முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

தஞ்சையில் போலீஸ் அதிரடி: விபசாரத்தில் ஈடுபட்ட 5 அழகிகள் கைது


தஞ்சாவூர், ஜூலை. 14: தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் லாட்ஜிகளில் தங்கி, லாட்ஜி உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து எஸ்.பி.யின் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. அர்ச்சுணன் மேற்பார்வையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் லாட்ஜிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 தனியார் லாட்ஜிகளில் உரிமையாளர் மற்றும் மேலாளர் அனுமதியுடன் இளம் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து விபசாரத்தில் ஈடுப்பட்ட 5 பெண்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் லாட்ஜ் உரிமையாளர்களின் அனுமதியுடன் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து 2 தனியார் லாட்ஜிகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் பாலுச்சாமி, ராமலிங்கம், முரளிதரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)