முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் பிரம்மாண்டமாக உருவாகிறது ரஹ்மத்சிராஜ்மகளிர் கல்லூரி !!





முத்துப்பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான மகளிர் கல்லூரி விரைவில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டி எழுப்பப்பட உள்ளது .இந்த கல்லூரியை முத்துப்பேட்டையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் மனித நேயருமான ஹாஜி .MA .தமீம் அவர்கள் கட்டி எழுப்ப உள்ளார்கள் .இதற்கான அடிக்கல் நாட்டு விழா  விரைவில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது .முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கட்டப்படும் இந்த கல்லூரிக்கு ரஹ்மத் சிராஜ்  மகளிர் கல்லூரி என்று  பெயரிடப்பட்டுள்ளது .ஹாஜி MA தமீம் அவர்களின் மக்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம் ..ஆமீன் 

முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி --மல்லிப்பட்டினம் கலவரத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் இளைஞர்களுக்கு தனி தனி படுக்கை வசதிகள் !!!


கடந்த 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல்களால் நான்கு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கப்பட்டனர் .

ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக கும்பல்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் அர்ஷத் ,முஹமது மைதீன் ,அமீன் ,மற்றும் நூருல் அமீன் ஆகியோர் ரத்த காயங்களுடன் உயிர் தப்பினர் .இதில் அமீன் என்ற இளைஞர் ஊனமுற்றவர் என்பதால் ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் சிக்கிகொண்டார் .

இதனால் கவலைக்கிடமான  அமீன் தஞ்சையில்  உள்ள மீனாட்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் .அர்ஷத்,முஹம்மது மைதீன் மற்றும் நூருல் அமீன் ஆகியோர் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் 

இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரித்தனர் .அப்போது தங்கள் மூன்று பேரையும்ஒரே படுக்கையில் (BED ) தங்க வைத்திருப்பதாக குற்றம் சாட்டினர் .இதனையடுத்து நமது முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் செய்தி குழுவினர்  தமிழக சுகாதாரத்துறை ,தஞ்சை மாவட்ட முதன்மை மருத்துவர் ,தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ,ஆகியோருக்கு தகவல் அனுப்பினர்  .

இந்நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும்  இன்று தனித்தனியே படுக்கை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது  .(அல்லாஹு அக்பர் )




தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)