முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ரத யாத்திரையை நிறுத்துவிட்டு அத்வானி மன்னிப்புக்கோர வேண்டும்: எஸ்.டி.பி.ஐ


புதுடெல்லி,அக்டோபர் 16 : ஊழலுக்கு எதிராக ரதயாத்திரை நடத்தும் அத்வானி யாத்திரையை நிறுத்திவிட்டு மக்களிடம் மன்னிப்புக்கோர தயாராக வேண்டும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கூறியுள்ளார்.வளர்ச்சியின் இரண்டாவது அப்போஸ்தலராக பா.ஜ.க உயர்த்திக் காட்டிய கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா கைதான சூழலில் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை எழுப்ப பா.ஜ.கவுக்கு உரிமையில்லை. எடியூரப்பாவை தவிர அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மேலும் 3 பேர் சிறையில் இருப்பது பா.ஜ.கவின் கொள்கை வறட்சியை வெளிச்சம்போட்டு காட்டுகிறது என இ.அபூபக்கர் கூறினார்.அன்னா ஹஸாரேவை முன்னிறுத்தி ஊழல் எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தேசிய அரசியலில் எழுச்சிப்பெற நடத்திய பா.ஜ.கவின் முயற்சி தோல்வியை தழுவியுள்ளது.சங்க்பரிவார் அமைப்புகள் பிரசாந்த் பூஷணின் மீது தாக்குதல் நடத்திய பிறகு ஹஸாரேவின் சாயம் மேலும் வெளுத்துள்ளது. இதர வழிகள் ஒன்றும் இல்லாததால் ஹஸாரே மெளன விரதத்தை கடைப்பிடிக்கிறார். அத்வானி ரதத்தை கர்நாடகாவுக்கு திருப்பி மக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும்.’ இவ்வாறு அபூபக்கர் கூறினார்.

நமது நிருபர்

சித்திக் அஹ்மத் (லண்டன்)

ரதயாத்திரையை வெற்றிப்பெறச்செய்ய லஞ்சம்: பா.ஜ.க தலைவர் சஸ்பெண்ட்


புதுடெல்லி, அக்டோபர் 16 : ஒரு புறம் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா ஊழல்புரிந்து சிறையில் அடைக்கப்பட்ட வேளையில் ஊழலுக்கு எதிராக எல்.கே.அத்வானி நடத்தும் காமெடி யாத்திரையை குறித்து பரபரப்பான செய்திகளை வெளியிட பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் அளித்தது தொடர்பாக பா.ஜ.க ஊடக பிரிவு தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க ஊடக பிரிவைச் சார்ந்த சியாம் குப்தாதான் லஞ்சம் அளித்தது தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேவேளையில் லஞ்சம் கொடுத்து பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க எம்.பி கணேஷ்சிங், மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் நாகேந்திர சிங் ஆகியோர் மீது பா.ஜ.க நடவடிக்கை எடுக்கவில்லை.ஊழலுக்கு எதிராக அத்வானி நடத்தும் ரதயாத்திரையை வெற்றிப் பெறச்செய்ய பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் வழங்கியது சர்ச்சையை கிளப்பியிருந்தது.கடந்த புதன்கிழமை பா.ஜ.க எம்.பி நாகேந்திரசிங் அழைத்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் லஞ்ச பணம் விநியோகிக்கப்பட்டது. பத்திரிகையாளர்களுக்கு பத்திரிகை அறிக்கைகளுடன் அளித்த உறையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் வழங்கப்பட்டிருந்தன.

நமது நிருபர்

புர்கானுதீன் (கனடா)

முத்துபேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் SDPI கட்சியினர்!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு சித்திக் மச்சன் என்கிற அபூபக்கர் சித்திக் அவர்கள் வாக்கு சேகரித்தார் இதன் பின்பு பேசிய அவர், அரசியல் என்பது மிகப் பெரிய ஒரு அறியானத்திற்கு சொந்தமானது என்றும், நமது பகுதிகளில் இருக்கக் கூடிய மாவட்ட ஆட்சி தலைவராக இருக்கட்டும், காவல் துறை அதிகாரிகளாக இருக்கட்டும், வருவாய்துறை அதிகாரியாக இருக்கட்டும் இவை அனைத்தையும் ஆட்டிப்படைக்க கூடிய சக்தி அரசியலுக்கு உண்டு என்றும், நல்லவர்கள் ஒதுங்கிக் கொண்ட காரணத்தினால்தான் கெட்டவர்களின் கூடாரமாக மாறிவிட்டது என்றும், நாம் இதை பார்த்து கொண்டு இருந்தோமையானால், இதற்கு ஒரு சிறிய உதாரணம் நம்மளுடைய பகுதிகளில் சாக்கடை நீர் ஓடிக் கொண்டிருக்கின்றது, மறு நாள் பார்த்தல் சாலைகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது, எனவே இதை கேட்பதற்கு நாதி இல்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு இருந்தார்கள். இதை அரசியலில் மலிந்து கொண்டிருக்கின்ற சாக்கடைகளை துடைத்தெரிவதற்குத் தான் SDPI கட்சியானது அரசியலில் களம் இறங்கி உள்ளது. மேலும் ஒடுக்கப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவரவர் சதவீதத்திற்கு தகுந்தார் போல் அதிகாரத்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி துவக்கப்பட்டதுதான் இந்த SDPI . மேலும் முத்துப்பேட்டையில் வசிக்கும் மக்களின் சொத்து வரிகளை இந்த பேரூராட்சி நிர்வாகம் சொத்து வரிகளில் முறைகேடு, குடிநீர்களில் முறைகேடு, இன்னும் மக்களுக்கு சேவைபுரிவதில் முறைகேடு, கல்விக்குழு தலைவராக இருக்கக் கூடிய பேரூராட்சி தலைவர் பள்ளிகளுக்கு செய்ய வேண்டிய பல நலத்திட்டங்களை செய்யவில்லை என்றும் பள்ளிகளில் படிக்ககூடிய மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதும் இல்லை என்றும், இதை எல்லாம் போக்குவதற்கு இறைவன் மீது ஆணையாக எந்த நிதியிலும் ஒரு ரூபாய் கூட ஊழல் செய்ய மாட்டோம் என்று வாக்குறிதி கொடுக்கின்றேன் என்றும் அவர் தெருவித்தார்.சிலர் நீ எப்படி ஊழல் செய்யாமல் இருக்க போகிறாய் பாப்போம் என்று கேட்டார்கள், அதற்கு ஒரு உதாரணம் அன்ன துறை அவர்களும், கக்கன் அவர்களும், ஜீவா அவர்களும், காமராஜ் அவர்களும் ஊழால் செய்யாமல் இருந்து தனது பணியை திறன்படா செய்த வரலாறு உண்டு, இவர்களுக்கு முடியும் என்றால் நான் முஹம்மத் நபி வரலாறை படித்தவன், இந்த அபூபக்கர் சித்திகள் ஊழல் செய்யாமல் இருக்க முடியும், எனவே என்னை வெற்றி பெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி.EK .முனவ்வர் கான்.அபு மர்வா

முத்துப்பேட்டையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் மனித நேய மக்கள் கட்சியினர்!






முத்துப்பேட்டை,அக்டோபர் 15 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தலைவர் பதவிக்கு மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் மாஷா மாலிக் என்கிற முஹம்மத் மாலிக் அவர்களை ஆதரித்து மாநில துணை பொதுசெயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் ஆசாத் நகரில் பிரச்சாரம் செய்தார் அதில் பேரூராட்சி குருத்து மக்கள் குறைகளை கூற தொலைபேசி மூலம் SMS வசதியை கொண்டு வரப்படும் என்றும், மேலும் பேரூராட்சியின் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக, பேரூராட்சிக்கு என்று தனிதொரு இணையலதளம் உருவாக்கப் போவதாகவும் அவர் தெருவித்தார். முத்துப்பேட்டையின் அமைதி, நல்லிணக்கம், முன்னேற்றம் என்ற 3 அம்ச திட்டத்தின் படி, முத்துப்பேட்டையை முழுமையாக முன்னேற முயற்ச்சிகள் மேற்கொள்ளப் படும் என்றும் அவர் தெருவித்தார்.ரத்த தானம் முகாம், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் சேவை, அவசரகால பாதுகாப்பு, இப்படிப்பட்ட சேவைகளை கடந்த ௧௬ ஆண்டுகளாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் செய்து வருகிறது. இவற்றை மக்கள் அன்கிகரிப்பால் மனித நேய மக்கள் கட்சி முத்துப்பேட்டை உள்பட பரவலாக வெற்றி பெரும் என்றும் அவர் தெருவித்தார். இந்த கூட்டத்தில் TMMK வின் மாநில செயற்குழு உறுப்பினர் தாஜுதீன், TMMk நகர தலைவர் சம்சுதீன், மற்றும் கழக தொண்டர்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
source from www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான். AKL .அப்துல் ரஹ்மான்

முத்துப்பேட்டையில் முடிவுற்ற தேர்தல் பிரச்சாரம் ஒரு பார்வை!







முத்துப்பேட்டை, அக்டோபர் 16 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களுடைய வாக்குகளை மக்களிடம் கேட்கும் விதமாக வாகன ஏற்பாடு செய்தனர், அதில் நேற்று மலை முதல் தேர்தல் வாக்கு சேகரிப்பு 5 மணியளவில் முடிவு பெற்றது அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட சில கட்சிகளின் போட்டோ உங்கள் பார்வைக்கு...

தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ASNs .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான், அபு மர்வா, AKL .அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)