முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மௌத்து அறிவிப்பு "ஹாஜா அலாவுதீன் "

முத்துப்பேட்டை, ஜனவரி 06:  (S.K.M) சின்ன கட்சி மரைக்கா தெரு, மர்ஹும் அபு பக்கர் - ஹதிஜா அம்மாள் இவர்களின் புதல்வர், தஞ்சை நேஷனல் பார்மா L.கமால் பாட்சா அவர்களின் சகோதரியின் மகனும், H.அபூ பக்கரின் தகப்பனாரும், சென்னை A.K.அஹமது உசேன் அவர்களின் மூத்த சம்மந்தியும், A.பகருதீன் அலி அஹ்மத்தின் மாமனாருமாகிய “ஹாஜா அலாவுதீன்” அவர்கள் இன்று (05.01.2014) காலை 7 மணியளவில் கூத்தாநல்லூர் (லெட்சுமாங்குடியில் மாரடைப்பின் காரணமாக) மௌத்தாகி விட்டார்கள்.

இன்னாளில்லாஹி வ இன்னா இளைஹி ராஜிவூன்.....

அன்னாரின் ஜனாசா இன்று (05.01.2014) ஞாயிற்றுக் கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின் அங்கேயே அடக்கம் செய்யப் படுகிறது. அன்னாரின் அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து, கப்ரின் வேதனைகளிலிருந்தும் காப்பாற்றி, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தில் நல்லடியார்களின் கூட்டத்தோடு இணைய வைப்பானாக ஆமீன்.



நன்றி..Dr.முஜீபுர் ரஹ்மான் S/O. L.கமால் பாட்சா.

A.H.பகுருதீன் அலி அஹமத்.

தஞ்சையில் மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் வெட்டி கொலை-பதற்றம்

தஞ்சாவூர், ஜனவரி 05: தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகர மனித நேய மக்கள் கட்சி தலைவராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.

இன்று அதிகாலை சையத் ஜமாலூதீன் பூ வியாபாரத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் உள்ள பூக்களையும் பறித்து கொண்டு சென்றார்.

பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகே சென்ற போது 2 பேர் கும்பல் அவரை வழி மறித்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு விழுந்த அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சையில் இன்று காலை மனித நேய மக்கள் கட்சி நகர தலைவர் வெட்டி கொலை



கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தஞ்சை தாலுகா போலீசில் சரண் அடைந்தனர்.


அவர்களிடம் விசாரித்த போது சையது அமீர் என்பவரது மகன்கள் சையது உசேன் (47), சையது பாபு(42) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சையத் ஜமாலூதீன் உறவினர்கள் ஆவார்கள்.


வக்பு வாரிய சொத்தை பரமாரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் அவரது உறவினர்கள் வக்பு வாரிய சொத்தை விற்க முயன்றதை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளது.
கொலையாளி சையது உசேன் சென்னை தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். 

சையது பாபு விவசாயம் செய்து வருகிறார். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீனுக்கு அலிமா என்ற மனைவியும், சையத் காதர் என்ற மகனும், நசீனா பானு, பர்வீன் பானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.


மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

முத்துப்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி"

முத்துப்பேட்டை, ஜனவரி 05: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக பொதுமக்கள் நலன் கருதி “பெற்றோர்களுக்கான குழந்தை வளர்ப்பு கவுன்சிலிங் நிகழ்ச்சி” 31.12.2013 அன்று மாலை 4.30 மணியளவில் முத்துப்பேட்டை கொய்யா மஹாலில் நடைபெற்றது.













இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நகர தலைவர் மாலிக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக Dr.K.இளங்கோ அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். 


மேலும் அக்சஸ் இந்தியாவின் ஆராய்ச்சியாளர் முகைதீன் மற்றும் கனி அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட Dr.இளங்கோ அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயற்குழு உறுப்பினர் A.அபுபக்கர் சித்திக் அவர்கள் நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)