முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

SDPI கட்சியின் கலெக்டர் அலுவலகம் முற்றுகை :பரபரப்பு காட்சிகள் :










திருவாரூர், அக்டோபர் 20 : SDPI கட்சியின் சார்பாக பூரண மதுவிலக்கை அமுல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அக்டோபர் 17 லில் சென்னையில் தலைமை செயலகத்தையும்,பிற இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா அறிவித்திருந்தது. இதை மெய்ப்பிக்கும் வகையில் திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்படுவதற்காக SDPI கட்சி தொண்டர்கள் தயாராயினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர். கூட்டம் கூட கூட போராட்டக்களமாய் உருவெடுத்ததை உணர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை சீர்படுத்தினர்.

சரியாக காலை 11 மணிக்கு ரயில்நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்ட SDPI கட்சியினர்தமிழக அரசே தமிழக அரசேமதுவிலக்கை அமுல்படுத்து, டாஸ்மாக்கை இழுத்துமூடு, என்ற கோசத்துடன் கடைவீதி, மார்கெட் வழியாக மணிகூண்டு வந்தடைந்தனர் .

கூட்டத்தில் SDPI கட்சியின் மாநில செயலாளர் A. அபூபக்கர் சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார். பின்னர் மணிக்கூண்டிளிருந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர். ஒன்றன் பின் ஒன்றாக கைதுசெய்யப்பட்ட அனைவரும் திருவாரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறைவைக்கப்பட்டனர். சிறைவைக்கப்பட்ட அனைவரும் மாலை 4 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
source from: www.muthupettaiexpress.com
களத்தொகுப்பு:

ஜே .ஷேக் பரீத்


முத்துப்பேட்டையில் "பிரியாவிடை" பெற்ற பழமை வாய்ந்த மீட்டர் கேஜ் பேசென்ஜர் ரயில்..



முத்துப்பேட்டை, அக்டோபர் 20 : முத்துப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் நூற்றாண்டுகளை கடந்த மிகவும் பழமை வாய்ந்த வழி தடமாகும். இங்கிருந்து சென்னை முதல் காரைக்குடி வரை பல்வேறு ரயில்கள் சென்று வந்தன. இதனால் சுற்றுலாதலமான முத்துப்பேட்டை மக்கள் என்றும் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் ரயில்வே துறை இந்தியா முழுவதும் படி படியாக எல்லா வழி தடங்களையும் அகல ரயில் பாதையாக மாற்றினார்கள். ஆனால் முத்துப்பேட்டையை உள்ளடக்கிய திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான பாதை மட்டும்  மாற்றப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் இந்த வழி தடங்களையும் மாற்ற நிதி வந்த நிலையில் படி படியாக பணிகள் துவங்க ஆரம்பிக்கப்பட்டன. அதன் வகையில் காரைக்குடி, திருவாரூர் பகுதிகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. மீதி உள்ள பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி திருவாரூர் வரை பழமை வாய்ந்த பேசென்ஜர் ரயில் சென்று வந்தன. இந்த அனைத்து வழித்தடங்களும் பிரிக்கப்பட்டு பணிகள் துவங்க இருப்பதால் நேற்றுடன் இந்த பேசென்ஜர் ரயிலை நிறுத்த தென்னக ரயில்வே முடிவு செய்து அறிவிக்கப்பட்டன. இதனை முன்னிட்டு பேசென்ஜர் ரயில் கடைசி பயணமாக திருவாரூரிலிருந்து நேற்று காலை முத்துப்பேட்டைக்கு வருகை தந்தது. முத்துப்பேட்டை வர்த்தக கழகம் சார்பில் தலைவர் இரா. இராஜாராமன், கெளவர தலைவர். திருஞானம், ஆகியோர் தலைமையில் பிரியா விடைபெறும் ரயில் வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேசென்ஜர் ரயிலுக்கு பெரிய அளவில் மாழை அணிவித்தும் டிரைவருக்கு இனிப்பு வழங்கியும் வழி அனுப்பி வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில் வர்த்தகக் கழக பொதுச் செயலாளர் எம்.எஸ். ராமலிங்கம், துணைத் தலைவர் முஹைதீன் பிச்சை, செயற்குழு உறுப்பினர் அசோகன், ரோட்டரி துணை மண்டல ஆளுநர் மெட்ரோ மாலிக், நுகர்வோர் பாதுகாப்பு கழகம் நிர்வாகி சுல்தான் இபுறாஹீம், SDPI கட்சியின் நகர பொறுப்பாளர் நிசார் அஹமது, சேக் முஹைதீன், முஹம்மது முஹைதீன், மற்றும் வர்த்தக கழக நிர்வாகிகள், வியாபாரிகள் பள்ளி மாணவர்கள், பாயணிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
source from: www.muthupettaiexpress.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை 

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)