முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் SDPI கட்சியின் நகர கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு.





முத்துப்பேட்டை, ஜூன் 17 : முத்துப்பேட்டை சோஷியல் டெமாக்ரட்டிக் பார்டிஆஃப் இந்தியா சார்பில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நகர கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய நகர நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இதில் 21.06.2012 அன்று SDPI கட்சியின் நான்காம் ஆண்டு துவக்க விழா மிக சிறப்பாக நடத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் விபரம்:
தலைவர். S. நிஷார் அஹமது, துணைத்தலைவர் சேக் மைதீன், செயலாளர் பாட்சா, துணைச் செயலாளர். ஷாகுல் ஹமீது, பொருளாளர் சலீம், மற்றும் நகர செயற் குழு உறுப்பினர் ஷேக், பெரோஸ் கான், யாசிர், ஹபீப் கான், நெய்னா முஹமது, முஹைதீன், ரஹ்மத்துல்லாஹ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள்.இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் நெய்னா முஹமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
source from: www.muthupettaiexpress.blogspotcom
நமது நிருபர்

O.M. சுபைத் கான்

முத்துப்பேட்டையில் நடைபெற்ற மாணவர் சேர்க்கை பேரணி.



முத்துப்பேட்டை, ஜூன் 16 : முத்துப்பேட்டை புதுத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. மாணவர் சேர்க்கை பேரணியை உதவித்தொடக்கல்வி அலுவலர் ரகுராமன், இன்பவேணி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கல்விக்குழு தலைவர் மெட்ரோ மாலிக், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திரு. வ.க. ராஜேந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுல்தான் இபுராஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்பேரணி புதுத் தெரு, காளியம்மன் கோவில் தெரு, ஆஸ்பத்திரி தெரு வழியாக பள்ளியை வந்தடைந்தது. சேர்க்கை பேரணியில் ஆசிரியர்களான இராமகிருஷ்ணன், ஆசிரியை முத்துலட்சுமி, அமிர்தம், துர்கா தேவி மற்றும் உறுபினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமையாசிரியர் ஆரோக்கிய அந்தோணி ராஜ் நன்றி கூறினார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

யூசுப் அலி ஆலிம், AKL .அப்துல் ரஹ்மான்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)