முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது SDPI சித்திக் பேட்டி.




முத்துபேட்டை, மே 19 : முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்த SDPI -யின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜனாப். அபூபக்கர் சித்திக் அவர்கள் பேட்டி பின்வருமாறு. முத்துப்பேட்டையில் கடந்த சில மாதங்களாக குடி தண்ணீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது என்றும், இந்த நிலையை பல முறை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எடுத்து சொல்லியும் இவற்றை அலட்சியப் படுத்தி வருகிறது பேரூராட்சி நிர்வாகம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த நிலை மீண்டும் நீடித்தால் தமிழகத்தில் பரவி வரும் டிங்கு காய்ச்சல் நமது முத்துப்பேட்டை நகரங்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனவே மக்களின் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து பேரூராட்சி நிர்வாகம் உடனே அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலைக்கு எந்த ஒரு தீர்வு எடுக்கா விட்டால் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாபெரும் போராட்டத்தை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடத்தவும் தயங்க மாட்டோம் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். மேலும் முத்துப்பேட்டை நகரங்களில் மிகவும் பற்றாக்குறையாக செயல் பட்டு வரும் இன்டேன் கேஸ் நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விரைவில் நடத்த உள்ளதாகவும் அவர் இதன் மூலம் தெரிவித்தார்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் அஹ்மத் கான், அபு மர்வா.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)