முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை,


முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று மாலை ஒன்றிய குழுத் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். அப்பொழுது முதலில் பேசிய தி.மு.க கவுன்சிலர் ராமமூர்த்தி: கடந்த 23-ம் தேதி அரசியல் கால்புணர்ச்சியின் காரணமாக தி.மு.க ஒன்றிய கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டது கண்டணத்துக்குரியது என்றார். அடுத்ததாக தி.மு.க கவுன்சிலர் கண்ணன் பேசுகையில்: எந்த வித குற்றச்சாட்டும் கூறப்படாத பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் அதிரடியாக போலிசார் உள்ளே புகுந்து சோதணை போட்டது எங்களை அதிர்ச்சியில் ஆக்கி உள்ளது. 
சாதாரண பெண் கவுன்சிலருக்கே இந்த கதி என்றால் எங்களையெல்லாம் இவர்கள் என்ன செய்வார்கள்? இவர்களுக்கு சோதணை போட யார் அதிகாரம் கொடுத்தது? யார் தைரியம் கொடுத்தது? இதற்கு காவல் துறையின் உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் ஒன்றிய கவுன்சிலர் அனைவரும் ஒன்று திரண்டு மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம். இதற்கு இந்த கூட்டம் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஆவேசமாக பேசி டேபிளைத் தட்டி கடும் ரகளையில் ஈடுப்பட்டார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க கவுன்சிலர் ஜெகன் பேசுகையில்: இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி.யிடம் நாமெல்லாம் ஒன்று திரண்டு புகார் மனு அளிக்க வேண்டும் என்றார். அதே போல் ஒன்றிய துணைத் தலைவர் தெட்சினா மூர்த்தி, இ.கம்யூனிஸ்ட் கவுன்சிலர் சாமிநாதன், காங்கிரஸ் கவுன்சிலர் புனிதா உட்பட அனைத்து கவுன்சிலர்களும் பெண் கவுன்சிலர் பத்மிணி கல்யாணம் வீட்டில் போலீசார் சோதணை போட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பேசி ரகளையில் ஈடுப்பட்டதால் முத்துப்பேட்டையில் நேற்று மாலை பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டை அருகே கேஸ் விநியோகத்தை இடம் மாற்றம் செய்ததை கண்டித்து நடக்க இருந்த சாலை மறியல் அதிகாரிகள் சமரச பேச்சால் வாபஸ்.


முத்துப்பேட்டை, 26/02/2015: முத்துப்பேட்டை அடுத்த குன்னலூர் கிராமத்திலும், அதன் சுற்று வட்டார பகுதியிலும் ஆயிரக்கணக்கான அரசு கேஸ் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 கிலோமீட்டர் தூரம் உள்ள திருத்துறைப்பூண்டி கேஸ் விநியோகஸ்தரிடமிருந்து சிலிண்டர் பெற்று வந்தனர். இந்த நிலையில் முத்துப்பேட்டையில் தனி கேஸ் விநியோகஸ்தர் நியமணம் செய்யப்பட்டதால் இங்குள்ள குன்னலூர் பகுதி வாடிக்கையாளர்களையும் கேஸ் நிறுவனம் முத்துப்பேட்டையில் பெற மற்றம் செய்தது. இதனால் குன்னலூர் மற்றும் அதன் சுற்று பகுதி மக்கள் 20 முதல் 25 கிலோமீட்டர் தூரம் உள்ள முத்துப்பேட்டையில் பெறும் நிலை ஏற்ப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்தனர். 
இந்த நிலையில் குன்னலூர் கிராம மக்கள் சார்பில் இந்த நிலையை கண்டித்தும், உடன் இப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் திருத்துறைப்பூண்டிக்கே மாற்றி தரக்கோரியும் இன்று 25-ந்தேதி குன்னலூர் கடைதெருவில் சாலை மறியல் போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் தலைமையில் சமரச பேச்சு வார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஆடலரசன், தி.மு.க மாவட்ட பிரதிநிதி அன்பழகன், காங்கிரஸ் வட்டார வர்த்தக பிரிவு தலைவர் வடுகநாதன், த.மா.கா தலைவர் சந்திரசேகரன், சி.பி.ஐ கிளைச்செயலாளர் பழனி, சி.பி.எம் கிளைச்செயலாளர் பன்னீர்செல்வம், தே.மு.தி.க தலைவர் சுரேஷ்; மற்றும் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை கேஸ் ஏஜென்சி உரிமையாளர்கள் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். இதில் குன்னலூர் கிராமத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மீண்டும் திருத்துறைப்பூண்டியிலேயே சிலிண்டர்கள் பெற்று கொள்ளலாம் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறி எழுதி கொடுத்ததால் சாலை மறியல் போராட்டத்தை விளக்கி கொண்டதாக அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டையில் எதிர்ப்பார்த்து காலத்தாமதமாக கூட்டம் துவங்கியதால் மயங்கி விழுந்த மூதாட்டி.



முத்துப்பேட்டை, பிப்ரவரி/26/2015முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் கிராமத்தில் மக்கள் நேற்காணல் முகாம் நேற்று நடைபெற்றது. நுகர் பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அழகிரிசாமி தலைமை வகித்தார். மன்னார்குடி ஆர்.டி.ஓ செல்வ சுரபி, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக பாதுகாப்பு நலத்துறை சார்பில் 105 பேருக்கு கல்வி கடன், 25 பேருக்கு பட்டா மாற்றுதல், 55 பேருக்கு புதிய ரேசன் கார்;டு, 2 பேருக்கு சலவைப்பெட்டி, 11 பேருக்கு தையல் மிசின், 7 பேருக்கு உரம் ஆகிய நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மனோகரன், தாட்கோ மேலாளர் வைத்தியநாதன், ஒன்றிய ஆணையர்கள் சாந்தி, வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் வைத்தியநாதன், கால்நடை மருத்துவர் கங்கா சூடன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சிக்குளம் தாகீர், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் பழணிவேல், வருவாய் ஆய்வாளர் முருகேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜராஜசோழன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதிவாணன் வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 10 மணிக்கு துவங்க வேண்டி நிகழ்ச்சியை கலெக்டரை எதிர்பார்த்து திடீரென்று அவர் வராததால் 12 மணிக்கு நிகழ்ச்சி துவக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் எல்லோருக்கும் சோர்வு ஏற்பட்டு பலரும் தூங்கினர். அப்பொழுது நிகழ்ச்சி துவங்;கிய சில நிமிடங்களில் ஒரு 70 வயது மூதாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு நிகழ்ச்சி மேடை அருகே விழுந்தார். உடன் வருவாய் துறையினர் மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்து மேடை எதிர்புறம் படுக்க வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல்...



புது டெல்லி, பிப்ரவரி/26/2015: இந்திய நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மத்திய ரயில்வே வரவுசெலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசின் முதல் முழுமையான வரவுசெலவுத் திட்டம் என்பதால் இந்த பட்ஜெட் அனைத்து தரப்பினரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ரயில் பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு முன்னுரிமை கொடுக்க உள்ளார். இந்தியாவில் ஏழைகளும் குளிர்சாதன ரயிலில் செல்ல வழிவகை செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தி இருந்தார். அதை ஏற்று குளர்சாதன ரயில்கள் இன்றைய வரவுசெலவுத் திட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணக் கட்டணமும் மிகவும் குறைவாக இருக்கும்.
.

முத்துப்பேட்டை அருகே பயங்கர தீ விபத்து. 4 வீடுகள், வைக்கோல் போர் எறிந்து சாம்பல் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் பார்வையிட்டார்.



முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை அடுத்த ஆரியலூர் திருவாசல் மேடு புதுத்தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கே உள்ள குடியிருப்பு பகுதியில் செல்லும் உயர மின் விளக்கு கம்பிகள் தாழ்வாக கூறை வீடுகளை உரசியவாறு செல்கிறது. இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முருகைய்யன்(65) என்பவரது கூறை வீட்டின் மேல் ஒன்றோடு ஒன்று மின் கம்பி உரசியதால் அதிலிருந்து ஏற்பட்ட நெருப்பு பொறி வழுந்து தீ பற்றி எறிந்தது. இதனை கண்ட மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் அருகில் இருந்த ராஜேந்திரன், பூமிநாதன், காளிதாஸ் ஆகியோரின் வீடுகளும், அருகில் இருந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரும் தீ பிடித்து எறிந்தது. தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு அலுவலர் லோகநாதன் தலைமையிலும், முத்துப்பேட்டை தீயணைப்பு அலுவலர் நெடுஞ்செழியன் தலைமையிலும் ஏராளமான தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைக்க முயற்சித்தனர். அதற்குள் 4 வீடுகளும் இருகில் இருந்த வைக்கோல் போர் முழுவதும் எறிந்து சாம்பலானது. மேலும் வீடுகளிலிருந்த கட்டில், பீரோல், டிவி போன்ற பொருட்களும் முக்கிய ஆவணங்களும் தீயில் எறிந்து நாசமானது. சேதம் மதிப்பு 3 லட்சம் என்று தெரிகிறது. 

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ந.உ.சிவசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் முருகையன், முன்னால் ஊராட்சி தலைவர்கள் ஞானசேகரன், மேட்டு கோட்டகம் சண்முகம் உட்பட பலரும் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். இதில் வருவாய் துறை சார்பில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் விரைவில் நிவாரணம் சழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இது குறித்து எடையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறுகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால்தான் இந்த விபத்து நடந்தது. இதன் போன்ற சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இதனை உயரமாக மாற்றி தர வேண்டும் என்றார்.

நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த செயல்அலுவலர்!


முத்துப்பேட்டை, பிப்ரவரி/25/2015: முத்துப்பேட்டை தொழில் அதிபர் ஹைதர் அலிக்கு சமீபத்தில் ஐரோப்பிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து முத்துப்பேட்டைக்கு திரும்பிய அவருக்கு பல்வேறு அமைப்புகள் வரவேற்ப்பு அளித்து வரவேற்றனர். இந்த நிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி டாக்டர் பட்டம் பெற்ற ஹைதர் அலியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவரிடம் செயல் அலுவலர் சித்திவிநாயகமூர்த்தி பேரூராட்சிக்கு தேவையான பொருட்கள் வாங்க நிதி உதவி கேட்டதாகவும் தெரிகிறது. அவருடன் பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபருல்லா உடன் இருந்தார். அதேபோல் முன்னால் எம்.பிக்கள் நாகை செல்வராஜ், வேலூர் அப்துல் ரகுமான் ஆகியோரும் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

 நமது நிருபர்:

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.


முத்துப்பேட்டை, பிப்ரவரி 25/2015: முத்துப்பேட்டை பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பிய ம.ம.க சட்டமன்ற குழு தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MLA.,அவர்களின் கேள்விக்கு மாண்புமிகு முதல் அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதிலளித்தார்.....
ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தின் போது திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் நடைபெற்ற சம்பவம் குறித்து இன்று (20.2.2015) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில்,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடந்த 31.12.2014 அன்று இரவு ஆங்கிலப் புத்தாண்டு தினத்தின்போது இந்துக்கள் சிலர், ஷேக் தாவூத் தர்கா வழியாகச் சென்றபோது, கோஷங்களை எழுப்பியதால் அங்கிருந்த முஸ்லீம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது அவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு, அப்பகுதியில் இருந்த தெரு விளக்குகள் சேதப்படுத்தப்பட்டன.
இதன் பின்னர் சில அடையாளம் தெரியாத நபர்களால் அங்குள்ள மற்றொரு தர்காவின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சேதப்படுத்தப்பட்டது. காவல் துறையினர், உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படாவண்ணம் பார்த்துக் கொண்டு, தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இது தொடர்பாக, முஸ்லீம் தரப்பினர் அளித்த புகார்களின் பேரில், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வீரமூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவங்களையடுத்து,
01.01.2015 அன்று சில அடையாளம் தெரியாத நபர்கள் பாலமுருகன் என்பவரது பணிமனையில் இருந்த மூன்று கார்களின் கண்ணாடிகளை சேதப்படுத்தியது தொடர்பாக, அவரது புகாரின் பேரில், மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல் துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நிலைமை அமைதியாக உள்ளது. வழக்குகள் புலன் விசாரணையில் இருந்து வருகின்றன என்று கூறினார்.
தகவல் நன்றி – பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்

ஆர்.எஸ்.எஸ் நிருவாகியை சந்தித்து கேள்வி கேட்ட உலமா !!பதில் சொல்லாமல் தவித்த காவி டவுசர்...!!!


உபி: பிப்ரவரி/19/15: உத்திரபிரதேசம்கான்பூரில் நேற்று உலமா கவுன்சில் பொது செயலாளர் முஹம்மது சலிஸ் அவர்கள் பேட்டி அளித்தார் இதில்
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிருவாகி இந்திறேச்சி அவர்களை அவர் அலுவலத்தில் நேரில் பார்த்து ஆறு கேள்விகளை கேட்டோம் !!
1.இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஒரு இந்து நாடாக கருதுகிறதா...??
2.இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர் எஸ் எஸ் தாயரித்து இருக்கிறதா...??
3.இந்து நாடு இந்து மத நூலின் படி அமையுமா அல்லது ஆர் எஸ் எஸ் சிர்த்திருத்ங்களை செய்யுமா...??
4.மத மாற்றத்தை விரும்பு கிறீர்களா...??
5.எந்த மாதிரியான தேச பற்றினை முஸ்லிம்களிடம் இருந்து ஆர் எஸ் எஸ் விரும்புகிறது...!!!
6.இஸ்லாமிய மதத்தை ஆர் எஸ் எஸ் எப்படி பார்க்கிறது...!!
90 நிமிடம் நாங்கள் நடத்திய சந்திப்பின் போது அவர் பதில் எதுவும் கூறாமல் நீங்கள் ஒரு மாநாட்டை போடுங்கள் அதில் எங்களுக்கு அழைப்பு கொடுங்கள் அதில் இதற்க்கு எல்லாம் பதில் சொல்லுகிறோம் என்று கூறினார்...!!!
அதற்க்கு ஒரு அறைக்குள் பதில் சொல்ல முடியாத நீங்கள் எப்படி மாநாட்டில் பதில் சொல்லுவீர்கள் மாநாடு கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறி வெளியே வந்தோம் என்றார்...!!!

ஐரோப்பியாவில் டாக்டர் பட்டம் பெற்ற முத்துப்பேட்டை தொழிலதிபருக்கு நேற்று பல்வேறு அமைப்பினர் வரவேற்பு.







முத்துப்பேட்டை: பிப்ரவரி 19/15: முத்துப்பேட்டையைச் சேர்ந்தவர் தொழிலதிபர் எஸ்.எம்.ஹைதர் அலி. இவருக்கு குவைத் நாட்டில் தலைமையாக கொண்டு பல்வேறு நாடுகளில் டி.வி.எஸ். கார்கோ நிறுவனம் உள்ளது. மேலும் இவரது அல்மஹா அறக்கட்டளை சார்பில் ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட பணிகள் செய்து வருகிறார், இந்த சேவையைப் பாராட்டி சமீபத்தில் ஐரோப்பியா பல்கலைகழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதனையடுத்து பல்வேறு நாடுகளில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது இந்த நிலையில் நேற்று தொழிலதிபர் ஹைதர் அலி குவைத்திலிருந்து சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்தார் அவருக்கு வழக்கறிஞர் தீன்முகமது தலைமையில் முத்துப்பேட்டை எல்லையான செம்படவன்காடு பைபாஸ் அருகே பல்வேறு அமைப்பினர் சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டு அங்கிருந்து காரில் ஊர்வலமாக ஆசாத்நகர் அல்மஹா காம்ப்ளக்ஸ்க்கு அழைத்து வரப்பட்டது, அங்கே வர்த்தகக்கழக தலைவர் ராஜாராமன், துணைச்செயலாளர் மாரிமுத்து, செயற்குழு ஊறுப்பினர் இர்பான் ஹைதர்அலி, மாவட்ட ஊராட்சி ஊறுப்பினர் முருகையன். இ.கம்யூனிஸ்ட் நகர செயலாளர் மார்க்ஸ், முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் முகைதீன் அடுமை, அரிமா சங்க முன்னால் தலைவர் அப்துல் அஜீஸ், ஜமாஅத் தலைவர் ஜின்னா, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெயனாமுகமது, நகர தலைவர் சம்சுதீன், முன்னால் தலைவர் தாவூது. காங்கிரஸ் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாஜா, முன்னால் நகர செயலாளர் ஜெஹபர்அலி, தி.மு.க நகர இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா பிரபாகர், நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுல்தான் இபுராகிம், அல்மஹா நிர்வாகிகள் இபுராகிம், சென்னை கிதிர், சென்னை ஹாஜா கமால் உட்பட அல்மஹா பணியாளர்கள், உறவினர்கள் பலரும் சால்வை அணிவித்து வரவேற்றனர், அதேபோல் கத்தார் நாட்டிலிருந்து மேனேஜர் தாவூது இபுராகிம், பஹ்ரைன் நாட்டிலிருந்து மேனேஜர் ரிஸ்வான் கான் ஆகியோர் தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கருத்தப்பா சித்திக் செய்து இருந்தார்.

நமது நிருபர் : 

ரிப்போர்ட்டர் முஹைதீன் 

இறையில்லம் அமைய உதவிடுவீர்!!!


பிப்ரவரி/19/15: காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் ரெட்டிக்குப்பம் பகுதி இஸ்லாமியர் அதிகம் குடியேறும் பகுதிகளில் ஒன்று.இப்பகுதி இஸ்லாமியர்கள் தங்கள் மார்க்க கடமையை நிறைவேற்றும் பொருட்டு,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கானத்தூர் கிளை 1800 சதுரஅடி கொண்ட நிலத்தை ரூ:55,00,000(ஐம்பத்தைந்து லட்சம்)விலை பேசப்பட்டு முன் பணமாக ரூ:5,00,000(ஐந்து லட்சம்)கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த இடத்திற்கான பத்திரப்பதிவு மற்றும் கட்டிடப்பணிக்கான செலவு உட்பட ஒரு சதுர அடிக்கு ரூ:5500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்கள் அன்றாடக்கூலிகளாவும்,சொற்ப ஊதியம் உடையவர்களாவும் இருப்பதால் இறையில்லம் அமைக்கும் பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வங்கி கணக்கு எண்:
India Thowheed Jamath Kanathur Branch
State Bank Of India
AC No:32647825963
Uthandi Branch
IFSC Code:SBIN0011771
தொடர்புக்கு:
மஸ்ஜிதுல் அக்ஸா
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்
368/825,வாஞ்சிநாதன் தெரு
கானத்தூர் ரெட்டிக்குப்பம்
காஞ்சி மாவட்டம்
செல்:9444742067,9841844086,
9940374793,9884461830
படம்:மாநில நிர்வாகிகள் மற்றும் கானத்தூர் கிளை நிர்வாகிகள் தலைமையகத்தில் ஆலோசித்த போது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)