முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் -நூறு இஸ்லாமிய பெண்களை மதம் மாற்றுவேன் !பாஜக எம்பி யின் தேச விரோத பேச்சு !!!

டெல்லி: இந்து பெண் ஒருவரை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டால் அதற்கு பதிலடியாக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. யோகி ஆதித்யாநாத் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது. 
ஒரு இந்துபெண்ணுக்காக 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்றுக: பாஜக எம்.பி. பேச்சு!!
பாஜகவின் சர்ச்சை முகங்களில் ஒருவர்தான் யோகி ஆதித்யாநாத், நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றின் மீது பேசி கொண்டிருக்கும்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டி பேசினார். 

கடந்த 2007ம் ஆண்டில், கோரக்பூரில் இன வன்முறையை தூண்டி விட்டதாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறார், இந்த நிலையில் யோகி ஆதித்யாநாத் பேசிய வீடியோ பேச்சுதான் புது சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. 

அதாவது தேதி குறிப்பிடப்படாத வீடியோ ஒன்றில் தனது ஆதரவாளர்கள் முன்பாக பேசுகையில், ஒரு இந்து பெண்ணை மதம் மாற்றினால் பதிலுக்கு 100 முஸ்லிம் பெண்களை மதம் மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 வீடியோவில் பதிவான இந்த காட்சிகள் குறித்து செய்தியாளர்கள் இன்று கேட்டதற்கு யோகி ஆதித்யாநாத் பதிலளிக்க மறுத்து விட்டார். அத்துடன், வீடியோ ஒன்றை வெளியிடுவதற்கு முன்பாக அது குறித்து தீர ஆய்வு செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு என்றார்.

முத்துப்பேட்டைக்கு புதிய ஆம்புலன்ஸ் வாங்கிட உதவிக்கரம் நீட்டுங்கள் -தமுமுகவினர் வேண்டுகோள்!

நமது ஊரான முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துவந்துள்ளது.
















இந்நிலையில் 8 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் ஆம்புலன்ஸ் பழுதடைந்து தொடர்ந்து 
பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மிக குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும், இலாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படுத்தியதாலும் போதிய இருப்பு நிர்வாகத்தில் இல்லாமல் போய்விட்டது. 


எனவே இன்ஷா அல்லாஹ் மீண்டும் நமது சமுதாய மக்களின் உதவியோடும், ஒத்துழைப்போடும், பிராத்தனைகளோடும் நமது ஊருக்கான புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவெடுத்துள்ளோம். ஆகவே தாங்கள் தாராளமாக நிதியுதவி செய்து சமுதாயப்பணிகளுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

S.ஹூமாயூன் கபீர் – 7845416011 
M.சம்சுதீன் – 7358159830 
N.R.அலி – 9791401101 
L.நிஜாம் – 9715394088 
வழக்கறிஞர் தீன் முஹம்மது – 9865557556 

உங்கள் நண்கொடைகளை கீழ்கண்ட பேங்க் அக்கவுண்டிற்கும் அனுப்பலாம்...
TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM AC NO - 122602000000503 INDIAN OVERSEAS BANK MUTHUPET BRANCH உங்கள் நண்கொடைகளை எதிர்பார்த்து மக்கள் சேவையில்... தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் முத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)