முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை!!




முத்துப்பேட்டை, நவம்பர் 22: முத்துப்பேட்டையில் திருமணமாகி 4 மாதமே ஆன புதுப்பெண் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார். கார் டிரைவர். இவரது மனைவி பரமேஸ்வரி வயது (25 ) இவர்களுக்கு திருமணமாகி 4 மாதமாகிறது. இவர்களுக்குள் அடிக்கடி ஏற்படும் கருத்து வேறுபாடு காரணமாக பரமேஸ்வரி முத்துப்பேட்டை அடுத்து தம்பிக்கோட்டை கீழ்க்காட்டில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துவிடுவார். கடந்த 19 ம் தேதி காலை சதீஸ்குமார் மனைவி பரமேஸ்வரியை தந்தை வீட்டிலேயே விட்டுவிட்டு சென்றார். அதன் பின் பரமேஸ்வரி அருகே உள்ள பாமணி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். முத்துப்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவளர் திரு கண்ணன் அவர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் முழுவதும் ஆற்றில் இவரது உடலை தேடினர். இந்நிலையில், நேற்று பாமணி ஆற்றில் கரை ஒதுங்கிய பரமேஸ்வரியின் உடலை முத்துப்பேட்டை போலீசார் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, வி ஏ ஓ கமலதியாகராஜன் கொடுத்த புகாரின்பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பரமேஸ்வரிக்கு திருமணமாகி 4 மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமை காரணமாக இறந்தார என்பது குறித்து மன்னார்குடி ஆர். டி. ஓ. திரு. செல்வராஜ் விசாரணை செய்து வருகிறார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK.முனவ்வர் கான், AKL . அப்துல் ரஹ்மான், அபு மர்வா

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)