முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் :சென்னை மற்றும் மதுரை திணறியது !!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் ஏ .எஸ்.இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

மாநில செயலாளர் முஹம்மது ரசின் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி, எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் , இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே. முஹம்மது ஹனீஃபா இந்திய கம்யயூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் மு.வீரபாண்டியன், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் அ.ச. உமர் பாருக் , அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ்.மணி,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்( NWF) மாநில செயற்குழு உறுப்பினர் சித்தி ஆலியா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

மதுரையில் நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி தலைமை தாங்கினார்.

எஸ் .டி.பி.ஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் எஸ்.எம்.ரபீக் அஹமது,மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப்,ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில தலைவர் ஆபிருதீன் மன்பயீ,நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் மாநில பொதுச் செயலாளர் ரஜியா பேகம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலாளர் கனி அமுதன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முன் வைத்த தீர்மானங்கள்

1.தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் மனித உரிமை மீறல்களை இப்போராட்டம் வன்மையாக கண்டிக்கிறது.மேலும் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு காவல்துறையின் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கேட்டுக்கொள்கிறது.

2.தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ள முஸ்லிம்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும்.பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

3.நடைபெற்ற அனைத்து குற்றங்களையும்,முஸ்லீம்கள் தாம் செய்திருப்பார்கள் என்ற தவறான கோணத்தில் விசாரிக்காமல்,நடுநிலையான,நேர்மையான மனநிலையோடு காவல்துறையும்,உளவுத்துறையும் விசாரணை நடத்த வேண்டும்.

4.கருப்புச்சட்டமான யு.ஏ .பி.ஏ சட்டத்தை (சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்) தமிழகத்தில் தவறாக பயன்படுத்தப்படுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும்.

5.ஜனநாயக அடிப்படையிலான போராட்டங்களுக்கு தடை விதிக்கும் போக்கு மாற வேண்டும்.

6.வட மாநிலங்களில் செயல்படுத்தி வந்த தீவிரவாத நாடகங்களை தமிழகத்தில் அரங்கேற்றும் காவல்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7.சட்டத்திற்கு முரணாக செயல்படும் காவல்துறையினர் ,மற்றும் உளவுத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும்,காவல் புகார் ஆணையம் ஒன்றை உடனே அமைக்க வேண்டும்.என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு உடனே அமல்படுத்த வேண்டும்.

ஆகிய தீர்மானங்களை முன்வைத்து சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடத்திய பாப்புலர் ப்ரண்ட் தொண்டர்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

2 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration

3 Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல் களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் சிறை நிரப்பும் போராட்டம்!
Chennai Oct 6 JAIL BARO Protest Demonstration





 









செய்தி :ஜே .ஷேக் பரீத் 

முத்துப்பேட்டை தீ விபத்து -மனிதநேய பணியில் SDPI

முத்துப்பேட்டை நெயயக்காரத் தெருவில் 29.9.2013 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 4.10.2013 அன்று ஜும்மாவில் SDPI கட்சி சார்பாக நிதி வசூல் செய்யப்பட்டு பாதிக்க  பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.





இதற்கு பொறுப்பு தாரியாக நியமிக்க பட்ட பாபுலர் பிரான்ட் ஆப் இந்தியாவின்  மாவட்ட தலைவர் A.அபு பக்கர் சித்திக் அவர்கள் வழங்கினார்கள்.அப்பொழுது ஆசாத் நகர் ஜமாதார்களும்,SDPI கட்சியின் மாவட்ட பொது செயலாளர் நெய்னா முஹமது மற்றும் முத்துப்பேட்டை நகர தலைவர் முஹமது மைதீன்,துணை தலைவர் நிசார் செயலாளர் ஷைக் மைதீன் மற்றும் கிளை பொறுப்பு தாரிகளும், SDPI கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

தகவல் :மைதீன் 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)