முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ரத்ததான முகாம் -நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு !!!






























தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் முத்துப்பேட்டை கிளை 2 நடத்திய மாபெரும் இரத்த தான 

முகாம் ,மற்றும் இரத்த வகை கண்டறியும் முகாம் இன்று 22.12.2013 நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கிளைத்தலைவர் சகோ அப்துல் அஜீஸ் தலைமை தாங்கினார்கள் . 

துணைத்தலைவர் நிஜாம் அலி அவர்கள் வரவேற்புரை வழங்க, மாவட்ட துணை 
\
கண்காணிப்பாளர் ( டி.எஸ். பி) ஆர். கணபதி அவர்கள் முகாமைதுவங்கி வைத்தார்கள். இதில் 37 சகோதரர்கள் இரத்தத்தை கொடையாக கொடுத்தனர். ஹாஜ அலாவுதீன் மாவட்ட மாணவரணி பேச்சாளர் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார் , 

மருத்துவர் இளங்கோ MBBS அவர்கள் இரத்ததானம் செய்வதினால் ஏப்படும் 

நனமைகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்.
முன்னாள் மாவட்ட தலைவர் A.அன்சாரி மற்றும் முன்னாள் இந்நாள நிர்வாகிகள் 

முன்னிலை வகித்தனர் . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி மன்ற தலைவர் கோ . 

அருணாச்சலம் , மாவட்ட தி மு க துணை செயலாளர் M.S கார்த்திக் , ரோட்டரி மண்டல 

பொறுப்பாளர் G. கிருஷ்ணமூர்த்தி, மனித உரிமை கண்காணிப்பகத்தின் மாநில தலைவர் 

G.பஷீர் அஹமது மற்றும் பலர் கலந்து கொண்டனர் . இறுதியாக சேதி தொடர்பாளர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றிஉரையோடு நிகச்சி 

இனிதே நிறை வேறியது ...

தகவல் : முத்துப்பேட்டை செய்யது இப்ராஹிம்

மௌத்து அறிவிப்பு "ஆமினா அம்மாள் "

முத்துப்பேட்டை, டிசம்பர் 25: முத்துப்பேட்டை ஓடக்கரை தெரு, மர்ஹும் M.A.ஷாகுல் ஹமீது மரைக்காயர் அவர்களின் மகளும், S.ஷேய்க் அலாவுதீன், S.நெய்னா முஹம்மது ஆகியோர்களின் சகோதரியும், பசூல் ஹக் (பத்திரிகை) அவர்களின் கொளுந்தியாளும், சல்மான் அவர்களின் மாமியும், சாலிஹ், அலிஃப் ஆகியோர்களின் சிறிய தாயருமாகிய "ஆமீனா அம்மாள்"அவர்கள் இன்று (25.12.2013 புதன் கிழமை) மதியம் 2.30 மணியளவில் மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்........

அன்னாரின் ஜனாஸா நாளை 26.12.2013 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொத்பா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.


அன்னார் அவர்களின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.


அன்னார் அவர்களின் மறைவால் துயரத்திலிருக்கும் குடும்பத்தினர்கள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ் சபூரையும்,சகிப்புத்தன்மையையும் தந்தருள்வானாக

அறிவிப்பவர்.
S.ஷேய்க் அலாவுதீன்
+91 967 771 39 79

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)