முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

காரைக்காலில் கணவருடன் படுத்திருந்த பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த வாலிபர் கைது:



காரைக்கால், மே 13: காரைக்கால் திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமம், கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜோதி (வயது 30). இரவு கணவன், மனைவி வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.45 மணியளவில் வீட்டின் உள்ளே யாரோ குதித்தது போன்று சப்தம் கேட்டு ஜோதி திடுக்கிட்டு எழுந்தார். 

வீட்டுக்கூரையின் ஒருபகுதியை யாரோ பிய்த்து அதன் வழியாக வீட்டினுள் குதித்துள்ளது தெரிய வந்தது. எனவே அவர் விளக்கை போட்டு பார்த்தபோது, மேலத்தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் அவரது வீட்டினுள் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது ஜோதியை பார்த்து, வா உல்லாசமாக இருக்கலாம் என்று சங்கர் அழைத்ததாக கூறப்படுகிறது. 

இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி, என் கணவரை எழுப்பி விடுவேன், மரியாதையாக இங்கிருந்து போய்விடு என்று எச்சரித்தார். ஆனால், நீ உன் கணவரை எழுப்பினால் கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விடுவேன் என்று சங்கர் மிரட்டினார். 

சப்தம் கேட்டு ஜோதியின் கணவர் முருகானந்தம் எழுந்ததும் சங்கர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சம்பவம் குறித்து ஜோதி, திருநள்ளாறு போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)



பெருமாள், ஏட்டு பன்னீர்செல்வம் ஆகியோர் சங்கர் மீது கொலைமிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்து, சங்கரை கைது செய்து காரைக்கால் 2-ம் வகுப்பு குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தர விட்டார். 

அதனையடுத்து போலீசார் சங்கரை காரைக்கால் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள வாலிபர் சங்கருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளான். அவரது மனைவி சிறிது காலத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)