முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

வீட்டை விட்டு ஓடும் பெண்களுக்காண “நரகத்தை நோக்கி” என்ற தலைப்பில் ஓர் குறும்படம்



கடையநல்லூர், நவம்பர் 30 : அன்பார்ந்த இஸ்லாமிய சமுதாய சகோதர, சகோதரிகளே கடந்த சில வருடங்களாக நமது சமுதாயத்தில் சில இளம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் பழகுவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்து சொல்லக்கூடிய ஒரு படிப்பினையாக இந்த குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த குறும்படத்தை எழுதி,இயக்கிய கடையநல்லூரை சார்ந்த ரபீக் ரோமான் அவர்களுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்.

இப்படத்தின் மூலம் நாம் பயனடையும் நன்மைகள்:

பெண்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாய் சித்திகரிக்கப்படும் பாத்திமா மற்றும் பெண்கள் எவ்வாறு இருக்க கூடாது என்பதற்கு உதாரணமாய் தஸ்லீமா.இந்த இருவர்தான் கதையின் கதாபாத்திரங்கள்.

அந்நிய ஆண்களுடன் பழகுவதினால் ஏற்படும் விளைவுகள் மிக கொடுரமானதாக இருக்கும் என்பதை மிக அருமையாக காட்டி உள்ளார் இயக்குனர் ரபீக் அவர்கள்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு செல்லம் என்ற பெயரில் அதிக சுதந்திரம் கொடுப்பதினால் ஏற்படும் விளைவுகள், மிஸ்ஸிடு கால்களினால் மிஸ்ஸாகி போகும் பெண்களின் வாழ்க்கை என பெற்றோருக்கு அறிவுரை கூறும் படமாக உள்ளது.

ஆங்காங்கே குரான் வசனங்கள் இந்த படத்தில் மிக அருமையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:

இந்த படத்தை பார்த்து தவறான வழியை தேர்ந்தெடுக்கும் இளம் பெண்கள் திருந்த வேண்டும் என்பதே இயக்குனர் அவர்களின் நோக்கம்.

இந்த படத்தை தயாரித்தவர்களின் நோக்கம் வெற்றியடைய நாம் அனைவரும் துஆ செய்வோம்.

இந்த குறும்படம் சி.டி வடிவில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.வேண்டும் என்பவர்கள் public.mttexpress@gmail.com என்ற மெயில் முகவரி மூலம் தொடர்பு கொள்ளவும்.

மேலும் விபரம் அறிய இந்த தொலைபேசி எங்களை தொடர்பு கொள்ளவும் : 95513 88406

தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EK .முனவ்வர் கான்,அபு மர்வா

ஜாக் சார்பில் மாநாடு திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப்.டாக்டர் மீரா லப்பை பேட்டி.




முத்துப்பேட்டை,நவம்பர் 30 : "ஜம்மியத்துள் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்" சார்பில் வருகிற ஜனவரி மாதம் 14 , 15 ஆகிய தேதிகளில் "படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி" என்ற முழக்கத்துடன் மாபெரும் சிர்க் ஒழிப்பு மாநாடு கோவையில் நடைபெற உள்ளது என திருவாரூர் மாவட்ட தலைவர் ஜனாப். டாக்டர். முஹமது மீரா லப்பை அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதள நிருபர் நேரில் சென்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த திருவாரூர் மாவட்ட தலைவர் டாக்டர். முஹமது மீரா லப்பை அவர்கள், ஜம்மியத்துள் அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் (JAQH ) என்ற இவ்வமைப்பு சிர்க்கை ஒழிப்பதற்குத்தான் துவங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இதன் மூலம் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இஸ்லாத்தின் மூலாதாரங்களான "திருமறைக் குர்ஆன்" மற்றும் இறுதி தூதரின் நடைமுறைகளான ஹதீஸ் ஆகிய இவ்விரண்டையும் அனைத்து மக்களிடமும் கொண்டு செல்ல வேண்டுமென்ற மற்றொரு நோக்கத்தையும் இணைத்துக்கொண்டு அதன் அடிப்படையில் கடந்த 23 ஆண்டுகளாக இவ்வமைப்பு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யிலான மார்க்க அறிஞர்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஆண்களுக்கான அரபி கல்லூரிகளையும், பெண்களுக்கான அரபி கல்லூரிகளையும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் நிறுவி பல மார்க்க அறிஞர்களையும் உருவாக்கி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இவையன்றி சமுதாய நலன் கருதி அல்ஹுதா உயர் நிலைப்பள்ளி, அல்ஹுதா காது கேளாதோர் பள்ளி, ஹிஃப்ஸ் (குர்ஆன் மனன ) மதரசா, SSV . ஆரம்பப்பள்ளி, அல்ஹுதா நூலகம், அல்ஹுதா கம்ப்யூட்டர் செண்டர், அல்ஹுதா மாணவர்கள் இல்லம், அல்ஹுதா மாணவிகள் இல்லம், இவைகள் அனைத்தும் தற்போது திருச்சியில் பல ஆண்டுகளாக நம் சமுதாய மக்களின் நன்கொடைகள் மூலம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்றும், மேலும் இதன் மூலம் அல் ஜன்னத் என்ற மார்க்க விளக்க மாத இதழையும் நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான 70 க்கும் மேற்பட்ட மர்கஸ்களை நிறுவி அவைகள் மூலம் தூய இஸ்லாமிய பிரச்சார பணிகள் நடைபெற்று வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.இது போன்று இஸ்லாமிய மார்க்கத்தினை அதனுடைய தூய்மையான வடிவிலே அனைத்து மத மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பினரால் மாவட்ட அலவிலும், மண்டல அலவிலும் அவ்வப்போது மாநாடுகளை நடத்தி வருவதாகவும் இந்த அடிப்படையில் தான் எதிர் வரும் ஜனவரி 14 , 15 ஆகிய தேதிகளில் கோவையில் இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு நடைபெற உள்ளது என்றும் எனவே அனைத்து தரப்பு மக்களும் இதில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)