முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

பாட்னா’ குண்டும் & அரசியல் ஆதாயங்களும்- MMK கட்சி பொதுச்செயலாளர் கருத்து :

சென்னை,அக்டோபர் 29: பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்யை தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டு, எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது கோழைத்தனமான செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது.

மதிப்புமிக்க உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியதோடு, இதுகுறித்த முழு விசாரணையை தேசியப் புலனாய்வுக் குழுவிடம் (NIA) ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


இக்குண்டுவெடிப்பின் பின்னணி நடுநிலையோடும், மிகுந்த நுட்பத்தோடும் ஆராயப்பட வேண்டும்.

விசாரணைக்கு முன்பே ‘வழக்கம் போல’ பழி சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்பட்டு, மோடிக்கு அனுதாப அலையை உருவாக்கும் ‘திருப்பணிகள்’ நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வன்முறை சக்திகளிடமிருந்து மக்கள் கவனமாக தள்ளி நிற்க வேண்டும்.

இதில் ‘அபினவ் பாரத்’ போன்ற அமைப்புகளின் பங்கு என்ன என்ற கோணத்தில் யாருமே சிந்திப்பதில்லை.

மோடிக்கும் & நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள்.

பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.

இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும்.

‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது.

எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் & அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.

முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து நடந்த சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு,





முத்துப்பேட்டை, அக்டோபர் 29: முத்துப்பேட்டை நகரில் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களை பெரும்பாலான தனியார்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதுகுறித்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகத்திடம் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி புகார் கொடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் முத்துப்பேட்டை நெய்யக்காரத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவர் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகியாக உள்ளார். இவரது மகன் அயூப்கான். இவர் அதிமுக வார்டு நிர்வாகியாக உள்ளார். அயூப்கான் பேரூராட்சி அலுவலகத்தில் சென்ற வாரம் அதே பகுதியைச் சேர்ந்த சேக்கமரைக்காயர் மகன் சாகிப் மரைக்காயர் பேரூராட்சிக்கு சொந்தமான சாலையை ஆக்கிரமித்து வைத்திருப்பதாக பேரூராட்சி செயல் அலவலார் சித்தி விநாயகமூர்த்தியிடம் புகார் கொடுத்திருந்தார்.

 உடன் செயல் அலுவலர் சம்மந்தப்பட்ட சாகிப் மரைக்காயருக்கு விளக்கம் கேட்டு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டன. இந்த நிலையில் விடுப்பில் சென்றிருந்த செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி நேற்று அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்பொழுது ஆக்கிரமிப்பு குறித்து விளக்கம் அளிப்பதற்காக சாகிப் மரைக்காயரும் அவரது நண்பர் நவாஸ்கானும் சென்று செயல் அலுவலரிடம் விபரங்களை கூறினர். அதில் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த செயல் அலவலர் புகார் கொடுத்த அயூப்கானுக்கு தகவல் கொடுத்து வரவழைத்து செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சாகிப் மரைக்காயருக்கும் அதிமுக நிர்வாகி அயூப்கானுக்கும் தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். 

பின்னர் அலுவலம் வாசலில் நின்று சத்தம் போட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பேரூராட்சி வளாகம் பெரும் பரபரப்பானது. தீபாவளி நேரம் என்பதால் மக்கள் கூட்டம் பேரூராட்சி அலுவலகம் எதிரே நின்று வேடிக்கை பார்த்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலிசார் பேரூராட்சி அலுவலம் வந்து தகராறில் ஈடுபட்டவர்களை கலைத்துவிட்டார். இந்த நிலையில் சாகிப் மரைக்காயர் அதிமுக நிர்வாகி அயூப்கான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சண்முகவேல் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவகத்தில் ஆக்கிரமிப்பு குறித்து சமாதான பேச்சு வார்த்தையில் தகராறு ஏற்பட்டதால் அலுவலகம் வாசலில் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட காட்சி.

நமது நிருபர்: மு.முகைதீன் பிச்சை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)