
ஒரு முறை இந்து முன்னணியின் தலைவர் இராம.கோபாலன், முதலமைச்சர் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது, பகவத் கீதை நூலினை அவருக்குப் பரிசாக அளித்தார். புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்ட கலைஞர், சந்திப்பு முடிந்து இராம.கோபாலன் விடை பெற்றபோது, தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அவருக்குத் தன் பரிசாக அளித்தார். கோபாலபுரம் இல்லத்திற்குள் கீதையோடு சென்ற இராம.கோபாலன், கீதையின் மறுபக்கத்தோடு வீடு திரும்பினார்.
இது வெறும் ஒரு நிகழ்ச்சியன்று....