கூத்தநல்லூர், செப்டம்பர் 03: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மாநகராட்சி உட்பட்ட முஸ்லிம் மாணவிகள் பெரும்பாலானவர்கள் படிக்கும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், இனிமேல் பள்ளிக்கு வரும் முஸ்லிம் மாணவிகள் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப் ) அணியக்கூடாது என்றும், அப்படி அணிந்து வந்தால் முட்டி போட வைப்பேன் என்றும் முஸ்லிம் மானவிகை பார்த்து கடுமையாக மிரட்டி உள்ளார். இவரின் மிரட்டலுக்கு பயப்படாத மாணவிகள் இன்று தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்து சென்றுள்ளனர். இதனைக் கண்ட தலைமை ஆசிரியர் தலையில் முக்காடு (ஸ்கார்ஃப்) அணிந்துள்ள மாணவிகளுக்கு தண்டனை அளித்துள்ளார். இந்த தகவல் அறிந்த பெற்றோர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்பினர் உட்பட அனைவரும் பள்ளியின் முன் திரண்டனர். தகவல் அறிந்த காவல்துறை பிரச்சனை இல்லாமல் சுமுக முடிவு எடுக்க தலைமை ஆசிரியரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நன்றி: தடா அப்துல் ரஹீம்
முத்துப்பேட்டை, செப்டம்பர் 03: முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் நடக்கும் விநாயகர் ஊர்வலம் குறித்து கருத்தாய்வு கூட்டம் நேற்று காலை தாசில்தார் ராஜகோபால் தலைமையில் ஒரு பிரிவினருக்காக நடத்தப்பட்டது. நேற்று மாலை முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகளுக்குகான கூட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் முத்துப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தர்ஹா பகுதியிச் சேர்ந்த முஹம்மது அப்துல்லா என்பவரது டூவீலரில் சைலன்சரில் ஓட்டை இருப்பதாக பறிமுதல் செய்தார். இதனால் இதனால் அதிருப்தி அடைந்த முஸ்லீம் ஜமாஅத் நடக்க இருந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அவிவித்தனர். இதுகுறித்து ஐக்கிய ஜமாஅத் தலைவர் பாக்கர் அலி கூறுகையில் சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தொடர்ந்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். அவரை பணி மாற்றம் செய்ய வேண்டும் என்பதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தோம். பால்ராஜின் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 10 ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றார்.
நமது நிருபர்: பரக்கத்து நிஷா