முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இடிக்கப்பட்ட பள்ளிவாசலை வேறிடத்தில் தங்கத்தால் கட்டித்தந்தாலும் ஏற்க்க மாட்டோம்


இலங்கை,ஏப்ரல் 26 : இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் சுஜுது செய்த தம்புள்ள பள்ளிவாசலுக்கு ஈடாக எமக்கு தங்கத்தினால் பள்ளிவாசல் நிர்மாணித்து தந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளிவாசல் எமக்கு புனிதஸ்தலம். அதை பெறுமதிகாளால் ஈடுசெய்ய முடியாதென முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும், எம்.பி.யுமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் ஹசன் அலி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தம்புள்ளiயிலுள்ள பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கும் புனிதஸ்தலமே. பெரும்பான்மையினரால் பள்ளிவாசலை சிதைக்க முடியாது. மேலும் முஸ்லிம்களின் உணர்வுகளை அழிக்க முடியாது. பள்ளிவாசலை தங்கத்தினாலோ பொண் பொருட்களினாலோ செய்ய முடியாது. சமப்படுத்தவும் முடியாது. பெரும்பான்மையினருடன் சண்டையிட எங்களால் முடியாது. நாங்கள் பலவீனமானவர்கள். ஆனால் எமது உணர்வுகளை அவர்கள் மதிக்கவேண்டும். 60 வருட வரலாற்று கொண்ட தம்புள்ள பள்ளியில் பல இலட்சம் பேர் சுஜுத்து செய்துள்ளனர். அவர்களின் பிரார்த்தனைகள் நிச்சயம் அங்கீகரிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் யூசுப் அலி (ஆலிம்) பேட்டை இமாம் பத்ரு ஜமான் (அரூசி)

மவுத்து அறிவிப்பு:" M .S. முஹம்மது யூசுப்"


முத்துப்பேட்டை, ஏப்ரல் 26 : தர்ஹா மர்ஹும் கட்ட லெப்பை என்கின்ற M .S .செய்து முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹும் S.S .சிந்தா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹும் M .S .சாகுல் ஹமீது லெப்பை, M .S .ஹாஜா சரிப், M .S .அப்துல் வஹாப், M .S .T .முஹம்மது அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹும் Y .P . நெய்னா முஹம்மது லெப்பை, மர்ஹும் Y .P .முஹம்மது யாகூப் லெப்பை, மர்ஹும் SS .முஹம்மது பாரூக் லெப்பை, SS .தாவூது ஆகியோரின் மச்சானும், Y .P .S. அஹமது முஹைதீன், Y .P .S. முஹம்மது இபுராஹீம் ஆகியோரின் மாமனாரும், M .S. ஹபீப் ரஹ்மான், M .S. ரஷீத் அலி, ஆகியோரின் தகப்பனருமாகிய " M .S. முஹம்மது யூசுப் லெப்பை அவர்கள் இன்று காலை 9 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்). அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் தர்ஹா கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
அறிவிப்பவர்

Y .P. லெப்பை தம்பி

நமது நிருபர்

KM.காதர் கனி (பாடகர்)

என்னை விடுதலை செய்யாவிட்டால் குர்ஆனை எரிப்பேன், நபியின் உருவப்படத்தை வரைவேன்!!!


ஈரான், ஏப்ரல் 26 : ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிருஸ்தவ பாதிரியார் யூசுப் நதகானியை ஈரான் விடுதலை செய்யாவிட்டால் திருக்குரான் பிரதியை எரித்தும், உய்ரினும் மேலான நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உருவப்படத்தை வரையப்போவதாகவும் வெறிப்பிடித்த அமெரிக்க கிருஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியுள்ளான். கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஃப்லோரிட்டாவில் திருக்குர்ஆன் பிரதியை எரிக்கப்போவதாக அறிவித்து சர்ச்சையில் சிக்கிய டெர்ரி ஜோன்ஸ் வருகிற 28 ஆம் தேதி 5 மணிக்கு முன்பு யூசுப் நகராணியை விடுதலை செய்யவேண்டும் என்றும் கெடு விதித்துள்ளான். ஸ்டான் அப் அமெரிக்கா நவ் என்ற டெர்ரி ஜோன்ஸின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிருத்தவ மதத்திற்கு மாறியதைத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு நதகாணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாதாகாணியை கொலைச் செய்யவோ அல்லது விடுதலைச் செய்யாமல் இருந்தாலோ உலகில் அனைவரும் திருக்குர்ஆன் பிரதியை எரிக்க வேண்டும் என்று ஜோன்ஸ் அழைப்பு விடுத்துள்ளான்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EAK .முனவ்வர் கான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)