முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நரேந்திரா மோடியை கண்டித்து பாஜக அலுவலகம் முற்றுகை: இந்திய தேசிய லீக் கட்சியினர் கைது:






சென்னை, ஜூலை 14: ஒரு தனியார் தொலைக்காட்சியில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு நரேந்திர மோடி  பதிலளிக்கையில், முஸ்லிம்களை நாயுடன் ஒப்பிட்டு கூறினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன .


இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அதன் பொது செயலாளர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜ க அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
தமிழக பாஜக அலுவலகம் அமைந்துள்ள திநகர் வைதியராம் தெரு முழுவதுமே நூற்றுக்கும் மேற்ப்பட்ட  காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர் .



இதனால் அந்த பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டது .சரியாக மாலை 4 மணிக்கெல்லாம் தடா அப்துல் ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாகன அணிவகுப்புடன் வந்தனர் .
நாரே தக்பீர்  அல்லாஹ் அக்பர் -மோடியே உனக்கு எச்சரிக்கை -என்ற கோஷம் விண்ணை பிளந்தது .மோடியின் நாய்  வடிவிலான உருவபொம்மை கொளுத்தப்பட்டபோது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது .




 இறுதியாக பாஜக அலுவலகம் நோக்கி முன்னேற முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர் .பின்னர் காவல் துறை வாகனங்களில் அனைவரும் கைதுசெய்யப்பட்டு தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .நோன்பு நேரம் என்று கூட பாராமல் மிகவும் குறுகிய நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்திய இந்திய தேசிய லீக் கட்சியினரை சமூதாய தலைவர்கள் ,மனித உரிமை ஆர்வலர்கள் ,வெகுவாக பாராட்டினார்கள் .



நேரடி களதொகுப்பு: ஜே: ஷேக் பரீத் 


1 comments:

  1. நிச்சயமாக மனது நிறைவாக இருக்கிறது.....கருத்தை கருத்தால் எதிகொள்வது.....தான் சானக்கியத்தனம்.....அதை சிறிது பிசகாமல் செய்த தேசிய லீக் அமைபிற்கு எனது ஸலாமும் துஆ உண்டு...சூட்டோடு சூடாக செய்தது தான் அறீவு....அதை விடுத்து மீட்டிங் போட்டு கண்டன அறீக்கை விடுவது சரிஅன்று........அருமை சகோதரர்களே.....சுயனமில்லாமல் செயல் படும் உங்களுக்கு அல்லாஹ் அருள் செய்வான்.....

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)