முத்துப்பேட்டை,மார்ச் 15 : முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் ஆர்பாட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் தமிழக அரசு அரிவித்த 4 மணி நேரத்திற்கு மேல் எந்த அறிவிப்பும் இல்லாமல் மின் தடை, HP, கேஸ் நிறுவனத்தின் முறையற்ற பராமரிப்பை கண்டித்தும், முத்துப்பேட்டை நகரங்களில் காலை மற்றும் மாலை நேரத்தில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க பேரூராட்சி அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன மூன்று கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் MMK கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். நாச்சிக்குளம் M . தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர் . இதில் மாவட்ட தலைவர் ஜனாப். K . நூர்தின், மாவட்ட செயலாளர் ஜனாப். S . முஹம்மது மாலிக், துணைத்தலைவர் ஜனாப். M . சம்சுதீன், நகர செயலாளர் வழக்கறிஞர் L . தீன் முஹம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
நமது நிருபர்
யூசுப் அலி (ஆலிம்)