முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தமுமுகவை காப்பி அடித்து சிலர் கட்சி நடத்துகிறார்கள் :மாலிக் பேட்டி :


முத்துப்பேட்டை, ஜனவரி 12: 
ஏன் இந்த பொதுக்கூட்டம்?
முத்துபேட்டையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி மந்தமான நிலையில் நடைபெற்று வருகிறது.ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அதை உடனே திறந்திட கோரியும்,முத்துப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துணை மின்நிலையம் அமைக்க கோரியும்,முத்துப்பேட்டையை தனி தாலுக்காவாக அறிவிக்க கோரியும் இந்த பொதுக்கூட்டத்தை நடத்த உள்ளோம் .

2.த.மு.மு.க மற்றும் ம.ம.க-வின் வளர்ச்சி எப்படி உள்ளது?
திருவாரூர் மாவட்டம் முழுவதும் மது கடைகளுக்கு எதிரான பிரச்சாரம், அந்நிய முதலீட்டுக்கு எதிரான பிரச்சாரம் வீரியமாக நடைபெற்றது.காவிரி நீரில் தமிழகத்திற்க்குள்ள உரிமையை நிலைநாட்ட தலையில் கருப்பு முண்டாசு கட்டி போராட்டம் நடைபெற்றது.இஸ்லாமிய இளைஞர்களும் மாற்றுமத அன்பர்களும் த.மு.மு.க மற்றும் ம.ம.க-வில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

3.முத்துப்பேட்டையில் த.மு.மு.க வீழ்ந்து விட்டதாக சிலர் பிரச்சாரம் செய்து வருகிறார்களே?
தமிழக மண்ணில் முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க,வீதிக்கு வந்து போராடத்தெரியாத நிலையை மாற்றி போராட்ட களத்திற்கு அழைத்து வந்த பெருமை த.மு.மு.க-வையே சாரும். கொடி வேண்டாம், போராட்டம் வேண்டாம்,அரசியல் வேண்டாம்  என்று நேற்று கூறியவர்கள்,இன்று த.மு.மு.க-வை பார்த்து ஈயடிச்சான் காப்பி வேலையை செய்து வருகிறார்கள். நாங்கள் ஒரு போதும் வீழமாட்டோம், பீனிக்ஸ் பறவையை போல் எழுந்து நிற்ப்போம்.

4.உள்ளாட்சி மன்ற தேர்தலில் உங்களின் வேட்பு மனுவை வாபஸ் வாங்குமாறு பலர் கூறியும் நீங்கள் பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறதே?
இதை சொல்பர்கள் முதலில் இறைவனுக்கு அஞ்சி கொள்ளட்டும் நான்தான் பலரிடம் போய்எடுத்துச் சொன்னேன். ஆனால் அவர்கள் பதவி வெறியில் ஆணவத்தோடு பதில் கூறினார்கள் .நாங்கள்தான் இந்த ஊருக்கு தியாகம் செய்தவர்கள் என்று சொன்னார்கள்.அது என்ன தியாகமோ?
 சந்திப்பு :ஜே :ஷேக் பரீத் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)