முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நரேந்திர மோடியை தூக்கில் போடவேண்டும் -நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேட்டி !!!





சென்னை, அக்டோபர் 21: திரைத்துறையில் "வீரப்பனாக "வீர வசனம் பேசி தனது கம்பீர குரல் மூலம் அத்துனை பேரையும் மிரட்டி போட்டவரும் ,வில்லன்களை எல்லாம் புரட்டி போட்டவரும் ,வில்லன்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தையும்,தனி முத்திரையையும் பதித்தவர் .விமர்சனங்களுக்கு பஞ்சமில்லாதவர் .வில்லத்தனத்தை சினிமாவில் மட்டுமல்ல ,நிஜவாழ்க்கையிலும் கடைபிடிப்பவர் .வில்லன் போன்றே நடை உடை பாவனைகள் உடையவர் .முரட்டுத்தனத்தை தனது மூல தனமாய் கொண்டவர் .தனது பஞ்ச் டயலாக் மூலம் வில்லன் கேரக்டருக்கே ஒரு தனி அடையாளத்தை கண்டுபிடித்தவர் .இத்தனைக்கும் சொந்தக்காரர் யார் தெரியுமா ?

அவர்தான் நடிகர் மன்சூர் அலிகான் :

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி எடுப்பதற்காக கடந்த ஒரு மாத காலமாக தொடர் முயற்சிகள்  எடுத்தோம். ஒவ்வொரு முறையும் நாம் தொடர்பு கொண்ட போது,வெவ்வேறு ஊர்களில் படுபிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார்  மன்சூர் அலிகான் .

ஹஜ் பெருநாள் அன்று நமது அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது .அந்த அழைப்பில் "ஈத் முபாரக் பாய் "இன்று மதியம் என் வீட்டில் உங்களுக்கு ஒட்டக பிரியாணி விருந்து வந்துடுங்க என்று கரடு முரடான ஒரு குரல் ஒலித்தது .திடுக்கிட்ட நாம் யாரென்று அறிய முற்பட்டோம் .

பின்னர் நாந்தான் மன்சூரலிகான் பேசுறேன் என்று  "கேப்டன் பிரபாகரன் "படத்துல "பச்சபுள்ள நிலாவ புடிக்க ஆச படறமாதிரி நீ என்ன புடிக்க ஆசைபடுற "என்ற வசனத்திற்கு பின் சிரிப்பது போல நம்மிடம் ஐந்து நிமிடத்திற்கு குறையாமல் வில்லத்தன சிரிப்புடன் பேச துவங்கினார் .அன்போடு விருந்தை தவிர்த்த நாம் ,இரவில் வந்து சந்திப்பதாக உரிதியளித்தோம்.அடைமழையையும் பொருட்படுத்தாமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது பங்களாவிற்கு நேரில் சென்று சந்தித்தோம் .நம்மை அன்போடு வரவேற்ற மன்சூர் ,தனது பங்களாவின் மேல் தளத்திற்கு அழைத்து சென்று நாம் கேட்ட பல சூடான  கேள்விகளுக்கு வில்லத்தனமாக பதிலளித்தார் .

கே :  உங்களுடைய  சொந்த ஊர் எது ?

பதில் :  என்னோட சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி .

கே :   உங்களின் பள்ளி படிப்பு பற்றி ?

பதில் :   நான் பள்ளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்புவரை படித்துள்ளேன் .

கே :   நீங்கள் சினிமாவிற்கு வர காரணம் யார் ?

பதில் :  எனது அண்ணன் முஹம்மது அலிதான் காரணம் .

கே :   உங்களுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது எப்படி ?

பதில் :   ஒரு நாள் எங்கள் ஊரில் ரவுடிகள் மாமூல் வசூலித்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர். அப்போது மாமூல் கொடுக்க மறுத்த ஒரு இஸ்லாமிய பெரியவரின் கழுத்து சட்டையை  பிடித்து 4 பேர் கொண்ட ரவுடி கும்பல் மிரட்டிகொண்டிருன்தனர். இதனை கண்ட நான் அந்த நான்கு பேரையும் துரத்தி துரத்தி, ஓட ஓட விரட்டியடித்தேன். இந்த சம்பவத்தை நீண்ட நேரம் உற்று கவனித்த ஒரு நபர், என்னை கூப்பிட்டார் ,பின்னர்  சென்னையில் இந்த முகவரிக்கு வந்து சந்திக்குமாறு கூறினார் .நான் அங்கு சென்ற பின்னர் தான் தெரிந்தது அவர்தான் ஆ.செ.இப்ராஹிம் ரவுத்தர்னு .நீ சினிமாவில் வில்லனாக நடிப்பாயா எண்டு கேட்டார் .அதற்க்கு தயங்கியபடி நான் எப்படின்னு இழுத்தபடி  நின்றேன் . உன் முரட்டுத்தனமும் ,மூர்க்கத்தனமும் வில்லனுக்கு பொருத்தமாக இருக்கும் என்றவர் அடுத்து நான் தயாரிக்கும் படத்தில் நீதான் வில்லன் ,அடுத்த மாதம் ஷூட்டிங் என்று கூறிவிட்டு சென்று விட்டார் .

கே :  மன்சூரலிகான் வீரப்பன் ஆனது எப்படி ?

பதில் :   புரட்சிகலைஞர் விஜயகாந்தின் 100-ஆவது படமான "கேப்டன் பிரபாகரன் "படத்தில்தான் நான் வீரப்பன் ஆனேன் .நான் நடித்த இந்த வீரப்பன் கேரக்டர் தமிழகம் மட்டுமல்ல அகில இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது .இந்த படம் பல வெற்றிகளை அள்ளித்தந்தது .ஏன் இன்னும் சொல்ல போனால் விஜயகாந்த்திற்கு "கேப்டன் "என்ற அடைமொழி சொல் வந்ததே கேப்டன் பிரபாகரன் படத்திற்கு பின்னர்தான் 

கே :  முத்துப்பேட்டை தெற்கு தெரு நண்பர்களை பற்றி ?

பதில் : என் சகோதரர்கள். துணிச்சலானவர்கள். வீரமிக்கவர்கள். இறக்க குணமுடையவர்கள். எனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் வைத்து என்னை அழகு பார்த்தவர்கள்.

கே :   பாபர் மசூதி இடிப்பு பற்றி ?

பதில் :  இது நாட்டில் நடந்த மிகவும் கேவலமான செயல் .மதச்சார்பின்மைக்கு  விடப்பட்ட சவால் .நான் மட்டும் ஆட்சியில் இருந்திருந்தால் ,இந்த மா பாதக ,தேசவிரோத ,செயலை செய்ய வந்த அத்துனை பேரையும் சுட்டு தள்ளியிருப்பேன் .சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி இருப்பேன் .

கே :   பாபர் மசூதி இடிப்பை கண்டித்து நீங்கள் நடத்திய போராட்டம் பற்றி ?

பதில் :   கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பை கண்டித்து சென்னையில் உள்ள கவர்னர் மாளிகை முன் நான் என் குடும்பத்தாருடன் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டேன் .

கே :நீங்கள் ஒரு பெண்ணை மயக்க மருந்து கொடுத்து கற்பழித்ததாக கூறப்படுகிறதே ?

பதில் :   இது முழுக்க முழுக்க ஜோடிக்கபட்டவையாகும் .என் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் .

கே :   தமுமுக தலைமையகத்திற்கு நீங்கள் நேரில் சென்றது பற்றியும் -அரசியல் ஆர்வம் பற்றியும் ?

பதில் :   நான் தமுமுக ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தவன் .பழனி பாபா படுகொலைக்கு பின் பாமக விலிருந்து வெளியேறினேன் .பின்னர் புதிய தமிழகம் கட்சி சார்பில் தேனியில் போட்டியிட்டு  ஒரு லட்சம் ஓட்டுக்கள் எடுத்தேன் .ஆதிமுக வில் இரண்டு ஆண்டுகள் இருந்தேன் .திருமாவளவனிடம் நெருக்கமாக இருந்திருக்கிறேன் .கடந்த பாராளுமன்ற தேர்தலில் டி.ராஜேந்தர் கட்சி சார்பில் திருச்சியில் போட்டியிட்டேன் .இதற்காகத்தான் தமுமுக தலைமையகம் சென்று ஆதரவு கேட்டேன் .ஆனால் அவர்கள் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை .

கே : உங்களை SDPI  கட்சியினர் அழைத்தால் ?

பதில் :   அப்படி அழைத்தால் பாப்போம். ஆனால் அது நடக்காது.

கே :  குஜராத் கலவரம் பற்றியும் -பாஜக வின் பிரதமர் வேட்பாளர் மோடி பற்றியும் ?

பதில்;  இந்தியாவில் நடந்த மிகவும் கொடூரமான மனித படுகொலை அது நிறைமாத கர்ப்பிணியை சூலாயுதத்தால் குத்து சிசுவை எடுத்து, எரியும் நெருப்பில் வீசினார்கள். இதற்க்கு காரணம் நரேந்திர மோடிதான். நரேந்திர மோடியை தூக்கில் போட வேண்டும்.

கே :  நரேந்திர மோடி இஸ்லாமியர்களை நாய் என்ற வர்னிதுள்ளாரே ?

பதில் :   ஏங்க திருடன் என்னா செய்வான் .அடுத்தவன பார்த்துதான் திருடேன்பான்.அதே போல் மோடி பிறரை நாய் என்று கூறினால் இவர் யாராக இருக்க முடியும் ? இவ்வாறு பதிலளித்தார் .



சந்திப்பு :ஜே :ஷேக்பரீத்

               

ஆதார் அட்டையும் பின் விளைவுகளும்..!


அக்டோபர் 21: விவரங்கள் வெளியிடப்பட்டது: ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2013 15:25


நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதன் தமிழ் வடிவம் இதோ..

2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

கஸ்டமர் : வாட்..?

ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்..

கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்படிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்)

நமது நிருபர்:

அலி அஹமது (லண்டன்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)