முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் ஓர் இளம்பெண் கற்பழிப்பு


முத்துப்பேட்டை, நவம்பர் 27 : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் ஓர் இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளார். இதில் வேதாரணியத்தில் பத்திரிகை நிருபர் சந்தித்த அந்த நபர் கூறும்போது, "வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கின்றது என்றும், முத்துப்பேட்டையில் எந்தப் பெண்ணும் தனியாக நடமாட முடியவில்லை என்றும் மிக வேதனையோடு அவர் கூறினார்.அந்த நபரிடம் பத்திரிகை நிருபர் இது குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது. கடைசி பஸ்ஸை தவறவிட்ட ஓர் கிராமத்து இளம்பெண் தனியாக நிற்பதை பார்த்த முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் அவர்கள் அப்பெண்ணை அழைத்து விசாரித்து விட்டு பின்பு அப்பனிடம் தனியாக நிற்கக் கூடாது என்றும், காவல்நிலையத்தில் வந்து தங்கி விடிந்தவுடன் போகலாம் என்றும் பரிவாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றார். பின்பு அந்தப் பெண்ணை காவல்நிலையத்தில் விட்டுவிட்டு தன்னுடைய வீட்டிற்கு செண்டுள்ளார். அங்க இருந்த இரண்டு போலீசார் அந்த இளம்பெண்ணை பலவந்தமாக மாறி மாறி கற்பழித்துள்ளனர். கடைசியா இன்ஸ்பெக்டர் வருவதற்குள் போகிவிடு என்று அதிகாலை 3 மணிக்கு அந்தப் பெண்ணை அவர்கள் அனுப்பி வைத்தனர், அப்போது அப்பெண்ணால் நடக்க முடியாமல் சோர்ந்து போய் எதிரே உள்ள நிழற்குடையில் போய் சுருண்டு படுத்தது. அப்போது தாமதமாக வந்து இன்னொரு போலிஸ் அந்த நிழற்குடையில் வைத்தே அந்தப் பெண்ணை கற்பழித்துள்ளார். இதை பார்த்த அந்த ஏரியா மக்கள் இன்ஸ்பெக்டருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் என்னய்யா இப்படிப் பண்ணிடீங்கனு அந்தப் பெண்ணை மீட்டு வேதாரண்யம் போகும் குருவி பேருந்தில் ஏற்றிவிட்டார். அப்போது அந்த பெண் பேருந்தில் அழுதுகிட்டு வந்தது.அப்போது அந்த பெண்ணிடம் விசாரித்தபோது தான் எல்லா விபரமும் தெரியவந்தது. மறுநாள் அந்தப்பகுதி கடைக்காரவரிடம், விசாரித்தபோது, இந்த காவல்நிலையத்தில் இப்படித்தான் அடிக்கடி நடந்து வருகிறது என்றும், போன மாதம் கூட துப்புரவு வேலைக்கு வந்த ஒரு பெண்ணையும் போலீசார்கள் கற்பளித்துல்லார்கள் என்றும் மிக வருத்தத்துடன் தெரிவித்தார்.இது குறித்து இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் அவர்களிடம் நாம் கேட்டபோது அப்படி எதுவும இங்க நடக்கவில்லை என்று மறுத்தார்.
source from www.muthupettaiexpress.blogspot.com, www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், ரிப்போர்ட்டர் யூசுப் அலி

நன்றி - நக்கீரன்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)