முத்துப்பேட்டை, ஜூன் 06: பல்வேறு பணிகளுக்கிடையில் பிசியாக இருந்த அன்பு சகோதரர் தொழிலதிபர் S M ஹைதர் அலி அவர்களை நாம் சந்திக்க சென்றோம்,நம்மை கண்டவுடன் மிகவும் மரியாதையுடன் வரவேற்ற அண்ணன், நாம் கேட்ட கேள்விகளுக்கு சலனம் இல்லாமல் இன்முகத்துடன் பதிலளித்தார்.
கே: ஆசாத் நகர் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் திறப்புவிழா எப்போது?பள்ளிவாசல் கட்டுமான பணிகள் யாவும் முடிவடைந்து விட்டதா?
பதில்: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் வருகிற ஜூன் 28-06-2013 அன்று புதிய பள்ளிவாசல் திறப்புவிழாவினை வைத்துள்ளோம் .பள்ளிவாசல் கட்டுமான பணிகள் அனைத்தும் 98% முடிவடைந்துவிட்டது .மீதமுள்ள பணிகள் கூடிய விரைவில் முடிவடைந்து விடும்.
கே: இந்த புதிய பள்ளிவாசலானது தனிப்பட்ட நபரால் கட்டப்படுகிறதா?அல்லது பொதுமக்களிடமிருந்து வசூல் செய்து கட்டபடுகிறதா?
பதில்: முதலில் இந்த பள்ளியை நான் மட்டும் தனிப்பட்ட முறையில் கட்டிகொடுக்கலாம் என்று நிய்யத் வைத்திருந்தேன். ஆனால் இதில் பொது மக்களின் பங்களிப்பும் இருந்தால் மிகவும் சிறப்பாகவும், ஏற்றமாகவும் இருக்கும் என்று பலர் என்னிடம் கருத்து கூறியதால் இந்த பள்ளி கட்டுமான நிதியை செல்வந்தர்கள் முதல் பாமரர்கள் வரை அனைவரிடமும் நிதி பெற்று கட்டியுள்ளோம்.
கே: பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு எவ்வளவு?
பதில் : பள்ளிவாசல் கட்டுமான பணியின் மொத்த செலவு ரூபாய் 3 கோடியாகும்.இந்த கட்டுமான பணியின் கணக்குகள் யாவும் பொதுவுடமையாக்கப்படும்.
பதில்: முத்துப்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 4 அல்லது 5 மாவட்டங் களிலிருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
திறப்புவிழாவிற்கான ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன?பெண்களுக்கு என சிறப்பு ஏற்பாடுகள் ஏதேனும் செய்யப்பட்டுள்ளனவா?
பதில்: திறப்புவிழா எர்பாட்டிற்கான அத்துனை பணிகளும் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.இதில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் தனி இட வசதிகள் செய்யப்பட உள்ளன.
கே : இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள்?
பதில்: குவைத் நாட்டினுடைய ஷேக் அப்துல் லத்தீப் (அல்முஹன்னதி) அரபி சிறப்புவிருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார்.மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர்கள் MA. முஸ்தபா, MA.தமீம்,வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் M .அப்துல் ரஹ்மான் MP. மற்றும் பலர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
கே: இந்த திறப்புவிழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக உலமாக்கள் ஆலிம்கள் யாரேனும் வர உள்ளனரா?
பதில் : கண்டிப்பாக, இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் சிறப்பு பயான் செய்வதற்காக அதிரை அப்துல் லத்தீப் ஆலிம்சா, கான் பாகவி, அன்னை கதீஜா கல்லூரியின் முதல்வர் சாஜிதா பானு ஆலிமா, உத்தமபாளையம் ராவுத்தரப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர். அப்துல் சமது சாஹிப், மற்றும் கோவை அப்துல் அஜீஸ் பாகவி ஆகியோர் சிறப்பு பயான் செய்ய இருக்கிறார்கள்.
கே: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தை பற்றி நீங்கள் என்ன கூற நினைக்கின்றீர்கள் ?
பதில்: முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் மிக சிறப்பாக செயல்படுகிறது .முத்துப்பேட்டையில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்கிறது.முத்துப்பேட்டை செய்திகள் மட்டுமின்றி நம் சமுதாயத்திற்கு எதிராய் நடக்கும் கொடுமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.அதுமட்டு மில்லாமல் மரண அறிவிப்புகள்,திருமண நிகழ்வுகள்,மருத்துவ தகவல்கள், சமுதாய மற்றும் அரசியல் தலைவர்களுடன் நேர்காணல் என்று பல்வேறு சிறப்பு அம்சங்கள் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் உள்ளது. நீங்கள் மென்மேலும் வளரவேண்டும் .உங்கள் பணியை நான் பாராட்டுகிறேன்.
சந்திப்பு: ஜே: ஷேக்பரீத்