும் அவர் தெரிவித்தார்.சில நாட்களுக்கு முன்பு எதார்த்தமாக திருத்துறைப்பூண்டி உள்ள அரசு மருத்துவமனையில் ஆய்வை மேற்கொண்டோம். அங்கு நிறைமாத கர்பிணிப் பெண் சிறுநீர் கழிக்க முடியாத அளவிற்கு வளாகத்தில் உள்ள சுகாதார நிலயம் அவல நிலையில் உள்ளதை கண்டு நாங்கள் மன வேதனை அடைந்தோம் என்றும், இந்த அவல நிலையை தடுக்கத்தான் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம சுகாதார நிலையத்தை அமைத்துள்ளது. இவற்றை முறையாக அரசு கடைபிடிக்க வேண்டும் என்று வலியுருத்தி நாங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறோம் என்று மேலும் அவர் தெரிவித்தார். இதில் ஒன்றிய பொருளாளர் பரமேஷ் வரி, ஒன்றிய துணைச் செயலாளர் வி.நிர்மலா, ஒன்றிய துணைத்தலைவர் ராணி, இ.கம் ஒன்றிய தலைவர் முருகையன் மற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

AKLT.அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை இஸ்லாமிய நலசங்கத்தின் நிகழ்ச்சி ஓர் பார்வை..



முத்துப்பேட்டை, மே 29 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம் நடத்தும் 4 ஆம் ஆண்டு குரான் மனப்போட்டி மற்றும் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் மிக சிறப்பாக காலை 9 மணிமுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் முதல் அமர்வில் சுமார் 800 க்கும் பெறப்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர். மேலும் மதியம் 4 மணிக்கு மேல் சிறப்பான குழந்தைகளின் மனதில் பதிந்த திருமறைக் குர்ஆன் வாசனைகளை வெளிபடுத்தும் விதமாக நிகழ்சிகள் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியை காண வெளி ஊர்களிலிருந்து வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
source from:www.muthupettaiexpress.blogspot.com,www.mttexpress.com
தொகுப்பு

யூசுப் அலி (ஆலிம்)

இறைவேதம் அழைக்கிறது, முத்துபேட்டை இஸ்லாமிய நலசங்கம் நடத்தும் மார்க்க திறனாய்வு போட்டி...




முத்துபேட்டை, மே 27 : முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்” நடத்தும் 4-ம் ஆண்டு "மாபெரும் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் பேச்சுப்போட்டி சிறப்பு விழா நிகழ்ச்சி".நாள்: 29-05-2012 செவ்வாய்க்கிழமை நேரம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை, இடம்: முத்துப்பேட்டை ”கொய்ய மஹால்”நமதூர் அனைத்து பள்ளிவாசல் மதரஸா, நிஸ்வான் மாணவ, மாணவியர் மற்றும் நம்ம வீட்டுக் குழந்தைகள் பங்கேற்கும் திருக்குர்ஆன் ஓதுதல், பேச்சுப்போட்டி மற்றும் உலமா பெருமக்களின் சிறப்புரைகள் நடைபெற இருக்கிறது. வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசளிப்பும் நடைபெறுகிறது.அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இன்நிகழ்ச்சியை சிறப்பித்தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு; பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இப்படிக்கு:
S. ஜஹபர் உசேன்
தலைவர்
M.A.K ஹிதாயத்துல்லா
பொதுச்செயலாளர்
M. சகாபுதீன்
பொருளாளர்
மற்றும் சங்க உறுப்பினர்கள் & பிரதிதரநிதிகள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
முத்துப்பேட்டை J .ஷேக் பரீது

+2 தேர்வில் சதம் அடித்த திருவாரூர் மாவட்டம்..


திருவாரூர், மே 27 : திருவாரூர் மாவட்டத்தில் +2 தேர்வு எழுதிய 11 பள்ளிகளை சார்ந்த மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் . முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 32 பேரும் ,பாமணி அரசு மேனிலை பள்ளியில் 46 பேரும் ,வலங் கைமான் மகாதேவ குருஜி பள்ளியில் 36 பேரும் ,பேரளம் சங்கரா பள்ளியில் 28 பேரும் ,திருவாரூர் மீனாட்சி மெட்ரிக் பள்ளியில் 2 பேரும் மன்னார்குடி மேல மரவக்காடு பள்ளியில் 20 பேரும் ,மன்னார்குடி சண்முகா மெட்ரிக் பள்ளியில் 45 பேரும் ,மன்னார்குடி பாரதிதாசன் பள்ளியில் 138 பேரும் ,நீடாமங்கலம் நீளம் மெட்ரிக் பள்ளியில் 76 பேரும் ,தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

முத்துபேட்டை ஜே. ஷேக் பரீத்

இஸ்லாமிய இயக்க தலைவர்களை இணைத்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மணமேடை!






மதுரை, மே 27 : நேற்று மதுரையில் நடந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத்தலைவர் முனிரின் தம்பி திருமண நிகழ்ச்சி முஸ்லிமல்லாதவர்களுக்கு திருமறை வழங்கும் நிகழ்ச்சியாகவும்,திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சியாகவும், திருமணத்திற்கு வந்தவர்கள் இரத்ததானம் வழங்கும் நிகழ்சியாகவும் எல்லாவற்றிற்கும் மேல் இஸ்லாமிய இயக்க தலைவர்களை ஒருங்கிணைத்த நிகழ்ச்சியாகவும் ஆனது! எஸ்.எம். பாக்கர், காதர்மைதீன், ஜவாஹிருல்லாஹ்,தேசிய லீக் பஷீர், இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனிபா ஆகியோரை ஒரே மேடையில் பார்த்த போது சமுதாயம் ஒன்றிணைந்தது போல் சந்தோஷம் ஏற்பட்டது! அல்ஹம்து லில்லாஹ்.
source from:www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்

மதுரை மூசா

திருச்சி ஏர்போர்ட்டில் தலை விரித்தாடும் லஞ்ச ஊழல்.


திருச்சி, மே 27 : இரண்டு சாரைப்பாம்புகள் ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைவது போல் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது லஞ்சமும் இந்தியர்களின் ரத்தமும்! நியாயமான அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கூட இன்று லஞ்சம் கொடுக்காமல் எதையும் நாம் சாதித்துவிட முடியாது என்ற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கொடுக்கப்பட்டது எவ்வளவு லஞ்சம் என்ற வகையில்தான் நாம் அடுத்தவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து ஆறுதல் அடைய வேண்டியிருக்கிறது. படங்களில் ஊழல் செய்பவனை கதாநாயகன் தண்டிக்கும்போது முதல் ஆளாக கைதட்டும் நாம்தான், நமக்கும் லஞ்சம் வாங்கும் சந்தர்பம் வரும்போது கை தட்ட நீட்டிய கையை உள்ளே இழுப்பதில்லை என்பதே உண்மை!

லஞ்சம் வாங்கி வாழ்பவனே பிழைக்கத் தெரிந்தவன் என்ற இந்திய மனப்பான்மைக்கு நாம் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே மாறிக்கொண்டு இருக்கிறோம்! என் வேலை எனக்கு சீக்கிரம் முடிய வேண்டும்! அதற்கு நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் எவ்வளவு லஞ்சம் வேண்டுமானாலும் கொடுப்பேன் என்றுதான் ஒவ்வொருவரும் இந்திய நேர்மையில் இருந்து ஒவ்வொரு செங்கலாக உருவிக் கொண்டிருக்கிறோம்! என்றாவது ஒட்டுமொத்தமாக தலையில் விழும்போது காப்பாற்ற யாருமே இருக்கப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்! சரி.. இந்த கதையெல்லாம் வேணாம் தலைப்புக்கு வாங்கன்னு சொல்றீங்களா? அதுவும் சரிதான்... சமீபத்தில் சிங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்தேன், என்னைப்போல தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் திருச்சி விமான நிலையம்தான் முதல் தேர்வு!

அவ்வாறே நானும் திருச்சிக்கு சென்றேன். விமான நிலையம் புது கட்டிடத்துக்கு மாறி வெகு நாட்கள் ஆகிவிட்டது, ஆனால் அங்கு வேலை பார்க்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் மன அழுக்கு மட்டும் இன்னும் அப்படியே உள்ளது. விமானத்தை விட்டு இறங்கி குடிநுழைவுச் சோதனைக்கு சென்றதில் இருந்தே நமக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்துக்கொண்டு இருக்கிறது. அவைகளை மொத்தமாகச் சொல்லாமல் ஒவ்வொரு சம்பவமாகத் தொகுத்துச் சொல்கிறேன், நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், ஆனாலும் கண்டிப்பாக சொல்லியே ஆகவேண்டிய சூழ்நிலைதான் இப்போது அங்கே நிலவுகிறது! ஏற்கனவே ஒருமுறை ABT ட்ராவல்ஸின் அராஜகம்! என்ற பதிவிற்கு கிடைத்த உங்கள் ஆதரவின் உந்துதலால் இதையும் எழுதுகிறேன். தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ இனி அங்கு செல்பவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கையாகவாது இருக்கட்டும்!


சம்பவம் ஒன்று.
விமானத்தை விட்டு இறங்கி ஒரு பேருந்தில் கொண்டு போய் குடிநுழைவு வாசலில் ( Immigration Check point ) இறக்கிவிட்டனர். என்னதான் அடிக்கடி வந்துபோனாலும் விமானத்தில் ஏறியதுமுதல் சொந்த பந்தங்களை காணும் ஆவல்தான் வீடு போய் அவர்களை பார்க்கும்வரை இருக்கும்! ஒவ்வொருவருமே அந்த ஆசைகளை சுமந்துதான் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். ஒரு விமானம் முழுவதும் வந்த பயணிகளுக்கு மூன்றே மூன்று அதிகாரிகள்தான்! அதுகூட மிட்நைட் என்பதால் அதிகாரிகள் குறைவு என்று எடுத்துக்கொள்ளலாம்! ஆனால் அதன்பிறகு நடந்ததுதான் கொடுமை!

நாங்கள் வரிசையில் நிற்கும்போதே ஒருவர் உள்ளே இருந்து வந்து ஒரு பெயரை சொல்லி அழைத்துக்கொண்டே வந்தார், உடனே அவர் பெயர் சொல்லி அழைத்த நபர் தன் மனைவியோடு வரிசையின் கடைசியில் இருந்து வந்து எந்தவித கூச்சமும் இல்லாமல் வாயெல்லாம் பல்லாக வரிசையில் நிற்பவர்களை கடந்து அந்த ஊழியரை பின்தொடந்து சென்றார்! அதிகாரிகளும் அவர்களுக்கு முதலில் செக் செய்து அனுப்புகின்றனர்! அந்த ஒருவர் மட்டும் அல்ல அதன் பிறகும் இதேபோல இன்னும் இரண்டுபேரை அந்த ஊழியர் அழைத்துக்கொண்டு சென்றார்! எந்த நாட்டு இன்டர் நேசனல் ஏர்போர்ட்டிலும் காணக்கிடைக்காத காட்சி அது! அருகில் நின்று கொண்டிருந்தவர் சொன்னார், அவர்கள் அந்த விமான நிலையத்தில் வேலை பார்க்கும் ஏதாவது ஒரு அதிகாரிக்கு உறவாக இருக்கும் என்று! அப்படியே உறவு இல்லையென்றாலும் இதேபோல் செல்ல வாய்ப்புள்ளது என்று அவர் சொன்னதுதான் அதிர்ச்சியின் உச்சம்!

அதாவது, நம்மை வரவேற்க வந்தவர்கள் இதற்கென சிலரை பிடித்து தள்ளுவதை தள்ளி நாம் பெயரை அவர்களிடம் கொடுத்துவிட்டால் போதும், அவர்களும் கடமை தவறாமல் நம்மை வரிசையில் நிற்கவிடாமல் உறவு என்று சொல்லி அழைத்துவிடுவார்கள்! இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும், சிங்கபூர் நான் பிழைக்க வந்த நாடுதான், ஆனால் நிரந்தரவாசியாக இருந்தால்கூட போதும் எந்த நாட்டிற்கு போனாலும் எந்த நாட்டில் இருந்து வந்தாலும் குடிநுழைவுக்கு எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம், எனது இந்தியன் பாஸ்போர்ட்டை வைத்து ஆட்டோ ஸ்கேனிங்கில் வந்து விடலாம். ஆனால் சொந்த நாட்டில் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துகொண்டு இந்த அவலங்களை எல்லாம் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!

சம்பவம் இரண்டு.

ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து வந்தால் அடுத்து லக்கேஜ் கலெக்சன். இந்த முறை எனக்கு ஒரே ஒரு செக் இன் லக்கேஜ் மட்டுமே, இங்கு ஐ.டி. ஷோவில் வாங்கிய ஒரு LED T.V . இங்கு அதை செக் இன் செய்து கன்வேயரில் அனுப்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஏனென்றால், இதுபோல எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஐட்டங்களுக்கு தனி கன்வேயர்! ஆனால் திருச்சி கன்வேயர் பற்றி சொல்லவே வேணாம், புது விமான நிலையத்தில் இப்படி ஒரு டிசைனிங்?! அந்த கன்வேயரில் வரும் உங்கள் லக்கேஜ் சேதப்படாமல் வந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! சரி.. அதைப்பற்றி தனியாகவே எழுதலாம் அவ்வளவு இருக்கு! பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த காரணங்களால் டிவி போன்ற ஹேண்டில் கேர் ஐட்டங்களை கன்வேயரில் அனுப்பாமல் தனியாக சைடில் உள்ள வாசல் வழியாக எடுத்து வைப்பார்கள், எனது டிவி யையும் எடுத்து வைப்பார்கள் என்று காத்துகொன்டிருந்தேன், ஆனால் எடுத்துவைத்தபாட்டைக் காணும்! ஆனால் மற்றவர்கள் ஒவ்வொருவராக எடுத்துகொண்டு சென்றார்கள். சரி.. அருகில் சென்று கேட்கலாம் என்று அங்கு சென்றேன், நான் போனதுமே அங்கு உள்ள ஒரு ஊழியர் வந்து " உங்களது என்ன பொருள் சார்?" என்றார், நானும் டிவி என்று மாடலையும் சொன்னேன், கேட்டுக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார், நானும் பரவாயில்லை நல்ல சர்வீஸ் என்று நினைத்தேன்! ஆனால் கொஞ்ச நேரத்திலே என் நினைப்பில் அவர் மண் அள்ளிப்போட்டார்! வேகமாக வெளியில் வந்து " இருக்கு சார், கொஞ்சம் கவனிங்க எடுத்துட்டு வர்றேன்" என்றார்!

எனக்கு முதலில் புரியவில்லை, பின்னர்தான் கவனித்தேன் அருகில் இருப்பவர்கள் நூறு ரூபாயை அவர் கைகளில் திணித்துவிட்டு தங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டனர்! நான் அவரிடம் கேட்டேன் " ஏன் சார்..பணம் கொடுக்கலைனா நம்ம திங்க்ஸ எடுக்க முடியாதா? எடுத்து வைக்கிறதுதானே அவங்க வேலை? என்றேன், அவரும் " சார்.. நாம சண்டை போடலாம்.. முதலில் நமக்கு நேரம் இல்லை. இரண்டாவது உங்க டிவி 40,000 ரூபாய்னு வைங்க, இந்த நூறு ரூபாய்க்கு பார்த்தா, உள்ளேயே வச்சு சம்திங் டேமேஜ் பண்ணிட்டு கன்வேயர்ல டேமேஜ் ஆயிருச்சுன்னு சொல்வாங்க" என்றார்! அதிர்சியுடனே அந்த நாய்களுக்கு எலும்புத்துண்டை வீசிவிட்டு டிவியை எடுத்துகொண்டு வந்தேன்! இதையும் மீறி நகரும்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த கான்ஸ்டபிள் " தம்பி.. கொடுக்கவேண்டியதை கொடுத்திட்டிங்களா? என்றார்! இத்தனையும் கன்வேயர் ரூமுக்குள் இருந்த ஒரு கஸ்டம் ஆபிசர் நன்றாக கண்காணித்துக் கொண்டிருந்தார்! யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று! கூட்டுக்கொள்ளை!

சம்பவம் மூன்று.

டிவியை எடுத்துகொண்டு அடுத்து சுங்கச் சோதனை! கண்டிப்பாக டிவி போன்ற சாதனங்களுக்கு சுங்கவரி ( TAX ) உண்டு என்று தெரியும். ஏற்கனவே ஒருமுறை கட்டி இருப்பதால் அதற்கு தயாராகவே வந்தேன். தனியாக இதற்கென இரண்டு அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் சென்று எனது டிவி மாடல் மற்றும் விலைகளை சரி பார்த்து 3750 ரூபாய் கட்ட சொன்னார்கள்! எனக்கும் சந்தோசமே, ஏனென்றால் இதற்குப் பில் கொடுத்துவிடுவார்கள்! ஒரு பைசா கூட அந்த அதிகாரிகள் எடுக்க முடியாது! சரி என்று கட்டப் போகும்போது அதில் இருந்த ஒரு அதிகாரி எனக்கு பின்னால் வந்து மெதுவாக " தம்பி, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, அந்தப்பக்கம் சைட்ல சோபால உட்காந்திருக்கதுதான் எங்க சீனியர் ஆபிசர்! அவர் இப்ப போயிருவார், அவர் போனதும் 2000 மட்டும் கொடுத்திட்டு உங்க டிவிய எடுத்துக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்!

மேலும் " நேரம் காலம் தெரியாம இங்க வந்து உக்காந்துகிட்டு எங்க பொழப்புல மண்ண போடறான்" என்று அந்த சீனியர் ஆபிசரையும் திட்டிக்கொண்டே சென்றார்! இந்தியன் படத்துல நிழல்கள் ரவிய கமல் கொல்லப்போகும் போது அவருக்கே லஞ்சம் கொடுக்கிறேன்னு நிழல்கள் ரவி சொல்லும்போது கமல் ஆயாசமா கன்னத்துல கைய வச்சிக்கிட்டு சொல்லுவாரே " உன்னை கொல்றதுல தப்பே இல்லடான்னு" அதுதாங்க அப்ப மனசுல வந்துச்சு! சரி நீ ஆணியே புடுங்க வேண்டாம்னு முழு தொகையும் கட்டிட்டு டிவியை எடுத்துக்கிட்டு வெளில வந்துட்டேன்!

சம்பவம் நான்கு.

எல்லாத் தொல்லைகளும் முடிந்து அப்பாடான்னு வெளில வந்து லக்கேஜ் எல்லாவற்றையும் காரில் ஏற்றிவிட்டு திரும்பினா, நான் கொண்டுவந்த ட்ராலிய வாங்குறதுக்காக ஒரு ஊழியர் தயாராக நின்றார்! பரவாயில்ல... இந்த சர்விசாவது நல்லா இருக்கு என்று நினைப்பதற்குள் அதற்கும் ஒரு சம்மட்டி அடி! ட்ராலியை எடுத்துகொண்டு தலைய சொரிந்தார் அந்த ஊழியர், " என்னப்பா என்ன வேணும்?" என்றேன், "பார்த்து கவனிங்க சார், ட்ராலிய தள்ளிட்டு உள்ள போகணும்" என்றார்! நானும் விடாமல் " போங்க.. அதுக்குதானே உங்களுக்கு சம்பளம் கொடுத்து வச்சிருக்காங்க?" என்றேன்,

" என்ன சார் நீங்க? ஒவ்வொருத்த ரெண்டு வெள்ளி, பத்து வெள்ளின்னு கொடுத்துட்டுப் போறாங்க, இதுக்குப் போய் கணக்கு பார்க்குறீங்க?" என்றார் சாதரணமாக! எனக்கு வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரிடம் சொன்னேன் " அண்ணே. இன்னும் சிங்கபூர்ல தினக்கூலிக்கு வர்ற நம்ம ஆளுங்களுக்கு ஒரு நாள் சம்பளமே 18 வெள்ளிதான்! இங்க ட்ராலி தள்ளியே அவ்வளவு சம்பாதிக்க முடியும்னா எனக்கும் ஒரு வேலை இங்க வாங்கித் தாங்க, நானும் வந்து ட்ராலி தள்ளுகிறேன்" என்றேன்! அந்த முனகியபடியே திரும்பிச் சென்றார்! கண்டிப்பாக கெட்ட வார்த்தையில் திட்டியபடியே சென்றிருப்பார்!

சம்பவம் ஐந்து.

எல்லாவற்றையும் கடந்து வீட்டுக்குச் செல்லும் ஆர்வத்தோடு விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்தால், கொஞ்ச தூரத்தில் போலிஸ் செக் போஸ்ட்! அதை தொடும் முன்னரே ஒரு போலிஸ் வந்து நிறுத்தச் சொல்லி கை காட்டினார், நிறுத்தியவுடன் டிரைவர் சீட் பக்கம் குனிந்தார் அவர், என்னவோ என்று கண்ணாடியை இறக்கினால் குப்பென்று அடித்தது சரக்கு வாடை! டிரைவர் சீட்டில் இருந்த என் மாமாவிடம் " என்ன புதுசா? கவனிச்சிகிட்டு போய்க்கிட்டே இருங்க, ஐயா உள்ளதான் இருக்காரு" என்றார்!

உடனே என் மாமாவும் ஒரு ஐம்பது ரூபாயை எடுத்து நீட்டவும் " ஓக்கே ரைட்..போய்க்கிட்டே இருங்க" என்று கை காட்டி அனுப்பி வைத்தார்! நான் கொஞ்சம் எட்டிப்பார்த்தேன், அவர் சொன்ன ஐயா, நன்றாக தூங்கியபடி டியூட்டி பார்த்துக் கொண்டிருந்தார்! மாமாவிடம் கேட்டேன் " நாம பணம் கொடுக்கலைனா என்ன பண்ணுவாங்க?" என்று, "என்ன பண்ணுவாங்க? சந்தேகமா இருக்கு செக் பண்ணனும்னு லேட் பண்ணுவாங்க, இன்னும் கொஞ்சம் மோசமான ஆளுங்களா இருந்தா, கஞ்சா பாக்கெட்ட அவங்களே போட்டு நம்ம கார்ல இருந்துதான் எடுத்ததா வழக்கு போடுவாங்க" என்றார்! அரசாங்க அதிகாரிகளைப் பற்றிய மக்களின் இந்தப் பயம்தான் அவர்களை மேலும் லஞ்சமயமாக வாழவைத்து கொண்டிருக்கிறது!

சம்பவம் ஆறு.

விடுமுறையை சந்தோசமாக கழித்துவிட்டு திரும்ப சிங்கை வர அதே திருச்சி விமான நிலையம்! சரி.. எந்தப் பிரச்னையும் இருக்காது, ஏனென்றால் என்னிடம் செக் இன் லக்கேஜ் இல்லை! ஒரு ஹேன்ட் லக்கேஜ் மற்றும் லேப் டாப் மட்டுமே என்று நினைத்துதான் வந்தேன். ஆனால் அப்போதும் லஞ்சம் தன் கோரப் பற்களை காட்டியபடி என்னை வரவேற்றது! இந்தமுறையும் இமிக்ரேசனில் நீண்ட வரிசை! இன்னும் கொடுமை என்னவென்றால், மூன்று விமானங்கள் குறைந்த நேர இடைவெளியில் கிளம்பும், மூன்று விமான பயணிகளையும் கையாள அதே மூன்று அதிகாரிகள் மட்டுமே! நான் சிங்கைக்கு வரும் பயண நேரத்தைவிட விமான நிலையத்தில் செலவழிக்கும் நேரம் அதிகம்! ஒருவழியாக இமிக்ரேசன் முடிந்து உள்ளே போகும் முன் ஒரு கஸ்டம் ஆபிசரும் அவருக்கு துணையாக ஒரு போலிசும் இருந்து பாஸ்போர்ட்டை செக் செய்து அனுப்புவார்கள்.

என் பாஸ்போர்ட்டை வாங்கி புரட்டிப் பார்த்த அந்த போலிஸ் " என்ன தம்பி.அடிக்கடி வந்து போவீங்க போல? உங்களுக்கெல்லாம் நான் சொல்ல வேண்டியதே இல்லை, கவனிச்சிக்கிட்டு போய்கிட்டே இருங்க" என்றார்! அந்த நேரம் பார்த்து டைகர் ஏர்வேசின் செக்கிங் எஜன்ட் வர, நான் நழுவி எஸ்கலேட்டரில் ஏற ஆரம்பித்தேன், அவரும் விட வில்லை என் பின்னாடியே வந்துவிட்டார்! " தம்பி..கவனிச்சிட்டு போங்க" என்று! திரும்பவும் மேலே ஒரு பெண் என் போர்டிங் பாஸை செக் செய்து ஓக்கே சொல்லவும் உடனே உள்ளே போய் விட்டேன்! உள்ளே போய் எல்லா ஃபார்மாலிடீஸ் முடிந்தபின் திரும்பிப் பார்த்தேன், அப்பவும் அவர் இடுப்பில் கை வைத்து என்னை முறைத்தபடியே நின்றார்! என்னைப்போல அடிக்கடி வந்து செல்பவர்களையே இவர்கள் இந்தப் பாடு படுத்தினால், அதிகம் படிக்காமல் முதல் முறை வெளிநாடு செல்பவர்களை இவர்கள் என்ன பாடு படுத்துவார்கள்? பணம் கொடுத்தால்தான் பயணமே சாத்தியம் என்று சொன்னாலும் சொல்வார்கள்! இவர்களுக்கு ஏன் இந்தப் பிழைப்பு? இந்த நீண்ட கட்டுரையை படித்து முடிக்கும் உங்களுக்கே இவ்வளவு ஆயாசமாக இருக்கும்போது, இதை ஒவ்வொரு பயணத்திலும் அனுபவிக்கும் பயணிகளின் நிலையை நினைத்துப்பாருங்கள்! பல வெளிநாட்டினர் வந்துபோகும் இது போன்ற இடங்களில் நம் மானத்தை நேரடியாக விமானத்தில் ஏற்றிக் கொண்டிருக்கின்றனர் இந்த ஊழல் அதிகாரிகள்! இந்தியனாக பிறந்த ஒவ்வொருவரும் லஞ்சத்தை தவிர்த்து வாழவே முடியாத சூழ்நிலையில் கொண்டுவந்து தள்ளிவிட்டது இந்த அதிகார வர்க்கம்! லஞ்சம் என்றால் என்னவென்றே தெரியக்கூடாத குழந்தைகளை லஞ்சம் கொடுத்துதான் பள்ளியில் சேர்க்கிறோம்! லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என்று போதிக்க வேண்டிய ஆசிரியரே லஞ்சம் கொடுத்துதான் அந்த வேலைக்கு வருகிறார்! லஞ்சம் வாங்குவதை கண்காணித்து கண்டிக்க வேண்டிய காவல்துறை லஞ்சத்தில் திளைத்து கொண்டிருக்கிறது! சட்டங்களை கடுமையாக்க வேண்டிய மந்திரிகள் லஞ்சத்தை கமிஷன் என்று பெயர் மாற்றி வைத்து வாங்குகின்றனர்! ஆக மொத்தம் இந்தியாவிற்கு தேசிய வியாதி என்று ஒன்றை தேர்வு செய்தால் அதற்கு சரியான தேர்வு இந்த லஞ்சம்!
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

சேக் முஹைதீன்

மனையியல் பாடத்தில் மாநில அளவில் 2 வது இடம் பிடித்த முஸ்லிம் மாணவி.

காயல்பட்டினம், மே 22 : நடந்து முடிந்த +2 தேர்வில் மனையியல் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ள மாணவி எஃப்.செய்யித் அலீ ஃபாத்திமா அவர்கள் தெரிவித்ததாவது. மாநிலத்தில் இரண்டாமிடம் என்ற இந்த சாதனை எனக்கு பெருமகிழ்ச்சியைத் தந்துள்ளது... இதற்காக முதலில் என்னைப் படைத்து பராமரிக்கும் இறைவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
தொகுப்பு
AKL .அப்துல் ரஹ்மான்.

+2 தேர்வு முடிவுகள் முதல் 3 இடத்தை பிடித்த நாமக்கல் மாவட்ட மாணவ, மாணவிகள்


சென்னை, மே 22 : +2 தேர்வின் முடிவுகள்: தமிழகத்தில் +2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2 ந்தேதி தொடங்கி 25 ந்தாம் தேதிவரை நடைபெற்றது. இதில் 3 .38, லட்சம் மாணவிகளும் தேர்வு எழுதினர். +2 தெருவுக்கான முடிவுகள் இன்று காலை 11 மணி அளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மேலும் இதில் மொத்தம் தேர்வு எழுதிய மாணவர்களில் 6 ,55 ,594 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 2518 மாணவர்கள் 200 / 200 மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் முதல் 3 இடங்களை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பெற்றுள்ளனர். முதல் இடத்தை சுஷ்மிதா (1189) மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை கார்த்திகா, அசோக்குமார், மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் (1188) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மூன்றாவது இடத்தை மகேஸ்வரி, பிரபா சங்கரி என்று இரண்டு மாணவிகளும் (1187) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மவுத்து அறிவிப்பு: "ரபி அஹமது"

முத்துப்பேட்டை, மே 21 : முத்துப்பேட்டை S.P.K.M.தோட்டவிளாகம் M.M.தாவூது (சென்னை)அவர்களின் மகனாரும், H.M.அன்வர் பாட்சா,H.M.ஹாஜா முஹைதீன், H.M.பஷீர் அஹமது(பிரிலியண்ட் ஸ்கூல்),H.M.சாதிக் அலி, H.M.ஜாகிர் ஹுசைன் இவர்களின் மருமகனும், A.P.N.முஹம்மது இலியாஸ் அவர்களின்மச்சானும், D.ஹலில் ரஹ்மான், D.அப்துல் சுக்கூர் இவர்களின் சகோதருமாகிய, D.ரபீ அஹமது அவர்கள் நேற்று (20.05.2012)அன்று காலை 11.00 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள் இன்னா லில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று (21.05.2012) காலை9.00 மணியளவில் முஹைதீன் பள்ளி மையவாடியில்நல்லடக்கம் செய்யப்பட்டது. அறிவிப்பவர்M.M.தாவூது (சென்னை)நமது நிருபர்KM . காதர் கனி (பாடகர்)

பெண்களின் மானத்தை விலை பேசும் Camera & face book தற்காப்பு.!



உலகம், மே 21 : நீங்கள் நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (அல்-குர்ஆன் 5:02) இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி ஒருபுறம் எம்மை தினம் தினம் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் அதேவேளை மறுபுறம் எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியும் வருகிறது. எதை எந்த நோக்கதிற்காக பயன்படுத்தினால் மனிதகுலத்திற்கு நன்மை கிட்டுமோ அதை அப்படி பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய உலகின் யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறி இருக்கிறது.


தன் சக மனிதனுக்கு கேடுவிளைப்பதையே தனது தினசரி தொழிலாக நினைத்து செயல்பட தொடங்கி விட்டான் மனிதன். பணத்திற்காக எதையும் செய்ய துணிந்து விட்டான். அந்த வகையில் பெரும்பான்மை மக்களால் கவனிக்கபடாத உடை கழட்டும் ஒரு வக்கிர சைக்கோ கூட்டத்தை தோலுரிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

கையடக்க கமராக்கள், மொபைல் வீடியோ கமராக்கள், மறைமுகமாக பொருத்தி பதிவு செய்யும் மிகச் சிறிய கமராக்கள் என்பது இன்றை நவீன உலகில் மிகப் பிரபலமாக மிக சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது.

இதை எத்தனை பேர் நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி! மொபைல் கமராக்கள், கையடக்க வீடியோ கமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் அதை தடுக்கும்- தவிர்க்கும் வழிமுறையையும் இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.
பொது இடங்களில் கமராக்கள்:
பொது இடங்களில் – குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்கட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். கமராவுடன் உள்ள தொலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியாவண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் ஈன மனம் படைத்தோர் இன்றிய உலகில் நம்மத்தியில் பெரும் அளவில் பெரு கிவிட்டனர்.
கல்லூரி விடுதிகளில்:

கல்லூரி மற்றும் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் – மற்றும் மலசல கூடங்கள், குளியலறைகளில் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். அண்மையில் இந்தியாவில் ஒரு கல்லூரி விடுதியிலிருந்து 09 கமராக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Face Book & Photoshop: Face Book- TWITTER- ORKUT போன்ற தளங்களில் பல பெண்கள் தங்கள் புகைப்படத்தை UPLOADசெய்து இருகிறார்கள். சில மோசடிக்காரர்கள் அதை தேடி டவுன்லோட் செய்து கொண்டு PHOTOSHOP SOFTWARE துணைகொண்டு அந்த பெண்களின் முகங்களை நிர்வாண போட்டோவோடு இணைத்து, அதை இன்டர்நெட்டில் விற்று பணம் சம்பாதிக்கின்றனர்.

மேலும் பாடசாலை மாணவிகளின் போட்டோக்களை பாடசாலைகளில் வெளிவரும் வருடாந்த இதழ், மற்றும் ஏனைய வெளியீடுகளில் தனியாகவும் குழுவாகவும் உள்ள போட்டோக்களை வெளியிடுகின்றனர். அந்தக் குழு போட்டோவில் உள்ள பெண் பிள்ளைகளின் முகங்களை வெட்டியெடுத்து வேறு ஒரு ஆடவனுடன் அல்லது நிர்வாண போட்டோவுடன் இணைத்து வலையமைப்புக்களிலும் பேஸ் புக்கிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர்.

பெற்றோர்கள் தங்களது பெண் பிள்ளைகளை பேணிப் பாதுகாப்பதில் முழு மூச்சுடன் பாடுபட்டு வருகின்ற அதேவேளை, அல்லாஹ்வையும் றசூலையும் ஈமான் கொண்ட எந்தவொரு பெற்றோரும் இதனை அனுசரிக்கவுமாட்டார்கள். இருந்த போதிலும் பாடசாலைகளில் இவ்வாறு புகைப்படம் வெளியிட்டு மாணவிகளின் எதிர்காலத்திற்கு பங்கம் விளைவிக்கும் இவ்விடயத்தை தடை செய்வதில் உரியவர்கள் சிந்தித்து செயற்படுவதுடன் பெற்றோர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நம்மையறியாமலேயே நம்மை போட்டோ, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாசாரம் தற்போது மிக சாதாரணமாக எமது நாட்டிலும் பரவி வருகிறது. இது முழுக்க முழுக்க பெண்களை குறி வைத்தே நடந்து வருகிறது. அப்பாவியான பல பெண்கள் இதற்கு பலியாகி வருகிறார்கள்.

பொது மலசல கூடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள்:

பொது மலசல கூடங்களுக்கு செல்வோர், பொது குளியலறைகளை பயன்படுத்துதோர் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லொட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், மலசல கூடம், குளியலறைகளிலும் கமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா? என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கமராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம். ஆகவே கவனம் தேவை.

நெடுந்தூர பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பஸ் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பஸ் பயணம் செய்யும் போது அந்த பஸ்கள் வெளி ஊர்களிலுள்ள உணவகங்களில் நிறுத்தப்படுகின்றன. அப்படி பஸ்ஸில் பயணம் செய்பவர்கள் அத்தகைய உணவங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள சில மலசல கூடங்களில் வீடியோ கமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் கமராக்கள் மூலமாக அவர்களை ஆபாசமாகப் படம் பிடித்து அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர். மேலும் இவற்றை சீடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம் வரை கொண்டு சென்றும் பணம் சம்பாதிக்கின்றனர்.

அதுமட்டுமின்றி, ஹோட்டலில் திருமணம் செய்து கொள்பவர்கள் அங்கே தங்கி விட்டும் வருகின்றனர். இவர்களை குறி வைத்தும் ஹோட்டல் அறைகளில் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம். ஹோட்டலில் தங்கும்போது அது நல்ல நம்பகமான தங்கும் விடுதியா என்று முடிந்தவரை உறுதி செய்து கொள்ள வேண்டும். இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்தபட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல பொது இடங்களில் உள்ள மலசல கூடங்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து விடலாம் அல்லவா?.

மருத்துவமனைகளிலும் கவனம் தேவை!

மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தங்களால் முடியுமான வரை பெண் வைத்தியர்களை நாடுவது சிறந்ததாகும். அல்லது தக்க துணையுடன் செல்ல வேண்டும். மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும் ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக விலக்கும் போதும் கவனமாக இருங்கள். கமராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். சில மருத்துவர்கள் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து- வீடியோவாகவும் புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும் வருகின்றனர். ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது சிறந்ததாகும்
.
புடவைக் கடைகளில் TRAIL ROOM கேமரா!

நாம் துணிக் கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக் கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கமராக்கள் தங்களை கண்காணிக்கப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா? துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கமராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். கமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.

TRAIL ROOM CAMERAக்களை கண்டறியும் முறை:

TRAIL ROOM CAMERAல் இருந்து கொண்டு செல்போன் மூலமாக யாருகாகவாவது call செய்து பார்க்க வேண்டும். உங்கள் அழைப்பு- நீங்கள் அழைத்தவரை சென்றடைந்தால் அந்த அறையில் ரகசிய கமராக்கள் இல்லை. ஒருவேளை உங்கள் அழைப்பு நீங்கள் திரும்ப திரும்ப அழைத்தும் call செல்லவில்லை என்றால் அங்கு ரகசிய கமரா இருப்பது உறுதி என்று பொறியியலாளர்கள் கூறுகிறார்கள்.

TRAIL ROOM; கண்ணாடி

இவைகளைகப் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும். இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம். ஆகவே இவைகளை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.

உங்கள் விரல் நுனியை கொண்டு கண்ணாடியை தொடும்போது சிறு இடைவெளி தெரிந்தால் அது சாதாரண கண்ணாடி, இடைவேளை இல்லாமல் தெரிந்தால் அது உங்களை வேவுபார்க்கும் கண்ணாடி என்று அறிந்து கொள்ளலாம்.

ஹிஜாப் அணியும் பெண்களுக்கு பாதுகாப்பு!

இஸ்லாம் காட்டித்தந்த ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் இந்த பிரச்சினையில் இருந்து இயல்பாகவே பாதுகாக்கபடுவார்கள்- இன்ஷா அல்லாஹ். இருப்பினும் இவை பற்றிய விழிப்புணர்வு முழுமையாக தேவை. ஏனெனில் ஹோட்டல், தங்கும் விடுதியில் இருக்கும் தூங்கும் அறை, கழிவறை போன்ற இடங்களில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் நாம் சந்தேகபட முடியாது, எல்லா இடங்களையும் இது நம்பகமானது என்று நம்பவும் முடியாது. ஆதலால் முடிந்தவரை நம்பகத்தன்மையை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய இறுதி ஹஜ்ஜின் போது; தனது நன்நெறித் தோழர்களுக்கு ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். இந்த மாதமும் இந்த புனிதமிக்க மக்கமா நகரமும் இந்த நாளும் எப்படி புனிதமானதோ, அவ்வாறே ஒரு முஸ்லிமின் உயிரும் உடமையும் மானமும் மரியாதையும் புனிதமானவை என்றார்கள். (புகாரி 67)

ஆகையினால் நவீன தொழில் நுட்பத்தின் பாரதூரமான விளைவுகளில் இருந்து நம்மையும் பாதுகாத்து மற்றோரையும் பாதுகாப்பதற்கு விழிப்புடன் செயற்படுவோம்.
நன்றி - எஸ்.ஐ. அஸ்மீர் ஷர்க்கி)

மவுத்து அறிவிப்பு: "K.S அஹமது நாச்சியார்"

முத்துப்பேட்டை, மே 19 : புதுத்தெரு மர்ஹும் L.முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் K.S ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), K.S.H செய்து கனி (ஹாஜி), மர்ஹும் K.S.H நூருல் அமீன் ஆகியோரின் தாயருமாகிய ஹாஜிமா K.S அஹமது நாச்சியார் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்
K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

நமது நிருபர்
கம். காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை:ரேசன் கடையில் எடைகுரையை கண்டித்து பொது மக்கள் முற்றுகை.!!



முத்துப்பேட்டை, மே 19 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் ஒரு ரேசன் கடை உள்ளது. சுமார் 1000 குடும்ப அட்டையை உள்ளடக்கிய இந்த ரேசன் கடையில் தினமும் கடை திறந்த பிறகு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ரேசன் பொருட்களான மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் எடை குறைவாக உள்ளது என்று ரேசன் கடை ஊழியரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகர் தெரிவித்தும் எந்த ஓர் நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. இப்படி அடிக்கடி எடைக்குறைவால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மத்தியில் இவர்களுக்கு ஓர் பாடத்தை கற்பிக்கவேண்டும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. அப்ப்போது ஆசாத் நகரை சேர்ந்த ஹக்கீம், ஆப்தீன், மதினா, ரம்ஜான் பீவி போன்ற வர்கள் வாங்கிய அரிசியில் 3 கிலோ எடை குறைவாக இருந்ததாகவும் மேலும் சீனியில் அரைகிலோ குறைவாகவும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பொது மக்கள் ரேசன் கடை நடத்துனரை தாசில்தாரிடம் புகார் முறையிட்டதாக தெரிகிறது. மேலும் இது அப்படித்தான் இருக்கும் என்று திமிரு வார்த்தையில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ரேசன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீனவ சங்க தலைவர் மீரா முஹைதீன், வர்த்தக கழக நிர்வாகி அடிமை முஹைதீன் ஆகியோரின் தலைமையில் ரேசன் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.




முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால் தமிழகத்தில் பரவி வரும் டிங்கு காய்ச்சல் நமது முத்துப்பேட்டை நகரங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து பேரூராட்சி நிர்வாகம் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வு எடுக்கா விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். மேலும் முத்துப்பேட்டை நகரங்களில் மிகவும் பற்றாக்குறையாக செயல் பட்டு வரும் இன்டேன் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் அஹ்மத் கான், அபு மர்வா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)