முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நரேந்திரா மோடியை கண்டித்து பாஜக அலுவலகம் முற்றுகை: இந்திய தேசிய லீக் கட்சியினர் கைது:






சென்னை, ஜூலை 14: ஒரு தனியார் தொலைக்காட்சியில் குஜராத் கலவரம் தொடர்பான கேள்விக்கு நரேந்திர மோடி  பதிலளிக்கையில், முஸ்லிம்களை நாயுடன் ஒப்பிட்டு கூறினார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன .


இந்நிலையில் இந்திய தேசிய லீக் கட்சியினர் அதன் பொது செயலாளர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜ க அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .
தமிழக பாஜக அலுவலகம் அமைந்துள்ள திநகர் வைதியராம் தெரு முழுவதுமே நூற்றுக்கும் மேற்ப்பட்ட  காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டனர் .



இதனால் அந்த பகுதி முழுவதுமே பதற்றமான சூழல் காணப்பட்டது .சரியாக மாலை 4 மணிக்கெல்லாம் தடா அப்துல் ரஹீம் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் வாகன அணிவகுப்புடன் வந்தனர் .
நாரே தக்பீர்  அல்லாஹ் அக்பர் -மோடியே உனக்கு எச்சரிக்கை -என்ற கோஷம் விண்ணை பிளந்தது .மோடியின் நாய்  வடிவிலான உருவபொம்மை கொளுத்தப்பட்டபோது போலீசாருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது .




 இறுதியாக பாஜக அலுவலகம் நோக்கி முன்னேற முயன்ற இந்திய தேசிய லீக் கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டனர் .பின்னர் காவல் துறை வாகனங்களில் அனைவரும் கைதுசெய்யப்பட்டு தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்க பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர் .நோன்பு நேரம் என்று கூட பாராமல் மிகவும் குறுகிய நேரத்தில் இந்த போராட்டத்தை நடத்திய இந்திய தேசிய லீக் கட்சியினரை சமூதாய தலைவர்கள் ,மனித உரிமை ஆர்வலர்கள் ,வெகுவாக பாராட்டினார்கள் .



நேரடி களதொகுப்பு: ஜே: ஷேக் பரீத் 


தஞ்சையில் போலீஸ் அதிரடி: விபசாரத்தில் ஈடுபட்ட 5 அழகிகள் கைது


தஞ்சாவூர், ஜூலை. 14: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் லாட்ஜிகளில் தங்கி, லாட்ஜி உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தனியார் லாட்ஜிகளில் உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுப்பட்ட 5 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் லாட்ஜ் உரிமையாளர்களின் அனுமதியுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 தனியார் லாட்ஜிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பாலுச்சாமி, ராமலிங்கம், முரளிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)