முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை அருகே டாஸ்மார்க் கடையை மாற்றக்கோரி பெண்கள் திடீர் சாலை மறியல்.!



முத்துப்பேட்டை, மே 01 : முத்துப்பேட்டை அடுத்து சித்தமல்லி கடை தெருவில் ஒரு அரசு டாஸ்மாக் இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையால் குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால், இதனால் அங்கு தேவையற்ற பிரச்சனைகள் அடிக்கடி நிகழ்த்து வருவதாகவும், இந்த பகுதியில் முழுக்க முழுக்க பெண்கள் அதிக அளவில் நடமாடும் பகுதியாக இருப்பதால் இந்த டாஸ்மாக்கை மாற்ற வேண்டும் என்று பல முறை மனுவாகவும், போராட்ட மூலமும் பொது மக்கள் தெரிவித்து வந்த நிலையில் நேற்று திடீர் என்று ஒன்றிய குழு உறுப்பினர் பார்வதி அண்ணாத்துறை தலைமையில் கடைத்தெருவில் திடீர் என்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த சாலைமறியலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டதால் சித்த மல்லி கடைத்தெருவில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டன. இதனால் மன்னார்குடி முத்துப்பேட்டை போக்குவரத்து சுமார் மூன்று மணிநேரம் தடைப்பட்டது. தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை டி.எஸ்.பி.கோபி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். பின்னர் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் தேவதாஸ், தி.மு.க.ஒன்றிய பிரதிநிதி பாலஞான வேல், போராட்ட குழுவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தவள்ளி இளங்கோ, சத்தியப்பிரிய கலாவதி, மற்றும் ரேவதி, ராஜேஸ்வரி, ஜோதி,பெரியநாயகி, மணிமேகலை ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதை ஒருவார காலத்திற்குள் சமந்தப்பட்ட தாஸ்மாக் கடை மாற்றப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள், வருவாய்த்துறையினர் உறுதி அளித்ததின் அடிப்படையில் பெண்கள் சாலைமரியலை விளக்கிக் கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெருக வாழ்ந்தான் இன்ஸ்பெக்டர் குணசீலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை

திருமணச்செய்தி: "G.ராசிக் பரீது, M. ரிசிய்யா சுல்தானா"




முத்துப்பேட்டை, ஏப்ரல் 30 : ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆஃபிர் பிறை 7, 29.04.2012 மதியம் 11.30 மணியளவில் முத்துப்பேட்டை ஜனாப் S.M.S. குலாம் ரசூல் அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் G. ராசிக் பரீது மணாளருக்கும், நாகப்பட்டினம் ஜனாப்.M.Y. முஹம்மது மர்சூக் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி M. ரிசிய்யா சுல்தானா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை குட்டியார் சும்மாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம். முஹைதீன் சாஹிப் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர்)
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், EKA .முனவ்வர் கான், ASNS .அப்துல் பாரி, U .பத்ரு ஜமான். பேட்டை இமாம்.

அப்துல் நாஸர் மஃதனி: இரு கண்களிலும் பார்வை பறிபோனது- அவசர அறுவை சிகிட்சை!


திருவனந்தபுரம்,ஏப்ரல் 30 :பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி தனது கண்களின் பார்வை சக்தியை இழந்துள்ளார். வலதுகண்ணில் முற்றிலும் பார்வை பறிபோய் உள்ளது. இடது கண் பாதி அளவில் பார்க்கும் சக்தியை இழந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக தொடர்ந்து 3 அறுவை சிகிட்சைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை 3-வது அறுவை சிகிட்சை நடத்தப்பட்டுள்ளது.
பெங்களூர் ராஜாஜி நகர் கண் மருத்துவமனையின் டாக்டர்களான கெ.பூஜங் ஷெட்டி, நரேஷ்குமார் யாதவ் ஆகியோர் தலைமையில் லேஸர் அறுவை சிகிட்சை நடத்தப்பட்டது. அறுவை சிகிட்சையின் பலனை அறிய காத்திருக்கவேண்டும். சர்க்கரை நோய் முற்றிப்போய் கண்ணை பாதிக்கும் டயபடிக் ரெட்டினோபதி மூலம் கண்களில் இரத்தம் கட்டிப்போய் மஃதனிக்கு பார்க்கும் சக்தி இழக்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிட்சைக்கு முன்பு மஃதனியை சிறையில் சந்தித்த அவரது உடன் பிறந்தவர்களான முஹம்மது தாஹா, மலீஹா பீவி ஆகியோரை மஃதனியால் அடையாளம் காண முடியவில்லை. அவரது உடல்நிலை மோசமான பிறகும் கர்நாடாகா பாசிச பா.ஜ.க அரசும், சிறை அதிகாரிகளும் சிகிட்சை அளிப்பதில் அலட்சியமாக இருந்ததால் அவருக்கு பார்வை சக்தி இழக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சர்க்கரை நோய் படிப்படியாக அதிகரித்து கண்ணின் பார்வையை பாதிக்க துவங்கிய பொழுது மஃதனிக்கு உரிய சிகிட்சை அளிக்காததால் முற்றிய பிறகு அதிகாரிகள் கவனித்ததாக மஃதனியின் வழக்கறிஞர் சிராஜ் கூறுகிறார்.
ஜனவரி 13-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்ய நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கர்நாடகா அரசு, அப்துல் நாஸர் மஃதனிக்கு எந்த நோய்க்கும், சிகிட்சைகள் அனைத்தும் உரிய நேரத்தில் தேவைக்கு ஏற்ப அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தது. உடல் நிலை சீர்கெட்ட அப்துல் நாஸர் மஃதனிக்கு ஜாமீன் மனுவை நிராகரிக்க இந்த பிரமாணப்பத்திரம் காரணமானது.
தொடர்ந்து கேரள முதல்வர், எதிர்கட்சி தலைவர், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மஃதனிக்கு சிகிட்சையை உறுதிச் செய்யக்கோரி கர்நாடகா முதல்வருக்கு கடிதம் எழுதினர். இதனைத் தொடர்ந்து அவர் பதில் கடிதத்தில் சிகிட்சை அளிப்பதாக உறுதி அளித்தார். ஆனால், உடல் ஆரோக்கியம் சீர்கெட்ட மஃதனிக்கு கண் பார்வை பறிபோனதை தொடர்ந்து சிறைவாழ்க்கை மிகவும் துயரமாக மாறியுள்ளது. வாசிப்பு, எழுத்து என சிறையில் தனது வாழ்க்கையை கழித்து வந்த அப்துல் நாஸர் மஃதனி பேசும் சக்தியையும் இழந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அநீதமாக கர்நாடகா மாநில பாசிச பா.ஜ.க அரசு கேரள கம்யூனிச அரசின் துணையுடன் 2010 ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை கைது செய்து கர்நாடகா சிறையில் அடைத்தது.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்,

உலகில் முதன் முதலில் "ரோபோ இயந்திரத்தை" அறிமுகம் செய்தவர் முஸ்லிம்களே.!!!


சவூதிஅரேபியா, ஏப்ரல் 30 : உலகின் முதலவாது ரோபோ இயந்திரம் முஸ்லிம்களால் கண்பிடிக்கப்பட்டது என உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் பக்ரி அஸாஸால் தெரிவித்துள்ளார். புனித மக்கா நகரின் உம் அல்குரா பல்கலைக்கழகத்தில் புத்துருவாக்க மற்றும்விஞ்ஞான மன்றம், பல்கலைக்கழகத் தலைவர் பக்ரி அஸாஸால் புதன்கிழமையன்று திறந்துவைக்கப்பட்டது. மூன்று நாட்கள் நடைபெறவுள்ள புத்துருவாக்க மற்றும் விஞ்ஞான மன்ற நிகழ்வுகளில் சவூதிஅரேபியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்தருவாக்க சிறப்புத்தேர்ச்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஆரம்ப வைபவத்தில் உரையாற்றிய உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர், விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.

"ஹிஜ்ரி 6ஆம் நூற்றாண்டில் வாழந்த அபுல்இஸ் பின் இஸ்மாயில் பின் அல்ராஸ்அல்ஜஸாரி எனப்படும் முஸ்லிம் விஞ்ஞானியால் முதலாவது நடமாடும்ரோபோ கண்பிடிக்கப்பட்டதுடன் வீட்டு வேலைகள் செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டது.

துருக்கியின் நாஸிர் அல்தீன் மஹ்மூத் எனும் கலீபாவின் வேண்டுகோளுக்கு இணங்க 'நடைமுறை இயந்திரக்கலை கோட்பாட்டுச் சுருக்கம்' என்ற புத்தகத்தை அல்ஜஸாரி எழுதினார். மத்தியகாலத்தின் சிறந்தவிஞ்ஞானியாகவும் தலைசிறந்த இயந்திரப்பொறியிலாளராகவும் அல்ஜஸாரி விளங்கினார்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது ரோபோ இயந்திரமானது கி.பி.1174இல் பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.
தொழுகை நேரம் வரும்போது ரோபோ இயந்திரத்தின் தலைப்பகுதியில் உள்ள குருவி கீச்சிடும். பின்னர் ரோபோ இயந்திரம் கலீபாவை நோக்கி வருவதுடன் கலீபாவுக் வுழூ செய்வதற்குத் போதுமான நீரைவழங்கும். கலீபா வுழூ செய்துமுடிந்ததுடன்,ரோபோ இயந்திரத்தில் உள்ள குருவி மீண்டும் கீச்சிடும் பின்னர் ரோபோ இயந்திரம் முன்னர் இருந்த இடத்திற்கு செல்லும்.

அல்ஜஸாரியால் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ இயந்திரத்தின் செயற்பாடு இவ்வாறாக காணப்பட்டது." மேலும் முஸ்லிம்களால் விஞ்ஞானத்துக்கு செய்யப்பட்ட பல்வேறு பங்களிப்புக்கள் பற்றி உம் அல்குரா பல்கலைக்கழகத்தின் தலைவர் தமது உரையின் போது தெரிவித்தார்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், யூசுப் அலி (ஆலிம்)

கடலுக்கு ஏழையாக சென்று பணக்காரவராக திரும்பி வந்த முஸ்லிம் மீனவர்.!!


குஜராத்,ஏப்ரல் 29 : குஜராத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்கு கடலில் மீன் பிடித்த போது, விலை உயர்ந்த மீன்கள் சிக்கியதால், கோடீஸ்வரராகியுள்ளார். குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த மீனவர் ஹசன் வாகர். மத்திய தரமான மீன் பிடி படகு ஒன்றை வைத்து மீன் பிடித்து வந்த இவரின் வாழ்க்கை என்னவோ போராட்டமாகவே இருந்தது. அதனால், இவரின் குடும்பம் வறுமையில் வாடியது. ஆனால், இப்போது அதிர்ஷ்டப் பார்வைக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இவருக்கு மிக உயரிய விலை கொண்ட 380 கோல் ரக மீன்கள் சிக்கின. மீன்களிலேயே மிக உயரிய ரகமாக, இந்த மீன்கள்தான் கருதப்படுகின்றன. மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இந்த வகை மீன்களுக்கு நல்ல கிராக்கியுண்டு. இந்த கோல் மீனின், இதயப் பகுதி, "கடல் தங்கம்' என, அழைக்கப்படுகிறது. அதில், ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. பல வகையான மருந்துக்கள் தயாரிக்க இது பயன்படும் என்று கூறப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புபோன்ற பகுதியை, மருந்து தயாரிப்பு கம்பெனிகள் அதிக அளவில் பயன்படுத்துகின்றனவாம். ஒயினை சுத்தப்படுத்தவும் இது பயன்படுமாம். இந்த வகை மீன்கள் சந்தையில், கிலோ ஒன்றுக்கு 450 முதல் 600 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. ஒரு கோல் மீன் 15 முதல் 20 கிலோ எடை இருக்கும். ஹசன் வாகருக்கு 380 மீன்கள் சிக்கியதால், அதை தனது படகில் மட்டும் வைத்து கொண்டு வர முடியாது என்பதால், உறவினர்கள் இருவரின் படகுகளையும் வரவழைத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இந்த மீன்களை விற்றதில், அவருக்கு ரூபாய் 80 லட்சத்திற்கு மேல் கிடைத்துள்ளது. ஏழையாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றவர், கோடீஸ்வரராக கரை திரும்பியுள்ளார் என, ஹசன் வாகரை அனைவரும் பாராட்டுகின்றனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்,ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

சிங்கள அரசை கண்டித்து INTJ நடத்திய மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம்..











சென்னை, ஏப்ரல் 29 : இலங்கை மகத்தாளை மாவட்டம் தம்புள்ள எனும் ஊரில் முஸ்லிம்கள் 60 ஆண்டுகளாக தொழுகை நடத்தி வந்த பள்ளிவாசலை சிங்கள புத்த மதத்தினர் இடித்து சேதப்படுத்தி உள்ளனர். இந்த புத்த மதத்தினவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய ராஜபக் ஷே அரசானது, அவர்களுக்கு ஆதரவு காட்டும் வகையில் பேசியது மட்டும் அல்லது அடுத்து ஹிந்து மத கோவிலையும் தாக்குவோம் என்று கொக்கரித்துள்ளது. இந்த செய்தியை கேட்ட உலக மக்கள் அனைவரும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளில் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று (28 .04 .2012) சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தின் முன்பு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ராஜபக் ஷே அரசை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களுடைய எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஜனாப். முஹம்மது முனீர் சேட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து மாநில துணைப் பொது செயலாளர் ஜனாப். செய்து இக்பால், மாநில பொருளாளர் ஜனாப். தொண்டியப்பா என்கிற அபூபக்கர் சித்திக், மாநில செயலாளர் செங்கிஸ்கான், மற்றும் சமூக ஆர்வலர் திரு. T.S.S.மணி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள். மேலும் மாநில செயலாளர் அபூ ஃபைசல், கலிபுல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஆர்பாட்ட முடிவில் போலிசார் அனைவரையும் கைது செய்து பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
source from: www.mttexpress.com,www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் அபு பைசல்.

சென்னையில் பயங்கர சப்தத்துடன் வெடித்த வெடி குண்டு...


சென்னை,ஏப்ரல் 27 : ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌‌த்‌தில் ‌பழமை வா‌ய்‌ந்த வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யிரு‌ப்‌பு உ‌ள்ளது. ‌இ‌தன் ‌கீ‌ழ்‌ பகு‌தி‌யி‌ல் 10 கடைக‌ள் வாடகை‌க்கு ‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது. முத‌ல் மாடி‌யி‌ல் த‌ங்கு‌ம் ‌அறைக‌ள் க‌ட்ட‌ப்‌ப‌ட்டு வாடகை‌க்கு விடப்பட்டுள்ளது. முத‌ல் மாடி‌யிலுள ஒரு அறை‌யி‌ல் தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌ர் வ‌சி‌த்து வ‌ந்து‌ள்ளன‌ர். நேற்று ந‌ள்‌ளிரவு 1.30 மண‌ி‌க்கு அவ‌ர்க‌ள் த‌ங்‌கி‌யிரு‌ந்த அறை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு திடீரென்று வெ‌டி‌த்து‌ள்ளது. பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் வெடி‌த்துச் ‌சித‌றிய வெடி கு‌ண்டா‌ல் ச‌த்யா, சுக‌ந்த‌ன் ஆ‌கியோ‌‌ரி‌ன் ‌கைக‌ள், ‌விர‌ல்க‌ள் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது. இ‌ந்த ச‌‌த்த‌த்தை கே‌ட்ட அரு‌கிலிரு‌ந்தவ‌ர்க‌ள் அல‌றி அடித்துக் கொண்டு காவ‌ல்துறை‌க்கு தகவ‌ல் த‌ெ‌ரிவித்துள்ளனர். விரை‌ந்து வ‌ந்த காவல்துறையினர் படுகாய‌மடை‌ந்த ச‌த்யாவை செ‌ன்னை அரசு பொது மரு‌த்துவமனை‌யிலு‌ம், சுக‌ந்த‌னை‌ ‌ஸ்டா‌‌‌ன்‌லி அரசு மரு‌த்துவமனை‌யிலும் சிகிச்சைக்காக சேர்த்து‌ள்ளன‌ர். கவலை‌க்‌கிடமான ‌நிலை‌யில் இருக்கும் இருவ‌ரு‌க்கு‌ம் ‌தீ‌விர ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ வரு‌கிறது. கு‌ண்டுவெடி‌ப்பு கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர். ச‌த்யா, சுக‌ந்த‌ன் இருவரு‌ம் ‌தூ‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த பிரபல ரவுடிக‌ள் எ‌ன்றும், பல்வேறு கொலை வழ‌க்குகளி‌ல் தூ‌த்து‌க்குடி மாவ‌ட்ட காவ‌ல்துறை‌யினரா‌ல் தேட‌ப்ப‌ட்டு வ‌ந்தவ‌ர்க‌ள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும், இவர்கள் எத‌ற்காக நா‌ட்டு வெடிகு‌ண்டு வை‌த்‌திரு‌‌ந்தா‌ர்க‌ள் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர ‌விசாரணை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ்.ANSN .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,அபு மர்வா

முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத் தேர்தலில் அனைவரும் போட்டியின்றி தேர்வு.!!


முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : முத்துப்பேட்டை வர்த்தகக் கழகத்தின் நிர்வாகிகளின் தேர்தல் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பரபரப்புடன் நடப்பது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த வருட தேர்தலுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்தலுக்கு அதிகாரியாக ஜனாப்.எம்.முஹம்மது அலியார் அவர்களை நியமனம் செய்தனர். அதன் அடிப்படையில் நேற்று காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் இரா. இராஜாராமன், எம்.எஸ்.ராமலிங்கம், எஸ்.நெய்னா முஹம்மது, மு.முஹைதீன் பிச்சை, கெஜ்.எம்.ஹாஜா, கே.வி. கண்ணன், கே.மாரிமுத்து ஆகியோர் ஆணையரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பகல் 2 மணி அளவில் தேர்தல் ஆணையர் தலைமையில் முக்கிய நிர்வாகி முன்னணியில் மனுக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்று ஆணையர் முஹம்மது அலி தெரிவித்தார். இதில் தலைவராக இரா.இராஜாராம், துணைத் தலைவராக முஹைதீன் பிச்சை, கெச்.எம்.ஹாஜா, பொதுச் செயலாளராக எம்.எஸ். ராமலிங்கம், துணைச் செயலாளராக கே.வி.கண்ணன், கே.மாரிமுத்து, பொருளாளராக எஸ். நெய்னா முஹம்மது ஆகியோர் தேர்வு செய்ப்பட்டனர். பின்னர் தேர்தல் ஆணையர் ஜனாப். முஹம்மது அலி சங்க ஆலோசகர்கள் இரா. திருஞானம், மெட்ரோ மாலிக் முன்னிலையில் சான்றிதழ் வழங்கினார். இந்த வர்த்தக கழகத் தேர்தல் முத்துபேட்டை நகர வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தெகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்

மவுத்து அறிவிப்பு: "A.S.N.S. ரபி அஹமது கான்"


முத்துப்பேட்டை,ஏப்ரல் 27 : P.K.T. ரோடு மர்ஹும் A.S.N. நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹும் A.S.N. நவாப் சேக் முஹம்மது மரைக்காயர், A.S.N. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் சகோதரரும், கொய்யா S.M.K.N. அப்துல் ரஜாக், S.M.K.N. முஹம்மது தாவூது ஆகியோரின் மருமகனும், K.M.S. காதர் பாட்சா, A.S.N.M. பசீர் அஹமது, ஏலங்குடி A. அப்துல் ரஜாக், ஆகியோரின் மச்சானும், N.R. புர்கானுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி.A.S.N.S. ரபி அஹமது கான் அவர்கள் இன்று காலை 5.15 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
source from: www.muthupettaiexpress.com
அறிவிப்பவர்

A.S.N. ஹஜ் முஹம்மது இபுராஹீம்.

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

இடிக்கப்பட்ட பள்ளிவாசலை வேறிடத்தில் தங்கத்தால் கட்டித்தந்தாலும் ஏற்க்க மாட்டோம்


இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க முடியாது. மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை அழிக்க முடியாது. பள்ளிவாசலை தங்கத்தினாலோ பொண் பொருட்களினாலோ செய்ய முடியாது. சமப்படுத்தவும் முடியாது. பெரும்பான்மையினருடன் சண்டையிட எங்களால் முடியாது. நாங்கள் பலவீனமானவர்கள். ஆனால் எமது உணர்வுகளை அவர்கள் மதிக்கவேண்டும். 60 வருட வரலாற்று கொண்ட தம்புள்ள பள்ளியில் பல இலட்சம் பேர் சுஜுத்து செய்துள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் அங்கீகரிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்) பேட்டை இமாம் பத்ரு ஜமான் (அரூசி)

மவுத்து அறிவிப்பு:" M .S. முஹம்மது யூசுப்"


முத்துப்பேட்டை, ஏப்ரல் 26 : தர்ஹா மர்ஹும் கட்ட லெப்பை என்கின்ற M .S .செய்து முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் S.S .சிந்தா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹும் M .S .சாகுல் ஹமீது லெப்பை, M .S .ஹாஜா சரிப், M .S .அப்துல் வஹாப், M .S .T .முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் Y .P . நெய்னா முஹம்மது லெப்பை, மர்ஹும் Y .P .முஹம்மது யாகூப் லெப்பை, மர்ஹும் SS .முஹம்மது பாரூக் லெப்பை, SS .தாவூது ஆகியோரின் மச்சானும், Y .P .S. அஹமது முஹைதீன், Y .P .S. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் மாமனாரும், M .S. ஹபீப் ரஹ்மான், M .S. ரஷீத் அலி, ஆகியோரின் தகப்பனருமாகிய " M .S. முஹம்மது யூசுப் லெப்பை அவர்கள் இன்று காலை 9 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

Y .P. லெப்பை தம்பி

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

என்னை விடுதலை செய்யாவிட்டால் குர்ஆனை எரிப்பேன், நபியின் உருவப்படத்தை வரைவேன்!!!


ஈரான், ஏப்ரல் 26 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஸ்தவ பாதிரியார் யூசுப் நதகானியை ஈரான் விடுதலை செய்யாவிட்டால் திருக்குரான் பிரதியை எரித்தும், உய்ரினும் மேலான நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை வரையப்போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிருஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான். கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்லோரிட்டாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ் வருகிற 28 ஆம் தேதி 5 மணிக்கு முன்பு யூசுப் நகராணியை விடுதலை செய்யவேண்டும் என்றும் கெடு விதித்துள்ளான். ஸ்டான் அப் அமெரிக்கா நவ் என்ற டெர்ரி ஜோன்ஸின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிருத்தவ மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு நதகாணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாதாகாணியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல் இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்க வேண்டும் என்று ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்

சாதிவாரி கணக்கெடுப்பில் ‘இஸ்லாம்’ என்று குறிப்பிட வேண்டும் – இ.யூ.முஸ்லிம் லீக்


சென்னை, ஏப்ரல் 25 : தற்போது தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாதிவாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிட வேண்டும் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் அறிவுறுத்தியுள்ளது. இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஒய்.ஜவஹர் அலி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. இதில், முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டும். வெளிநாடுகளில் வேலை செய்கின்ற தங்கள் உறவினர் பெயர்களையும் தெரிவிக்க வேண்டும்.இதற்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் நிர்வாகிகள், உதவியாக இருக்க வேண்டும்.மேலும், முஸ்லிம்களில் சாதிகள் இல்லை. ராவுத்தர், தக்கினி லப்பை, மரைக்காயர் என்பது எல்லாம் சாதிகள் இல்லை. எனவே, முஸ்லிம்கள் அனைவரும் `இஸ்லாம்’ என்ற மதத்தை மட்டும் குறிப்பிடவும். கணக்கெடுப்பில் நம் பெயர்களை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், நம் உரிமைகளைப் பெற முடியும் என்று கூறியுள்ளார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டையில் நகையை திருடிய திருடனை வளைத்து பிடித்த TNTJ நிர்வாகிகள்



முத்துப்பேட்டை, ஏப்ரல் 24: முத்துப்பேட்டை அடுத்து மருதங்கா வெளி ரயில் நிலையம் அருகில் திரு. ராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். மகன் மாரிமுத்து வீடும் அருகில் உள்ளது. இவரது உறவினர் வீர செல்வா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இவரது மகன் பாலசிவா வயது 2 , அங்கு தூங்கினான். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வீடு பூந்து அந்த சிறுவனின் காலில் உள்ள தங்க கொலுசு மற்றும் கழுத்தில் உள்ள சங்கிலியை பறித்து சென்று விட்டான். அதன் பின்பு அதே பகுதியை சேர்ந்த டைலர் கண்ணன் மகள் தேவியுடைய தாலி செய்னை பறிக்க முயற்சித்தான் அப்போது கூச்சலிட்டதால் பயந்து அவன் ஓடி விட்டான். பின்பு அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் சிகிரெட் பத்தவைக்கும் போது அவனை அடையாளம் கண்ட பொது மக்கள் துரத்தினர். அனால் இதிலும் அவன் தப்பித்து சென்று விட்டான். எங்கு தேடியும் அவன் கிடைக்க வில்லை. அதே நிலையில் அடித்த சில மணி நேரத்தில் அந்த மரும நபர் ஆலங்காடு அண்ணா சிலை அருகில் ஒரு தோப்பு வெளியை தாண்டி குதிக்கும் போது அங்குள்ள வீட்டு நபர் கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியில் எதிர் பாராமல் வந்த முத்துப்பேட்டை ஆசாத் நகர் TNTJ கிளை நிர்வாகிகள் பைசல், பசூல் ரஹ்மான், யாசர் அரபாத் ஆகிய மூவரும் அந்த மரும நபரை துரத்தி பிடிக்க முயன்றனர். அப்போது அவன் ஒரு பேருந்தில் ஏறி தப்பிக்க முயற்சித்தான் அப்போது இரு சக்கர வாகன மூலம் அவனை துரத்தி வளைத்து பிடித்தனர். அப்போது அவனை பிடித்து தர்ம அடிகொடுத்து முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது தகவலை விசாரித்த போலீசார் அந்த மர்ம நபர் புதுகோட்டை மாவட்டம் ஜெகத பட்டினத்தை சேர்ந்த சேகர் என்பவரது மகன் தில்லை ராஜன் வயது 23 என்பது தெரிய வந்தது. முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மன்னார்குடி கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். இந்த திருடனை பிடித்த மூவரையும் போலீசார் வாழ்த்தி வரவேற்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் இல்யாஸ், யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டையில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் சாவு 5 பேர் படுகாயம்




முத்துப்பேட்டை, ஏப்ரல் 23 : முத்துப்பேட்டையில் அன்பு என்பவர் நகை கடை நடத்தி வருகிறார். இவர் கும்பகோணம் பேங்க் அருகில் வசித்து வருகிறார். முத்துப்பேட்டை நகர் முழுவதும் மின்சாரம் அடிக்கடி துண்டிப்பது வழக்கம். அப்போது அவரது தாயார் வசந்தா வயது 55 என்பவர் சிம்ளி விளக்கை ஏற்றி வைத்துள்ளார். அப்போது வீட்டில் சமையல் செய்வதற்கு சிம்ளி விளக்கில் பேப்பர் மூலம் சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராமல் சிலிண்டர் கசிவால் சிலிண்டர் வெடித்ததில் 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர் அனைவரையும் பக்கத்தில் உள்ள அரசு மருத்துவ அனுமதிக்கப்பட்டனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தா வயது 55 என்வர் இறந்து விட்டார். மீதம் உள்ள 5 பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் விபரம்: அன்பு என்பவற்றின் மனைவி பிரபாவதி வயது 35 , மகள் பிரதிகா வயது 17 , பக்கத்து வீடு ஆசிரியரான வசந்தா 35 , அவரது மகள் காவிய தர்சினி வயது 11 , மகள் காவிய அஞ்சலி வயது 5 , ஆவார்கள். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை.

கலாச்சார சீரழிவால் சிக்கித்தவிக்கும் இஸ்லாமிய சமூகம் ஓர் பார்வை.!!!



உலகம், ஏப்ரல் 23 : காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை. தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து… இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்… சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காமம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே! அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!

இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாச்சார சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள்.

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)

இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களே! கையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே! உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் சில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும் ‘அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?

மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)

அண்மையில் ஒரு செய்தி படித்தேன்: காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)

நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது; இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243).

பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:
அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்தது. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், “இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், “இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள்” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)

அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும்.
பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.

நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
பேராசிரியர்,
மெளலவி.அ.முஹம்மது கான் பாகவி

தமிழகத்தை உலுக்கிய இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு போராட்டம்







தமிழ்நாடு, ஏப்ரல் 23 : தஞ்சையில் மற்றும் சென்னையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்திய முஸ்லிம்களின் இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்த எழுச்சி பேரணி தஞ்சை திலகர் திடலில் துவங்கி தஞ்சை ரயில் நிலையம் அருகே நிறைவுற்றது.பேரணி முடிவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.இந்த இட ஒதுக்கிட்டிற்கான எழுச்சி போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் ,பெண்களும் இதில் முஸ்லிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிசன் அடிப்படையில் மத்தியில் 10 % இட ஒதிக்கிடும்,தமிழகத்தில் 7 % இட ஒதிக்கிடும் வழங்க வேண்டும் என்று பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்

அப்துல் ரசாக் (சென்னை)

உணவில் நச்சுத்தன்மை: கே.எஃப்.சிக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு!


சிட்னி,ஏப்ரல் 22:நச்சுத்தன்மை கலந்த உணவை சாப்பிட்டதால் ஏழு வயது சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பைத் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உலகில் பெரும் செல்வாக்குடன் திகழும் கே.எஃப்.சி(கெண்டகி ஃப்ரைட்சிக்கன்) நிறுவனத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஆஸ்திரேலிய குடும்பத்தினருக்கு ஆதரவான தீர்ப்பை நீதிமன்றம் வெளியிட்டது.

2005 அக்டோபர் மாதம் இவ்வழக்கு தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. கே.எஃப்.சி நிறுவனத்தின் நச்சுத்தன்மை கலந்த ஃபாஸ்ட் ஃபுட்டை சாப்பிட்டதால் மோனிக்கா ஸமான் என்ற ஏழு வயது சிறுமிக்கு மூளை ஸ்தம்பித்துப் போனதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கே.எஃப்.சி உணவை சாப்பிட்டதால் தங்களது மகளுக்கு இத்தகையதொரு நிலைமை ஏற்பட்டதாக கூறி 10 லட்சம் டாலர் நஷ்ட ஈடு கோரி மோனிக்காவின் குடும்பத்தினர் நியூ சவுத் வேல்ஸ் உச்சநீதிமன்றத்தை அணுகினர்.

கே.எஃப்.சியின் ட்விஸ் டர்ராப் என்ற உணவை சாப்பிட்டதால் சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதைப் போலவே இந்த உணவை சாப்பிட்ட பல குடும்ப அங்கத்தினர்களும் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

சிறுமி பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கே.எஃப்.சி நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் அல்லாஹ்வின் இறை இல்லம் தகர்ப்பு முஸ்லிம் மக்கள் ஆவேசம்..






இலங்கை, ஏப்ரல் 20௦: இலங்கை நாட்டில் சுமார் 60 வருடம் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான தம்புள்ள ஜும்மாஹ் பள்ளிவாசல் பேரினவாத சக்திகளான புத்தமத்தினரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. மேலும் இன்று வெள்ளி கிழமை ஜும்மாஹ் தொளுகைக்காக சென்ற முஸ்லிம் சகோதரர்கள் பள்ளியினுள் இருந்து வெளியில் வர முடியாதவாறு பேரினவாத சக்திகளால் பள்ளி வாசலை முற்றுகை இடப்பட்டுள்ளதாகவும் பள்ளியை நோக்கி கற்கள் வீசப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மேற்கூரை மட்டும் பள்ளியில் சிறு பகுதி மற்றும் பாதிப்பு அடைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. அங்குள்ள ராணுவத்தினரும், போலிசாரும் பணியில் இருந்த போதும் அவற்றை கண்டு கொள்ளாமல் இருந்ததாக அங்குள்ள ஒரு நண்பர் மூலம் தெரியவருகிறது. இறைவனின் இல்லமான இப்பள்ளி வாசலை பாதுகாப்பதற்கு தங்களுடைய பிரார்த்தனைகளை அதிகம் கேட்குமாறு தம்புள்ளையில் தொழில் செய்துவரும் எமது சகோதரர்கள் கண்ணீருடன் எமது சமூகத்துக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி

முத்துப்பேட்டை நகரில் திறப்பு விழா கண்டும் பயன்படாத புதிய பேருந்து நிலையம்...





முத்துப்பேட்டை, ஏப்ரல் 19: முத்துப்பேட்டை பேரூராட்சி பொது மக்கள் பயன்பெறும் வகையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு நேற்று 18.04.2012 அன்று முதல் அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் விழா நேற்று பேரூராட்சி தலைவர் கோ.அருணாசலம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்த பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி, தெருவிளக்கு சுகாதார முறையில் கழிப்பிடம் மற்றும் பயணிகள் தங்கும் அறை போன்ற வசதில்கள் சுமார் 1 லட்சத்து 5o ஆயிரம் மதிப்பீட்டு செலவில் பராமரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இடத்தில் துவக்கப்பட்ட முதல் நாள் மட்டுமே அனைத்து பேருந்துகளும் நின்று சென்றுள்ளது. முத்துப்பேட்டை காவல்துறையினர் வாகன ஒலிபெருக்கி மூலம் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்துள்ளனர். இருந்தும் எல்லா பேருந்துகளும் அங்கு நிற்காமல் பழைய முறையையே கடைப்பிடித்து வருகின்றனர். இதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்கமா காவல்துறை, பொறுத்திருந்து பாப்போம் என்ன நடக்க போகிறது என்று.

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

முத்துப்பேட்டை: பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்களின் ஆலோசனை கூட்டம்






முத்துப்பேட்டை,ஏப்ரல் 17 : முத்துப்பேட்டையில் ஆட்டோ, மினிடோர் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் நல சங்கம் சார்பில் இன்று (17.04.2012) கொய்யா மஹாலில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் இச்சக்கத்தின் தலைவர் ஜனாப். ச.ச. பாக்கர் அலி சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த சங்கம் நடைபெறுவதற்கு முக்கிய காரணம் சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் அவற்றின் குறைகள் குறித்தும் ஆலோசனை செய்யும் விதமாக, இதில் எல்லா ஆட்டோ ஓட்டுனர்கள், மினிடோர் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினார்கள். இதில் சங்கத்தின் துணைத்தலைவர். திரு.K.G. சங்கர், செயலாளர் ஜனாப். M. ஜபருல்லாஹ், பொருளாளர். ஜனாப். M.J.சாதிக், மூத்த உறுப்பினர்K.S.H. சுல்தான் இப்ராஹீம் அவர்களின் முன்னிலையில் உறுபினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)