முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

இன்றைய இளைஞர்களின் சிந்தனைப்போக்கு...?

கட்டுரை, ஆகஸ்ட் 20: இன்றைய முஸ்லிம் இளைஞர்களின் சிந்தனைப்போக்கும் இஸ்லாமிய வாழ்க்கை முறையில் நாட்டம் குறைந்துள்ளமைக்கான அடிப்படைக் காரணமும் அது மீளமைப்புச் செய்யப்படுவதற்கான வழிமுறையும்!


இன்று எமது இளைஞர்கள் மத்தியில்மேற்க்கத்திய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் குறித்த ஒருவகையான மோகம் மேலோங்கிய நிலையில் தமது வாழ்வினது மாடலாக  அவர்கள்நடிகர்களையும், விளையாட்டு வீரர்களையும் அடிப்படையாக கொள்வதனை சர்வசாதாரணமாக காணலாம்.

இத்தகைய குப்பார்களது நடை, உடை, பாவனை போன்றவற்றை “பேஷன் “ 
என்ற பெயரில் இவர்கள்பின்பற்ற நினைப்பதற்கு காரணம் இவர்களுக்குள் 
உள்ள இஸ்லாம் குறித்த அடிப்படைச் சிந்தனையில்உள்ள தெளிவின்மையும் 
இவர்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாற்றையும் சரிவரபடிக்காமல் 
இருப்துமேயாகும்.

முதலில் எமது இளைஞர்கள் இஸ்லாத்தை ஒரு மதமாகவும் வெறும் வணக்க வழிபாடுகளில்ஈடுபடும் மார்க்கமாகவும் இவர்கள் நோக்குவதால் இவர்கள்
தொழுதால் போதும் அல்லது எப்படிவேண்டும் என்றாலும் தனது வாழ்வை ஒழுங்குபடுத்த முடியும் என்று நினைப்பது அவர்கள் இஸ்லாத்தை
விளங்கியுள்ள விதத்தில் உள்ள குறைபாடாகும

உண்மையில் இஸ்லாம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் உள்ள தொடர்பைஒழுங்குபடுத்துவதுடன் நின்றுவிடாமல் அது பொதுவாழ்வில் மனிதன் எதிர்நோக்கும் அரசியல்,பொருளியல், சமூகவியல், கல்வி மற்றும் வெளிநாட்டு

உறவுகள் என்பவற்றை ஒழுங்குபடுத்தத்தேவையான செயலாக்க அமைப்புக்களை கொண்ட குர்ஆன் சுன்னா அடிப்படையில் இவற்றைஒழுங்குபடுத்துகின்ற ஒரு வாழ்க்கைமுறையாக வாழ்கைச் சித்தாந்தமாக ஒரு முழுமையானஇஸ்லாமாக பார்க்காமல் இருப்பதால் ஏற்படும் குறைபாடாகவே நாம்
பார்க்கலாம்.

அவ்வாறு பார்க்கத்தவறுவதாலேயே மத ஒதுக்கல் சிந்தனையில் இருந்து பிறந்த முதலாளித்துவதாராண்மைவாதச் 
சிந்தனை, மற்றும் செயலாக்க அமைப்புகள் என்பவற்றினது தாக்கத்திற்கு 
அவன்“நாகரீகம்” எனும் பெயரில் கண்ட கண்ட ஜாஹிலிய்ய சிந்தனைகளைக் கொண்டு தனது இளமைப்பராயத்தை ஒழுங்குபடுத்த முற்படுகிறான்.

இதற்கு பிரதான காரணம் அவனுக்கு போதிக்கப்படும் இஸ்லாமும் அவன்
காணும் தாவாமுறைகளும் வெறும் இபாதாக்களை செய்யத்
தூண்டுவதுடன் நின்றுவிடுவதேயாகும்!

உண்மையில் இஸ்லாத்திற்கு அன்னியமான இஸ்லாத்தை குழிதோண்டிப்
புதைக்க முற்படும்மேற்கினது கலாச்சார படையெடுப்பும்,  வாழ்கை முறையையும்,  சிந்தனைப்படையெடுப்பையும், ஒரு முஸ்லிம் இளைஞன்
உணரவேண்டுமாயின் அதற்கு அவன் இஸ்லாத்தை ஒருமுழுமையான வாழ்க்கைச் சித்தாந்தமாக (Ideology)  வாழ்க்கை முறையாக அவன் விளங்குவதும்அவற்றை அடிப்படையாக கொண்டு இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைப் படையெடுப்பை எதிர்கொள்வதற்கு தன்னைப் பண்படுத்திக் கொள்வானாயின் அவன் இத்தகைய மேற்கினது ஜாஹிலியத்தில் இருந்து விடுபட்டு இஸ்லாத்தை மிகவும் அக்கறையுடன் தனது தனிப்பட்ட வாழ்வில் முடிந்தளவு பின்பற்ற முற்படுவதுடன் அது சமூகவாழ்வில் மலர்வதற்கான தடைக்கற்களையும் அறிய முற்பட்டு உரிய தாவாக்களை முன்னெடுக்கக் கூடிய ஒரு இஸ்லாமிய இளைஞனாக மாறுவான்.

அத்துடன் இஸ்லாம் சமூக வாழ்வில் முழுமையாக பின்பற்றப்படுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை அவன் உணர முற்படும்போது இன்று முஸ்லிம்களுக்கா ஒரே தலைமை உலகில் இல்லாததும், முஸ்லிம் உம்மத் தேசியவாதச் சிந்தனைக்குள்ளும், மேற்கினது முதலாளித்துவ ஜனனாயக விழுமியங்களிலும் கொண்டுள்ள நம்பிக்கை முறைபற்றியும் அவன் உணர ஆரம்பிப்பதுடன் அவற்றில் இருந்து உம்மத்தை விடுவிக்கத் தேவையான உரிய தாவாக்களையும் அவன் மேற்கொள்வான்.

அது அவன் வாழும் நாட்டில் உள்ள அரசியல் மற்றும் ஏனைய மேற்கினது
வாழ்க்கை முறைபற்றியஅடிப்படைப் பார்வையில் உள்ள சமூக, கலாச்சார
சீர்கேடுகளை கோடிட்டுக் காட்டி இஸ்லாத்தை ஒருமாற்றீட்டு வாழ்க்கைத்
திட்டமாக அவன் பிற சமூகத்திற்கு தாவா செய்ய வழிவகுக்கும்.

அத்துடன் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் இஸ்லாம் ஒரே தலைமையின் கீழ்,இராணுவ நுஸ்றாவுடன் நிறுவப்பட்டு, 
முழுமையாக அமுல்படுத்தப்படுவதன் அவசியம் குறித்தும்இஸ்லாமிய
வெளிநாட்டு கொள்கை மூலமாக  தாவா மற்றும் ஜிஹாத் மூலம் அவ்வரசு
உலகில்இஸ்லாம் மீள ஒழுங்குபடுத்தி இன்றுள்ள முதலாளித்துவ தலைமைத்துவத்தை மாற்றீடு செய்யும்ஒரு தலைமையாக  இஸ்லாம் மீண்டும் வரவேண்டும் எனும் “சீரியசான இஸ்லாமிய”இளைஞனாக அவன் மாறுவான்.

இத்தகைய சிந்தனைப்போக்கு அவனை நிச்சயம் வழிகேட்டில் இருந்து 
பாதுகாத்து மறுமையில்ஈடேற்றம் பெறவழிவகுப்பதுடன் இஸ்லாத்திற்கும் 
பலம் சேர்க்கும் இன்ஷா அல்லாஹ்..,

     

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)