முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

குத்பா பள்ளி திறப்பு விழாவிற்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டு வாழ் முத்துப்பேட்டை நண்பர்கள்..

முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : சபீர் அஹமது:

புதிய ஜும்மாஹ் மஸ்ஜித் திறப்பு விழாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைவனின் கிருபையால் இந்த பள்ளி எப்பொழுதும் அதிக மக்கள் தொழுகைக்கு கூடும் பள்ளியாக இருக்க வேண்டும்.

மூன் லைட்:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

முஹம்மது ராஜா சுகர்னோ

நமது ஊர் முத்துக்கள் குவியும்
முத்துபேட்டையின் முதல் குத்பா பள்ளி
நாணுறு வருடங்களென வரலாறு சொல்கிறது..!!
அக்காலப்பள்ளியை இக்கால வசதிக்கேற்ப
வழங்கியருளிய வல்ல இறைவனுக்கு
வாழ்நாள் தோறும் வாஞ்சையோடு
நம் நன்றிகள் பல..

எங்கள் ஊரில் பள்ளிகள் பதிமூன்றிந்தாலும்
எல்லாவிதமான தேவைகளுக்கும்
எல்லோரும் அடியெடுத்து வைக்கும்
எல்லாம் வல்ல இறைவன்
எங்கள் ஊருக்கு வழங்கிய
வரலாறு கண்ட வாஞ்சையான பள்ளி..

எங்கள் ஊரின் அழகிய ஆற்றங்கரையோரம்
அமைதி நிலவ இதமாக வீசும் இளந்தென்றல்
காற்றை தனக்கே சொந்தமாக்கி தக்கவைத்துகொண்டிருக்கும்
தனித்துவப்பள்ளி..எங்களூரின் குத்பா பள்ளி..
எங்களுரின் ஏகாந்தபள்ளியை பற்றி எழுத எழுத ஏடுகள் காணாது..!!

ஏக இறைவன் எங்கள் ஊருக்கு
வழங்கியருளிய வாஞ்சைப்பள்ளியின்
புதிய திறப்பு விழாவிற்கு வருகை தரும்
அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதோடு
இந்த இதமான தருணங்களை இணையத்தில்
இழையோட செய்யும் இனிய சகோதரர்களுக்கும்
வாழ்த்துகளும் நன்றிகளும் பல சொல்லும்.

சுல்தான் அப்துல் காதர்:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

முஹம்மது ஷேக் தாவூத் (ராஜா:

பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

M. அஹமது கபீர்:

பள்ளி வாசல் திறப்பு விழா நல்ல படியாக அமைய அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

தொகுப்பு

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் நிர்வாகம்

மேலும் தங்களுடைய வாழ்த்துகளை எதிர்பார்க்கிறோம்...

திறப்பு விழாவிற்கு நான் தயார்,குத்பா பள்ளி பேட்டி...











முத்துப்பேட்டை, டிசம்பர் 29 : முதன் முதலாக முத்துப்பேட்டை நகருக்கு சுமார் 400 வருடத்திற்கு முன்பு எந்த பெயரும் இல்லாமல் வெறும் பள்ளி வாசல் என்ற பெயரில் அடியெடுத்து வைத்தேன். நான் அடியெடுத்து வைத்த பகுதியான மரைக்காயர் தெருவில் பெருவாரியான முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர்.அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முதன் முதலில் என்னுடைய இடத்தில் குத்பா தொழுகையை நடத்தினார்கள். (இந்த ஊரில் முதல் குத்பா நடந்தது இங்கு தான் என்பது குறிப்பிடத்தக்கது) இதனால் எனக்கு குத்பா பள்ளிவாசல் என்று எனக்கு பெயரிடப்பட்டது. பெயரில்லாமல் வந்த எனக்கு பெயரிட்டு கண்ணியப்படுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

இதனைத்தொடர்ந்து காளங்கள் நகர்ந்தன. என்னிடம் வந்து இறைவனை வணங்கிய எண்ணிலடங்கா மக்களை நான் அவ்வப்போது இழந்திருக்கிறேன், இதனை எண்ணி நான் ரொம்பவும் வருந்துவதுண்டு. முன்னோர்கள் சென்றாலும் வரக்கூடிய காலங்களில் உள்ள மக்களை எண்ணி, என்னிடம் அதிக தொடர்பை ஏற்படுத்தக் கூடிய மக்களை நான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் மிக குறைவான மக்களே என்னிடம் வருகிறார்கள். ஏன் நான் ஒரு பழைய பள்ளிவாசல் என்ற பெயரிலா அல்லது என்னுடைய வருகை இவ்வூர் மக்களுக்கு பிடிக்க வில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் வெள்ளிக்கிழமை ஜும்மாஹ், மற்றும் பெருநாள் தொழுகை ஆகிய தொழுகைக்கு மட்டும் என்னை கையில்பிடிக்க முடியாது. ஏனெனில் அன்று மட்டும் இவ்வளவு மக்கள் கூட்டம் என்னிடம் வந்து இறைவனை வணங்குவதை பார்த்தால் ஆனந்த கண்ணீர் வரும்.

ஆனால் சாதாரண 5 வேலை தொழுகையில் மிகவும் நான் கைசேதம் அடைந்தது போல் என் முகம் காட்சி தரும். இதனைக்கண்டு நான் அஞ்சுவதில்லை என்னிடம் வந்து இறைவனை வணங்க மிகப்பெரிய கூட்டம் வருங்காலங்களில் அதிகமாக என்னுடைய இடத்திற்கு வருகை தந்து என்னை சிறப்பிப்பார்கள் என்ற என்னத்தை மனதில் வைத்துக்கொண்டு இந்த பள்ளிவாசல் திறப்பு விழாவினை எதிர்நோக்கி இருக்கிறேன்.

குறிப்பு:

இந்த குத்பா பள்ளி திறப்பு விழாவினை முன்னிட்டு அனைத்து கட்சி நண்பர்களும், இஸ்லாமிய அனைத்து இயக்கத்தினரும் மற்றும் ஊர் பொது மக்களும் அவரவர் கட் அவுட் வைத்து வண்ணம் முத்துப்பேட்டை நகரை குதூகலமக்கிவருகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹம்மது இல்யாஸ், 

முத்துப்பேட்டை:இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கொடி கட்டியதால் பரபரப்பு



முத்துபேட்டை, டிசம்பர் 29 : முத்துப்பேட்டையில் நாளை குத்பா பள்ளிவாசல் திறப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள இஸ்லாமிய ஊர்களிலிருந்து லச்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும், இதில் மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, பட்டுக்கோட்டை சாலை, பேட்டை சாலை, ஆகிய இருபுறங்களிலும் வண்ண விளக்குகளும், டீப்லைடுகளும், இஸ்லாமிய கோடி தோரணங்களும், விளம்பர போர்டுகளும் வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளனர். இதனால் முத்துப்பேட்டை நகர் முழுவதும் விழாக்கோலமாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருத்துறைப்பூண்டி சாலை வரை இஸ்லாமியர்கள் கட்டிய தோரனக்கொடிக்கு கீழே BJP கோடியை நேற்று நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்டுள்ளது. கட்டப்பட்ட இக்கொடியை பொதுமக்கள் காலையில் பார்த்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏதும் நிலவாமல் இருக்க முத்துப்பேட்டை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் பொது மக்களிடம் விசாரித்ததில் இன்று BJP - யின் தெருமுனை பிரச்சாரம் நாடக்க உள்ளதாகவும் இந்த பிரசாரத்திற்கு BJP யின் மாநிலத்தலைவர் H .ராஜா வருவதாகவும் விசாரித்ததில் தெரிய வருகிறது.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexppress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா, முஹைதீன் பிச்சை, சுபைத் கான், மர்சூக் அஹ்மது, TR .அப்துல் ரஹ்மான்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)