உப்பூர், பிப்ரவரி 17 : ஆலங்காடு கடைத்தெருவை சேர்ந்த திரு. ஜெயராமன் வயது 45 இவர் ஒரு விவசாய். இவர் இன்று காலை உப்பூருக்கு வைக்கோல் எடுக்க தனது மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருத்துறைப்பூண்டியிலிருந்து முத்துப்பேட்டைக்கு ஓர் தனியார் பேருந்து வரும்போது எதிர்பாராமல் விபத்துக்குள்ளானது. இதில் மாட்டு வண்டி ஓட்டி வந்த ஜெயராமன் என்பவர் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு திவீர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இரண்டு மாடுகள் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் திரு. செங்குட்டுவன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
source from; www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், முஹைதீன் பிச்சை