முத்துபேட்டை, அக்டோபர் 01 : முத்துப்பேட்டை கிளை 2 (ஆசாத் நகர்) ன் சார்பாக பெண்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் 29-9-2012 அன்று ரஹ்மத் நகர் சகோ.இம்ரான் கான் அவர்கள் இல்லத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் தாவா சம்மந்தமான ஊக்கமும், எந்த முறையில் தாவா செய்யவேண்டும் என்றும், இதில் கலந்துக்கொள்வது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் நடைபெற்ற இக்கூட்டத்தில் நூர் மஸ்ஜித் இமாம் சகோதரர். அல்தாப் ஹுசைன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்) இக்கூட்டத்தில் சுமார் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர். கிளை தலைவர் சகோதரர். அப்துல் அஜீஸ் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
source from: www.muthupettaiexpress.com
நன்றி - TNTJ முத்துப்பேட்டை