புளியந்தோப்பு, அக்டோபர் 22 : புளியந்தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் நபிகளாரை இழிவாகப் பேசிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரண்டு தினங்களாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராடிக் கொண்டுள்ளன.
இதனால் போலிஸ் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பிகக் இந்து முன்னணியினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு கமிசனர் அலுவலகம் முற்றுகை இட முயன்றனர். இதை அறிந்த எஸ்.எம்.பக்கர், செய்யது இக்பால்.பிர்தவ்ஸ் உள்ளிட்ட இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளும் இஸ்மாயில், சிக்கந்தர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் கமிஷனரை சந்தித்து 'கடவுள் கொள்கை பற்றிய ஒரு தஃவா நோட்டிஸ் போட்டவர்களை கைது செய்' என பிரச்சனையை திசை திருப்ப இந்து முன்னணியினர் நாடகம் ஆடுகின்றனர்.
இதை நீங்கள் அனுமதிக்க் கூடாது இல்லை என்றால் இது மிகப் பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்று வலியுறுத்தினர். அனைத்தையும் கமிசனர், சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டதால் தேடி வருகிறோம் கைது செய்வது உறுதி என கூறினார். வெளியில் பத்த்ரிக்கையாலர்களை சந்தித்த எஸ்.எம்.பாக்கர் நபிகளாரை இழிவுபடுத்தும் எவரையும் முஸ்லிம்கள் மன்னிக்க மாட்டார்கள் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என பேட்டியளித்தார்.
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு:
ஷேக் பரீத்
தொகுப்பு:
ஷேக் பரீத்