முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

INTJ தலைமை அலுவலகத்தில் இஸ்லாத்தை ஏற்ற ஜெர்மன் பெண்..!!


சென்னை, மார்ச் 31 : இஸ்லாமிய அழைப்பு பணியினை முதன்மை விசயமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையகத்தில் நேற்று ஜெர்மன் நாட்டை சேர்ந்த கிருஸ்தவ பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார். அல்ஹம்து லில்லாஹ். அவருக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ஜனாப். சையது இக்பால் ஆங்கில மொழிபெயர்ப்பு குர் ஆன் ஒன்றை வழங்கினார்.
source from : www.mttexpress.com,
தொகுப்பு

ரிப்போர்ட்டர் அபு பைசல்

முத்துப்பேட்டை கூட்டுறவு அங்காடியை கண்டித்து மா.கம்யூனிஸ்ட் ஆர்பாட்டம்...



முத்துப்பேட்டை,மார்ச் 30 ௦: முத்துப்பேட்டை அடுத்து பேட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அங்காடியில் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் அந்தந்த மாதத்திற்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்க வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் இன்று பேட்டை சிவன் கோயில் அருகே நடைபெற்றது. அதில் மண்ணெண்ணை மாதத்திற்கு இரண்டு தடவை முன்னறிவிப்பு இல்லாமல் மண்ணெண்ணை வழங்குகிறார்கள். இதனால் கூட்டம் அதிகமாகி தள்ளு முள்ளு ஏற்படுகிறது. டோக்கன் கொடுத்து வரிசையை வரிசையை முறைப்படுத்துவதில்லை, மண்ணெண்ணை அந்ததந்த மாதத்திற்கு எல்லோருக்கும் கிடைக்காமல் ஏழை எளிய மக்கள் வேலையை போட்டு விட்டு வரிசையில் நின்றும் மண்ணெண்ணை கிடைக்காமல் திரும்பி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இவற்றை கண்டித்து மாபெரும் ஆர்பாட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எ. காளிமுத்து தலைமை யில் நடைபெற்றது த.மு.எ.க.சங்க செயலாளர் சி.செல்லத்துரை வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு பி.என்.தங்கராசு, ஒன்றிய செயலாளர் கே.வி.ராஜேந்திரன், த.வி.ச.மாவட்ட துணைசெயலாளர் என்.ஜி.முருகையன், த.மு.எ.க.பொருளாளர் பி.ஆறுமுகம், ம.தி.ப.சங்க மாவட்ட செயலாளர் கே.பாலசுப்ரமணியம், உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
source from: www.mttexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான்,

ராகிங்:முஸ்லிம் மாணவன் பலி!


பெங்களூர்,மார்ச் 30 ௦:கல்லூரியில் சீனியர் மாணவர்களின் வெறித்தனமான ராகிங்கில் உடலில் தீப்பற்றி சிகிட்சைப் பெற்றுவந்த கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் மாணவன் மரணமடைந்துள்ளார்.
கேரளா மாநிலம் கண்ணூரைச் சார்ந்த ஹாரிஸ்-ஸவ்தத் தம்பதியினரின் மகன் அஜ்மல்(வயது17). இவர் கர்நாடகா மாநிலம் சிக்காபல்லாபூர் ஸாஷிப் கல்லூரியில் முதல் வருட ஏரோநாட்டிகல் எஞ்சீனியரிங் மாணவர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றி காயம் ஏற்பட்டது. கல்லுரி ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழையும் பொழுது உடலில் தீப்பற்றியது. கேரளாவைச் சார்ந்த மாணவர்கள் உள்ளிட்ட சீனியர் மாணவர்களின் ராகிங் காரணமாக அஜ்மலுக்கு உடலில் தீப்பற்றியதாக உறவினர்கள் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு மேலாக அஜ்மலை கேரளாவைச் சார்ந்த மாணவர்களின் தலைமையில் அஜ்மலை ராகிங் செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஹாஸ்டலில் உள்ள குளியலறையில் நுழைந்த பொழுது தீப்பற்றியதை தொடர்ந்து தப்பிக்க முயன்ற அஜ்மலின் உடலில் பெரும்பகுதி தீயால் காயமடைந்தது. அருகில் உள்ள மருத்துவமனையில் ஆரம்ப கட்ட சிகிட்சைக்கு பிறகு விக்டோரியா மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். சீனியர் மாணவர்கள் அடங்கிய கும்பல் ஒன்று அஜ்மலிடம் பணம் கேட்டு மிரட்டியதால் மூன்று மாதம் முன்பு அஜ்மலின் தாயார் தனது தங்கச் செயினை கொண்டு வந்து கொடுத்துள்ளார்.
இச்சம்பவம் சர்ச்சையானதை தொடர்ந்து செயினை விற்று கிடைத்த தொகையில் 20 ஆயிரத்தை திருப்பிக் கொடுத்துள்ளனர். மீதித் தொகையை அடுத்த ஆண்டு தரலாம் என்று உறுதி அளித்தனர். ஆனால், பின்னர் அஜ்மலை கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த வாடகை அறையில் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். அஜ்மலுக்கு மார்ச் 22-ஆம் தேதி உடலில் தீக்காயம் ஏற்பட்ட பிறகும் கல்லூரி நிர்வாகிகள் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை. ஹாஸ்டலில் உள்ள மாணவர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் மறுநாள்தாம் பெற்றோருக்கு இவ்விபரம் தெரியவந்துள்ளது.
2011 செப்டம்பர் மாதம் அஜ்மல் பெங்களூருக்கு எஞ்சீனியரிங் பயில சென்றுள்ளார். ஏரோநாடிகல் எஞ்சீனியரிங் படிக்க விரும்பிய அஜ்மலுக்கு கல்விக் கடனை வாங்கி படிக்க அனுப்பியுள்ளனர். அவரது தந்தை அபுதாபியில் பணிபுரிந்து வருகிறார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)