முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தொடங்கியது குற்றால சீசன் --குடும்பத்தோடு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !!!

தென்காசி: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் தாமதமாக  துவங்கியதுடன் சாரலும் தொடர்ச்சியாக இல்லாமல்  ஏமாற்றி வந்தது.  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சாரல் பெய்து வருகிறது. குறிப்பாக  குற்றாலம் மற்றும் அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு  தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் நன்றாக பெய்து வருகிறது.  இதன்காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.  ஐந்தருவியில் 5 பிரிவுகளிலும் தண்ணீர் நன்றாக கொட்டுகிறது.  மெயினருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பகுதியில் தண்ணீர் பரந்து  விழுகிறது. புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவியிலும்  தண்ணீர் நன்றாக விழுகிறது. முழு வீச்சில் சீசன் தொடங்கியது.



ஆனால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் சுமாராகவே இருந்தது.  மெயினருவியில் நேற்று மதியம் சுற்றுலா பயணிகள் குளித்துக்  கொண்டிருந்தபோது 2 நீர்ப்பாம்புகள் தண்ணீருடன் விழுந்தன. இதை  பார்த்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால்  பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார்  10 நிமிடம் கழித்து பரபரப்பு அடங்கியதும் மீண்டும் குளிக்க  அனுமதிக்கப்பட்டனர்.அதே போல் குற்றாலத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர்  தொலைவில் உள்ளது பாலருவி .குற்றாலத்தில் குளித்து முடித்த  சுற்றுலா பயணிகள் பாலருவிக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர் .இந்நிலையில் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் ஆசிரியர்  ஷேக்பரீத் குற்றாலத்திற்கு குடும்ப சுற்றுலா சென்றார் நமது முத்துபேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேட்டியளித்தார் .

..அவருடன்  சென்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் முத்துப்பேட்டை  நகர பொருளாளரும் ,நேனா மோட்டார்ஸ் நிறுவனத்தின்  உரிமையாளருமான ஜனாப் ,ஹாஜி .ஹஜ் முஹம்மது உள்ளிட்டோரும் சென்றிருந்தனர் .

குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி ,செண்பக அருவி ,பழைய குற்றால அருவி ,ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் மனித கழிவுகள் ஆங்காங்கே அசுத்தமாக கிடப்பதாகவும் ,சிறுநீர் துர்நாற்றம் வீசுவதாகவும் ,  போதிய பராமரிப்பின்றி   உள்ளதாகவும் ,குற்றம் சாட்டினார் .

இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளவதாகவும்  ,இதனால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார் .

மேலும் அருவியின் மைய பகுதிக்கு சென்று ஒருவரையொருவர் முண்டியடித்து கொண்டு குளிப்பதை காண முடிகிறது என்றும் ,இதனால் உயிரிழப்புகள் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார் .இதனை தடுப்பதற்கும் கண்காணிப்பதற்கும் போதிய காவல்துறையினரை அங்கு  பணியமர்த்த  வேண்டும் என்றும் ,காவலர்களுக்கு ஒலிபெருக்கி ,டார்ச் லைட் உள்ளிட்ட நவீன கருவிகள் வழங்கப்பட்டால் விபத்துக்களை தடுக்க  எதுவாக இருக்கும் என்றும் கூறினார் .

மேலும் குற்றால அருவிகளில் மனிதர்கள் நடமாடும் பகுதிகளுக்குள் குரங்குகள் சுற்றிதிரிவதால்  பயணிகள் ,மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற  சூழ்நிலை நிலவுவதாகவும் ,இதனை கட்டுபடுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ,சுற்றுலா பயணிகளின் பொருட்கள் மற்றும் உடமைகளை  பாதுகாக்க தனியான அறைகள் கட்டப்பட வேண்டும்  என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார் .

சந்திப்பு :கொய்யா :முஜாஹிதீன் 

மௌத்து அறிவிப்பு "சி .ப .பஷீர் அஹமது "

ஜுன் 17: முத்துப்பேட்டை முஹையதீன் பள்ளித்தெரு மர்ஹும் சி.ப.முஹம்மது ஷேக் தாவுது அவர்களின் மகனும், ஷேக் தாவுது, ஹாஜா முஹைதீன் சகோதரர்களின் தகப்பனாருமாகிய " சி.ப. பஷீர் அஹமது" அவர்கள், இன்று (17.06.14) பகல் 2 மணியளவில்  மௌத்தாகி விட்டார்கள்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னார் அவர்களின் அனைத்துப்பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும், அவர்களைக் காப்பாற்றி ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களோடு இணைய வைப்பானாக!
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அறிவிப்வர்கள்
SPKM அமானுல்லா சகோதரர்கள்

சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் லீலைகள் -பட்டுக்கோட்டை டாக்டரின் காம வெறியாட்டம் !!ஓர் அதிர்ச்சி ரிபோர்ட் !!!



பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில் இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளிவந்துள்ளது. வாசித்தோர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது


நாளுக்கு நாள் அதிகரிக்கும் கள்ளதொடர்புகள் -கட்டுப்படுத்த என்ன வழிகள் ?

இப்போதெல்லாம் கள்ளத் தொடர்பு அதிகமாகிவிட்டது. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் தடம் புரளுகிறாள். நாகரீக வளர்ச்சி அடைந்த நகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறங்களிலும் இந்த அவலம் அடிக்கடி நடைபெறும் காட்சியாகிவிட்டது.



இப்படி சமுதாயம் கெட்டுப்போக என்ன காரணம்? அந்த கலாச்சார சீரழிவை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
இங்கே ஒரு சிறப்புப் பார்வை :

1. தம்பதியருக்கு இடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாதபட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள். 

அதேபோல தாம்பத்திய உறவின்போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிகமாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.
2. திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கு இடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். 

திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம். திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு இன்னொரு காரணம்.


3. திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் அதிகம் இருக்கும். திருமணத்திற்குப் பிறகு அந்த கற்பனைகள் பொய்யாகும்போது - தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, அவர்களில் சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள். இந்த உறவு மாற்றம் அவர்களுக்கு சரியென்றே படுவது இன்னும் வேதனை.


4. வேலைக்குச் செல்லும் பெண்களில் பலருக்குத் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு அதிகமாக இருப்பதாக தெரிகிறது. வெளியுலகத் தொடர்பு, பல ஆண்களுடன் பழக்கம், சக ஆண் ஊழியர்களுடன் நெருக்கமான நட்பு போன்றவையும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு காரணமாகிறது. இதுதவிர, கணவனைவிட அலுவலகத்தில் சக ஆண் ஊழியர்களுடன் அவர்கள் செலவிடும் நேரமும் அதிகமாக இருப்பதால் அவர்களிடம் பேச, பகிர்ந்துகொள்ள அவர்களுக்கு நிறைய நேரமும், விஷயங்களும் கிடைக்கின்றன. அதுபோகப் போக அவர்களுக்குள் தகாத உறவு மலர வழி வகுத்து விடுவதும் உண்டு.


5. ஒரு குறிப்பிட்ட சதவிகிதப் பெண்கள் தன் கணவன் அல்லாத வேறு ஆண்களின் ஸ்பரிசத்திலும், அணைப்பிலுமே சுகம் காண்பதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். செக்ஸில் தினம் தினம் புதுமையை நாடும் பெண்களும் உண்டு. அவர்கள் இப்படிப்பட்ட தகாத உறவில் சீக்கிரம் விழுந்து விடுகிறார்கள். இந்த கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மனோதத்துவ சிகிச்சை ஒன்றுதான் இவர்களுக்கு ஒரே தீர்வு.
6. தன் கணவன் தன்னிடம் அன்பாக, அனுசரணையாக நடந்து கொள்ளாத பட்சத்திலும், அவனுக்குத் தன்னைத் தவிர வேறு பெண்களுடன் உறவு இருப்பதாகவும் உணரும் பெண்கள், கணவனைப் பழி வாங்கும் நோக்கத்தில் தாமாகவே வலியச் சென்று இப்படிப்பட்ட தகாத உறவுகளுக்குள் சிக்கிக்கொள்கின்றனர்.

கள்ளத்தொடர்பு - தடுக்க என்ன வழி? 

1. மனைவியை செக்ஸ் விஷயத்தில் திருப்திப்படுத்தினாலே போதும். அவள் வேறு எந்த ஆடவனையும் தவறான பார்வைகூட பார்க்க மாட்டாள்.*

2. மனைவியின் எதிர்பார்ப்புகளை ஒவ்வொரு கணவனும் புரிந்துகொள்வது அவசியம். செக்ஸில் மட்டுமின்றி, அவளது எந்தவொரு எதிர்பார்ப்பையும் பெரும்பாலும் நிறைவேற்ற தயாரானவனாக அவளது கணவன் இருக்க வேண்டும்.*

3. கணவன் இந்த விஷயத்தில் திசை மாறிப்போக காரணம், மனைவியின் சரியான கவனிப்பு இன்மையே. அதாவது, திருமணம் ஆன புதிதில் தங்களை விதவிதமாக அலங்கரித்து கணவனை மகிழ்விக்கும் பெண்கள், திருமணத்திற்கு பிறகு அதை மறந்து விடுகிறார்கள். ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால், அந்த குழந்தையை கவனிக்கிறார்களேத் தவிர, கணவனை கண்டுகொள்வது இல்லை. இந்த லிஸ்டில் இருக்கும் பெண்கள் சிலர்தான் என்றாலும், எல்லாப் பெண்களும் இதை அறிந்து வைத்திருப்பது அவசியம்.*

4. எதிர்பார்த்த மனைவி அமையாதது, செக்ஸ் விஷயத்தில் தனது எதிர்பார்ப்புகளை அவள் கண்டுகொள்ளாதது, மனைவியை விடவும் அழகான பெண்ணின் திடீர் நட்பு - இவையே ஒரு கணவன் திசைமாறிப் போக முக்கிய காரணம். மனைவிமார்கள், தங்கள் கணவனை நன்றாக கவனித்துக்கொண்டால் அவன் வேறு பெண்ணை நாடிப்போக வாய்ப்பு மிகக் குறைவு.

- இவை எல்லாம் இருந்தாலும், துணை தவிர வேறு ஒருவருடன் பாலியல் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் அது மிகப்பெரும் குற்றம் என்றும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நினைக்க வேண்டும். இல்லையென்றால், "கதவை தாழ்ப்பாள் போட்டாலும், ஒரு பெண் நினைத்தால் கெட்டுப்போய் விடலாம்" என்ற உண்மைக் கூற்று நிச்சயமாகவே உண்மையாகிவிடும்.


அதே போல் இன்றைய நவீன யுகத்தில் செல்போன் மிகவும் இன்றியமையாதது ஆகிவிட்டது .இளைஞர்கள் முதல் பெரியோர்கள் வரை ,கன்னி பெண்கள் முதல் வயதான கிழவிகள் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் மிகவும் இன்றியமையாத சாதனமாகிவிட்டது .கள்ளதொடர்பின் ஆரம்பமே இந்த செல்போன் தொடர்பால்தான் என்பது முன்பு பலருக்கு புரியாமல் தெரியாமல் இருந்திருக்கலாம் ஆனால் இன்றைக்கு பலரும் செல்போன் கள்ளதொடர்புகளை நன்கு புரிந்து வைத்து இருக்கின்றனர் .செல்போன் பயன்படுத்தி வருவதால்  இளம் வயது பெண்களுக்கு தவறான தொடர்புகள் ஏற்பட்டு அதன்   மூலம் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டே ஓடி போகும் சூழ்நிலை உருவாகிறது . செல்போன் பயன்படுத்தி வரும்  திருமணமான பெண்களுக்கும் கள்ள தொடர்புகள் ஏற்பட்டு செக்ஸ் தொடர்புகள் வைத்து தனது கணவரிடமும் தனது குடும்பாதாரிடமும் அகப்பட்டு  தனது வாழ்க்கையையே சீரழித்து நடத்தை கேட்டவள் என்ற பட்டத்தை பெரும் அவல நிலையையும் இந்த செல்போன் பெற்று தருகிறது .
இதனை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் ?
வயது வந்த இளம் பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் .அதே போல் திருமணமான பெண்கள் பயன்படுத்தும் செல்போன்களை தினமும் கணவர் அல்லது உடன் பிறந்த சகோதரர்கள்  சோதனை செய்ய வேண்டும் .அதில் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமான பெண்களின் எண்கள் மட்டுமே சேவ்பண்ணி வைத்து கொள்ள
அனுமதியளிக்க வேண்டும் .அதே போல் ரீசார்ஜ் கடைகளுக்கு சென்று பெண்களின் செல்போன் எண்களை கொடுத்து ரீசார்ஜ் செய்வதை கண்டிப்பாக தடுக்க வேண்டும் .இதனால் தான் இன்று பெரும்பாலான பகுதிகளில் கள்ள தொடர்புகள் ஏற்ப்பட்டு கொண்டிருக்கிறது .இதற்கு மாற்றாக நூறு ரூபாய் பேக்கிலோ அல்லது தங்களுக்கு தேவை படும் தொகையின் அளவின் பேக்கிலோ உள்ள ரீசார்ஜ் கார்டுகளையே வாங்கி பயன் படுத்த அறிவுறுத்த வேண்டும் .



என்றென்றும் சமூக பணியில் ...
ஜே :ஷேக் பரீத்

அப்பாவிகளின் குடும்பங்களை சீரழிக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி. அதிர்ச்சி ரிப்போர்ட்.


தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் Z தமிழ்’ சேனலில`சொல்வதெல்லாம் உண்மை’னு ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருகிறது இதில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்..

















ஏற்கனவே விஜய் டிவியில் லட்சுமி அரைத்த `கதையல்ல நிஜம்’ என்ற மாவு தான் இதுவும்.
இப்போது நமக்கு பிரச்னை அந்த மாவு அல்ல.. அதில் வந்து சிக்கும் அப்பாவி மக்கள். அதிகமாக கள்ளத்தொடர்பு பஞ்சாயத்துகளே அந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.


பெருவாரியாக வர்க்கரீதியாகவும் கல்வியிலும் சமூக அந்தஸ்த்திலும் கீழ் நிலையில் இருக்கும் அப்பாவி மக்களே சேனல்காரர்களின் டார்கெட்.
அப்படி அழைத்து வரப்படும் நபர்களுக்கு தங்களின் குடும்பத்தின் அந்தரங்க கதைகளை இப்படி பொதுவெளியில் பகிர்ந்து கொள்வது சரியா.. நாம் வீடியோ வடிவில் கொடுக்கும் வாக்குமூலங்கள் பல தலைமுறைகளாக நமது சந்ததிகளை அவமானத்திற்குள்ளாக்குமே என்பது குறித்த எந்த தெளிவுமற்றவர்களாகவே இருக்கிறார்கள்.


மிகச்சாதாரணமாக இரு வீட்டாரும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு பிரச்னையை ஒரு சேனலில் பதிவு செய்து ஒளிபரப்புவது மட்டுமல்லாமல் அதை இணையத்திலும் ஏற்றுகிறார்கள்.


இன்று விவரம் தெரியாமல் டிவியில் வாக்குமூலம் கொடுத்தவர்களின் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் இதை காண நேர்ந்தால் எவ்வளவு அவமானத்திற்குள்ளாகும். பேசினால் தீர்த்துவிடக்கூடிய பிரச்னையை டிவியில் ஒளிபரப்பி பின் எப்போதும் அந்த குடும்பம் ஒன்று சேரவே முடியாதபடி செய்துவிடுகிறார்கள்.


அதோடு நிகழ்ச்சியில் திடீர் என்று அடிதடியெல்லாம் நடக்கிறது. விசாரித்ததில் திட்டமிட்டே அப்படியான சூழலை டிவி நிர்வாகமே உருவாக்குவதாக தெரிகிறது.


அதாவது ஸ்டூடியோவுக்குள் ஒரு தரப்பு கதை சொல்லிக்கொண்டிருக்கும். மறு தரப்புக்கு பக்கத்து அறையில் பெரிய டிவியில் அங்கு நடப்பதை ஒளிபரப்பி அவர்களுக்கு வெறியேற்றுவார்களாம். அப்புறமென்ன உள்ளரங்கில் கதை சொல்பவர்கள் மீது கோபத்தில் பாய அதை சேனல் ஆட்கள் சூட் பண்ணி குஷியாகிவிடுவார்களாம்..


ஏன் `அவன் பொண்டாட்டிய இவன் கரெக்ட் பண்றது.. இவ புருசனை அவ கரெக்ட் பண்றது’ போன்ற சம்பவங்கள் எல்லாம் பிரபலமான நடிகர்கள் நடிகைகள் தொழிலதிபர்கள் வீட்டில் நடப்பதில்லையா என்ன.. ?திறமையிருந்தால் அப்படிப்பட்ட பிரபலங்கள் அல்லது பணக்காரர்களின் ஒரு குடும்பத்தை கூட்டி வந்து இப்படி சந்தி சிரிக்க வைக்க முடியுமா.. ?


முடியாதென்பதால் விபரமில்லாத அப்பாவிகளின் குடும்பத்தை இப்படி டிஆர்பி ரேட்டிங்கிற்காக சீரழிப்பது அசிங்கமாக இல்லையா..
முதல் வேலையாக இந்தமாதிரியான நிகழ்ச்சிகளை தடை

நாகை வடகரையில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகம் திறப்பு -மனிதநேயமக்கள்கட்சி பொது செயலாளர் தமீமுன் அன்சாரி முஸ்லீம் லீக் அப்துல் ரஹ்மான் பங்கேற்பு !!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வடகரை-அரங்கங்குடி சமுதாய மக்கள் நிறைந்து வாழும் ஊர்களில் ஒன்றாகும்.

அங்கு அல்-கறீம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற-கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கான காப்பகம் கடந்த 08.06.14 அன்று திறக்கப்பட்டிருக்கிறது.
இந்நிகழ்வில் நானும் முஸ்லிம் லீக்கின் தேசிய செயலாளர் அப்துல் ரஹ்மான்(Ex MP) சிவகங்கை தொழிலதிபர் ஜலீல் உள்ளிட்டோரும் கலந்துக் கொண்டோம்.




அறக்கட்டளை நிர்வாகி நண்பர் அர்ஷத் அவர்களின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இக்காப்பகம் சால வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

10வயதுக்கும் குறைவான தாய்-தந்தை இல்லாத பெண் குழந்தைகளையும், கடும் வறுமையில் வாடும் குடும்பங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகளையும் இக்காப்பகத்தில் சேர்ந்துக் கொள்கிறார்கள்.
அவர்களுக்கு மார்க்க கல்வி, மற்றும் உயர்படிப்பு வரை முழு செலவையும் இவர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். கல்வி முடிந்ததும் அப்பெண்ணுக்கு திருமணத்தையும் இவர்களே நடத்தி கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறார்கள்.

பெண் குழந்தைகளை பலரும் சுமையாக கருதும் ஒரு காலக்கட்டத்தில், அல்-கறீம் அறக்கட்டளை எடுத்திருக்கும் இம்முயற்சி காலம், காலமாக தொடர்ந்து தொய்வின்றி நடைபெற பிரார்த்திப்போம்.
60 பிள்ளைகள் தங்கும் அளவுக்கு வசதி இங்கு உள்ளது பெற்றோரை இழந்த அல்லது கொடிய வறுமையில் வாழும் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால், உரிய ஆவணங்களுடன் தொடர்பு கொள்ளலாம்
தொடர்புக்கு; அர்ஷத் 94440 21144 (மாலை 5 மணிமுதல் 8 வரை மட்டும் தொடர்பு கொள்க)

மல்லிப்பட்டினத்தில் கலவரத்தை தூண்டியவர்களையும் கைது செய்ய வேண்டும் -தமிழக டிஜிபி யிடம் தடா ரஹீம் புகார் !!!


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் கடந்த 28 ஆம் தேதி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் சமூக விரோதிகள் கடைவீதியில் நின்று கொண்டிருந்த நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் மீது பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர் .


இதனால் நிலைகுலைந்து போன அந்த அப்பாவி இளைஞர்கள் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து நடு ரோட்டிலேயே சாய்ந்தனர் .இதனை அறிந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் சகோ .தடா ரஹீம் அவர்கள் மல்லிப்பட்டினத்திற்கு நேரில் சென்று விசாரித்தார் . 


மல்லிப்பட்டினம் கலவரத்தில் தொடர்புடைய பாஜக வை சேர்ந்த பத்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .இந்நிலையில் மல்லிப்பட்டினம் கலவரத்தின் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் தமிழக டிஜிபி ராமானுஜத்திடம் தடா ரஹீம் நேரில் சென்று மனு அளித்தார் .



பின்னர் நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் பேசிய அவர் ,மல்லிபட்டினம் கலவரத்தை பின்னணியில் இருந்து தூண்டியவர்கள் , காரணமானவர்கள் இன்னும் கைது செய்ய படவில்லை என குற்றம் சாட்டினார் . முத்துப்பேட்டையை சேர்ந்த பாஜக வினருக்கும் கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும் ,முத்துப்பேட்டையிலிருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் மூன்று மூன்று பேராக மல்லிப்பட்டினத்திற்கு வந்து கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார் .


இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின்  உருவப்படம் ஒட்டப்பட்ட  இருசக்கர வாகனங்களுடன் பாஜக வினர் வந்ததை அதிராம்பட்டினம் மற்றும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த பொதுமக்கள்  நேரில் பார்த்துள்ளதாகவும் ,அதில் முத்துப்பேட்டையில் அமைதியையும் மதநல்லினக்கத்தையும் தொடர்ந்து சீர்குலைத்து வருபவனும் ,சிலை கடத்தல் கும்பலில் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவனும் ,பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளவனும் , முத்துப்பேட்டையில் மத கலவரத்தை தூண்டியதற்காக  தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படவனுமான மகேஷ் என்பவனை அடையாளம் தெரிந்த அப்பகுதி பொதுமக்கள் கண்டுள்ளதாகவும் ,இதனை அப்பகுதி மக்களே தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார் .


இந்த கலவரமானது ஏதோ திடிரென தன்னிச்சையாக நடந்த கலவரம் அல்ல என்றும் ,இது முன்கூட்டியே பல்வேறு நபர்களால் நன்கு திட்டமிடப்பட்ட ஒன்று என்றும் அவர் தெரிவித்தார் .தமிழக முதலமைச்சர் மாண்புமிகுஅம்மாஅவர்களின்பொற்காலஆட்சியில்தமிழகம்வளமானதாகவும் ,




அமைதி பூங்காவாகவும்  திகழ்வதாகவும் ,ஒரு சில சமூக விரோதிகள் மத கலவரங்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்கு களங்கம் கற்ப்பிக்க முயல்வதாகவும் ,எனவே  இவர்கள் போன்ற சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் தடா ரஹீம் கூறினார் .

மல்லிப்பட்டினத்தில் பொது அமைதியை ஏற்படுத்துவோம் --முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் வேண்டுகோள் !!


தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மிகுந்த கவலையளிப்பதோடு ,சமூக நல்லினத்திற்கும் மதஒற்றுமைக்கும் விடப்பட்ட சவாலாகவே பார்க்க முடிகிறது .கடந்த மாதம் மல்லிப்பட்டினத்தில் கடைவீதியில் நின்றுகொண்டிருந்த அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் நான்கு பேரை பத்துக்கும் மேற்பட்ட சமூக விரோத கும்பல் பயங்கர ஆயுதங்களை கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்தியது .



இதனால் அப்பகுதி முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை ஏற்ப்பட்டது . தஞ்சை மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையினால் சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டனர் .


காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கையினால் மேலும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் ,சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது .இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருப்பது மட்டுமில்லாமல் காவல்துறை அதிகாரிகளுக்கு தங்களது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் .


மல்லிப்பட்டினத்தில் மனிதநேயத்தையும் ,பொதுஅமைதியையும்,மதநல்லினக்கத்தையும் வளர்க்க வேண்டும் .மதநல்லிணக்கத்தை கொண்டு வரவேண்டும் என்றால் இரத்த தான முகாம்கள் ,இலவச மருத்துவ முகாம்கள் ,கல்வி உதவிகள் உள்ளிட்டவைகளை அந்த ஊரில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் குறிப்பாக நமது தொப்புள் கொடிஉறவுகளான இந்து சகோதரர்களுக்கு வழங்கிட  வேண்டும் .


மேலும் நட்புறவை வலுப்படுத்த மதநல்லிணக்க விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும் .பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லீம்களும் அண்ணன் தம்பிகளாகவும் மாமன் மச்சான்கலாகவும் கடைபிடித்து வரும் வாழ்க்கை நெறிகளை கடைபிடிக்க வேண்டும் .


அதே போல் காலம் காலமாக நடைமுறை வழக்கத்தில் உள்ளது போல்  இஸ்லாமிய பண்டிகை காலங்களின் போது வீட்டில் சமைக்கும் உணவு பண்ட வகைகளை இந்து  சகோதரர்கள் வீட்டிற்கு கொடுப்பதை அதிகரிக்க வேண்டும் .மேலும் வன்முறையில் ஈடுப்பட்ட ,ஈடுப்பட்டு கொண்டிருக்கும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் வீட்டிற்கு நேரில் சென்று அவர்களது பெற்றோர்களிடம் நாம் காலம்  காலமாக கடைபிடித்து வரும் சகோதரத்துவத்தை விளக்கி கூற வேண்டும் .


இப்படி செய்வதினால் மதநல்லிணக்கம் ,மனிதநேயம் மற்றும் பொது அமைதி ஏற்படுவதோடு மட்டுமில்லாமல் அப்பகுதியில் வாழும் அனைத்து சமுதாய மக்களிடையே ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்ப்படும் 

.இரத்தம் சிந்தி பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் ,மதநல்லிணக்கம் காப்போம் ...
மதநல்லிணக்கம் காக்க முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் என்றென்றும் துணை நிற்கும் .

அன்புடன்......
ஜே ;ஷேக்பரீத் 
ஆசிரியர் 
MA .JOURNALISM AND MASS COMMUNICATION  


முத்துப்பேட்டையில் பிரம்மாண்டமாக உருவாகிறது ரஹ்மத்சிராஜ்மகளிர் கல்லூரி !!





முத்துப்பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மகளிர் கல்லூரி விரைவில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பப்பட உள்ளது .இந்த கல்லூரியை முத்துப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மனித நேயருமான ஹாஜி .MA .தமீம் அவர்கள் கட்டி எழுப்ப உள்ளார்கள் .இதற்கான அடிக்கல் நாட்டு விழா  விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது .முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்படும் இந்த கல்லூரிக்கு ரஹ்மத் சிராஜ்  மகளிர் கல்லூரி என்று  பெயரிடப்பட்டுள்ளது .ஹாஜி MA தமீம் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம் ..ஆமீன் 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி --மல்லிப்பட்டினம் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களுக்கு தனி தனி படுக்கை வசதிகள் !!!


கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்களால் நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர் .

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அர்ஷத் ,முஹமது மைதீன் ,அமீன் ,மற்றும் நூருல் அமீன் ஆகியோர் ரத்த காயங்களுடன் உயிர் தப்பினர் .இதில் அமீன் என்ற இளைஞர் ஊனமுற்றவர் என்பதால் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிகொண்டார் .

இதனால் கவலைக்கிடமான  அமீன் தஞ்சையில்  உள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .அர்ஷத்,முஹம்மது மைதீன் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தனர் .அப்போது தங்கள் மூன்று பேரையும்ஒரே படுக்கையில் (BED ) தங்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர் .இதனையடுத்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர்  தமிழக சுகாதாரத்துறை ,தஞ்சை மாவட்ட முதன்மை மருத்துவர் ,தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ,ஆகியோருக்கு தகவல் அனுப்பினர்  .

இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும்  இன்று தனித்தனியே படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது  .(அல்லாஹு அக்பர் )




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)