முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் -நூறு இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றுவேன் !பாஜக எம்பி யின் தேச விரோத பேச்சு !!!

டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. 
ஒரு இந்துபெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றுக: பாஜக எம்.பி. பேச்சு!!
பாஜகவின் சர்ச்சை முகங்களில் ஒருவர்தான் யோகி ஆதித்யாநாத், நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றின் மீது பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார். 

கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார், இந்த நிலையில் யோகி ஆதித்யாநாத் பேசிய வீடியோ பேச்சுதான் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. 

அதாவது தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 வீடியோவில் பதிவான இந்த காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் இன்று கேட்டதற்கு யோகி ஆதித்யாநாத் பதிலளிக்க மறுத்து விட்டார். அத்துடன், வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்பாக அது குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்றார்.

முத்துப்பேட்டைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்கிட உதவிக்கரம் நீட்டுங்கள் -தமுமுகவினர் வேண்டுகோள்!

நமது ஊரான முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துவந்துள்ளது.
















இந்நிலையில் 8 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் ஆம்புலன்ஸ் பழுதடைந்து தொடர்ந்து 
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மிக குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும், இலாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படுத்தியதாலும் போதிய இருப்பு நிர்வாகத்தில் இல்லாமல் போய்விட்டது. 


எனவே இன்ஷா அல்லாஹ் மீண்டும் நமது சமுதாய மக்களின் உதவியோடும், ஒத்துழைப்போடும், பிராத்தனைகளோடும் நமது ஊருக்கான புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவெடுத்துள்ளோம். ஆகவே தாங்கள் தாராளமாக நிதியுதவி செய்து சமுதாயப்பணிகளுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

S.ஹூமாயூன் கபீர் – 7845416011 
M.சம்சுதீன் – 7358159830 
N.R.அலி – 9791401101 
L.நிஜாம் – 9715394088 
வழக்கறிஞர் தீன் முஹம்மது – 9865557556 

உங்கள் நண்கொடைகளை கீழ்கண்ட பேங்க் அக்கவுண்டிற்கும் அனுப்பலாம்...
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM AC NO - 122602000000503 INDIAN OVERSEAS BANK MUTHUPET BRANCH உங்கள் நண்கொடைகளை எதிர்பார்த்து மக்கள் சேவையில்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்

பீகாரில் மண்ணை கவ்விய மதவாத சக்திகள் -இந்தியா முழுவதும் மண்ணை கவ்வ வைக்க முடியுமா ?

மக்களவைத் தேர்தல் முடிந்து 3 மாதம் ஆன நிலையில் பீகார் உள்ளிட்ட 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளில் கடநத 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்றுவாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பா.ஜனதா 7 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் ஒரு

தொகுதியிலும் வென்றது. குறிப்பாக பீகாரில் தேர்தல் நடைபெற்ற 10 தொகுதிகளில் 4 இடங்களை மட்டுமே பா.ஜனதா பிடித்தது. 6 தொகுதிகள் ராஷ்டிரிய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி வசம் வந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் நடந்த இடைத்தேர்தலில் 5 தொகுதிகளையும் பா.ஜனதா இழந்தது. இவற்றில் 3 தொகுதிகள் ஏற்கனவே அக்கட்சி வசம் இருந்தவை. இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

தங்கள் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி குறித்து நிதிஷ் குமார் கூறுகையில், “நரேந்திர மோடி அரசு மீது வாக்காளர்களுக்கு உள்ள அதிருப்திய இந்த வெற்றி காட்டுகிறது. பா.ஜனதாவின் வகுப்புவாத செயல்பாடுகளை தடுக்க இந்த கூட்டணியில் இடதுசாரிகளையும் சேர்க்க வேண்டும்” என்றார்.

பீகாரில் லாலுவும் நித்திசும் இனைந்து வெற்றி பெற்று இருப்பது இந்தியா முழுவதிலும் உள்ள மதசார்பற்ற சக்திகளுக்கு ஒரு புதிய தெம்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .இதே போல் மாநிலத்தில் எதிரும் புதிருமாக பிரிந்து சிதறிக்கிடக்கும் மதசார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்தால் இந்தியாவையே பீகார் ஆக்கலாம் என்பதுதான் நிதரனமான உண்மை .

இன்றைய இளைஞர்களின் சிந்தனைப்போக்கு...?

கட்டுரை, ஆகஸ்ட் 20: இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!


இன்று எமது இளைஞர்கள் மத்தியில்மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக  அவர்கள்நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பேஷன் “ 
என்ற பெயரில் இவர்கள்பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் 
உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில்உள்ள தெளிவின்மையும் 
இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவரபடிக்காமல் 
இருப்துமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில்ஈடுபடும் மார்க்கமாகவும் இவர்கள் நோக்குவதால் இவர்கள்
தொழுதால் போதும் அல்லது எப்படிவேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை
விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும

உண்மையில் இஸ்லாம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பைஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல் அது பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல்,பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு

உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத்தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றைஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக ஒரு முழுமையானஇஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம்
பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மத ஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவதாராண்மைவாதச் 
சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு 
அவன்“நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப்பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்
காணும் தாவாமுறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத்
தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப்
புதைக்க முற்படும்மேற்கினது கலாச்சார படையெடுப்பும்,  வாழ்கை முறையையும்,  சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன்
உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒருமுழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology)  வாழ்க்கை முறையாக அவன் விளங்குவதும்அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும், முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும், மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பதுடன் அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது
வாழ்க்கை முறைபற்றியஅடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார
சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒருமாற்றீட்டு வாழ்க்கைத்
திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ்,இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்பட்டு, 
முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும்இஸ்லாமிய
வெளிநாட்டு கொள்கை மூலமாக  தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு
உலகில்இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும்ஒரு தலைமையாக  இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய”இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து 
பாதுகாத்து மறுமையில்ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் 
பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்..,

     

மயிலாடுதுறையில் திருமணத்திற்கு சென்ற இரண்டு பெண்கள் காரில் கடத்தல் -நகை மற்றும் பணம் பறிப்பு பதற்றம் !!!




































நாகை மாவட்டம் சோழசக்கரநல்லூரை சேர்ந்த இரண்டு முஸ்லிம் பெண்கள் மயிலாடுதுறையை அடுத்த கிளியனூருக்கு திருமணத்திற்கு சென்றுள்ளனர்.

திருமணம் முடிந்து கிளியனூர் கடைத்தெருவில் பேரூந்துக்காக காத்திருந்த போது அம்பாசிடரில் வந்த இருவர் நாங்கள் மயிலாடுதுறை செல்கிறோம் என்று சொனனதால் இருவரும் காரில் ஏறியுள்ளனர்.
மயிலாடுதுறை வருவதற்குள் நாங்கள் சிதம்பரம் செல்கிறோம் நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள் என்று கேட்க நாங்கள் சோழசக்கர நல்லுர் செல்கிறோம் என்று சொல்ல இவர்களை மிரட்டியவாறு கார் சிதம்பரம் சென்றது.

கார் மயிலாடுதுறையை தாண்டியபோது இன்னும் இரண்டுபேர் காரில் கத்தியுடன் ஏறி இருவர் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி அவர்களை சிதம்பரம் கடத்தி சென்று அவர்கள் இருவருடமிருந்த 35 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அவர்களிடமிருந்த செல்போன்களையும் பிடுங்கிக்கொண்டு சிதம்பரத்தில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து சோழசக்கர நல்லுர் வந்து பின்னர் மயிலாடுதுறையில் காவல்நிலையத்தில் புகார் செய்துயுள்னர்.
காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
ஆண் துணையின்றி பெண்கள் தனியாக செல்வதும், அறிமுகம் இல்லாத கார் மற்றும் வேன்களில் பிரயாணம் செய்வதும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று...
இது ஓர் விழிப்புணர்வு பதிவு, அதிகப்படியாக Share செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்...

பட்டுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை - தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் ஒத்திவைப்பு !!

இன்று பகல் 12 மணியளவில் பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் ADSP முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்தையில் S.l. பிச்சை முத்துவை பணி குறைப்பு (Degraded) செய்து ஆயுத படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ADSP ஒரு வாரம் கால அவகாசத்தில் துரை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் அடிப்படையில் முற்றுகை போராட்டம் வரும் 26-08-2014 அன்று மாற்றப்பட்டுள்ளது. (அல்ஹம்துரில்லாஹ்)

நோன்பிருந்து இப்தார் விருந்து கொடுத்த திருமாவளவன் :வேற்றுமுகம் காட்டும் அரசியல் வாதிகளுள் மாற்றுமுகம் !!!

இஸ்லாமியர்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து போராட்ட  களத்தில் சிங்கமாய் கர்ஜிப்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் .அவர் இஸ்லாத்தின் மீதும் இஸ்லாமியர்களின் மீதும் அளவில்லா அன்பும் ,ஈடு இணையற்ற  கருணையும் கொண்டவர் என்பது நாம் யாவரும் அறிந்த ஒன்று .

இஸ்லாமியர்களின் 5 கடைமைகளில் ஒன்றான ரமலான் நோன்பை சகோதரர் தொல் திருமாவளவன் அவர்கள் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக அதிகாலையில் எழுந்து சஹர் செய்து ரமலான் நோன்பிருப்பதை கடைபிடித்து வருகிறார் .

வழக்கம்போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சகோதரர் தொல்.திருமாவளவன் இந்த வருடமும் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பை கடைபிடித்தார் .

வழக்கம் போல் மூன்று நாட்கள் மட்டுமே நோன்பிருக்கும் தொல்.திருமாவளவன் இந்த வருடம் நான்கு நோன்பை கடைபிடித்தார் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை அபூ பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் தமீமுன் அன்சாரி ,SDPI கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி ,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாநில செயலாளர் முஹம்மது முனீர் ,இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் ,அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் அப்போலோ ஹனீபா ,சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை தலைவர் மேலைநாசர்,பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாநில தலைவர் இஸ்மாயில் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நிஜாமுதீன் ம்ற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் உட்பட  கட்சி  நிர்வாகிகள்  வாழ்த்தி பேசினர்.


தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

பட்டுக்கோட்டையை ஸ்தம்பிக்க வைப்போம் -முத்துப்பேட்டையில் நடைபெற்ற தவ்ஹீத் ஜமாத்தின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு !!!











கடந்த 10-08-2014 அன்று பட்டுக்கோட்டையில் தவ்ஹித்ஜமாத் முத்துப்பேட்டை கிளையின் முன்னாள் செயளாலர் சகோதரர் சாதிக் மற்றும் அவர்சகோதரர் யூசுப் இருவரும் குடும்பத்தோடு காரில் வந்துகொண்டு இருக்கும்போது அவரையும் அவர்குடும்பத்தாரையும் தேவையில்லாமல் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி தீட்டியுள்ளார் போக்குவரத்து காவலர்

ஏன் தேவையில்லாமல் திட்டுகிற்ரிர்கள் உங்கள் மீது போலீசில் புகார் கொடுக்க போகிறேன் என் சொல்லிவிட்டு பொலிஸ் ஸ்டேசன் வந்தனர்

இவர்களை பிந்தொடர்ந்து வந்த அந்த காவலர் ஒரு குடிகாரன் போல லத்தியை எடுத்து போலீஸ் ஸ்டேசன் உள்ளேயே வைத்து உயிர் போகும் அளவுக்கு தாக்கியுள்ளார் இதில் அடிதாங்காமல் யூசுப் அவர்கள் மயக்கமடைந்தார்.

தனது சகோதரன் தாக்கப்படுவதை பார்த்து பொருக்காமல் நியாயம் கேட்ட சகோதரியையும் கேவலமாக திட்டியுள்ளார் அந்த வெறியர்

இப்படி ஆசைதீர அநியாயம் செய்தபின்பு வெளியே அனுபியுள்ளார்கள்

லோக்கல் பத்திரிக்கையாளர் ஒருவர் நம்மிடம் கருத்து தெரிவிக்கையில் அந்த போக்குவரத்து காவலர் பலத்டவை இதே போல நடந்து தலைமை அதிகாரி வார்னிங் பன்னியுள்ளதாகவும் கூறினார்.


இந்நிலையில்
  முத்துப்பேட்டை கிளைகளின் சார்பில் மஸ்ஜிதுன் நூரில் ஆலோசனை கூட்டம் புரைதா மண்டல தலைவர் செய்யது இபுறாகிம் தலைமையில் நடைபெற்றது. இதில் 19.8.2014 அன்று நடைபெறும் பட்டுக்கோட்டை காவல்நிலையம் முற்றுகை போராட்டத்திற்கு அதிகமான மக்களை அழைத்துச்செல்ல ஆலோசனை செய்யப்பட்டது. இரண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் அதிக அளவில் சென்று பிரச்சார பணி செய்வது என் முடிவு செய்யப்பட்டது.

தொகுப்பு ஜே :ஷேக் பரீத் 

மௌத்து அறிவிப்பு "[ சேக்கனா நிஜாமின் தம்பி மகள் ] ஹஸ்னா

அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த முகைதீன் அப்துல் காதர் மற்றும் மர்ஹூம் முகம்மது அன்சாரி ஆகியோரின் பேத்தியும், சேக்கனா பஷீர் அஹமது, நிஜாம் ஆகியோரின் தம்பி மகளும், ராஜிக் முஹம்மது அவர்களின் மகளுமாகிய பேபி ஹஸ்னா [ வயது 4 ] இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகி விட்டது.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது-இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் ஷிப்லி கண்டனம் !!

இந்திய செவிலியர்களை பத்திரமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் திருப்பி அனுப்பியதற்க்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னம் பொறித்த பனியன் போட்ட விவகாரம்,கோவையில் மதகுரு உள்பட ஆறு பேரை பொய் வழக்கில் கைது செய்து இருப்பது,விசாரணை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்து அனுப்புவது,இது போன்ற காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான கண்டனத்திற்க்குரியது.

காவல்துறையிலுள்ள ஒரு சில அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் ஒட்டுமொத்த காவல்துறையும் களங்கத்தை சுமந்து நிற்கிறது.வரம்புமீறும் காவல்துறை அதிகாரிகள் மீது உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் நன்மதிப்பை பெறும் துறையாக,காவல்துறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் இதை கவனத்தில் கொள்ள தவறினால் அவரது ஆட்சிக்கு இத்தகைய செயல்கள் மிகப்பெரிய இழப்பை தேடி தரும் என்பதில் ஐயமில்லை

மௌத்து அறிவிப்பு: "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்"


முத்துப்பேட்டை,ஆகஸ்ட் 01: முத்துப்பேட்டை P.K.T. ரோடு மர்ஹும் S.M.K.N.நெயனாம்ஷா மரைக்காயர் அவர்களின் மகனும், S.M.K.N.முஹம்மது தாவுது சகோதரர்களின், சகோதரரும், கொய்யா முஹம்மது தாஜுதீன் சகோதரர்களின் தகப்பனாரும், A.S.N.முஹம்மது இபுராஹீம், J. ஷேக் பரீது ஆகியோரின் மாமனாருமாகிய  "கொய்யா S.M.K.N.அப்துல் ரஜாக் ஹாஜியார்" அவர்கள் இன்று காலை 6 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள். 

(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்)

அன்னாரின் ஜனாஸா அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அறிவிப்பவர்: கொய்யா S.M.K.N.முஹம்மது தாவுது.

மேலும் தொடர்புக்கும்:

A.S.N.முஹம்மது இபுராஹீம்.....+91 98947 95822

A.முஹம்மது சாதாத்....+91 96599 81181

A.அப்துல் மாலிக் .....+91 90031 3313

J. ஷேக் பரீது: +91 7200 116852

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)