முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சென்னை மண்ணடியில் கலவரத்தை உண்டாக்க காவி கூட்டம் திட்டம் INTJ சகோதர்கள் காயம்.



சென்னை, அக்டோபர் 28: சென்னை பாரிமுனையில் பெரிய களவரமே நடந்து விட்டது. பீகாரில் குண்டு வெடித்த உடன் பாரிமுனையில் இருக்கும் ரேவ் (சேரி) காரங்க இந்துத்துவாவாதிங்க கூட சேர்ந்துக்கிட்டு பாரிமுனை பகுதியில் போவோர் வருவோரிடம் ‘பாரத் மாதாகி ஜே’ன்னு சொல்லு இல்ல அடிப்பேன்னு அனைவரையும் வற்புறுத்தியிருக்காங்க. ஐஎன்டிஜே வட சென்னை கிளை சகோதரர்கள் அந்தப் பகுதியில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் வந்த இந்துத்துவாவாதிகள் நீங்களும் பாரத் மாதாகி ஜேன்னு சொல்லுங்கன்னு வற்புறுத்திஉள்ளார்கள் இந்திய தவ்ஹித் ஜமாத்சகோதரர்கள் நாங்க சொல்ல மாட்டோம்னு சொன்னதும் அவர்களைப் போட்டு அடித்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பிரச்சினை வெடித்துள்ளது. 

இந்த சம்பவம் கேள்விப்பட்டதும் அந்தப் பகுதி காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து அடித்தவர்களை நாங்கள் நாளை காலை 11 மணிக்குள் பிடித்து விடுகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதற்குள் இந்த சம்பவம் காட்டுத்தீ போல பரவியதும் எஸ்.டி.பி.ஐ., தமுமுக, இந்திய தவ்ஹித் ஜமாத் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஸ்பாட்டிற்கு வந்து காவல்துறையினரிடம் தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தியிருக்காங்க. இரவு 11 மணிவரை பாரிமுனை பகுதியில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்து விட்டனர். 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டதாக செய்தி. சம்பவ இடத்திற்கு விரைந்த இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க முஸ்லிம் சகோதரர்கள் கலைந்து சென்றுள்ளனர். இன்று அவர்களை கைது செய்யா விட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்க பட்டுள்ளது

கருணாநிதி பற்றி அவதூறு கார்டூன்: முத்துப்பேட்டையில் தி.மு.க. வினர் தினமலர் எரிப்பு!

முத்துப்பேட்டை, அக்டோபர் 28: முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் நேற்று தினமலர் நாலாம் பக்கத்தில் கருணாநிதியின் தவரான கார்டுன் வெளியிட்டதை கண்டித்து தி.மு.க.வினர் நூறு பேர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் தலைமையில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொழுத்தினார்கள்.









மேலும் தின மலரை கண்டித்தும் சம்மந்தபட்டவர்களை கைது செய்ய கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் அவ்வழியாக சென்ற பேருந்துகளை மறைத்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதில் நகர அவைத்தலைவர் ராமஜெயம், நகர துணைச் செயலாளர் நவாஸ்கான், பொருளாளர் பாலு, மாவட்ட பிரதிநிதிகள் தமீம், இபுராஹீம் மாவட்;ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராமஜெயம், ஒன்றிய இளைஞர் அணி ஜாம்பை கல்யாணம், பேருராட்சி சவுன்சிலர்கள் ஐய்யப்பன், கிருஷ்ணன், ஜெகபருல்லா, ரெத்தினகுமார், நகர நிர்வாகிகள் செல்வம் அமனுல்லா, பியூட்டி நவாஸ், ஆறுமுகம், ரபிஅகம்மது, சிவ சுப்பிரமணியன், அன்பன், நகர இளைஞர் அணி அமைப்பாளர் பிரபாகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இதனால் அரை மணிநேரம் போக்கு வரத்து தடைப்பட்டது இந்த நிலையில் சுமார் 2 மணி நேரம் கழித்து எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் போலீஸார் கடைத் தெருவில் ஒரு கடையில் அமர்ந்து இருந்த மாவட்ட துணைச் செயலாளர் கார்த்திக்கை சுற்றி வழைத்து கைது செய்து ஜீப்பில் ஏற்றினார். 


அவருடன் நகர நிர்வாகி செல்வமும் கைது செய்யப்பட்டனர். இச்செய்தியை கேள்விப்பட்ட தி.மு.க.வினர் பலரும் முத்துப்பேட்டை காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எடையூரில் 20 தி.மு.க.வினர் கைது.


திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் ந.உ.சிவசாமி தலைமையில் தினமலர் நாழிதழ் தீயிட்டு எரிக்கபட்டன. ந.உ.சிவசாமி உட்பட 20 தி.மு.க.வினரை எடையூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் கைது செய்தார்.

Source from: www.muthupettaiexpress.com

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)