முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மவுத்து அறிவிப்பு: "K.S அஹமது நாச்சியார்"

முத்துப்பேட்டை, மே 19 : புதுத்தெரு மர்ஹும் L.முகமது அப்துல் காதர் அவர்களின் மகளும், மர்ஹும் K.S ஹாஜா அலாவுதீன் அவர்களின் மனைவியும், K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா), K.S.H செய்து கனி (ஹாஜி), மர்ஹும் K.S.H நூருல் அமீன் ஆகியோரின் தாயருமாகிய ஹாஜிமா K.S அஹமது நாச்சியார் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் மவுத்தாகி விட்டார்கள். (இன்னா லில்லாஹி வ இன்னா இல்லைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் குத்பா பள்ளி கபரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறிவிக்கின்றார்கள்.

அறிவிப்பவர்
K.S.H சுல்தான் இப்ராஹிம் (சுனா இனா)

நமது நிருபர்
கம். காதர் கனி (பாடகர்)

முத்துப்பேட்டை:ரேசன் கடையில் எடைகுரையை கண்டித்து பொது மக்கள் முற்றுகை.!!



முத்துப்பேட்டை, மே 19 : முத்துப்பேட்டை ஆசாத் நகரில் ஒரு ரேசன் கடை உள்ளது. சுமார் 1000 குடும்ப அட்டையை உள்ளடக்கிய இந்த ரேசன் கடையில் தினமும் கடை திறந்த பிறகு மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இப்படிப் பட்ட சூழ்நிலையில் ரேசன் பொருட்களான மண்ணெண்ணெய், அரிசி, சர்க்கரை போன்ற பொருட்களின் எடை குறைவாக உள்ளது என்று ரேசன் கடை ஊழியரிடம் தகராறு செய்து வருவதாகவும், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு புகர் தெரிவித்தும் எந்த ஓர் நடவடிக்கையும் இது வரை எடுக்கவில்லை. இப்படி அடிக்கடி எடைக்குறைவால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் மத்தியில் இவர்களுக்கு ஓர் பாடத்தை கற்பிக்கவேண்டும் என்று கூறி வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பொருட்கள் வாங்க மக்களின் கூட்டம் அலைமோதியது. அப்ப்போது ஆசாத் நகரை சேர்ந்த ஹக்கீம், ஆப்தீன், மதினா, ரம்ஜான் பீவி போன்ற வர்கள் வாங்கிய அரிசியில் 3 கிலோ எடை குறைவாக இருந்ததாகவும் மேலும் சீனியில் அரைகிலோ குறைவாகவும் இருந்தது தெரிய வந்தது. இது குறித்து பொது மக்கள் ரேசன் கடை நடத்துனரை தாசில்தாரிடம் புகார் முறையிட்டதாக தெரிகிறது. மேலும் இது அப்படித்தான் இருக்கும் என்று திமிரு வார்த்தையில் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் ரேசன் கடை முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மீனவ சங்க தலைவர் மீரா முஹைதீன், வர்த்தக கழக நிர்வாகி அடிமை முஹைதீன் ஆகியோரின் தலைமையில் ரேசன் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முத்துப்பேட்டையில் பரபரப்பும் பதட்டமும் நிலவியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு
யூசுப் அலி (ஆலிம்), AKL . அப்துல் ரஹ்மான்,

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.




முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால் தமிழகத்தில் பரவி வரும் டிங்கு காய்ச்சல் நமது முத்துப்பேட்டை நகரங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து பேரூராட்சி நிர்வாகம் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வு எடுக்கா விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். மேலும் முத்துப்பேட்டை நகரங்களில் மிகவும் பற்றாக்குறையாக செயல் பட்டு வரும் இன்டேன் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் அஹ்மத் கான், அபு மர்வா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)